Sunday, May 25, 2014

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே வருவதை தவிர்க்க முடியாது: வெளியுறவு முன்னாள் செயலாளர் ரோனன் சென் பேட்டி

புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதை தவிர்க்க முடியாது என மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ரோனன் சென் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கான இந்திய தூதராகவும் பணிபுரிந்த அவர், 'தி இந்து'வுக்கு அளித்த சிறப்பு பேட்டி: 



நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு பல நாட்டு அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது குறித்து தங்கள் கருத்து... 



நம் நாடு சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக இதுபோன்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த நாட்டின் அதிபர் பதவி ஏற்பிலும் இதுபோல் மற்ற நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடப்பட்டது இல்லை. இதன் நோக்கம் பிரதமர் பதவியின் முக்கியத்துவத்தை அதிகப் படுத்துவதாக இருக்கலாம். இதுபோல் வேறு என்ன காரணம் என்பதை, அதை முடிவு செய்தவர் கள்தான் சொல்ல வேண்டும். 



ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்காமல் இருந்திருக்க முடியாதா? 




ராஜபக்சே, சார்க் நாடுகளின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு விட்டதால், அவருக்கு அழைப்பு விடுக்காமல் இருக்கவே முடியாது. அவரது வரவை புதிய பிரதமர் பதவி ஏற்பு விழாவில் தவிர்க்க முடியாது. ஒருவேளை நம் அண்டை நாடுகளுக்கு மட்டுமான அழைப்பு என்றாலும் ராஜபக்சேவை தவிர்க்க முடியாது. இதில் அவரை தவிர்த்தால், சீனா போன்ற நாடுகளுடன் இலங்கை தன் நெருக் கத்தை வளர்த்துக் கொள்ளும். 



ராஜபக்சேவை அழைத்ததன் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை புதிதாக அமையும் அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனக் கூற முடியுமா? 




இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தமிழகத்து மக்களின் உணர்வுகள் கண்டிப்பாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் அதைச் செய்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஏனெனில், சார்க் நாடுகளின் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பது என்பது அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் கட்சியான பாஜகவின் கொள்கை முடிவாக உள்ளது. இதில் நம் எதிரிநாடாகக் கருதப்படும் பாகிஸ்தான், ஊடுருவல் உட்பட பல பிரச்சினைகளுக்காக பாஜகவின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில் இலங்கையை மட்டும் புறக்கணிப்பது என்பது சாத்தியமாகாது. 



இதற்காக, சார்க் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கும் முடிவை எடுக்காமல் இருந்திருக்கலாமே? 


இந்த விஷயத்தை அவ்வளவு ஆழமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இது ஒரு சடங்கு போன்ற பதவி ஏற்பு விழா மட்டுமே. இதில், எந்தவிதமான முக்கியப் பேச்சுவார்த்தையோ புதிய ஒப்பந்தங்களோ போடப் போவதில்லை. மாறாக, இந்த விழாவின் பெயரிலான சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு நல்லெண்ணத்தை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 



இதனால், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் நியாயம் இல்லை என்கிறீர்களா? 



நான் அப்படிச் சொல்லவில்லை. 2007-ல் இலங்கை படுகொலைகள் நடந்தபோது உலகம் முழுவதும் அமைதி நிலவியது. அப்போது அங்கு நடந்த படுகொலைகள் மீதான கண்டிப்புகள் எழவில்லையே... 



நம் நாட்டின் ஒரு சிறிய பகுதியில் சிறிய மாநிலமான தமிழகத்தின் பிரச்சினை இது எனக் கருதி பாஜகவினர் கருத்தில் கொள்ளாமல் இருந்து விட்டார்களா? 



எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் மூலை, முடுக்கில் நடக்கும் பிரச்சினைகளும் கண்டிப்பாகக் கருத்தில் கொள்ளப்படும். இலங்கை யின் வட மாகாணத்தில் ஒரு தமிழர் முதல்வராக தேர்தெடுக்கப்பட்ட போது அங்குள்ளவர்கள் நம் பிரதமருக்கு அழைப்பு விடுத்தனர். அங்கு பிரதமர் செல்லாமல் இருந் தது, வட மகாணத்தின் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் போனதாக ஆகாதா? எனவே, ஒரு நாடு என்பது, அதன் அரசியல் பிரச்சினை, கொள்கைகள், நாட்டின் அமைதி, கவுரவம் எனப் பலவற்றையும் கொண்டது. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஜெய வர்தனாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்திலும் அனைவரும் திருப்தியாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதில், இலங்கையினரும் கூட முழு திருப்தி அடையவில்லை (இதன் விளைவாகத்தான் சிங்கள சிப்பாய் ஒருவன், ராஜீவ் காந்தியை துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்க முயன்றான்). 



இந்த விழாவின் பலனாக நம் நாட்டிற்கு கிடைக்கப்போவது என்னவாக இருக்கும்? 



இவர்களை பிரதமராகும் மோடி எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை பொறுத்தது. 



நன்றி தமிழ் இந்த

  • BABUBAGATH  
    தமிழனும் சேர்ந்துதானே இந்தியன்?
    about 20 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Boopathi.r  
    why ? it's not like for all tamil people...... .......
    about 21 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • karthi  from Coimbatore
    என்ன காரணம் சொன்னாலும் எங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை,
    about 24 hours ago ·   (3) ·   (1) ·  reply (1) ·  promote to News Feed
    • Subramanyam  from Chennai
      உணர்ச்சி வசப் படாமல் பார்த்தால் புரியும். இந்தியர்களே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள். அதிலும் தமிழர்கள் கேட்கவே வேண்டாம். அதானல் தான், "தமிழ் மக்களுக்கு இதுதான் கதியா", "தமிழனும் சேர்ந்துதானே இந்தியன்?" என்ற வாதங்கள் யோசிக்காமல் முன் வைக்கப் படுகின்றன.
      about 19 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Mahendran.pn  
    political parties in tamilnadu have lots of sympathy on Sri Lankan tamils, but you should see their treatment in refugee camp to them.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • செல்வி  from Salem
    தமிழக பிஜேபி கூறுவதை ஆல் இந்திய பிஜேபி ஏற்றுக்கொள்வது ஆகாத காரியம் அதே சமயம் அழைப்பு நடவடிக்கைகள் நடந்து முடிந்து விட்டன மாற்றுவது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் தமிழக கட்சிகள் இந்த விவகாரத்தில் தீவிரமாகவும் கடுமையாகவும் நடந்து பிஜேபியை எதிர்க்கின்றன இதனால் தமிழகத்திற்க்கும் மத்திய அரசுக்கும் இடையே ஏற்படும் இடைவெளியை இலங்கை தனக்கு சாதகமாக் பயன்படுத்தி புதிய இந்திய அரசுடான நட்பை வழுபடுத்த தமிழக அரசியல் கட்சிகள் உதவி செய்வதுதான் நடக்கிறது. இதை நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளவேண்டும் இனி வரும் காலங்களில் இலங்கை சம்பந்தமான வெளியுறவு நடவடிக்கைகளில் தமிழக கூட்டனி கட்சிகளை மத்திய பிஜேபி கலந்து ஆலலோசிக்க வேண்டும் விதமாக ராஜதந்திர ரீதியில் நெறுக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.அதற்க்கு ஏற்றவாறு தமிழக பிஜேபி கூட்டனி கட்சிகள் நடந்து கொள்வதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • செய்யது ஹுசைன்  
    பதவியேற்பு வைபவம். சிங்களவர்களுடைய உணர்வுகளை எமக்கு எதிராக எவ்வாறு வக்கிரப்படுத்தமுடியுமோ, அதை இங்கு ராஜபக்ச காவிப்படையினரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.திரு மோடி அவர்களும் காவி நாட்டம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவர்கள் இருவரும் ஒரே அணியில் இருப்பவர்கள் என்று கூடக் கூறலாம். அதன் அடிப்படையில்தான் உலகத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக மோடி அவர்கள் ராஜபக்சாவை தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் என்று சந்தேகம்கொள்ள வைக்கிறது.உங்களது மேலான கருத்துக்களை வையுங்கள் இதனுடன் முரண்படுகின்ற கருத்துக்களை ஆரோக்கியமாக ஏற்றுக்கொள்கின்றேன் காரணம் முரண்பாடுகளுக்கும் பலன்கள் இருக்கின்றன என்பதை அறிந்திருக்கின்றேன். செய்யது ஹுசைன். ஸ்ரீ லங்கா.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • vettupuliveeran  from Ranipet
    600 இந்திய தமிழ் மீனவர்கள் கொன்றவனுக்கு இந்திய அரசு அழைப்பு விடுப்பது தவாறன முன் உதாரணம்.இலங்கையாள் தமிழகத்தை தவிர வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை என்றால் பாகிஸ்தான் ,பங்களாதேஷ் சீனா மியான்மர் போன்றவைகள் தமிழ் நாட்டின் நட்பு நாடு தான்.அந்த நாட்டினால் எந்த தமிழனும் இறக்கப்போவது இல்லை
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Raja  
    உடனடியாக நாம் எதையும் கூறிவிட முடியாது குறைந்த பட்சம் 6 மாதம் பொறுத்திருக்க வேண்டும்
    a day ago ·   (1) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
  • Sembiyan@Thiruvallur  from Tirunelveli
    இந்த ஆள் என்ன சொல்லவருகிறார்?? 2007 / 2009 படுகொலைகளின்போது எதிர்ப்பு எழவில்லை என்பதால், நாங்களும் சேர்த்து கொலை செய்வோம்..இனப்படுகொலை தவறல்ல என்று சொல்கிறார் போல உள்ளது. இந்த மாதிரி, தனது சொந்த நாட்டின் தேசிய இனங்களைப்பற்றிய அடிப்படை அறிவே இல்லாத மேட்டுக்குடி, athikaarikalaal என்ன saathikka mudiyum?? இவர்களால் என்ன பயன்????
    a day ago ·   (8) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    THIRUMOORTHI  · sivaram.   Up Voted
  • samy kumara  from Paris
    தனிநாட்டு நிகழ்ச்சி நிரலிலிருக்கும் இந்த புலம்பெயர் அமைப்புகளின் பொருளாதார உபயம் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தனிநாட்டுக்குக் குறைவான தீர்வுத் திட்டம் ஒன்றைப் பகிரங்கமாக வைக்க முடியவில்லை நிதி தரும் அமைப்புகள் நிரந்தர எதிரியாகத் தீர்மானித்து விட்டிருக்கும் இலங்கையரசுடனோ சிங்கள சமூக சக்திகளுடனோ பேசச் செல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் புலம்பெயர் தமிழர் ஒருவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களில் சிறுபகுதியை தமிழ் மக்கள் சிந்தனைக்காக இங்கே தரவேண்டும்: புலம்பெயர் மண்ணில் சொகுசாக இருந்தபடி புலிக்கொடி போர்த்தபடி அரசியல் வியாக்கியானம் பேசி பிரிவினை, தமிழ் தேசியம், போராட்டம் என்று பிதற்றுவதை நாம் முதலில் நிறுத்துவோம். நடந்துமுடிந்த ஆயுதப் போராட்ட அழிவுகள் எம் கண்முன்னே அகன்று விரிந்து நிற்கிறது! முதலில் நிபந்தனை அற்று அதை நாம் முற்று முழுதாக நிராகரிப்போம்.
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • samy kumara  from Paris
    தகுதியான மனிதர்களாக மாறுதல்! புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சில, எப்படியாயினும் மீண்டும் இங்கே தமிழீழப் போராட்டத்தை ஆரம்பிக்க முடியுமானால், அதை முன்னெடுக்க முயற்சிகளைத் தொடர்ந்து வருவதும், இலங்கை அரசுடனும் சிங்கள மக்களிடமும் பேசி இங்கே அரசியல் தீர்வொன்றைக் காணுவது எக்காலத்திலும் இயலாது என்று முடிந்த முடிபாகப் பிரச்சாரம் செய்து வருவதும் எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த அமைப்புகள் இன்னும் புலிகளின் காலத்தில் சேர்க்கப்பட்ட நிதி மற்றும் சொத்து வளங்களைப் பெருமளவில் தம்வசம் வைத்திருக்கின்றன. அந்த சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதிலிருந்து பணபலன்களைப் பெற்றுக் கொள்கிறவர்களும் உள்ளுரிலும் வெளியூரிலுமாக அந்தப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறார்கள். மற்றும்படி, தனிநாடும் அதற்கான ஆயுதப் போராட்டமும் சாத்தியமில்லாதது என்பதும், அந்த முயற்சிகளை ஆதரித்தால் இங்கு வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் அவலங்களும் தொடரும் அந்தரிப்புகளும் பேய்க்கனவாகவே அவர்களை அச்சுறுத்துவதாகும் என்பதும் யாவரும் இன்று விளங்கிக் கொண்டிருப்பதுதான்.
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    N.Sadagopan   Up Voted
  • sundaram  
    இதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் வெளி உறவு துறையும் கட்சி தொடர்பாளர்களும் தான் காரணம் தமிழ் மக்கள் முனுமுனாக தொடங்கியவுடன் அழைப்பு கொடத்து போல் இருக்கவும், ராஜபக்ச வாராமல் இருக்கவும் ஒரு நிலபாடட்டை இந்திய வெளி உறவு துறை எடுத்து இருக்க வேண்டும் மோடி இக்கு இந்த ஆடம்பரங்கள் தேவை இல்லை .ஆனால் சில பழைய விசுவாசிகள் மோடிக்கு தலை குனிவை உண்டாக்க துவங்கி விட்டனர் .பீஜீபீ தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கவில்லை மோடி தான் பிரதமர் ஆவோம் என நினய்க்க வில்லை பீஜீபீ தேர்தல் அறிகையில் தமிழர் பிரச்சனை அலசி பேசப்படவில்லை .சரிப்பு ராஜபக்ச போன்றவர்கள் வருவது எந்தவைளும் மோடி இக்கோ இன்டியாவிக்கோ பெருமை இல்லை .ராஜபக்ச ஒரு கடைந்து எடுத்த இனவாதி சஹ்ரிப்ப் செல்வாக்கு இல்லாத அரசியல்வாதி ரானுவாம் தான் பாகிஸ்தான் இல் அதிகாரம் கொண்டது. பீஜீபீ கட்சினர் வீண் டாம்பிக பதவி ஏற்பு விழாவை தவிர்த்து இருக்கலாம் இது எல்லாம் காங்கிரஸ் கலச்சராதிற்கு சரி பட்டுவரும் பீஜீபீ போன்ற தேசிய வாத கட்சிக்கு பொருந்தி வராது .மோடி இதுபோன்ற விசயங்களில் இனி சிக்கி கொள்ளமால் கவனமாக இருக்கவேண்டும் -சுந்தரம்
    a day ago ·   (2) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    gopi  · hari   Up Voted
  • B ANANDH  
    இந்த விஷயத்தை அவ்வளவு ஆழமாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம், இது ஒரு சடங்கு போன்ற பதவி ஏற்பு விழா மட்டுமே. இதில், எந்தவிதமான முக்கியப் பேச்சுவார்த்தையோ புதிய ஒப்பந்தங்களோ போடப் போவதில்லை.....
    a day ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Muthusamy  
    முன்னாள் செயலரின் கருத்து சரியானது .பதவிஎர்ப்பு ஒரு விழாதான்.அதில் என்ன தவறு நமது வீட்டு கல்யாணத்திற்கு நமது எதிரிக்கு கூட அழைப்பு கொடுக்கிறோமே .தமிழ் நாட்டு கட்சிகளுக்கு பிரச்சனைகளை தீர்ப்பதை விட அது தொடர்த்தால் வைத்துக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று கருதுகிறார்கள். ஜே வை பொருத்தவரை அவர் தேர்தலில் வெற்றி அடைந்து விட்டார்கள். ஆனால் மத்தியில் அதிகாரம் செய்யலாம் என்றிருந்த அவர்கள் நினைப்பில் மண் விழுந்து விட்டது ஆதலால் எதிர்ப்பு காரல் கொடுக்கிறார்கள்.
    a day ago ·   (3) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    Chinnappan   Up Voted
    Sembiyan@Thiruvallur   Down Voted
  • SHAN  from Nagapattinam
    தமிழ் மக்களுக்கு இதுதான் கதியா :' அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்'
    a day ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
    h   Up Voted
  • SHAN  from Nagapattinam
    தமிழ் மக்களுக்கு இதுதான் கதியா :' அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்'

0 comments: