Wednesday, May 01, 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்



நாட்டைக்காப்பாத்த வேண்டிய பெரிய பெரிய தலைவர்களுக்கே இப்பவெல்லாம் கொள்கை இருக்கறதில்லை. ஆனா கிட்நாப் பண்றதை மெயின் ஜாப்பா வெச்சிருக்கற ஆள்க்குக்கூட 5 கொள்கை இருக்கு .அப்பேர்ப்பட்ட கொள்கை வீரரான ஹீரோ  2 கோடிக்கு ஆசைப்பட்டு ஒரு அரசியல் கட்சித்தலைவர் பையனை கடத்தும் பிராஜக்ட்க்கு ஓக்கே சொல்றான். 

அந்தத்தலைவர் காமராஜர் மாதிரி நல்லவர் . அவருக்குப்பொறந்த பையன் அண்ணன் அழகிரி மாதிரி ஹி ஹி . நெம்பர் ஒன் ஃபிராடு .சொந்த அம்மா , அப்பாவையே ஏமாத்தும் ஆள் . அவனே டபுள் கேமும் ஆடறான். இவங்களைப்பிடிக்க  ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் . இந்த ஒரு தீம் போதாதா? நாளைய இயக்குநர் நிகழ்ச்சில 8 நிமிஷத்துல கலக்கினவருக்கு ரெண்டே கால் மணி நேரம் கலக்க சான்ஸ் , அடிச்சார்யா ஜாக்பாட் ப்ரைஸ் , வெல்டன் சார். ( புதுக்கோட்டை தான் அண்ணன் சொந்த ஊரு ) 


விஜய் சேதுபதி இந்தக்கதைக்கு நாயகன் . அவ்ளவ் தான்  மத்தபடி திரைக்கதையும் சம்பவங்களும் தான் ஹீரோ . ஹீரோ அண்ட் கோ பண்ற லூட்டிகள் முன் பாதி வரை கலகலக்க வைக்குது . பின் பாதியில் போலீஸ் ஆஃபீசரின் ஆக்‌ஷன் மேளா.. லோ பட்ஜெட்டில் 2013 ஆம் ஆண்டின் முக்கிய வெற்றிப்படம் 


எம் எஸ் பாஸ்கர் தான் அந்த நேர்மையான அரசியல்வாதி , கம்பீரமான தோற்றம். நடிப்பு கனக்ச்சிதம். இவரை எந்த அளவுக்கு இயக்குநர் யூஸ் பண்ணி இருக்கார்னு பார்த்து இதுவரை அவரை மிஸ் யூஸ் செய்த இயக்குநர்கள் வெட்கப்படும் அளவு பிரமாதமாக கையாண்டிருக்கிறார்கள் .


கலைஞர் டி வி யின் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்படங்களில் நடித்த 6 பேருக்கு இதில் வாய்ப்பு . அனைவரும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.


குறிப்பாக இந்த போலீஸ் ஆஃபீசர் கேரகட்ர் படம் பூரா ஒரு வசனம் கூட பேசாமல் அனைவரையும் பேச வைத்த கேரக்டர் அவரது இறுக்கமான முக அமைப்பு , நடிப்பு கலக்கல்

 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  ஓப்பனிங்க் ஷாட்டில் நேரத்திலேயே எழுந்து குளிச்சு ரெடி ஆகும் ஆள் பின் சாவதானமாக அமர்ந்து சரக்கடிப்பதும் அதைத்தொடர்ந்து வரும் காமெடி கலக்கல் வசனங்களூம்



2. டாஸ்மாக்கில் கலாட்டா சண்டை போடும் இடமும் அதை யூஸ் பண்ணி ஒரு பாட்டு சீனும் களை கட்டுது தியேட்டர் 


3. கிட்நாப் செய்யப்பட்ட பொண்ணு  ஃபோனில் அவர் அப்பாவுக்கு அழுதுட்டே தைரியம் சொல்லும் காட்சியும் , அவளுக்கே அவ அப்பா பணத்தில் டிப்ஸ் தரும் காட்சியும் 


4. ஹீரோ மாட்டிக்கொள்ளாமல் கிட்நாப் செய்வது எப்படி என க்ளாஸ் எடுக்கும் காட்சியும் , கலக்கலான வசனங்களூம் 


5. பேங்க் மேனேஜரை மிரட்டி ஹீரோ பேங்க்கில் அசால்ட்டாக போய் பணம் வாங்கும் காட்சி 


6. ஹீரோவின் ஃபிரண்டாக வருபவர்  எல்லா தகிடு தித்த வேலையும் செஞ்சுட்டு ஒரு டீ சொல்லுப்பா என சர்வ சாதாரணமாக சொல்லும் தெனாவெட்டுக்காட்சி 


7. போலீஸ் ஆஃபீசர் பிரம்மாவாக வருபவர் கேரக்டர், நடிப்பு கன கச்சிதம் 


8. படத்துக்கு பாடல்களே தேவை இல்லை என்றாலும் 2 பாட்டு கேட்கும் விதமாக இருக்கு 



9 , கனகச்சிதமான எடிட்டிங்க் , நேர்த்தியான நெறியாள்கை

இயக்குநரிடம் சில கேள்விகள் 




1.  எம் எஸ் பாஸ்கர் அந்த பேக்கில் இருக்கும் பணத்தை எப்படி செக் பண்ணாமல் எடுத்து வர்றார்? 2 கோடி ரூபாய்ப்பணம் வெயிட்டும் , 4 தினத்தந்தி நியூஸ் பேப்பர் எடையும் ஒண்ணா? டவுட் வராதா? 


2. ஹீரோ அண்ட் கோ போகும் காரில் , பண பேக்கில் ஜி பி எஸ் வசதி உள்ள அதாவது அவங்க எங்கே போனாலும் கண்டு பிடிக்கும் தொழில் நுட்பம் செட் பண்ணி இருக்கு போலீஸ் , அப்புறம் ஏன் பறக்கா வெட்டி மாதிரி பின்னாலயே ஃபாலோ பண்ணனும்?  கேப் விட்டே பொறுமையா போலாமே? டவுட் வராது 


3. தியேட்டரில் ஆரவாரமான கைத்தட்டல்களை அள்ளிய  அந்த ரோபோ ஹெலிகாப்டர் சீன் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் . அவ்ளவ் சிறிய பொம்மை அவ்ளவ் வெயிட்டை தாங்குமா?  இன்னும் பெரிய ஹெலியாக காட்டி இருக்கலாம் 


4. போலீஸ் ஆஃபீசர் அந்த ஆபத்தான கன்னை ஏன் பின்னால சொருகி மாட்டிக்கனும்?  என்னதான் காமெடிக்குன்னாலும் அப்டியா ஒரு போலீஸ் ஆஃபீசர் கேனத்தனமா நடந்துக்குவார்?


5. அந்த போலீஸ் ஆஃபீசர் நரசிம்மராவ் மாதிரி ஒரு உம்மனாமுஞ்சி ஓக்கே , அவர் பேசவே இல்லை  ஒரு சீன் கூட . ஆனா அவரை சுத்தி இருக்கும் ஆட்கள் எப்படி அவர் சொல்ல வருவதை அல்லது மனசில் நினைப்பதை புரிஞ்சிக்கறாங்க? இத்தனைக்கும் அவர் இப்போதான் ட்ரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கார்.




6. ஹீரோ கூட முன் பாதியில் ஒரு லேடி கேரக்டர் எதுக்கு சம்பந்தம் இல்லாம ? குடைக்குள் மழை  சஸ்பென்ஸ் கேரக்டர் மாதிரி . அதை ரியல் கேரகடராகவே காமிச்சிருக்கலாமெ?   இந்தத்திரைக்கதைக்கு என்ன வகையில் அது யூஸ்?


7.ஹீரோ சேதுபதிக்கு ஏன் ஓல்டு கெட்டப்? இன்னும் டீசண்ட்டாவே காட்டி இருக்கலாமே?


8. மினிஸ்டர் நேர்மையானவர்னு தெரிஞ்சும் , அவர் கிட்டே பைசா கிடையாதுன்னு அறிஞ்சும் அவர் பையன் என்ன பிளான்ல 2 கோடி கேட்கறார்?


9. சொந்தக்கட்சி நிதில இருந்து 2 கோடி தர்ற அளவு ராதாரவிக்கு என்ன நிர்ப்பந்தம்? எம் எஸ் பாஸ்கர்  மனைவி தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என சப்பைக்கட்டுக்கட்டும் வச்னம் தேவை இல்லாதது


10 என்ன தான்  பாஸ்கரின் மகன் ஏமாற்றுப்பேர்வழியாக இருந்தாலும் சொந்த அம்மா சாப்பிடும்போது “ என்னம்மா? நான் கிட்நாப் செய்யப்பட்டப்போ கவலை இல்லாம சாப்ட்டுட்டு இருக்கே? “ என கேட்கும் அளவு கொடூரமான கேரக்டரா?  உறுத்தலான காட்சி அமைப்பு


11. இடைவேளை வரை கல கலப்பாக போகும் திரைக்கதை பின் பாதியில் ஆக்‌ஷனுக்குத்தாவிய  பின் கொஞ்சம் வேகம் குறைவு தான். எடிட்டிங்கில் இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம் . க்ளைமாக்ஸ் இழுவை ஆனாலும் ரசிக்க வைப்பது பிளஸ்


12. ஒவ்வொரு கடத்தலிலும் சர்வசாதாரணமாக 10 லட்சம் , 20 லட்சம் அடிப்பவர்கள் 2 கோடி பிராஜக்ட்க்கு சீன் படமே பார்க்காதவன் முதல் பாவம் படத்தில் அபிலாஷாவைப்பார்த்தது போல் வாயைப்பிளப்பது எப்படி?


13. போலீஸ் ஆஃபீசர் சிகரெட் நெருப்புக்காக அப்டி இறங்கிப்போவாரா? ( ஆனா அந்த சீன் கலக்கல் காமெடி ) 





 மனம் கவர்ந்த வசனங்கள் 


1. மூணே நாள் ஷூட்டிங்.முழுப்படமும் முடிக்கறோம்.டைட்டில் ஹனிமூன்.எப்பூடி?



2.  என்ன தலைவா? பிச்சை எடுக்கப்போகலை ? வாட் ? பிரச்சாரத்துக்குப்போகலையா?னு கேட்டேன்


3. நான் உயிரோட இருக்கும்போதே என் பையனுக்கு பதவியா ? இதை நான் வன்மையா கண்டிக்கிறேன். கண்டிச்சுக்கோ.எனக்கென்ன போச்சு


4. இத்தனை நாளா உங்கப்பாவை எப்டி ஏமாத்திட்டிருந்தியோ அதே மாதிரி இனி மக்களை ஏமாத்தறே.அதுதான் அரசியல்


5. அடடே.என்னமாத்தலையாட்றான்? அமைச்சர் ஆக இதை விட என்ன தகுதி வேணும்?


6. போலீஸ் - கிட்நாப் பணத்தை எங்கே எப்போ கொண்டு வரனும்? நாளை சன்டே.நாங்க லீவ்.மன்டே ஓக்கே



7. அரசியல்ல நேர்மையா இருக்கனும்னா புள்ளை குட்டிங்க எல்லாம் இருக்கக்கூடாது போல



8. டெய்லி 18 டீ குடிக்கிறான் .இவனைக்கடத்த பிளான் எதுவும் போடத்தேவை இல்லை.ஒரு டீக்கடை போட்டா போதும



9. பிராடுத்தனம் பன்றது ஈஸி இல்ல.அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்த்தனமும் ,புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும


10. நீங்க நியூஸ் பேப்பரே படிக்க மாட்டீங்ளா? ஏன்? டெய்லி டேட்டை மட்டும் மாத்தி வித்துட்டு இருக்காங்க.நான் ஏன் அதைப்படிக்கனும் ?

 

11. சார்.நீங்க எங்கே என்ன ஜாப் ? காலை ல 8 மணிக்கு அலாரம் வெச்சு சரக்கு அடிக்கிற என்னைப்பார்த்து இப்டி 1 ?


12. என்ன பண்ணப்போறோம்னு எந்தத்திட்டமும் இல்லாம சென்னை வந்தவன்தான் ஜெயிச்சிருக்கான்


13. நயன் தாராவுக்கு சிலை வெச்சியாமே? எவ்ளவ் செலவு ஆச்சு?


 ஹி ஹி  1 1/2 லட்சம்


 அடப்பாவி , இதுக்கு நீ ஏதாவது தொழில் பண்ணி இருக்கலாம்



14. எதுக்காக சென்னை வந்தே? எனி ப்ளேன்?

 இல்லை , தெரில



15. சார் , டைம் ப்ளீஸ்

 சில்லறை இல்லப்பா



 என்னைப்பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியா தெரியுது?

எனக்கு எப்டித்தெரியும் ?



16.  உங்க தீம் எனக்குப்பிடிச்சிருக்கு


நயன் தாரவுக்கு கோயில் கட்ற மூஞ்சிக்கு எல்லாம் என் தீம் பிடிக்கும்



17. இவ்ளவ் போலீஸ்.. சைரன் அடிச்சுட்டு வர மாட்டீங்க்ளா? இப்டி திடு திப்னு வந்தா எப்டி?



18.  டேய் மணி 9 50 ஆகிடுச்சு


 எதுக்கு பதற்றம்?

 நைட் 10 ஆனா டாஸ்மாக் சாத்திடுவான்


19. நான் பண்றதெல்லாம் பேப்பர்ல வராது .மொக்கையாப்பண்ணினாத்தான் பேப்பர்ல வரும் , எப்படி எல்லாம் தப்பு பண்ணி மாட்டிக்க கூடாதுன்னு  ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன்


20.  என் காசுல தானே குடிச்சே? என் காசுல தான் சாப்பிடனும்

 



21.  நான் கத்தலை , தயவு செஞ்சு அந்த கர்ச்சீப்பை வாய்ல இருந்து எடுங்க நாறுது



22.  ஸாரி , வெளியாளுங்களுக்கு நாங்க ஒர்க் பண்றதில்லை , எங்களுக்கு மட்டும் தான் ஃபிராடு வேலை



23.  நீங்க பண்றது தப்புத்தான் ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு . அவங்க பண்றது சரிதான் ஆனா  அதுல ஒரு தப்பு இருக்கு


24.  என்ன? அந்தக்கார் நம்ம பின்னாலயே வந்துட்டு இருக்கு?


 நாம தான் அது பின்னால போய்ட்டு இருக்கோம்



25.  கேப்டன் படத்துல வர்ற விசாரணை மாதிரி இருக்கு?
 






சி பி கமெண்ட் - சூது கவ்வும் - முன் பாதி கலாட்டா காமெடி.பின்பாதி ஆக்ஷன் - விறுவிறுப்பான திரைக்கதை - கமல் ன் மும்பை X பிரஸ் கதையைத்தான் தூசு தட்டி புதுத்திரைக்கதை.காமெடி ,விறுவிறுப்புடன் எடுத்திருக்காங்க . காமெடி ,  கம் ஆக்‌ஷன் பட விரும்பிகள் பார்க்கலாம் . ஏ சென்ண்டரில் நிச்சய வெற்றி


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் -44


 குமுதம் ரேங்க் - நன்று


 ரேட்டிங்க் - 3.5 / 5


டிஸ்கி - ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டியை வர்ணிக்கவில்லையே என யாரும் தீக்குளிக்க வேண்டாம், அந்த அளவு பாப்பா ஒர்த் இல்லை . விட்ட குறை தொட்ட குறை எல்லாம் 3 பேர் 3 காதல் -ல்  ஹி ஹி

 மேலே உள்ள கிளாமர் ஸ்டில்கள் சும்மானாச்சுக்கி, படம் பார்த்துட்டு வந்து எங்கே அந்த சீன் அப்டினு சண்டை எல்லாம் போடக்கூடாது 


diski -

எதிர் நீச்சல் - சினிமா விமர்சனம்


Sanchita Shetty

6 comments:

Unknown said...

விறு விறு விமர்சனம். இனி சின்ன பட்ஜெட் படங்களுக்கும் நல்ல ஸ்கோப் கிடைக்கும் போல..

கலியபெருமாள் புதுச்சேரி said...

virivana vimarsanam.nanri

Jana said...

பய்கரமாக கவ்வுதே மாப்ளே.....
நீண்ட நாட்களின் பின்னர்...

உண்மைகள் said...

அருமையான இடுகை ஒன்றை எழுதியுள்ளீர் சகோதரரே,

இந்த இடுகை இவ்வளவு சிறப்பானதாக அமைய அல்லாஹ் தான் காரணம். அளவற்ற அன்பாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாவின் கருணையினால் தாங்கள் மேலும் சிறப்படைவீர்கள்.

“அல்லாஹ் ஒருதடவை சொன்னா, அது நூறு தடவை சொன்னமாதிரி”

Unknown said...

nala padam

Try 🆕 said...

ஒரு திரைப்படத்தை விமர்சிக்க எவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலவளிக்க வேண்டியிருக்கிறது, ஆகவே உங்களுக்கு வாழ்த்துகளோடு வணக்கங்களும்