Thursday, May 30, 2013

dandupalya - சினிமா விமர்சனம் 36 +

 

எச்சரிக்கை - இதய பலஹீனம் உள்ளவர்கள்  , கர்ப்பமா - இருக்கும் பெண்கள் , இல்லாத பெண்கள் , 20 வயதுக்கு உட்பட்டவர்கள் , மனோ பலம் இல்லாதவர்கள் , குழப்பமான மன நிலையில் உள்ளவர்கள் , தனிமையில் வாழ்பவர்கள் , வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் , சமூகத்தின் மீது கோபம் உள்ளவர்கள் , நிலையான மனமோ, சொந்தமாக முடிவு எடுக்கும் திறனோ இல்லாதவர்கள் , மாணவ ,மாணவிகள்   யாரும் இந்தப்படத்தைப்பார்க்கவோ , பட விமர்சனத்தைப்படிக்கவோ வேண்டாம் என பொது நலன் கருதி  கேட்டுக்கொள்கிறேன்.

 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு  எந்த அளவுக்கு வல்கரா படம் பண்ண முடியுமோ அந்த அளவு வன்முறையைத்தூண்டும் வகையில் வக்ரமாக படம் எடுத்திருக்காங்க . 



கன்னடத்தில் இது ஆல்ரெடி தண்டுபாள்யா என்ற பெயரில் ரிலிஸ் ஆகி பெரும் சர்ச்சையைக்கிளப்பிய படம் 



பியூட்டி பெண்களூர் என வர்ணிக்கப்படும் பெங்களூரில் தண்டுபாளையம்னு ஒரு  ஊரு. அப்பகுதியில் 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகள் நடந்துள்ளன. இவ்வளவு அக்கிரமங்களை செய்தவர்களை போலீஸார் எப்படி அடக்கினார்கள் என்பதே இந்தப்படத்தின் கதை.

 



பூஜாகாந்தி கன்னடத்தில் மேலாடை இல்லாமல் நடித்த படம் என்ற விளம்பரத்தோடு  தமிழில் ‘கரிமேடு’ என்ற பெயரில் டப்பிங்  படமா ரிலீஸ் ஆகி இருக்கு


பல தரப்பட்ட வயசு உள்ள 8 ஆம்பளைங்க , ஒரு கொடூர லேடி இவங்க முதல்ல ஏரியாவை நோட்டம் போடறாங்க. வீட்ல தனியா லேடீஸ் இருந்தா அந்த வீட்ல போய் முதல்ல இந்த கொடூர லேடி “ குடிக்க தண்ணி குடுங்க” அப்டினு கேட்கும். அவங்க உள்ளே போன கேப் ல கூட்டாளிங்க உள்ளே  வந்து  கொள்ளை அடிச்சுட்டு , அந்த பொண்ணை கொலை பண்ணிட்டு, அதுக்குப்பிறகு  ரேப் பண்ணிட்டு ( ஆர்டர் மாறி இருக்கேன்னு குழப்பம் வேணாம். அப்படித்தான் பண்றாங்க )  எஸ் ஆகிடறாங்க .


 இப்படிப்பட்ட கொடூரமான கும்பலை போலீஸ் எப்படி பிடிக்குது  என்பதே மிச்ச மீதி கொடூரக்கதை .


படத்தின் ஹீரோ , ஹீரோயின் , வில்லி எல்லாமே  பூஜாகாந்தி தான் செம நடிப்பு . அவர் தம் அடிக்கும் ஸ்டைலும் , அசால்டா கொலையை நேரில் கிட்டக்கா பார்ப்பதும் முதுகுத்தண்டு சில்லிட வைக்கும் நடிப்பு .

தலை பூரா விரிச்சு போட்டு  முகத்தில் கொடூரமும் , கண்களில் அசால்ட்த்தனமும் காட்டி நடித்த அந்த மெயின் வில்லன் நடிப்பு  செம. மற்ற கேடிகளின்  சவத்தனமான முகமே பொதுமானதாக இருக்கிறது .. பின்னணி இசை ஒரே இரைச்சல். திகில் ஊட்ட வேண்டிய இடங்களில் மட்டும் அதிரடி இசை கொடுத்தால் போதாதா? என நினைக்க வைக்கிறது

 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஓப்பனிங்க் சீனிலேயே நேரடியாக கதைக்கு வந்து விட்ட  லாவகம்.நகரங்களில் வாழும் மக்கள் , தனியாக வசிக்கும் பெண்கள் எப்படி அலர்ட்டா இருக்கனும்? என கற்றுக்கொடுக்கும் பாங்கில்  அமைக்கப்பட்ட திரைக்கதை



2. தற்கொலை செய்யப்பட்டதாக நம்ப வைக்கும் ஒரு கணவனின் நாடகத்தை அம்பலப்படுத்தும் இன்ஸ்பெக்டரின் லாவகம் சபாஷ் .  தூக்கு போட்டு தற்கொலை செஞ்சா கை விரல்கள்  விரைப்பா இருக்கும் , இப்படி மூடிய வாக்கில் இருக்காது , கயிற்றின் முடிச்சு  பின்னங்கழுத்தில் தான் இருக்கும் , இப்படி சைடில் இருக்காது என அவர் விவரிக்கும் இடம்  ( ஆல்ரெடி ராஜேஸ் குமார் நாவல்களில் வந்திருந்தாலும் ) சபாஷ் போட வைக்குது



3. பாத்திரத்தேர்வு பாராட்டும் விதமாய் இருக்கு. ஒவ்வொரு ஆளும் நிஜக்கேடியோ என எண்ண வைக்கிறது 





 இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சாதா பொது ஜனத்துக்கே எச்சரிக்கை உணர்வும் , ஆபத்து காலத்தில் தற்காக்கும் உணர்வும் இருக்கும், ஒரு போலீஸ் ஆஃபீசர் பைக்கில் போறார். அவருக்கு முன் 20 மீட்டர் தொலைவில் 4 ரவுடிகள் வழி மறிக்க நிக்கறாங்க . அவர் கிட்டே ஒரு தற்காப்பு உணர்வே வர்லையே . அவர் இடுப்புல ரிவால்வர் இருக்கு. அதை எடுக்கலை, பைக்கை வேகமா ஓட்டி எஸ் ஆகி இருக்கலாம். அதைச்செய்யலை. அட்லீஸ்ட் சடன் பிரேக்காவது போட்டிருக்கலாம்.  எதுவுமே செய்யாம அவங்க வந்து அட்டாக் பண்ணும் வரை பார்த்துட்டே இருக்காரே? அந்த போலீஸ் ஆஃபீசர் மன்மோகன் சிங்க் உறவுக்காரரா? 


2. ஒரு ஆளை முடிக்கனும்னா ஃபோட்டோ தரனும் , அல்லது ஸ்பாட்ல ஆளை காட்டனும். 2ம் இல்லாம  இன்ன இடத்துக்கு இந்த டைம்க்கு வர்றவனைப்போட்டுத்தள்ளு என்பது ஏத்துக்கவே முடியலை யே.. 



3. பொதுவா நாய்க்கு மோப்பசகதி அதிகம் .  வீட்டில் காவலுக்கு இருக்கும் வேட்டை நாய்க்கு டீக்கடை பன்னுக்குள்  மயக்க மருந்து வைத்து ரவுடி தர்றான். நாய் எப்படி அதை முகர்ந்து பார்க்காம அதை சாப்பிடுது?



4. ஒவ்வொரு தாக்குதலிலும் பெண்கள் மயக்க நிலைக்கு போயிடறாங்க . எதுக்காக தேவை இல்லாம கொலை பண்றாங்க? என்பதற்கு விளக்கம் இல்லை .எதிர்ப்பு வந்தாலோ, கோர்ட்டில் சாட்சி சொல்லிடுவாங்க என்ற பயம் இருந்தாலோதான் கொலை செய்வாங்க 


5. போலீஸ்க்கு மேட்டர்  தெரிஞ்சாச்சு, கூட்டாளி ஒருத்தனை பிடிச்சுட்டாங்க என்றதும் அலர்ட் ஆகி ஊரை விட்டு எஸ் ஆகாமல் அங்கேயே யாராவது டேரா அடிப்பாங்களா? 

 


6. கொலை செய்யப்படும் காட்சிகள் , ரேப் சீன்கள் நாசூக்காக , குறிப்பால் உணர்த்தும் விதமாய் எடுத்தால் போதாதா? இவ்வளவு கர்ண கொடூரமாய் இருக்கனுமா?  எப்படி சென்சார்ல அனுமதிச்சாங்க? 



7. திரைக்கதை தெளிவாக கொலை, கொள்ளைச்சம்பவத்தைச்சுற்றி போய்ட்டிருக்கும்போது அந்த தம்பதிகள் கதையில் மட்டும் எதுக்கு தேவை இல்லாத டூயட், செண்ட்டிமெண்ட் காட்சிகள் ? 



8.  மிகப்பெரிய கொலை சம்பவம் ஊர்ல நடந்திட்டிருக்கு. போலீஸ் இரவு நேர ரொந்துக்கு ஏற்பாடு செய்யலையா? 


9. இன்ஸ்பெக்டர் கொலையாளீகளை எதேச்சையாக அன் டைமில் பார்த்து அவங்களிடமே “ ஜாக்கிரதையா இருங்க “ என எச்சரித்து அனுப்புவது செம லாஜிக் சறுக்கல். ஆளுங்க எல்லாம் பக்கா கேடிங்க மாதிரி இருக்காங்க . விசாரணை பண்ண மாட்டாரா? 



10. கோயில் சிலையை கொள்ளை அடிப்பவங்க லோக்கல் சேட்டு க்டைல அடமானம் வைக்க மாட்டாங்க , தங்கத்தை உருக்கி விப்பாங்க, அல்லது வெளியூர்ல தான் விப்பாங்க , அவன் அசால்ட்டா பகல் ல பேரம் பேசுவதும் , இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் அங்கே வருவதும் படு செயற்கை 






மனம் கவர்ந்த வசனங்கள்


1.          என்னடா? ஆஃபீஸ்ல இருந்து சீக்கிரமா வந்துட்டே?

நான் வேணா போய்ட்டு அப்புறமா வர்ட்டா?


2.          டியர், வயிறு வலிக்குது , டாக்டர்ட்ட போய் உடம்பை காட்டனும்

என் கிட்டேயே காட்டு



3.          ஏம்ப்பா, வெறும் 5,000 ரூபா, 10,000 ரூபா கூலிக்காக கொலையே பண்ணுவீங்களா?


கொலைக்குப்பிறகு  அவங்க போட்டிருக்கும் நகை , வீட்டில்  இருக்கும் பணம் எல்லாம் எங்களுக்கு  எக்ஸ்ட்ரா போனஸ் மாதிரி 


 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் – 39 ( இது கன்னட டப்பிங்க் என்பதால் விமர்சனம் போட மாட்டாங்க )


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் – ஓக்கே 


சி.பி கமெண்ட் - விமர்சனத்தின் முதல் பத்தியை படிக்கவும் 


ரேட்டிங்க் - 2.5 /5 


சொந்த ஊரான சென்னிமலையில் அண்னமார் தியேட்டரில் படம் பார்த்தேன் 



 

1 comments:

sornamithran said...

விமர்சனமும் அந்த ஸ்டில் மாதிரி ஓப்பனா இருக்கு.