Thursday, April 03, 2014

மலேசிய விமானம் MH370 பயணி அனுப்பிய SMS.விமானம் கடத்தப்பட்டது -- அதிர்ச்சி தகவல்

1165764757hijack

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.


இந்த தீவில்தான் மலேசிய விமானம் இருப்பதாக, அந்த விமானத்தில் பயணம் செய்த அமெரிக்க பயணி Phillip Wood என்பவர் தனது நண்பரும் பத்திரிகையாளருமான Jim Stone என்பவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது. மேலும் பயணி ஒரு புகைப்படமும் அனுப்பியுள்ளதாகவும் ஆனால் அந்த புகைப்படத்தில் எந்த படமும் இல்லாமல் கருப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Phillip Wood என்பவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் செய்தியில்நாங்கள் அனைவரும் ஒரு ராணுவ அமைப்பால் கடத்தப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், நான் எனது ஐபோனை மர்ம உறுப்பில் மறைத்து கொண்டதாகவும், மற்றவர்களின் போன்கள் எல்லாம் கைப்பற்றப்பட்டதாகவும், கூறியுள்ள அவர், மேலும் தன்னை ஒரு தனிமைச்சிறையில் வைத்துள்ளதாகவும், அந்த இடம் இருட்டாக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது உடலில் போதைபொருள் செலுத்தப்பட்டுள்ளதால் தன்னால் அதிக அளவு சிந்திக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அவர் அனுப்பியுள்ள எஸ்.எம்.எஸ். இதுதான்




(“I have been held hostage by unknown military personal after my flight was hijacked (blindfolded). I work for IBM and I have managed to hide my cellphone in my ass during the hijack. I have been separated from the rest of the passengers and I am in a cell. My name is Philip Wood. I think I have been drugged as well and cannot think clearly.”)


Phillip Wood எஸ்,எம்.எஸ் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்ததோடு அனைவரது பார்வையும் தற்போது அமெரிக்க ராணுவம் மீது திரும்பியுள்ளது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து எவ்வித விளக்கமும் இன்னும் கூறவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
மேலே உள்ள படத்தில் Diego Garcia தீவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் கருப்பு நிறத்தில் இருப்பதுதான் MH 370 விமான பயணி அனுப்பிய புகைப்படம்.

thanx - yaaz minnal


இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானம் எம்.எச்.370- ன் பாகங்கள் குறித்து ராடார் திரையில் ஆய்வு மேற்கொள்ளம் RAAF AP-3C குழு உறுப்பினர்.
இந்திய பெருங்கடலில் விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானம் எம்.எச்.370- ன் பாகங்கள் குறித்து ராடார் திரையில் ஆய்வு மேற்கொள்ளம் RAAF AP-3C குழு உறுப்பினர்.
எந்த ஓர் உறுதியான தகவலும் இல்லாமல், எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணிகள் நடந்து வருவதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் அங்குஸ் ஹாஸ்டன் கூறியுள்ளார்.



இந்திய பெருங்கடலில் நொறுங்கி விழுந்ததாக கருதப்படும் மலேசிய விமானத்தை தேடும் பணியில் இன்று இங்கிலாந்து நாட்டின் நீர்மூழ்கி கப்பல் இணைந்துள்ளது.



இதனை அடுத்து பெர்த்தில் உள்ள விமானத் தளத்திற்கு மலேசிய பிரதமர் நிஜாப் ரசக் விரைந்துள்ளார். ஏழு நாடுகள் இணைந்து மேற்கொண்டுவரும் தேடல் பணிகள் குறித்து அவர் ஆலோசிக்க உள்ளார்.


இங்கிலாந்தின் ராயல் கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் இன்று காலை வடமேற்கு பெர்த்திலிருந்து தேடல் பகுதிக்கு விரைந்தது. அதனுடன், 10 விமானங்கள் மற்றும் 9 கப்பல்கள் இன்றைய தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.



ஆஸ்கர் விருது வென்ற நியூசிலாந்து திரைப்பட இயக்குனர் பீட்டர் ஜாக்சன் தனது சொந்த ஜெட் விமானத்தை தேடல் பணிக்காக இணைத்துள்ளார்.



இந்த நிலையில், எம்.எச்.370 தேடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் முன்னாள் விமானப் படைத் தளபதி மார்ஷல் அங்குஸ் ஹாஸ்டன், "மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களை தேடும் பணி பெரும் சிக்கல் வாய்ந்ததும் கடினமானதாகவும் உள்ளது. எந்த உறுதியான தகவலும் இல்லாமல் இந்தத் தேடல் நடந்து வருகிறது" என்றார்.


கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது. அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த விமானம், இந்திய பெருங்கடலில் விழுந்து இருக்ககூடும் என்று செயற்கைக்கோள் புகைப்படங்கள் வழியே கிடைத்த தகவலை கொண்டு பல்வேறு நாடுகளில் விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கைகோள்கள் தேடுதல் பணியை 25-வது நாளாக இன்றும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.


thanx - the hindu



  • N.Sithu Muruganandam  from Chennai
    இங்கு கருத்துச் சொல்பவர்கள் இந்த வளர்ந்துவிட்ட அறிவியல் உலகில் இது எப்படி சாத்தியம் இல்லாமல் போகிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது திட்டமிட்ட சதி. இயற்கையாக கதிரியக்கம் தரும் யுரேனியத்தை காரீயத் தகட்டுக்குள் நன்றாகச் சுருட்டி மூடி வைத்துவிட்டால் அதைக்கண்டுபிடிக்க முடியாது. அதுபோல்தான் இதுவும். விஷயம் தெரிந்த அந்த விமானி சிக்னல்கள் அனைத்தையும் அணைத்துவிட்டிருக்கிறார், அதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  Vivek Vivek  
      இலங்காபுரி இராவணனின், புஷ்பக விமானத்தையும் இந்த தேடலில் இணைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    0 comments: