Tuesday, May 20, 2014

நீ காதலித்த டீச்சர் ட்ரான்ஸ்பர் ஆகிப்போனால் நீ செய்ய வேண்டியது என்ன?

1. எந்த நடிகைக்குப்பிறந்த நாள் வந்தாலும் அந்த நடிகை டிபி வெச்ச FB பெண்ணுக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல்வான் இன்ட்டர்நெட் தமிழன்


=============


2 கூடு விட்டுக்கூடு பாய்தல் = பக்கத்து வீட்டு பிகரிடம் கடலை போடுதல்



================


3 அன்பே! உன் டிபி பார்த்ததும் கையில் டூத் பிரஸ் டூத் பேஸ்ட் சகிதம் வந்துவிட்டேன்


=================


4 உன்னிடம் ஏதாவது பகிர்ந்து உண்ண.பயமாய் இருக்கிறது.டக்னு உன் பங்கை சாப்டுட்டு என் பங்கைப்பிடுங்கிக்கொள்கிறாய்!


================


5 கர்ப்பமாக இருக்கும் உன் மனைவியை ( ஊரார் பிள்ளை) ஊட்டி வளர்த்தால் அவர் வயிற்றில் இருக்கும் உன் பிள்ளை தானாய் வளரும்


==============


6 நீ என் முதுகில் உப்பு மூட்டை ஏறிய போது என் மனதில் ஓடிய கவிதை(!?) வரி = ஒரு அரிசி மூட்டையே உப்பு மூட்டை ஏறுதே ! அடடே!!


===============


7 ஜெ இங்கிட்டு இருக்கற கொடநாட்டுக்குத்தான் போய் இருக்கார்.ஆனா தளபதி ஹாங்காங் போய் இருக்கார் # அப்போ யாரு பணக்காரர்? எங்காளுதான் ;-))


================


8  ரோட்ல யாராவது எதுக்காகவாவது சண்டை போட்டுட்டு இருந்தா பஸ்சை விட்டு இறங்கி 10 நிமிசம் வேடிக்கை பார்த்துட்டு கிளம்புபவன்தான்யா தமிழன் ;-))


=============


9 பெண்டாகாலூறு ( வேக வைத்த பீன்ஸ் ஊர்) என்பதே மருவி பெங்களூர் பின் பெங்களூரு.



================


10 காதல் கொண்ட பின் யார் என்ன சொன்னாலும் தன் துணையை சந்தேகப்படாமல் இருப்பதும் ,அது பற்றி யாரிடமும் விசாரிக்காமல் இருப்பதுமே நம்பிக்கை !


==================


11 காதலிக்கும் இருவர் எதிர் எதிரே பேசிக்கொண்டிருக்கையில் அவர்கள் கண்களை விட்டு தங்கள் பார்வையைத்திருப்புவதே இல்லை.


==============

12  உன் கிட்டே பொய்யே சொல்ல மாட்டேன் னு காதலியிடம் சத்தியம் செய்யும் ஆண் உன் கிட்டே எந்த உண்மையையும் மறைக்கமாட்டேன்னு வாக்குத்தரமாட்டான்



=================


13  பிரிவுத்துயர் தான் காதலை இன்னும் இறுக்கமாக்கும் .ஒரு இடைவெளிக்குப்பின் சேர்வது அதீத நெருக்கமாக்கும்



===================


14 இயக்குநர் விஜய் இனி அமலா பால் காரர். கடை வெச்சிருந்தா கடைக்காரர் ,அமலாபாலை மேரேஜ் பண்ணி மனைவியா வீட்டில் வெச்சிருந்தா...அமலா பால் காரர்.


================


15  உன் கையால் சமைத்து உன்கையால் பரிமாறினால் லெமன் சாதம் ,புளிசாதம் மற்றும் பிற சாதங்கள் எல்லாம் எனக்கு பிரசாதங்களே!


===================


16 நீங்கள் பலாப்பழம் சாப்பிட்டாக்கூட உங்களைப்பிடிக்காதவர்கள் நீங்கள் பலான பழம் சாப்பிட்டதாகத்தான் கதை கட்டி விடுவார்கள்



================


17 பாம்பு தன் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கும்போது நாக தோஷம் கழிக்கறேன் னு பாம்புப்புற்று முன் படையல் போட்டு இம்சை செய்வான் தமிழன்



====================


18 மகர ராசி அன்பர்களே! உங்கள் கரம் பத்திரம்.பஸ்சில் போகும்போது கரம் சிரம் புறம் நீட்டினாலும் எதிர் சீட் பிகர் ப்க்கம் கொண்டுபோகாதீர்.



===================



19 அன்பே! ஆடல் கலையில் நீ ராணி! அதாவது நொறுக்குதீனியை அரவாடல் ,ஓவரா வாயாடல் !



===============



20 நீ காதலித்த டீச்சர் ட்ரான்ஸ்பர் ஆகிப்போனால் நீ சொல்ல வேண்டியது = ஐ மிஸ் யூ மிஸ்!



=================

0 comments: