Monday, February 17, 2014

ஜிந்தா பாத் ஜிந்தாபாத் ப்ரீத்தி ஜிந்தா பாத் @ உயிரே

1.ப்ரீத்தி ஜிந்தா உயிரே படத்தில் குளிக்கும் சீன் வந்தப்பக்கூட ஜிந்தா பாத் ஜிந்தாபாத் னு கூவினவன் தான் தமிழன்



========================



2 ஒரு குடும்பத்துல 2 பெண்குழந்தை இருந்தா 2 லட்சம் ரூபா அரசு தருதாமே? அப்போ ஒரு பெண் குழந்தை இருந்தா 1 லட்சம் ஏன் தரக்கூடாது?


சரி.இன்னக்கு 1 லட்சத்துக்கு ரெடி பண்ணுவோம்



===================


3 அதிர்ஷ்டக்கல் விக்கறவங்க கிட்டே ஒரே ஒரு கேள்வி.அதை ஏன் வித்து காசாக்கறீங்க? நீங்களே வெச்சிருந்தா அதிர்ஷ்டம் தானே?



=====================


4 FAIR & லவ்லி டெய்லி போட்டு போட்டு பெண்கள் தங்கள் பிரத்யேக நறுமணத்தை இழக்கிறார்கள்


===================


5 பொண்ணோட நிக்கும் அம்மாக்கள் தனக்கு மட்டும் டால் அடிக்கும் கலர் சேலையை அணிந்து மகளுக்கு டல் அடிக்கும் கலர் சேலை அணிய விடுவது ஏனோ?



==================

6 டவுன் பஸ்ஸில் ஸ்டேண்டிங்கில் வரும் பிகர்களே! ஹேனட் பேக்கை எங்க மடில வெச்சுடறீங்க.உள்ளே டிபன் பாக்ஸ் கொதிக்குது.ஆறவெச்சுக்கொண்டாரக்கூடாதா?



===================


7 பொண்டாட்டி கிட்டே பொய்யே சொல்லாதீங்க.கண்டுபிடிச்சுடுவாங்க. ஆனா எல்லா உண்மைகளையும் சொல்லிடாதீங்க # தாம்பத்ய விதி



====================


8 பிரமாதமான காதல் வரிகளா இருக்கேன்னு டக் னு ஆர் டி பண்ணப்போய்ட்டேன்.அப்புறம் பாத்தா அது பாடல் வரி.நல்ல வேளை





=======================


9 பொண்ணுங்க ட்வீட்சா பார்த்து RT பண்றான் கற குற்றச்சாட்டு யாரும் வைக்காம இருக்கனும்னு நினைச்சா போனாப்போகுதுனு அப்பப்ப பசங்களுதையும் RTசெய்க



====================


10 பிரம்ம முகூர்த்த நேரம் அதிகாலை 3 டூ 5 ன்னா சாந்தி முகூர்த்தம் ஏன் ராத்திரி ல வைக்கறாங்க? # எகனை முகனை ஏ காம் பரம்



====================


11 பசங்களுக்குப்பயந்து பக்தி மார்க்கமா டி பி வெச்சாலும் அதை எல்லாம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாம வஞ்சியிடம் கொஞ்சி விளையாடு வான் தமிழன்



====================



12 எல்லா நாட்லயும் அன்னதானம் நடை முறை ல இருக்கு.ஆனா தமிழன் மட்டும் தான் அன்னதானத்து ல புல் கட்டு கட்டுட்டு பார்சல் கிடைக்குமா? னு பார்ப்பான்



====================


13 அன்னதானம் செய்ய நிதி உதவி செய்பவர்களுக்கு பாவம் குறையும் னா அன்னதானம் சாப்பிடுபவர்களுக்கு அந்த பாவம் சேருமா?,# டவுட் டே விட்



=================


14 கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்தவங்க தோராயமா 80,000 பேர்.அன்னதான மண்டபத்துக்கு வந்திருப்பவர்கள் துல்லியமா 3 லட்சம் பேர் # தமிழேண்டா


===================


15 பூஜை அறையில் உம்மா குடுத்தால் ச்சீ என் கிறாய்! உம்மாச்சி கண்ணை குத்துமாம்.உம்மாச்சி இல்லாத இடம் ஏது?




==================


16 16 வருடங்களுக்கு ஒரு முறை ஊரில் உள்ள பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தா விட்டால் ஊரில் பஞ்சம் நிலவும் # ஐதீகம்




====================


17 கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஒரு முறை கலந்து கொள்வது 100 முறை வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வதற்கு சமம் # ஐதீகம்



==================


18 சாண் ஏறுனா முழம் சறுக்கும்.அஞ்சான் ஏறுனா ஒரு இஞ்ச் கூட சறுக்காது# சூர்யா பஞ்ச்



====================


19 அஞ்சு ஆண்களுக்கு இணையானவன் அஞ்சான் # சூர்யா பஞ்ச் ( கற்பனை)


===================


20 மீரா ஜாஸ்மின் க்கு மேரேஜ் ஆனதால் இனி மாண்டலின் மாண் டல் இன்



======================



21 முகத்தில் காயம் ஏற்பட்டால் காயத்தின் வலியை விட அதன் தழும்பு நீண்ட நாட்கள் முகத்தில் தங்கி விடுமே என்ற கவலை அதிகமாக இருக்கும்


=================

0 comments: