Saturday, November 30, 2013

விடியும் முன் - ‘தி இந்து’ விமர்சனம்


ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே ‘விடியும் முன்’.
பாலியல் தொழிலாளியாக ரேகா என்கிற காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் நடிப்பதால் காமெடி, கமெர்ஷியல், பெரிய இயக்குநர், பாப்புலர் நடிகர் இப்படி வணிகக் காரணங்களை முன்னிறுத்தி நடிக்காமல் ஒரு வலுவான கதாபாத்திரத்தை சுமக்கும் வாய்ப்பை ஏற்றதிலும், அதைச் சிறப்புடன் வெளிப்படுத்தியதிலும் பூஜா மிளிர்கிறார். 

12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறார், புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது. லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 


பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், ‘‘என் நிஜப் பெயர் நந்தினியில்லை!’’ என்று சிறுமி சொல்லும்போது, ‘‘இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு!’’ என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து க்கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். 

பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணையும், அந்தப் பாலியல் தொழிலின் சூழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு சிறுமியையும் சுற்றிக் கதையை அமைத்த இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், அதனைக் காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம். 

 பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.


கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேறிவிட்டார். கலை, படத்தொகுப்பு, காட்சிப்படு த்தியிருக்கும் சூழல் எல்லாமும் சரியாக அமைந்திருக்கின்றன. 


பெயருக்கேற்றபடி ஒரே ஒரு பொழுதில் எல்லாமே நடக்கின்றன என்பதால் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை இது. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். என்றாலும் திரைக்கதையிலும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதிலும் இன்னும் சற்று வேகத்தைக் கூட்டியிரு க்கலாம். இந்த ஒரு விஷயத்தைத் தவிரப் பெரிய குறை எதுவும் இல்லை.








































குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி. 


இந்து டாக்கீஸ் மதிப்பீடு:
விடியும் முன், ஆவணத் தன்மையைத் தவிர்த்த விழிப்புணர்வுப் படம்.

பொண்ணு எப்பவும் அச”மஞ்சம் ”னு தெரிஞ்சும் ஏன் கட்டிக்கிட்டே?

1. சார்.தெலுங்கு ல பிளாப் குடுத்த டைரக்டர் படத்துல நடிக்கறீங்க்ளே? ஏன் ?




தோல்வியை சந்திச்சவன் கிட்டே தான் ஜெயிக்கனும்கற வெறி இருக்கும்



====================


2  மிஸ் ! நீங்க போட்டிருக்கும் லெக்கின்ஸ் முழங்கால் வரை சிவப்புக்கலர்லயும் ,அப்புறம் சந்தனக்கலர்லயும் இருக்கே?



டேய்.அது மிடிடா


===========================

3  ஜட்ஜ் - கொலையை நேரில் பார்த்த சாட்சி நீ தானா?



 லேடி - சாரி யுவர் ஆனர்.உங்க உச்சரிப்பு தப்பு.என் பேரு சாட்சி இல்லை.சாக்ஷி


=====================


4  அழகான கன்யாஸ்த்ரீ ரோலுக்குப்பொருத்தமான நடிகை யார் ?


 லட்சுமி மேNUN. NUN DHIDHADAS




====================


5  டியர்.இன்னைக்கு ஆண்கள் தினமாம்.இன்னைக்காவது நீ சமைக்கக்கூடாதா?



சாரி.வேணும்னா பெண்கள் தினத்தன்னைக்கு பார்ப்போம்


===================


6  தண்ணி அடிக்கறதை உடனே நிறுத்தனும்



 அது முடியாது டாக்டர்.டாஸ்மாக் ல தராசு இல்லையே? எப்டி நிறுத்த?



======================


7  மிஸ்! உங்கம்மா வயசு என்ன ?



 எதுக்கு கேட்கறீங்க?



கன்னிப்பொண்ணு கிட்டே வயசு கேட்கக்கூடாதாம் .அம்மா வயசைச்சொன்னா கால்குலேட் பண்ணிடுவேன்


=========================


8   ஜட்ஜ் - பேங்க் ஆபீசரை பேங்க் ஏடிஎம் ல யே தாக்கி கொள்ளை அடிச்சது ஏன்?



 கைதி - இடம் பொருள் ஏவல் பார்த்து ,மேட்சுக்கு மேட்ச்



======================


9  ஜட்ஜ்- 10 அடி தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் கொள்ளை முயற்சியில் ATM போனது எப்டி?




 பாதுகாப்புக்கு போலீஸ் இருக்குங்கற தைரியத்துல தான்



===================


10  இன்ட்டர்வியூவில் எம் டி - எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?



 லேடி = பெயில் ஆகும் வரை படிச்சிருக்கேன்.


=====================



11  ஹீரோ ,ஹீரோயின் 2 பேரும் டாக்டர்ஸ்.




 அய்யய்யோ.அப்போ படம் பார்க்க வரும் ஆடியன்சை முடிச்சுடுவாங்களோ?



=====================



12  ஸார்.தமிழ் சினிமா ரசிகர்களைப்பத்தி தெரிஞ்சும் ஏன் FANTACY படம் எடுத்தீங்க?



 பென்டாஸ்டிக் னு சொல்லுவாங்கனு தான்




=====================


13  இந்தப்படத்துக்கு எப்படி 60 கோடி செலவாச்சு ?



 பாதி செலவு நான் பர்சனலா பண்ணுனதுதான்



=====================


14  சார்.எதிராளி 8 சிப்பாயையும் தலா 2 ஸ்டெப் முன்னால வெச்சும் நீங்க ஏன் கம்முன்னே இருந்தீங்க?



8*2=16 வயதினிலே ஸ்வீட் ட்ரீம்ஸ்க்கு போய்ட்டேன்



=================



15 என் படம் ஓடலைன்னா இழப்பு எனக்கில்லை.ரசனையை மேம்படுத்திக்காத ரசிகர்களுக்குத்தான் .



 யோவ்.புரொடியூசர் எனக்கும்தான் செம இழப்பு


====================



16  ஸார்.உங்க பட ஹீரோவுக்கு ஏன் கண்ணாடி மாட்டி விட்டுடறீங்க?



ஹீரோயினை நான் மட்டும் தான் ரசிக்கனும்.ஹீரோக்கு தெரியக்கூடாது



===================


17 சார்.உங்க படத்துல எப்பவும் ஒரு சைக்கோ கேரக்டர் இருக்கும்.இதுல இல்லை ?



 படம் பார்க்க வர்ற ஆடியன்ஸ் படம் புரியாம ஸைக்கோ ஆகிடுவாங்க



==================



18  பொண்ணு எப்பவும் அசமஞ்சம் னு தெரிஞ்சும் ஏன் கட்டிக்கிட்டே?



கேள்விலயே பதில் இருக்கு



=====================



19  சார்.தமிழ் சினிமா வை அடுத்த லெவலுக்கு கொண்டுபோய்ட்டீங்க.குட்.புரொடியூசர் எங்கே?



சொந்த வீட்டை வித்துட்டு வாடகை வீட்டுக்கு போய்ட்டார்



=======================


20  மேரேஜ் பண்ணிக்கறதா சொல்லி   என்னை ஏமாத்திட்டார்.




தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்திருக்கலாம்.ஏன் ரூமுக்கு உள்ளே போனீங்க?



=========================

Friday, November 29, 2013

நரி முகத்தில விழிச்சா நல்லது

1. எப்பவும் கூட்டத்தோட கோவிந்தா போடாதே! தனியா இரு ! நீ தனித்து அடையாளம் காணப்படுவாய்!



================


2 ராம நாராயணன் = லட்சுமி நாராயணன் (2013 தீபாவளி) = மகா லட்சுமி நாராயணன் ( 2014 பொங்கல் )



===================


3 நரி முகத்தில விழிச்சா நல்லது ,அதிர்ஷ்டம் என்பது உண்மைன்னா நரியோட ஜோடி நரி சுபிட்சமா இருந்திருக்கனுமே?




==================



4 உழவர் சந்தைல எது சீப்பாக்கிடைக்குதோ அதை முதல்ல வாங்கிக்குவேன்.சீக்கிரமா சேல்ஸ் ஆகிட்டதால அது டிமாண்ட் உள்ள பொருள் னு சொல்லிட முடியாது



=====================


5  அன்பே! அனுஷ்கா! உன்னை முதுகில் உப்பு மூட்டை தூக்கினால் அது பஞ்சு மூட்டை போன்ற அஸ்கா மூட்டையாகத்தான் இருக்கும்!





===================



6  நீ உதட்டைகடித்துக்கொள்ளும் அழகு கொள்ளை அழகு என்பதை உன்னிடம் சொன்னதே இல்லை.சொன்னால் அடிக்கடி கடித்து காயப்படுத்திக்கொள்வாயே?



================



7 உன் உடல் எங்கும் என்னைத்தாக்கும் ஆயுதங்கள் இருந்தாலும் உன் விழிகளே என்னை வீழ்த்தும் பிரம்மாஸ்திரம்




====================


8 4 பேர் 4 விதமாகப்பேசுவார்கள் என்பதற்காக நம்.4 இதழ்களை இணைய விடாமல் செய்வது இயற்கைக்கும் ,காதலுக்கும் எதிரானது




===================



9 ஆணாதிக்கத்தைப்பெண்ணும் ,பெண் ஆதிக்கத்தை ஆணும் ரசிக்கும் நேரம் ராத்திரி நேரமே!




===================


10 மூக்கு கள் இடித்துக்கொள்ளுமே என்று யோசித்து நம் உதடுகள் கடித்துக்கொள்ளாமல் விட்டதில்லை




===================


11 காதலியின் லிப்சை சிப்சா நினைச்சா லிப் கிஸ் காதலுக்கு நொறுக்குத்தீனி




===================


12 சுண்டி இழுக்கும் அழகு உன்னுது.மண்டி இட்டுத்தெரிவிக்கும் காதல் என்னுது!




===============


13 ஏம்மா! ஒரு டர்க்கி டவல் வாங்கித்தர மாட்டானா அந்தக்காதல் பொறுக்கி ?



===============


14 லிப் கிஸ் அடிக்கும்போது வானத்தில் பறப்பது போல் இருப்பதால் அதை FLYING KISS என்றும் சொல்லலாம்




====================


15 இங்க்லீஷ் மிஸ் சை ( டீச்சர்) லவ் பண்ணினா ஈசியா இங்க்லீஷ் கிஸ் கிடைக்கும்னு தப்புக்கணக்கு போட்ரக்கூடாது


=================


16 பெண்களின் செல்லச்சீண்டல் = போய்யா யோவ் ( பகலில்),போடா டேய் ( இரவில்) ,வாடா டேய் ( நள்ளிரவில்) #,கொல்லிமலை சித்தர் குகை ஓவியக்குறிப்பு



===================


17 பெண்கள் சேலை தலைப்பை சரி செய்யும்போது தான் அது வரை க்வனிக்காதவர்கள் எல்லாம் பார்க்கிறார்கள் #நான் பார்க்கலை.பார்த்தவங்க சொன்னாங்க



===================


18 சிம்பு - ஹன்சிகா காதல் முறிவால் உற்சாகம் அடைந்த சிவகார்த்திகேயன் # பனை மரத்துல நெறி கட்னா தென்னை மரத்துல தேள் கடிச்சிருக்கானு பார்ப்பாங்ளோ




=====================


19 பொண்ணுங்க பொதுவா ஒரு குட்மார்னிங் சொன்னாக்கூடா வாலன்ட்ரியா பஸ்ல ஏறி வணக்கம் வைப்பவனே தமிழன்




=================


20 ஆபீஸ் ல ஒருத்தன் பக்கத்து பில்டிங் பிகர் கிட்டே டிக் டாக் டிக் டாக் னு சிக்னல் குடுக்கறான்.அது சிரிக்குது # என்ன அர்த்தமா இருக்கும்?



=====================

மதயானைக்கூட்டம் - விழாவில் பாலுமகேந்திரா உரை

’நல்ல படங்களை எடுக்க கோடிகள் தேவையில்லை’ - பாலுமகேந்திரா

‘மதயானைக்கூட்டம்’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. இவ்விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், தயாரிப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன், நாயகன் கதிர், நாயகி ஓவியா, இசையமைப்பாளர் ரகுநந்தன், பாடலாசிரியர் ஏகாதேசி உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்டனர். 

 மதயானைக்கூட்டம் இசை வெளியீட்டு விழா

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா பேசியதாவது: 



“என்னுடைய குடும்பத்திலிருந்து இன்னுமொரு இளைஞன் இன்று இயக்குநராக பிரவேசிக்கிறான். என் படைப்பு வாழ்க்கையில் 1999, 2000 ஆண்டுகள் மிகவும் சந்தோஷமான காலம். நிறைவான, திருப்தியான காலகட்டம் என்றும் சொல்லலாம். ‘கதைநேரம்’ என்ற பெயரில் குறும்படங்களை இயக்கிய போது என் பக்கத்திலேயே இருந்து வெற்றிமாறன்,
விக்ரம் சுகுமாரன், சுரேஷ், கௌரி ஆகியோர் ஒத்துழைத்தார்கள். இவர்களது ஒத்துழைப்பு இல்லையென்றால் என்னால் திருப்தியாக அதைச் செய்திருக்க முடியாது. ஏனென்றால், அடுத்த நாள் படப்பிடிப்பை, அன்று இரவு 1 மணிக்கு முடிவெடுப்பேன். அப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். அப்போது என் அருகிலேயே இருந்த குழந்தைகளில் விக்ரம் சுகுமாரனும் ஒருவன். 



எங்கள் கிராமத்தில் ‘கல்யாணம் முடித்து, பிள்ளைகள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தால், தாய் தகப்பன் குழந்தை பெறுவதை நிறுத்திக்கொள்வார்கள்’ என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். ஆனால் இவர்களோடு நானும் இன்று குழந்தை பெற்றுக்கொண்டிருக்கிறேன். படைப்பு ரீதியான குழந்தை. அதற்கான வீரியம் இருப்பதால் நானும் படம் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதை நிறுத்திவிட்டால் என் மூச்சு நின்றுவிடும் என்று எனக்குத் தெரியும். இவர்களுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனது தோட்டத்தில் விழுந்த விதைகள் நல்ல விதைகள். அதனால் கொஞ்சம் நீர் ஊற்றியதாலேயே நன்றாக விளைந்திருக்கிறது. இவர்களை நான் உருவாக்கவில்லை. அவர்களாகவே உருவானார்கள். 



சிலர் சினிமாவை வியாபார நோக்கில் பார்க்கிறார்கள். அவர்களோடு எனக்கு உடன்பாடில்லை. சினிமா வியாபார பண்டம் அல்ல. நல்ல படங்கள் பண்ணுவதற்கு சில லட்சங்களே போதும். கோடிகள் தேவையில்லை. அவர்கள் வெறும் வியாபாரிகள். அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டாம். முழுக்க முழுக்க வியாபார பண்டமாக நினைக்கும் கூட்டத்தோடு நாம் சேர வேண்டாம். நாம் நினைத்த சினிமாவை எடுப்பதுதான் சுதந்திரம். அப்படி ஒரு படத்தை சுகுமாரனும் செய்திருப்பார். 



ஜீ.வி.பிரகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். ஜாக்கிரதையா இரு. உன்னையும் வியாபாரியாக்கி விடப்போகிறார்கள். பாரதிராஜாவும் ‘பாண்டியநாடு’ படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று பாராட்டுகிறார்கள். உனக்கும்தான் சொல்கிறேன். நீ தொடர்ந்து இயக்குநராகவே இருக்க வேண்டும்’’ என்றார். 



தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் பேசுகையில், “ சமீபத்தில் பல படங்கள் நல்ல படங்களாக வெளிவருகிறது. சந்தோஷமாக இருக்கிறது. சவாலாக எடுத்துக்கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. இப்போதும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் புதிய படங்களை எடுக்கிறார்கள் 



சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தை , கிட்டத்தட்ட 66 கோடி போட்டு கார்பரேட் நிறுவனங்கள் எடுத்திருக்கிறார்கள். வெளியே திறமையோடு பல உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கலாம். அதுபோன்ற படங்களை கார்ப்பரேட்டுகள் எடுக்க முன்வரக்கூடாது. அதனை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம். தொடர்ந்து கார்பரேட் கம்பெனிகள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சங்கங்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்க நேரிடும்’’ என்றார். 



இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ‘‘ஜீ.வி.பிரகாஷ் ஒரு அற்புதமான கலைஞன், அற்புதமான இளைஞன், ஒரு குழந்தை, பாசிடிவ் எண்ணம் கொண்டவன். வயதுக்கு மீறிய திறமை கொண்டவன். இந்தப்படத்தையும் சிறப்பாக எடுத்திருப்பான். புது முகங்களை அறிமுகப்படுத்துவேன் என்று வாக்கு கொடுக்கும் ஜீ.வி.பிரகாஷ் நிச்சயம் பிஸினஸ்மேன் இல்லை. அவனுடன் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே ஓவியா, பக்கத்து வீட்டு பெண்போல அழகாக நடித்திருக்கிறார்.



 பாலுவின் உதவியாளர்கள் ‘கிளாஸ்’ இயக்குநர்கள். அவரும் ‘கிளாஸ்’ இயக்குநர். என் சமகால இயக்குநர் பாலு. அவரது படங்களைப்பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன். 20 லைட்ஸ் வைத்து எடுக்க வேண்டிய சீனை 2 லைட்ஸ் வைத்து எடுப்பார். பாலு ஒரு செல்லுலாய்டு கவிஞன்’’ என்றார். 



Thursday, November 28, 2013

உங்க ஜாதகத்தை மட்டும் கொண்டுவந்தா எப்டி?

1. எங்க கட்சிக்காக நீங்க வாய்ஸ் தரனும்.பிரதி உபகாரமா என்ன எதிர்பார்க்கறீங்க ?



 பாரத ரத்னா விருது குடுத்தா போதும்



====================


2  டியர்.எதுக்கு ஜடையை இழுக்கறீங்க?,வம்பிழுக்கவா?



 சந்தடி சாக்குல சந்தைல வாங்குன் சவுரியை ஜடைன்னுட்டியே!கள்ளி!



======================


3  ஜட்ஜ் - கொள்ளையன் ஒரு சைக்கோன்னு எப்டிக்கண்டு பிடிச்சீங்க?



போலீஸ் - அவனே போன் பண்ணிச்சொன்னான் . நாம எப்போ  சொந்தமா   கண்டுபிடிச்சோம்?



==================


4  சார்.நீங்க படம் வாங்குனதுல செம லாசாமே?




 பேக்கு மாதிரி பேசாதீங்க.லாஸ் னா எந்த மடையனாவது அதே ப்ராடக்டை அதிக விலை கொடுத்து வாங்குவானா?



===================



5  டியர்.நீங்க என்னை செல்லம்னு கூப்பிடறதை விட செல்லக்குட்டினு கூப்ட்டா நான் சந்தோஷப்படுவேன்.



ம்.ஆனா உன் தங்கச்சி கோபப்படுவாளே?


=======================


6  என் படம் ஓடுமா? ஓடாதா? ஜாதகத்தைப்பார்த்து சொல்லுங்க.




உங்க ஜாதகத்தை மட்டும் கொண்டுவந்தா எப்டி? உங்க கூட நடிக்கிறாரே அவருதையும் கொண்டாங்க



=====================



7  எதுக்காக ஆபீஸ்க்கு திவ்யதர்சினியை கூட்டிட்டு வந்திருக்கே ?



,சார்.நீங்க தானே BRING DD னு SMS பண்ணீங்க?


====================


8  ஜட்ஜ் - மேரேஜ் ஆன ஆளை கரெக்ட் பண்ண உளவியல் ரீதியா ஏதாவது காரணம் இருக்கா?



 நடிகை.- களவியல் ரீதியா 50% .கலவியல் ரீதியா 50% யுவர் ஆனர்



=================


9  டாக்டர்!hair straightening பண்ணா தலைய சாச்சு தான் வச்சுக்கணுமா?



தூங்கும்போது மட்டும் சாய்ச்சா போதும் மேடம்.நீங்க என்ன சாய் சித்ராவா?



=================


10. தர்மத்தின் வழக்கை சூது கவ்வியது.மீண்டும் அதர்மம் வென்றது # கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை



===============


11. தீர்ப்பு ,விடுதலை ,அநியாயம் ,அநீதின்னு இங்கே இத்தனை பிரச்சனை ஓடிட்டிருக்கு.டேமேஜர் ஒரு லேடி ஸ்டாf கிட்டே" இன்னைக்கு லெமன் சாதம் தானே"


------------------


12.  நடிகைகள் எப்பவும் மேரேஜ் ஆன ஆளுங்களையே கண் வைப்பதில் ஏதாவது உளவியல் ரீதியா காரணம் இருக்குமோ?


===============


13.  சங்கர் ராமன் கொலை செய்யப்பட்டது அன்று.அவர் வழக்கு (ம்) கொலை செய்யப்பட்டது இன்று



===============


14. ஒரு தனி வங்கியே திறக்கும் அளவுக்கு உன் வெட்கப்புன்னகைகளை சேமித்து வைத்திருக்கும் காதல் டெபாசிட்டர் நான்.



================

 15 ஜெ - சிவாஜி சிலையை தூக்கிடுங்க !



 ஓபிஎஸ் - வீரர் சிவாஜி,நடிகர் திலகம் சிவாஜி,சூப்பர் ஸ்டார் சிவாஜி 3 ல எதை மேடம்?



============

தெஹல்கா மேனேஜிங் எடிட்டர் ராஜினாமா; போலீஸ் முன்பு தேஜ்பால் இன்று ஆஜராகிறார்

புதுடில்லி: பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா மேனேஜிங் எடிட்டர் தனது பொறுப்பில் இருந்து விலகினார். தன்மீதான நம்பிக்கையில் சிலருக்கு சந்தேகம் ஏற்படுவதால் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட மற்றும் அரசு தரப்பில் நடந்த ஊழல்கள், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தமது புலனாய்வு நிருபர்கள் மூலம் அம்பலப்படுத்தவதில் தெஹல்காவுக்கு என தனி இடம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பத்திரிகை நிர்வாக ஆசிரியர் தருண்தேஜ்பால் மீது சக பெண் நிருபர் ஒருவர் செக்ஸ் புகார் தெரிவித்திருந்தார். இதனை கோவா போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து தவறுக்கு வருந்துவதாகவும், தேஜ்பால் தமது ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார்.

தேஜ்பால் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா போலீசார் நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று மதியம் 3 மணிக்குள் அந்த கெடு முடிகிறது.

இதனால் தேஜ்பால் இன்று ஆஜராவார். விசாரணைக்கு பின்னர் போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்குவர்.

சக ஊழியர்களுக்கு இமெயில் : இதற்கிடையில் தேஜ்பால் மீதான புகாரை மூடி மறைக்க தெஹல்காவின் மேனேஜிங் எடிட்டர் ஷோமா சவுத்ரி மீது சிலர் சந்தேகம் தெரிவித்தனர். இதனை நிராகரித்த சவுத்ரி இன்று ராஜினாமா செய்துள்ளார். இவர் இன்று நிர்வாக சக ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் தெஹல்கா ஊழியர்கள் மற்றும் நிறுவனத்திற்கு ஏற்பட்ள்ள துயரமான நேரம் இது. தமது சக பெண் ஊழியர் அளித்த புகார் அடிப்படையில் தான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளேன். கமிட்டி அமைக்கப்பட்டு விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். இருப்பினும் என் மீதான நேர்மையில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நான் தேஜ்பாலை காப்பாற்ற முயற்சிப்பதாக சொல்கின்றனர். என்னை பொறுத்தவரை எனது நேர்மையில் சந்தேகமும், பத்திரிகையின் மீது களங்கம் ஏற்பட நான் விரும்பவில்லை. இதனால் எனது மேனேஜிங் எடிட்டர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறேன். - ஷோமா . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தேஜ்பால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்: தேஜ்பாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் டில்லியில் உள்ள அவரது வீடடின முன் கூடினர். இங்கு அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து தேஜ்பால் வீட்டு முன்பு பரபரப்பு எற்பட்டது.

நன்றி : தினமலர்

Wednesday, November 27, 2013

முன்னணி கில்மா ஜோடி சிம்பு - நயன்தாரா மீண்டும் இணைந்ததன் பின்னணி என்ன?

இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் நடிகர் சிம்புகோலிவுட்டின் இப்போதைய பரபரப்பான இயக்குநர் பாண்டிராஜ்தான். தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இவர், இப்போது மேலும் பரபரப்பாக காரணம் சிம்பு - நயன்தாரா. நீண்ட காலமாக பிரிந்திருந்த சிம்புவும் நயன்தாராவும் தன் படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிக்க ஒட்டுமொத்த தமிழகமும் அவரைத் திரும்பிப் பார்த்தது. “இதை எப்படி சாதித்தார்” என்று எல்லோருக்கும் வியப்பு. அந்த வியப்பையே முதல் கேள்வியாக்கி அவரைச் சந்தித்தோம். 



சிம்பு, நயன்தாரா உங்கள் படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார்கள்?


 
இதைப்பற்றி நிறைய பேசிவிட்டேன். சிம்பு படத்தை நான் இயக்குவதாக ஒப்புக்கொண்ட அடுத்த நாளிலிருந்தே நாயகியை தேடிக் கொண்டிருந்தோம். இந்தப் படம் சிட்டி, ஐ.டி துறை சார்ந்த களம். படக்குழுவினரோடு பேசிக்கொண்டிருந்தபோது இதில் நாயகியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேச்சு எழுந்தது. அவரிடம் பேசியபோது முதலில் கொஞ்சம் யோசித்தார். பிறகு கதை, சூழல் பிடித்திருக்கவே சம்மதம் தெரிவித்தார். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டது. இதில் சிம்பு, சூரி சேர்ந்து கலக்கியிருக்கும் காமெடி காட்சிகளை எடுத்துள்ளோம். டிசம்பர் மாதத்தில் நயன் தாரா, சிம்பு நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். 
 

சிம்பு, சூரி புதுக்கூட்டணி எப்படி இருக்கிறது? 

 
முழுக்க நகர வாழ்க்கையைப் பேசும் படம். நான் பார்த்த, ரசித்த விஷயங்களை நிறைய சேர்த்திருக்கேன். சிம்பு, சூரி, நான் உட்பட எல்லோருக்குக்குமே வேறொரு இமேஜை இந்தப் படம் கொடுக்கும். கேமராமேன் பாலசுப்ரமணியம் கலர்ஃபுல்லாக எடுத்திருக் கிறார். படப்பிடிப்பின்போது சூரி, ‘‘ இவ்வளவு காஸ்ட்லியான சர்ட், பேண்டா? பொதுவா எனக்கு ஒரு கைலியும், டி-சர்ட்டும் கொடுத்து ஏமாத்திடுவாங்களே. இப்போதான் புரமோஷன் கிடைச்சிருக்கு!’’ என்று சிரித் தார். அந்த அளவுக்கு அவரை மாற்றிக் காட்டியிருக்கிறோம். எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் படமாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. 


சாதாரண மனிதர்களை, இயல்பான இடங்களை அழகா படமாக்குறீங்களே? 


 
படம் பார்க்குறவங்க அவங்களோட வாழ்க்கையில், கதை ஒன்றி வருகிற மாதிரி இருக்க வேண்டும் என்று நினைப் பேன். இப்படியும் கூட நடக்குமா என்று கேள்வியையோ, சந்தேகத்தையோ எழுப்பக் கூடாது. பார்த்த, கேள்விப்பட்ட படித்த சம்பவங்கள் - இதுதான் என் கதை. இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு வார்த்தை விடும்போது அதை நீங்கள் ரசித்தால், உடனே குறிப்பெடுத்துக்கொள்வேன். எங்காவது ஒரு இடத்தில் அது கதையில் ஒட்டிக்கொள்ளும். 
 


ஒரு நல்ல இயக்குநர், தயாரிப்பாளராகவோ நடிகராகவோ பரிணமிக்கும்போது கிரியேட்டி விட்டி பாதிக்கப்படும் என்கிறார்களே? 

 
ஒரு விதத்தில் இது உண்மைதான். இயக்குநரே, தயாரிப்பாளராக இருப்பதில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. போராட்டம், பணத்தின் மதிப்பு எல்லாவற்றி லும் கூடுதல் கவனம் செலுத்த முடி கிறது. அதேபோல, எடுத்த ஒரு சீன் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிக சிரமத்தைக் கொண்டு படம்பிடிக்கலாம். இதே, தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது அதை விளக்கமாக சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை தெரிந்துகொள்ளவாவது ஒரு படத்தில் இயக்குநரே தயாரிப்பாளராக இருந்துவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 



மீண்டும் ‘பசங்க’ மாதிரியான படம் எடுப்பீர்களா? 


 
கண்டிப்பாக எடுப்பேன். கிராமத்து குழந்தைகளை மையமாக வைத்து கதை சொன்னது போல, முழுக்க நகரத்து குழந்தைகளை வைத்து படம் பண்ண ஆசை இருக்கிறது. ஒரு பெரிய ஹீரோ படம், அடுத்து ஒரு பசங்க படம் என்று மாறி மாறி பண்ண வேண்டும் என்பதுதான் என் ஆசை. பார்க்கலாம். 



மோசடி, பிரச்னை என்று உங்களை சுற்றி அவ்வப்போது ஏதாவது சுழல்கிறதே? 


 
சிலருக்கு உழைக்க கஷ்டமா இருக்கு. ஓடும் குதிரையில் பயணிக்க விருப்பப்படுகிறார்கள். இங்கே பிச்சைக் காரர்கள் குறைவு. காஸ்ட்லி பிச்சைக்காரர்கள் அதிகம். அவர்களால் உண்டாகும் இடை யூறுகள் இவை. அதை நான் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. 

 
குடும்பம், குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? 


 
சில நாட்களுக்கு முன் சினிமா விழாவில் கலந்துகொண்டு வெளிநாடு சென்று திரும்பிய போது, என் மனைவி வசந்திக்கு ஒரு தங்க நகை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன். ‘இதெல்லாம் எதற்கு, என்னோடும், குழந்தைகளோடும் 3 மணி நேரம் இருங்க. அதுதான் சர்ப்ரைஸ்!’ என்றார். அப்போது எனக்கு எதுவுமே பேசத் தோணல. ‘கொஞ்ச நாட்கள் பொறுத்திரு. எனக்கும் ஒரு என்ட் கார்டு வரும். சினிமாவில் நானும் ஒரு நாள் ஓய்வு பெற்றுவிடுவேன். அப்போது நீயே வேலைக்கு போ என்றாலும், என்னால் போக முடியாது. அப்போது உங்களுடன் செலவழிக்கிறேன்’ என்று சொல்லி ஆறுதல் படுத்தினேன். இப்போது குடும்பத்தை பொறுத்தவரைக்கும் நான் குற்றவாளியாகவே இருக்கிறேன். 



இந்த பயணம் எப்படி இருக்கிறது? 


 
இப்போதும் அடிக்கடி ஊருக்கு போய் வருகிறேன். எனக்குப் பிடித்ததே அதுதான். கையெழுத்து போடத்தெரியாத அப்பா, கைரேகை வைக்கத்தெரியாத அம்மா, எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத கிராமத்திலிருந்து வந்து அடைந்திருக்கும் இந்த இடத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தானே ஆகணும். என்னமோ தெரியலை, உதவி இயக்குநராக இருந்தபோது வாங்கிய 3000 சம்பளம் கொடுத்த திருப்தி, இப்போது லட்சங்களைப் பார்க்கும்போது இல்லை. அதேபோல, இப்போ வரைக்கும் ஒரு இயக்குநரா பொழுதுபோக்குக்கான படங்களைத்தான் இயக்கியிருப்பதாக நினைக்கிறேன். இன்னும் மனதுக்குப் பிடித்த படமும் கொடுக்கவில்லை. அதை செய்யும் வரைக்கும் இந்தப் பயணம் தொடரும். 

 a



நன்றி - த தமிழ் ஹிந்து

சங்கரராமன் கொலை வழக்கு:ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை




புதுச்சேரி : சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி வியேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
வழக்கு விபரம் :

தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலைத்தொடர்பாக வரதராஜ பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் கணக்காளர் கணேஷ், காஞ்சிபுரத்திலுள்ள விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தியதின் பேரில், காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். வழக்கு விசாரணையின் போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ரவி சுப்ரமணியன் அப்ரூவராக மாறி, செங்கல்பட்டு கோர்ட்டில் சாட்சியம் அளித்தார். தமிழகத்தில் இந்த வழக்கு நடைபெற்றால் முறையாக தீர்ப்பு கிடைக்காது என கருதப்பட்டதால் இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கடந்த 2009ம் ஆண்டு முதல் புதுச்சேரி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில், சங்கரராமன் மனைவி பத்மா, மகன் ஆனந்தசர்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்ட 371 சாட்சிகள் போலீசாரால் சேர்க்கப்பட்டனர். இதில் வழக்கு சம்பந்தமாக சேர்க்கப்பட்ட 187 சாட்சிகளிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் குறுக்கு விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அப்ரூவர் ரவி சுப்ரமணியன் உள்ளிட்ட 83 பேர் "பல்டி' அடித்துவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது, 6 வது எதிரியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கதிரவன்(40) என்பவர் கடந்த மார்ச் மாதம் சென்னை கே.கே.நகரில் காரில் வரும் போது வன்முறைக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மீதமுள்ள 23 பேர் மட்டும் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி வந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை, நீதிபதி சின்னபாண்டியன் விசாரித்தார். தொடர்ந்து, கிருஷ்ணராஜா, ராமசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர். நான்காவதாக, நீதிபதி முருகன் விசாரணை நடத்தி வந்தார். கோர்ட் புறக்கணிப்பு, சாட்சிகள் ஆஜாராகாமல் இழுத்தடிப்பு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வந்த இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு நவம்பர் 27ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி முருகன் தெரிவித்திருந்தார்.

கோர்ட் தீர்ப்பு :

வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 23 பேரில் தில் பாண்டியன் மற்றும் சில்வர்ஸ்டர் ஸ்டாலன் ஆகிய இரண்டு பேர் தவிர மற்ற 21 பேரும் இன்று நேரில் ஆஜராகினர். அப்ரூவராக மாறிய ரவி சுப்ரமணியம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் காவலுடன் கோர்ட்டில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், வழக்கில் போதிய ஆதாரங்களும், சாட்சிகளும் இல்லாததாலும், அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் வழங்கப்படாததால் சந்தேகத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அளித்து குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
தீர்ப்பு திருப்திதரவில்லை :

கொலையான சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறுகையில், 'இந்த தீர்ப்பு திருப்திதரவில்லை. என் தந்தை தானாக கொலை செய்து கொள்ளவில்லை. சிலர் வந்து வெட்டி கொலை செய்துள்ளனர். இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு சிலருக்காவது தண்டனை கிடைத்திருந்தால் இந்த தீர்ப்பை நம்பலாம். ஆனால், யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை. எனவே, இந்த தீர்ப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. குடும்பத்தினருடன் பேசி, அது குறித்து முடிவு எடுக்கப்படும்,' என்றார்.





மேல்முறையீடு :

சங்கரராமன் கொலை வழக்கில் புதுச்சேரி கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்திரப்பதாக அரசு தரப்பு வழக்கிறஞர் தேவதாஸ் தெரிவித்துள்ளார். தமிழக அரசுடன் ஆலோசனை செய்த பிறகு மேல்முறையீடு செய்யப்படும் எனவும், சங்கரராமன் குடும்பத்தாரின் பிறழ் சாட்சியமே குற்றவாளிகள் 23 பேரின் விடுதலைக்கு காரணம் எனவும் தேவதாஸ் கூறி உள்ளார்.

நன்றி : தினமலர்

ராசி யான கோலிவுட் ஹீரோ யார்?

1. ஜட்ஜ் - லிப்டில் போகும்போது சில்மிசம் செஞ்சீங்களா?



தெகல்கா தேஜ்பால் = 30 வது மாடி.பக்கத்துல 28 வயசு லேடி ஹி ஹி



==================



2 சார்.இதே ஆபீஸ் ல 10 வருசம் குப்பை கொட்டிட்டேன்.பிரமோசன் வேணும்.



ம்க்கும் அதையே ஒழுங்கா கொட்டறதில்லை வழி ல பாதி சிதறிடுது



=====================


3  ஸார்.உங்க படம் ஓடற ஒவ்வொரு தியேட்டர் ல யும் ஒரு காலேஜ் லெக்சரர் நிக்கறாரே எதுக்கு?



 படம் சுத்தமா புரியலைனு சொல்றதால கதையை விளக்க ஆள்



===================


4 ஏ க்ளாஸ் ஆடியன்சுக்கு என் படம் பெட்டர் எக்ஸ்பீரியன்சா இருக்கும்.



ஓஹோ.புரொடியூசருக்கு BITTER EXPERIENCE?



===================


5  சார்.டிக்கெட் எவ்ளவ்?



150 ரூபா




. இந்தாங்க 75 ரூபா.இடைவேளை வரை தான் படம் நல்லாருக்காம்.அதை மட்டும் பார்த்துட்டுப்போய்டறேன்


==================


6  சார் .உங்க படம் அவுட் ஸ்டேண்டிங்.


தாங்க்ஸ்.



இடை வேளை முடிஞ்சதும் ஆடியன்ஸ் எல்லாம் வெளில நின்னாங்க.கேட்டைத்திறக்கச்சொல்லி



===================


7  பிலிம் இன்ஸ்டிடியூட் டீச்சர் - ராசி யான கோலிவுட் ஹீரோ யார்?



மிஸ்! உங்க கேள்விலயே பதில் இருக்கே?



=======================


8 மிஸ்! எனக்கு மட்டும் ஸ்மைலி சின்னதா போட்டு இருக்கீங்க ஏன்?



 காலைல இருந்து 300 பாலோயர்ஸ்க்கு ;-)) போட்டு வாய் வலிக்குது


===================



9  கமல் - ஆரோ 3 டி எபக்ட்ல விஸ்வரூபம் 2 வருது. #



 யாரோ திருடி டி வி டி யா விக்காம இருக்க இது நல்ல ஐடியா



==================



10   என் படம் படிச்சவங்களுக்கு மட்டும் தான் புரியும்.



ஓஹோ.அப்போ படத்தை ஸ்கூல் ,காலேஜ் ல மட்டும் ரிலீஸ் பண்ணுங்க.ஏன் தியேட்டர்ல?



==================


11 நான் ஒரு ட்ரெண்டு செட்டர். அப்டின்னா என்னங்ணா? ரெண்டு பேரை செட் பண்ணிட்டீங்கன்னு அர்த்தம்ங்களா?




==================



12   டியர்.நீ தான் என் இரண்டாம் உலகம்.



 சாரி மிஸ்டர்.ஏகப்பட்ட பேரு இப்டி சொல்லிட்டாங்க.நீ ஆயிரத்தில் ஒருவன்


========================


13  சார்.உங்க படம் பார்க்க வந்தேன்.5 பேர் தான் இருக்காங்க. 



நல்லா பாருங்க.36 கேரக்டர்ஸ். 



நான் சொன்னது ஆடியன்ஸ் 5 பேர் தான்



==========================


14 ஆபீஸ் ல தேவை இல்லாம பொண்ணுங்க கூட பேசிட்டிருக்்கக்கூடாது. 



ஓக்கே சார்." தேவை" இருந்தா பேசிக்கலாமா ?


=========================


15 டியர்.இன்னைக்கு நீ டிரசே போடாத.வீட்டை விட்டுப்போகாதே? 


ஏன்?


ஏன் என்றால் உன் பிறந்த நாள்


==========================


16 ஜட்ஜ் - உங்க மேல தப்பில்லை.உங்களுக்கு பேர் வெச்சவங்க மேல தான் தப்பா? 



தேஜ்பால் -் யுவர் ஆனர்.பேர்லயே பால் இருந்ததால தான் பால் இயல் புகார்



==========================



17 ஜட்ஜ் - லிப்ட் ல போகும்போது லேடிகிட்டே சில்மிஷம் செஞ்சீங்களா?



தேஜ்பால் - இல்ல.கீழே வரும் போது தான் ;-))



=====================



18 பேங்க் கேஷியரைக்கட்டிக்கிட்டது தப்பா போச்சுடி


.ஏண்டி?



 முதல் இரவு ல உள்ளே போனதும் டோக்கன் குடுத்து " கூப்பிடும்போது வந்தா போதும்"னுட்டாரு


=====================


19 டியர். ம்.வெயிட்.ஆக்கப்பொறுத்தீங்க.ஆற பொறுக்க மாட்டீங்களா?



நான் ஏன் பொறுக்கனும்?நான் என்ன பொறுக்கியா?


==================


20 மிஸஸ்  மீன்ஸ்மினி - டியர்.எத்தனை மணிக்கு நீங்க FREE?



மினிமீன்ஸ் - ஏன்? 


மீன்ஸ்மினி - ஒரு ட்வீட் போடறேன்.வந்து RT பண்ணுங்க, ஃபேஸ் புக் ல ஒரு ஸ்டேட்டஸ் போடறேன் , வந்து லைக் போட்டு கமெண்ட்டும் போடுங்க

==================



Tuesday, November 26, 2013

X: Night of Vengeance (2011) - சினிமா விமர்சனம் 18 +

 

ஹீரோயினுக்கு 17 வயசு. சாப்பாட்டுக்குக்கூட வழி இல்லை . ரொம்ப கஷ்டத்துல இருக்கறதால பெண்களுக்கான பாரம்பரியத்தொழில் ல இறங்கலாம்னு முடிவு பண்றா. 


இன்னொரு ஹீரோயின் , பேசிக்கலாவே இவர் ஒரு தொழில் அதிபர் . எழில் அதிபரா இருக்கும் சில  பெண்கள் என்ன தொழில் செய்வாங்களோ அந்த தொழில் .  அந்த தொழில் அதிபர் . தன்னோட தொழிலை விட்டுட்டு வாழ்க்கைல செட்டில் ஆக முடிவு பண்றா. கடைசி கடைசியா ஒரே ஒரு டைம் தொழில் பண்ணிட்டு பொட்டியைக்கட்ட பிளான். அப்போ கஸ்டமர்  இன்னொரு பொண்ணு வேணும்னு கேட்க யாராவது சிக்கறாங்களா?ன்னு  பார்த்துட்டு வரும்போது ஹீரோயின் சிக்குது.

2 பேரும் இணைந்த கைகள் ராம்கி , அருண் பாண்டியன் மாதிரி தோஸ்ட் ஆகிடறாங்க . அந்த கஸ்டமர் இருக்கும் ஹோட்டல் ரூம்க்கு போறாங்க . 


 அவன் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலைச்சேர்ந்தவன் . அவன் ரூம் ல போதை மருந்து இருக்கு . அதை வெச்சு தன் பாஸ் கிட்டே டபுள் கேம் ஆடப்பார்க்கறான் //


 பாஸ் அங்கே வந்து அவனை கொலை பண்றார். அந்தக்கொலையை  2 தொழில் அதிபர்ங்களும்  பார்த்துடறாங்க . அவங்க பார்த்துட்டாங்க என்பதை கொலையாளியும் பார்த்துடறான்.ஹீரோயின் போதை மருந்தை லபக்கிட்டான்னு இவன் சந்தேகப்படறான்


 இப்போ  இந்த 2 பேரையும் வில்லன் துரத்தும் கதை தான் மிச்ச மீதி திரைக்கதை



ஹீரோயின் சீன பர்பி பொம்மை மாதிரி இருக்கு .  அப்பாவித்தனமான நடிப்பு , நல்லா பண்ணி இருக்கு . 


இன்னொரு ஹீரோயினுக்கு  ஆக்‌ஷன் ஹீரோயின் விஜய சாந்தி மாதிரி கேரக்டர் . அவரும் ஓக்கே 


 வில்லன்க  2 பேரும்  அவங்களுக்குக்கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமா செஞ்சுட்டாங்க 




பலே பரிமளா


1. படத்தில் மெயின் கேரக்டர்களே மொத்தம் 4 பேர் தான் . அதுலயும்  ஒருத்தன் பாதிலயே  பரலோகம் போய்டறதால மீதி இருக்கும் 3 பேரை வெச்சே படத்தை ஸ்பீடா கொண்டு போய் இருக்காங்க . குட் ட்ரை 



2  ஒரு கொலையை பார்த்த சாட்சிங்க 2 பேரை  வில்லன் சேஸ் பண்றது பல படங்களில் பார்த்த கதை தான் . ஆனா கிளாமருக்காக , ஆடியன்சை தியேட்டருக்கு வரவழைக்க சாட்சிங்க 2 பேரும் கில்மா லேடீஸ் என்பதாக காட்டி இருப்பது இயக்குநரின் கமர்ஷியல் உத்தி 


3.  படத்தில் கிளாமர் காட்சிகள் இருந்தாலும் அது எந்த வகையிலும்  பாலியல் உணர்வைத்தூண்டலை . திரைக்கதையில் அந்த 2 பேருக்கும் என்ன ஆகுமோ என்ற பதை பதைப்புத்தான் ,மேலோங்கி இருக்கு . அந்த உணர்வை படம் பார்க்கும் அனைவரிடமும் கொண்டு வரப்பாடுபட்ட திரைக்கதை ஆசிரியருக்கு ஒரு சொட்டு

4  போஸ்டர் டிசைன் குட் . எக்ஸ் என்பது படத்தின் டைட்டில் என்பதால் ஒரு பெண்ணின் பின்னிப்பிணைந்த கால்களையே எக்ஸ் குறியீடாகக்காட்டிய டெக்னிக் ஆஹா!

சொதப்பிட்டியே சொப்னா



1.  ஹீரோயின்  தனக்கு தொழிலில் அனுபவம் இல்லை , ஃபிரெஷ் கேண்டிடேட் என்றதும்  அந்த கஸ்டமர் “ நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே, நல்ல அனுபவம் உள்ள ஆள் தான் வேணும் “ என கேட்பது ஆண்கள் சைக்காலஜிக்கு முற்றிலும் மாறா இருக்கு , பொதுவா   ஃபிரெஸ் பீஸ் தான் வேணும் -னு ஆண்கள் விரும்புவாங்கன்னு மனவியல் சாஸ்திரம் சொல்லுது 


2 ரெண்டாவது  ஹீரோயின்  ஒரு சீன் ல முதல் ஹீரோயின் கிட்டே “ நீ யாரோ, நான் யாரோ, நீ கிளம்பு , உன் வழில நீ, என் வழில நான் “ அப்டினு அம்போன்னு அவரைக்கழட்டி விட்டுடறா. அடுத்த சீன்ல யே வில்லன்கிட்டே மாட்டினதும் “ நான் அவளை காட்டிக்குடுக்க மாட்டேன் , உயிரே போனாலும் சரி , எனக்கு நட்பு தான் முக்கியம்னு டயலாக் பேசறா. அந்த  அளவு நட்பு  இருவருக்கும் ஏற்படவில்லையே . 20 நிமிட பழக்கம் ஆன ஒரு பொண்ணுக்காக யாராவது ஒரு பெண் தன் உயிரே போனாலும்  பரவாயில்லைன்னு ரிஸ்க் எடுப்பாங்களா? அது சரின்னா அதை நம்பும்படி இருவருக்கும் நட்பு இறுகிய விதத்தை காட்சிப்படுத்தாதது ஏன் ? 


3 கொலையாளி அந்த ரூம் ;ல வேற யாரோ இருக்காங்கன்னு சந்தேகப்பட்டும் ஏன் பாத்ரூமைக்கூட தி்றந்து பார்த்து செக் பண்ணலை ? அந்த ரூம்ல இருந்து ஹீரோயின்ஸ் 2 பேரும் எப்படித்தப்பி ஓடறாங்க . அந்த சீன் டீட்டெயில் பத்தலை 


4  ஹீரோயின் தங்கி இருக்கும் அறைக்கு பக்கத்து அறையில் போதை மருந்துக்கு அடிமையான ஒரு ஜோடி இருப்பதும் அவர்களுக்கு ஹீரோயின் உதவி செய்வதும் திரைக்கதைக்கு தேவை இல்லாத காட்சிகள் . சூர சம்ஹாரம் படத்திலும் இதே போல் தவறுகள் இருக்கும் 


5 பொதுவா போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள்னு மேலோட்டமா சொன்னாப்ப்போதாதா? அவ்வளவு டீட்டெய்லாக போதை மருந்து உபயோகிப்பதை காட்டியே ஆகனுமா? சென்சார் இதை எல்லாம் கண்டுக்க மாட்டாங்களா? 


6  வில்லன் 2 வது  ஹீரோயினை கார்ல கூட்டிட்டு ரோடு ரோடா ரவுண்டிங்க் . முதல் ஹீரோயினை த்தேடி . அப்போ எதேச்சையா  முதல்  ஹீரோயின் எதிர்ல வர்றா. அப்போ 2 வது  ஹீரோயின் “ ஆபத்து , ஓடிடு” அப்டினு எச்சரிக்கறா. அது தேவையே இல்லை . வில்லன் முத ஹீரோயினை நேர்ல பார்த்ததே இல்லை . வலியனா இவளே ஏன் காட்டிக்குடுக்கனும் ? கேசுவலா பேசி அனுப்பி இருக்கலாம் . சும்மா கண் ஜாடைல யே சொல்லி இருக்கலாம்



சி பி கமெண்ட் =ஆக்சன்சேசிங்க் த்ரில்லர்கள் பார்க்கலாம் . கில்மா சீன்களுக்காக பார்ப்பவர்கள் நெட்டில் டவுன்லோடி பார்க்கவும்  4 சீன் இருக்கு . ஆனா தியேட்டர்ல அது கட் . திருப்பூர் நடராஜா தியேட்டர்ல பார்த்தேன் . இந்த மாதிரி கில்மா படங்களை திரையிடும் தியேட்டர்கள் பெரும்பாலும் நடராஜா வாக இருப்பதன் மர்மம் என்னவோ ? ஈரோட்டிலும் இதே போல் ஒரு நடராசா இருந்தது . இப்போ சீல் வெச்சு க்ளோஸ்டு 


ரேட்டிங்க் =   2.5 / 5

Director:

 

ஆருஷி கொலை வழக்கு - வேலைக்காரருடன் கில்மா - பெற்றோரே கொலையாளிகள் - தீர்ப்பு



புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார்.



டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ஒரே மகள் ஆருஷி. பள்ளி மாணவியான ஆருஷி 2008ம் ஆண்டு மே மாதம், தனது அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.


இந்த கொலைக்கு வீட்டின் வேலைக்காரர் ஹேம்ராஜே காரணம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் தலைமறைவானதாக கூறப்பட்ட ஹேம்ராஜின் உடல் வீட்டில் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணையில் தல்வாருக்கு எதிரான நேரடி ஆதாரங்கள் ஏதும் சமர்பிக்கப்படவில்லை. இதனால் இவ்வழக்கை முடிக்கலாம் என, சி.பி.ஐ., கோர்ட்டில் கூறியது.



சி.பி.ஐ., கோர்ட் உத்தரவு: அதை ஏற்க மறுத்த சி.பி.ஐ., கோர்ட், இந்த வழக்கு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விசாரணைக்கு பின், தல்வார் தம்பதியரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மகள் ஆருஷி மற்றும் ஹேம்ராஜ் ஆகியோரின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, இருவரும் சேர்ந்து, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தி மற்றும் கோல்ஃப் மட்டை ஆகியவற்றை பயன்படுத்தி ஆருஷியையும், ஹேம்ராஜையும் கொலை செய்தது தெரிய வந்தது.



ஐந்தரை ஆண்டுகள் விசாரணை: ராஜேஷ் தல்வார் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, 2 மாத விசாரணைக்கு பின், அவருக்கு எதிராக ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜராவதை தொடர்ந்து தவிர்த்து வந்ததால் நுபுர் தல்வார் 2012ம் ஆண்டு கோர்ட் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் ஐந்தரை ஆண்டுகள் நடத்தப்பட்ட இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள்

என தீர்ப்பளித்த நீதிபதி சியாம்லால், தண்டனை குறித்த அறிவிப்பு நாளை அறிவிக்கப்படும் என்று கூறினார்.
புதுடில்லி : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார்.

டாக்டர் ராஜேஷ் தல்வார் - நுபுர் தல்வார்
நன்றி - தினமலர்

இதனிடையே, தீர்ப்பு வெளியானவுடன் ஆருஷியின் பெற்றோர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். அதில், "நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நாங்கள் செய்யாதக் குற்றத்துக்கு குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது காயத்தையும் கவலையையும் அளிக்கிறது. நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை மறுக்கிறோம். நீதிக்கான எங்களது போராட்டம் தொடரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேன்  தமிழ் Unfortunate, The Parents were made scapegoat for the inefficiency of CBI. When they were not able to find Scientific evidence they used Circumstantial evidence against them Just to Protect the image of CBI. This is happening everywhere including in Hospitals when they admit patients for Transplant if they feel Patient will not Survive with Transplant they the patient. They Do not want the patient to go another hospital which will Affect their image and to keep 100% success rate for money minting.Its very rampant and common now days in India. this has touched even the investigation agency.If they do not find any proper evidence make someone scapegoat & Sacrifice for the sake of Image. I wish They Get Justice.

திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
26-நவ-201300:16:36 IST Report Abuse
திருமகள்கேள்வன் பெற்றோர்தான் இந்த குற்றத்தை செய்தனர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் சி பி ஐ ஆள் இதுவரை சேகரிக்க முடிய வில்லை... பெற்றோரே ஒப்புக்கொண்டுவிட்டனர் என்பது சி பி ஐ இன் வாதம் இதன் அடிப்படையில் கோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.... 13 வயது பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்தனர், என்பதை நம்புவது மிக கஷ்டமாக உள்ளது...

Parthiban S - arumuganeri,இந்தியா
26-நவ-201300:15:11 IST Report Abuse
Parthiban S நம்பி வளர்த்த நாய், பிள்ளையை கடிக்கிறது என்றால் அந்த நாயை அடித்து விரட்டியிருக்க வேண்டும்... அதைவிடுத்து நாயையும் கொன்று, பிள்ளையையும் கொன்று என்னத்தை பெற்றார்களோ அந்த பெற்றோர்..?

Pugazh வழக்கம் போல , நம் வாசக நண்பர்கள் சிலர் நீதிபதியாக சிலர் துப்பறியும் சிங்கமாக தாமே வேசம் போட்டுக் கொண்டு கண்டுபிடிப்புகளையும் தீர்ப்புகளையும் வழங்கிவிட்டார்கள். இந்த நிமிடம், பா ஜ க ஆதரவு ஆங்கில சேனல் ஒன்று இதையும் அரசியலாக்கி விவாத மேடையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சி பி ஐ தண்டம் என்றும், தீர்ப்பு சரியில்லை என்றும் என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னவோ, ராகுல் காந்தி தீர்ப்பு சொன்ன மாதிரி டி வி யில் போட்டு தாக்குகிறார்கள் சிலர். காமெடியாக இருக்கிறது. தீர்ப்புகள் வந்தாலும் திட்டுவார்கள், தீர விசாரிக்க வருடங்களை எடுத்துக் கொண்டாலும் திட்டுவார்கள்.

MoorthyBJP favoured national news channel??? are u sure sir??? i didnt come across anything like that for the last 10 years....

மண்ணாந்தை - Raichur,இந்தியா
25-நவ-201318:21:16 IST Report Abuse
மண்ணாந்தை இருந்தது ஒரே மகள். அவளும் போயிட்டா. இனிமேல் கிளினிக் போனால் என்ன...ஜெயிலுக்கு போனால் என்ன...மகளை வளர்த்தது சரியில்லை அல்லது பணியாளை பார்த்து நியமிக்கத் தெரியவில்லை.

25-நவ-201317:54:50 IST Report Abuse
vignesh உண்மையில் அவர்கள் குற்றவாளிகள் தானா
Rate this:

நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
25-நவ-201317:46:50 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் மருத்துவர்களே மிருகங்களாய் நடந்து கொண்டால்..இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு படிப்பினை தருவதாக அமையவேண்டும்..ஏதோ பத்தோடு பதினொன்றாய் ஆகிவிடக்கூடாது.
R

MRS - Thirumangalam - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201317:31:30 IST Report Abuse
MRS - Thirumangalam கோயம்புத்தூர் சீனிவாசனின் கேள்வி நியாமானதே. தமிழ் நாட்டில் எவ்வளவு கொடுமை நடக்கிறது அதுவும் குழந்தைகளுக்கு எதிராக. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பாருங்கள் தெரியும். யார் போராட முயற்ச்சிக்கிறார்கள்? வட இந்திய என்றாலே நம் தென்னிந்திய மனிதர்களுக்கு பயமும் தாழ்வு மனப்பான்மையும் வந்துவிடுகிறது. அண்ணா அசாரே புரட்சி ??? செய்த பொது நம் வட இந்திய மற்றும் தென்னிந்திய டிவிக்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள்? நம்மிடையே போராடி மறைந்த எம் எஸ் உதயமூர்த்தி ஐயாவுக்கு எந்த டிவியாவது பத்திரிகையாவது முக்கியத்துவம் தந்து ஒத்துழைத்தார்களா?




அவரின் வரலாறே மறைத்துவிட்டனர். அதேபோல தான் இந்த கொலை கேசும். பெற்று வளர்த்து 14 வருடம் தியாகம் செய்த அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்த அந்த பெண்ணின் மனசு மற்றும் என்ன நல்லதா? அப்பன் ஸ்தானத்தில் உள்ள ஒருவனுடன் தன மகளை ஒரே கட்டிலில் பார்த்த போது என்ன செய்வது என்றே தெரியாமல் செய்த கொலை தான் இது. இது ஒன்றும் திட்டமிட்ட கொலை இல்லை. சந்தர்ப்பம் இப்படி இருவரையும் ஆக்கிவிட்டது. என்னை பொருத்தவரை இந்த பொண்ணுக்கு வருத்தப்படும் நிலையை விட ஒரு படி அதிகமாய் அந்த பெற்றோர்களுக்கு வருந்துகிறேன்.

Vasan R S - chennai,இந்தியா
25-நவ-201317:24:50 IST Report Abuse
Vasan R S இந்த காலத்து பிள்ளைகளால் பெற்றோருக்கு எத்தனை தலை குனிவு என்பதற்கு இவ்வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. பெற்றோர்களே , நம் பிள்ளைகளிடம் அளவுக்கு மேல் பாசம் வைக்க வேண்டாம். அது அவர்களுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லதல்ல.

Saravanan Arunachalam - Cuddalore,இந்தியா
25-நவ-201317:18:48 IST Report Abuse
Saravanan Arunachalam தீர்ப்பு வரவேற்க பட வேண்டிய ஒன்று.நீதியின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன .5 ஆண்டுகளுக்கு பின் நியாயம் கிடைத்துள்ளது உலகிற்கு காட்டபடுகிறது .

மிஷன் 272 PLUS - Delhi,இந்தியா
25-நவ-201317:10:03 IST Report Abuse
மிஷன் 272 PLUS எமன் பெற்றோர்கள் வடிவில்....

K Sanckar - Bengaluru ,இந்தியா
25-நவ-201317:09:45 IST Report Abuse
K Sanckar பெற்றோர்கள் நல்ல படித்தவர்கள். டாக்டர்கள் பெண்ணுக்கோ 13 வயதுதான் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரனுடன் தொடர்பு என்றால் எப்படி இருக்கும்? சொல்லி பார்த்து இருப்பார்கள் ? கேட்டு இருக்க மாட்டாள். வயது அப்படி ? வேறு வழி இல்லாமல் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டு விட்டார்கள் போலும் ?

25-நவ-201322:57:12 IST Report Abuse
maravanஅய்யா , அன்பு கிடைக்காத அந்த பெண் அப்படி தவறு செய்திருந்தால் அதற்கு முழு பொறுப்பும் அந்த பெற்றோர்கள்தான் காரணம்.. பணம் என்று பேயாய் அலைந்து பணம் சேர்ப்பது மட்டும் வாழ்கை இல்லை..குழந்தைகளுக்கு அன்பை கொடுக்க மறந்துவிட்டார்கள் ..அதுதான் பிரச்னை......


kumaresan.m " இது சம்பவம்.... சமுதாயத்தில் தன்னை உயர்வாக பிறர் கருத வேண்டும் பணம் பணம் என்று அலையும் பெற்றோர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு பணம் தான் அனைத்தும் மற்றவையெல்லாம் பிறகுதான் என்று கருதும் பெற்றோர்கள் .....சிறுவயதில் இருந்து பிள்ளையை அன்பு காட்டாமல் வளர்த்து பிறகு கொன்று இருக்கிறார்கள் இந்த மனித மிருகங்கள் ....இவர்களை தூக்கில் இடுவதை விட சித்திரவதை செய்து கொள்ளுங்கள் ...அப்பொழுதுதான் அந்த பிஞ்சு உள்ளம் பட்ட வேதனை சாந்தி அடையும்

மிஷன் 272 PLUS - Delhi,இந்தியா
25-நவ-201316:58:32 IST Report Abuse
மிஷன் 272 PLUS பெண்கள் வன்முறை ஒழிப்பு தினத்தில் கிடைத்த ஒரு துயர செய்தி....93 schoolgirls sexually harassed near Patna. Save your women government doesn’t care.

Mohamed Majeed - nellai,இந்தியா
25-நவ-201316:52:58 IST Report Abuse
Mohamed Majeed எல்லா பெத்தவங்களுக்கும் ஒன்னு சொல்றேன் பிள்ளைங்க தப்பு செய்றது இயல்பு பிள்ளைகளின் சுற்றமும் நட்பும் தெரியாமலே இருப்பதுதான் பெத்தவங்களோட பெரிய தப்பு. நீங்க பிள்ளைங்க மேல அக்கறை வைத்திருந்தால் இந்த மாதிரி தவறுகள் நடந்திருக்கவே செய்யாது மறுபடியும் சொல்றேன் பிள்ளைங்கள சரியா வளர்ப்பது பெத்தவங்களோட முதல் கடமை.


A.S.A Thahir - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201316:24:00 IST Report Abuse
A.S.A Thahir அடப்பாவிகளா..? என்ன கொடுமையடா...? நீங்கள்லாம் எதற்கு பிள்ளை பெற்று .. பின்... இப்படி..? உங்கள் மனநிலை இப்படி போக என்ன காரணம்? அதுவும் படித்த மருத்துவர்கள்?...

25-நவ-201315:39:14 IST Report Abuse
Srinath மேற்கண்ட சிறுமி கொலைவழக்கு கவலை தந்தாலும் எனக்கொரு சந்தேகம். அதென்ன டில்லியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு சம்பவம் நடந்துவிட்டால் நாடே ஸ்தம்பித்து, ஏக அமர்க்களமாகி விடுகிறது. முன்னர் ஒருமுறை காசியாபாத் நகரில் இரண்டு மனிதர்கள் குழந்தையைக் கொன்றது, பின்னர் பஸ்ஸில் பலாத்காரம் என்று தொடங்கி டில்லி-உபி யை மையம் கொண்ட களேபரங்கள் ஏராளம். நாட்டில் வேறெங்கும் கொலை, பலாத்காரம் நடப்பதே இல்லையா? இல்லை அந்தக் குற்றங்களில் சிக்கியவர்கள் மனிதர்கள்தான் இல்லையா? நானும் புரியாமல்தான் கேட்டுவிட்டேன்.

Share this comment

மாத்தியோசி - Chennai,இந்தியா
25-நவ-201317:05:40 IST Report Abuse
மாத்தியோசிநமக்கு தான் அம்மாவை புகழ்வதற்கும் , அய்யாவை நய்யாண்டி செய்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறதே .. வேறு எந்த பிரச்சனைகளை கவனிப்பது...Jokes apart...நீங்கள் சொல்வது உண்மையல்ல..தினமலர் பத்திரிக்கை சமீபகாலமாக லோக்சபா election ஐ கருத்தில் கொண்டு மோடிஐ புகழ்வதற்கும் மற்றும் காங்கிரெஸ் ஐ தாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறது.. மற்ற பத்திரிகைகளில் இது போன்ற செய்திகளில் வந்து கோடி தான் இருகின்றனர் .. ஒரே வித்யாசம்.. அங்கு பிரச்னை வந்தவுடன் மக்கள் களத்தில் இறங்கி போராடுகின்றனர் ( டெல்லி மாணவி bus )..பிரச்சனையை பெரிது படுத்துகின்றனர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகின்றனர் .. இங்கு நம் வீட்டிற்கு வராதவரை ஷேமம் என்று அடக்கி வாசிகின்றோம்......

25-நவ-201318:05:53 IST Report Abuse
ShekarVery simple Mr. Srinath அங்குள்ள மீடியா எல்லாம் (NDTV, Aajtak, IBN7......) அரசியல் கலவாதது reach அதிகம் நாட்டில் உள்ள அல்லது நடந்த பிரச்சனைகளை ஆழ ஊடுருவுகிறார்கள், இங்கே நமது Media .) அனைத்தும் அரசியல் வாதிகளால் நடத்துவது, அவர்களுக்கு எதிர் அணி மீது சேற்றை வாரிஇறைக்கவும் இலங்கை தமிழர்களுக்கு அழுகவும் நேரம் சரியாக உள்ளது நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை வெளிப்படுத்த நேரமில்லை. சொல்லப்போனால் சிலசமயம் அவர்கள் கட்சிக்கு சில விசயங்களில் மறைமுக தொடர்பு இருப்பதால் total blackout....