Tuesday, February 18, 2014

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு விபரம்

ராஜிவ் கொலையாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தூக்கு ரத்து ! மரணக்கயிற்றில் இருந்து தப்பினர் !

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. 


இந்த வழக்கில் 3 பேரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையிலான அமர்வு, கருணை மனுக்களை நிராகரிக்க 11 ஆண்டு கால தாமதம் செய்யப்பட்டதன் அடிப்படையில் தூக்கு தண்டனை ரத்து செய்வதாக தீர்ப்பு அளித்துள்ளது. 


8m
வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பை அளித்த நீதிபதி சதாசிவம் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்துங்க .
Embedded image permalink
உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

 
ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய முவரின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. 


சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தனர். 


இருப்பினும், இந்த மூன்று பேரையும் விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ஐ பயன்படுத்தி 3 பேரையும் சிறையில் இருந்து மாநில அரசு விடுவிக்கலாம் என பரிந்துரைத்தனர். 


நீதிபதிகள் கருத்து: 

 
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரின் சீராய்வு மனு மீதான விசாரணையில் மத்திய அரசு முன் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் வாதத்தை ரத்து செய்ததாக அறிவித்தது. 


இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில்: "தூக்கு தண்டனை கைதிகளின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தூக்கு தண்டனை கைதிகளின் மனநிலை பற்றி அனைவரும் அறிவர்" என்றனர். 


நீதிபதிகள் நம்பிக்கை:

 
இனி வருங்காலங்களில் கருணை மனுக்கள் மீதான முடிவு காலம் தாழ்த்தாமல் எடுக்கப்படும் என நீதிமன்றம் நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 


அது மட்டும் அல்லாது, கருணை மனுக்கள் மீதான முடிவை தேவையில்லாமல் காலம் தாழ்த்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு அவ்வப்போது மத்திய அரசும் அறிவுறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


வழக்கின் பின்னணி:

 
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 


இந்த மனுவை பிப்ரவரி 4-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது. 


கடந்த ஜனவரி 21-ம் தேதி மற்றொரு வழக்கில் ‘கருணை மனுவை பரிசீலிப்பதில் தேவையற்ற தாமதம் செய்ததால், பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை மேற்கோள்காட்டியே முருகன் உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். 


ஆனால், மனுதாரர்களின் கோரிக்கையை கடுமையாக எதிர்த்த மத்திய அரசு, “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. 


இந்நிலையில், இன்று மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

  • முருகன், பேரறிவாளன், சாந்தன்.
    முருகன், பேரறிவாளன், சாந்தன்.

thanx - the hindu 



புதுடில்லி: ராஜிவ் கொலையாளிகள் 3 பேர் தங்களுக்குரிய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரி தாக்கல் செய்த மனு தொடர்பான இறுதி முடிவை சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.

கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.

இதற்கிடையில் மூன்று பேரும், கடந்த, 2000ல், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள், 11 ஆண்டு தாமதத்துக்கு பின், 2011ல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டன. தங்களின் கருணை மனுக்கள், தாமதமாக பரிசீலிக்கப்பட்டடு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். சிறையில் எங்களின் மன நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இவர்களின் தண்டனை குறைக்க கூடாது என்றும், இந்த வழக்கு நடத்தும் சூழலுக்கு தமிழகம் ஏற்றதல்ல. இதனால் தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் இந்த கொலையாளிகள் மனுவை இனி சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும் எனஅறிவித்தனர்.

கொடூர குற்றவாளிகள் : இதன்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் தரப்பில் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். ஒரு நாட்டின் பிரதமரை கொன்ற குற்றவாளிகளை விடுவிப்பது முறையல்ல. இவர்கள் சிறையில் எவ்வித கவலையும் பட்டதில்லை என்றும் மத்திய அரசில் வாதிடப்பட்டது. மேலும் ஜனாதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக இது போன்று தாமதம் ஏற்பட்டது. இதனை ஏற்று கொடூர குற்றவாளிகள் தண்டனையை குறைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கருணை மனு மீதான அறிவிப்பு தாமதம் ஏற்று சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளான மீசைமாதையன், பிலவேந்திரன், சைமன், உள்பட 15 பேர் தூக்கு ஆயுளாக குறைக்கப்பட்டது. இது போன்றே ராஜிவ் குற்றவாளிகள் தண்டனையையும் குறைக்கப்படும் என்று புலி ஆதரவு அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

ஆனால் ஒரு தேச பிரதமரை கொலை செய்த கொடூர குற்றவாளிகளுக்கு இந்திய சட்டப்படி பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டதை மறு பரிசீலனை செய்யக்கூடாது என்றும், விடுவித்தால் நாட்டில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் , இது இந்திய நீதி மன்றங்கள் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்றும் தேச பற்றாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சாமானிய மக்கள் ஒரு கொடூரத்தினால் பாதிக்கப்பட்டால் அவனுக்கும், அவனை சார்ந்த குடும்பத்தினருக்கும் எப்படி நீதி கிடைக்கும் என்ற கேள்வி எழத்துவங்கியுள்ளது.

தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது என்ன ? தலைமை நீதிபதி சதாசிவம், ரஞ்சன்கோகை, சிவகீர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது உத்தரவில்; மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதத்தை ஏற்க முடியாது. இவர்களின் துயரத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தூக்கு தண்டனை பெற்றவர்கள் மனநிலை அனைவருக்கும் தெரியும். குற்றவாளிகள் கருணை மனு மீதான நடவடிக்கையில் காலதாமதம் ஏற்கப்படுகிறது.



 இது போன்ற காலதாமதத்தை எதிர்காலத்தில் இல்லாமல் இருக்க போதிய சட்டநடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இனியும் காலதாமதம் ஏற்படாது என நம்புகிறோம். மத்திய அரசு ஜனாதிபதியிடம் கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் காலக்கெடு விதிக்க வேண்டும். இந்த 3பேர்களின் தூக்கை ஆயுளாக குறைக்கின்றோம். தேவைப்பட்டால் 3 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை எவ்வளவு காலம் என்று தீர்மானித்து இவர்களை விடுதலை செய்வது குறித்தும் மத்திய , மாநில அரசுகள் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்ஷன் 432 படி முடிவு எடுத்து கொள்ளலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

விடுதலையானால் இரட்டிப்பு மகிழ்ச்சி: இது குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறுகையில், 'சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது. தி.முக., காலத்தில் எடுத்த நடவடிக்கை காரணமாக தியாகு, நளினி, கலியபெருமாள் விடுவிக்கப்பட்டனர். தற்போது இந்த 3 பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ஏற்கனவே இந்த 3 பேரும் அநுபவித்த சிறைத்தண்டனையை கருத்தில் கொண்டு அவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மூன்று பேரையும் மத்திய, மாநில அரசுகள் விடுதலை செய்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்,' என்றார்.

நல்ல உள்ளங்களுக்கு நன்றி: பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகனுக்காக நான் வீதி, வீதியாக அலைந்திருக்கிறேன். பல நாள் தீர்ப்புகளால் நான் ஏமாந்து போயிருக்கிறேன்.இந்த கொலைக்கும் எனது மகனுக்கும் சம்பந்தம் கிடையாது. நான் காலை முதல் இந்த தீர்ப்புக்காக பட, படப்புடன் காத்திருந்தேன், எந்த குற்றமும் செய்யாமல் தண்டனை அனுபவித்து வருகிறான் எனது மகன். இவனது தண்டனை குறைப்புக்கு உறுதுணையாக இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் முதல்வர் ஜெ., அம்மா எனது மகனை விடுதலை செய்வார் என நம்புகிறேன். இவ்வாறு அற்புதம் கூறினார்.


Retweeted by
RT: இந்தப் புன்னகை சொல்லும் பெருங்கதையை..

நிரபராதிகளை விடுதலை செய்யுங்கள்: வைகோ : இந்த தீர்ப்பு அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். எந்த குற்றமும் செய்யாத 3பேரும் பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க நாள். அளவு கடந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வித குற்றமும் செய்யாமல் 23 ஆண்டு சிறையில் இருந்து வந்தவர். ராம்ஜெத்மலானியின் வாதம் காரணமாக இந்த வெற்றி கிட்டியுள்ளது. இவருக்கும் நன்றி . மரணத்தண்டனை சட்டம் இருக்கின்ற நாடுகளை விட மரணத்தண்டனை இல்லாத நாட்டில் உள்ள குற்றம் குறைவு என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

thanx - dinamalar

0 comments: