Saturday, April 13, 2013

அஞ்சலி அதிரடி பேட்டி -தலைமறைவு ஏன்?

தலைமறைவு ஏன்? நடிகை அஞ்சலி பரபரப்பு தகவல் (படங்கள்)

சென்னை: என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.

 
கடந்த 7ஆம் தேதி தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி, சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்துவதாக பரபரப்பை ஏற்படுத்தினார்.


இதனிடையே, சித்தப்பா சூரிபாபுடன் ஹைதராபாத்தில் உள்ள  ஓட்டலில் தங்கி இருந்தபோது நடிகை அஞ்சலி திடீரென மாயமானார்.  இது குறித்து அஞ்சலியின் சகோதரர் ரவி சங்கர் ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்தார்.

இதனிடையே, சகோதரர் ரவி சங்கருடன் நடிகை அஞ்சலி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது, சித்தி பாரதி தேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், சூரிபாபு செருப்பால் அடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் அவரது சித்தி பாரதிதேவி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் உத்தரவிட்டது.

இந்த நிலையில், 4 நாட்களாக தலைமறைவாக இருந்த அஞ்சலி நேற்றிரவு ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை என்றும் தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்றும் கூறினார்.

தமக்கு போலீஸ் பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்று கூறிய அஞ்சலி, படப்பிடிப்பு நெருக்கடியால் வெளியே வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமக்கு எதிராக புகார் இருப்பதால் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும், வீட்டை விட்டு வெளியேறி மும்பையில் தலைமறைவாக இருந்தேன் என்றும் அஞ்சலி கூறினார்.

தலைமறைவானது பற்றிய முழு விவரங்களையும் பின்னர் தெரிவிப்பதாகவும் அஞ்சலி கூறினார்.

அஞ்சலி ஆஜரானது குறித்து ஹைதராபாத் துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு கூறுகையில், இந்த வழக்கில் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது காணாமல் போன வழக்கு. அஞ்சலி எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மும்பை சென்றுள்ளார். மும்பையில் இருந்ததாக அவர் கூறுகிறார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.இதனிடையே, நடிகை அஞ்சலி ஆஜராக தெலுங்குபடத் தயாரிப்பாளர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.

தெலுங்கில் "பலுப்பு" என்ற படத்தில் நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் தலைமறைவானதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் இன்றைய படப்பிடிப்பில் பங்கேற்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனாலேயே, நடிகை அஞ்சலி காவல்துறையில் ஆஜராகியுள்ளதாக கூறப்படுகிறது. "பலுப்பு" படத்தின் இறுதிக்கட்ட காட்சியை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது அஞ்சலி இருக்கிறார். இதேபோல் நடிகர் வெங்கடேசுடன் "போல் பச்சன்" படத்திலும் அஞ்சலி நடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
 
 
அஞ்சலியின் மறு பக்கம் - மினி சினி தொடர் : பகுதி 3

'ஹைதராபாத் ஓட்டலில் தங்கி இருந்த போது சித்தப்பா சூரிபாபு என்னை தலைமுடியை இழுத்து செருப்பால் அடித் தார். அதனால் தான் நான் ஓட்டலைவிட்டு வெளியேறினேன். எனது சகோதரர் உறுதுணையாக இருந்தால் நான் நேரில் வரத் தயார்"  எங்கேயோ பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கும் அஞ்சலி அலைபேசி வழியாக‌ அள்ளித் தெளித் திருக்கும் இந்த அக்னி வார்த்தைகள் சினிமா உலகத்தை உலுக்கி இருக்கிறது.



இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தப்பா சூரிபாபு மயங்கி விழுந்து மருத்துவமனையில் அட்மிட் செய்யப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். சித்திக்கும் இதனால் மன உளைச்சலாம். இதற்கிடையில், இன்னும் இரண்டு வாரத் திற்குள் அஞ்சலியை ஆஜர்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுக்கு ஆர்டர் போட்டிருக்கிறது. இன்னொரு பக்கம், தன்னைப் பற்றி அஞ்சலி தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்காக மானநஷ்ட வழக்கு தொடர்ந் திருக்கிறார் இயக்குனர் களஞ்சியம். இத்தனைக்கும் நடுவில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தோன்றி 'அஞ்சலி சீசன் டூ" விற்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு தயாராகி வருகிறார் அஞ்சலி.


இனி, அஞ்சலியின் மறுபக்கம்...
மாடலிங் போட்டோ ஷுட் செய்த ஆல்பத்தை தூக்கிக் கொண்டு சித்தியும் மகளும் பிரபல தயாரிப்பு  நிறுவனங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினார்கள். அஞ்சலி எப்படியாவது சினிமா பிரபலமாகிவிட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் அஞ்சலியைவிட  பாரதி தேவிக்கு இருந்தது. அதற்காக லட்சங்களை கடனாக வாங்கிச் செலவு செய்தார். முயற்சி வீண் போகவில்லை.போட்டோ, பிரேமலேக ராசா என்ற இரண்டு தெலுங்கு பட வாய்ப்புகள் அஞ்சலி வீட்டுக் கதவை தட்டின.


ஆனால், பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல இந்த‌ இரண்டுமே பெரும் தோல்வியை சந்தித்தன‌. ஆனாலும், இரண்டு படங்களிலும் அஞ்சலியின் நடிப்பு சூப்பர் என்று திரை உலகம் பாராட்டியது. அந்த பாராட்டுப் பத்திரம் தான்  'கற்றது தமிழ்'' படத்தில் நடிக்கும் வாயப்பை அஞ்சலிக்கு தந்தது. 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலியின் நடிப்புககு அனைத்து தரப்பிலும் இருந்து பாரட்டுக்கள் குவிந்தன‌. 'நிஜமாத்தான் சொல்றியா?' என்று சோகத்தை அப்பிய‌ முகத்துடன் அஞ்சலி பேசிய வசனம் அனைவரது மனதையும் கரைத்தது. அந்தப் பெண்ணுக்குள் இயல்பாகவே குடிகொண்டிருந்த சோகச் சுமை இந்த வசனத்திற்கு கூடுதல் மார்க் போட்டது.


ஆனாலும் என்ன செய்ய? வியாபார ரீதியாக 'கற்றது தமிழ்' தோற்றது தமிழாகிப் போனது. ஒரே ஒரு ஆறுதல், அஞ்சலி என்ற நடிகை வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தார். 2008 ஆம் ஆண்டு, இயக்குனர்  சுந்தர்.சிக்கு ஜோடியாக 'ஆயுதம் செய்வோம்' படத்தில் நடித்தார். அதுவும் காகிதம் செய்வோம் என்றாகிப் போனது. ஆனாலும், தோல்விகளை பற்றிக் கவலைப் படாமல் ஓடிக் கொண்டே இருந்தார் அஞ்சலி. வெளிப்படையாக சொல்வதனால், குடும்பத்தில் அவருக்கு இருந்த நெருக்கடிகள் அவரை தூங்கவிடாமல் துரத்தின‌. இனி என்ன செய்ய‌ என்று ஒரு இக்கட்டான சூழலில் இருந்த போது தான்  'அங்காடித்தெரு'.வுக்காக அஞ்சலியை அழைத்தார் இயக்குனர் வசந்தபாலன்.


அங்காடித்தெரு படத்திற்கு சேர்மக்கனி பாத்திரத்தில் நடிக்க நாயகியை தேடிக் கொண்டிருந்தார் இயக்குனர் வசந்த பாலன். கதையின் நாயகன் புதுமுகம் என்பதால், நாயகி பழகிய முகமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தார் வசந்தபாலன். அப்போது அவரது நினைவில் உதித்தவர் அஞ்சலி. தொட்டதிற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்கும் சினிமா உலகம், இத்தனை சறுக்கலுக்குப் பிறகும் அஞ்சலிக்கு வாய்ப்புத் தந்திருக்கிறது என்றால் அதிசயமான ஆச்சரியம் தான்!


வசந்தபாலனை அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்தே சென்று சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே, அங்காடித் தெருவிற்காக செலக்ட் பண்ணி வைத்திருந்த காஸ்ட்யூம்களை அஞ்சலிக்கு கொடுத்து நடித்துக் காட்டச் சொன்னார் வசந்தபாலன. கலக்கினார் அஞ்சலி. பிறகு, கதாநாயகன் மகேஷையும்  அஞ்சலியையும் ஒன்றாக வைத்து சில காட்சிகளை சொல்லிக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். அதிலும் அஞ்சலி அசத்தினார். கூச்சத்தால் மகேஷ் தயங்கினார். 'சார்.. இப்புடி கூச்சப்பட்ட சினிமாவில் பெரிய ஆளாகுறது எப்படி? இது வெறும் நடிப்புங்கிறத மொதல்ல மனசுல ஏத்திக்குங்க அப்பத்தான் நடிப்பு வரும்" என்று தள்ளி நின்ற மகேஷை தன்னருகே நிற்க வைத்து நடிப்புச் சொல்லிக் கொடுத்த அஞ்சலியை வியப்புடன் பார்த்தார் வசந்த பாலன்.


'அங்காடித்தெரு' ரியல் படப்பிடிப்பை தொடங்கினார்கள். முதல் மூன்று நாட்கள் படத்தின் முக்கிய காட்சியை படமாக் கினார்கள். அக்காட்சிகளில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து மெச்சிய வசந்தபாலன், 'கதைக்கு இப்பத்தாம்பா உயிர் வந்திருக்கு" என்று பாராட்டினார். மகேஷின் நடிப்பு சுமாராக இருந்த இடங்களை எல்லாம் அஞ்சலியின் நடிப்பு ஈடு செய்தது. மகேஷ் நடிக்க தயங்கிய நெருக்கமான காதல் காட்சிகளில் அவரது கூச்சத்தை போக்கியவர் அஞ்சலிதான். படப்பிடிப்பு இடைவெளியில் மகேஷிடம் பேசி பேசி கூச்சத்தை போக்கிய அஞ்சலி, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.


படப்பிடிப்புகள் முடிந்தபோது, 'ஓர் இயக்குனரின் கதாநாயகி' என்று வசந்தபாலனிடம் பாராட்டை பெற்றார் அஞ்சலி. படமும் வெளிவந்து சக்கைப்போடு போட்டது. தனது அபார நடிப்பால் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் அஞ்சலி. 'கற்றது தமிழ்' படத்துக்கு, ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விஜய் டிவியின் சிறந்த புதுமுக நடிகை விரு தையும், 'அங்காடி தெரு' படத்துக்காக சிறந்த நடிகை விருதையும் வென்றார். ரசிகர்களை தனது நடிப்பாற்றலால் வசீகரித்திருக்கிறார் என்பதற்கு இந்த விருதுகளே சான்று. அதனைத் தொடர்ந்து அஞ்சலி நடித்த படங்களான 'ரெட்டை சுழி', 'மகிழ்ச்சி', 'தூங்கா நகரம்', 'கருங்காலி', 'மகராஜா', 'வத்திக்குசி', ஆகிய படங்கள் தோல்வியை சுமந்தன. இப்போது வெளிவந்திருக்கும் சேட்டையும் செயலிழந்து நிற்கிறது.



இடையே சில படங்களில் சிறு வேடங்களிலும் நடித்தார் அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடித்தெரு' போன்று அஞ் சலிக்கு பெரிய அளவில் பாராட்டு குவித்த படம் 'எங்கேயும் எப்போதும்'. இந்தப் படத்தில் தனது எதார்த்தமான நடிப் பால் திரையுலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்தார். 'எங்கேயும் எப்போதும்' படத்துக்கும் விருது கிடைத்தது. பல படங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது பாரதிதேவி, களஞ்சியத்தை சந்தித்து "அஞ்சலி அடுத்ததாக ஜீவாவுடன் நடிக்கிறார், இந்தக் கதையில் நடிக்க இருக்கிறார், அந்தக் கதை அஞ்சலிக்கு பொருத்தமாக இருக்குமா?" என்று எல்லாம் தனி ரூட்டில் போய் ஆலோசனைகளை கேட்டுக் கொண்டே இருந்தார்.


தமிழில் பிஸியாக இருந்த‌ சமயத்தில், தெலுங்கிலும் அஞ்சலிக்கு அடித்தது ஒரு லக். மகேஷ்பாபு, வெங்கடேஷ், சமந்தாவுடன் இணைந்து 'சீத்தாம்மா வாகித்லோ ஸ்ரீமல்லே சேத்து'  என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படமும் வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ரவிதேஜாவுடன் 'பலுப்பு', மீண்டும் 
வெங்கடேஷுடன் இணைந்து ஹிந்தி ரிமேக் படமான‌ 'போல் பச்சன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. ப‌லுப்பு  படப்பிடிப்பு முடிவுற்றது. போல் பச்சன் படப்பிடிப்பு போய்க்கொண்டு இருக்கிறது. இதற்காக ஹைதராபாத் சென்றபோதுதான் அஞ்சலி தலைமறைவாகி விட்டார்.



ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள நிருபர் ஒருவ‌ரை தொடர்பு கொண்டு, "பாரதிதேவி என்னுடைய அம்மா அல்ல... சித்தி. இயக்குனர் களஞ்சியத்துடன் சேர்ந்து கொண்டு என்னை சித்தி கொடுமைப்படுத்துகிறார். நான் சினி மாவில் இதுவரை சம்பாதித்த பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். எனக்கென்று எதுவும் இல்லை. இனிமேல் தான் என் தேவைக்கு பணம் சம்பாதிக்க வேண்டும்" என்று அஞ்சலி சொன்னதாக சொல்கிறார்கள். அதன் பிறகுதான் அஞ்சலி தலைப்புச் செய்திகளுக்கு தீனியாய் வந்தார். இயக்குனர் களஞ்சியம், "எனக்கு இதில் எந்த சம்பந்த மும் இல்லை. இது எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி" என்கிறார்.


களஞ்சியம், பாரதிதேவி இருவருமே சொல்லும் இன்னொரு அதிர்ச்சி தகவல், "அஞ்சலிக்கு ஒரு நோய் இருக்கு. அதற் காக தினமும் அவர் மாத்திரை சாப்பிட வேண்டும். மாத்திரை சாப்பிடாவிட்டால் சிக்கல் வரும். அவரது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதற்கு மேல் விளக்கம் சொல்லமுடியாமல் இருக்கிறோம்" என்று சொல்கிறார்கள் அவர்கள். ''ஒரு சினிமா நடிகை மீது எத்தகையை வதந்தியை பரப்பினால் அவரது எதிர்கால‌ம் பாதிக்குமோ அப்படியொரு அவதூறை பரப்பி, அந்த அப்பாவிப் பெண்ணின் எதிர்காலத்தை சீரழிக்கப் பார்க்கிறார்கள். அஞ்சலிக்கு அப்படி ஒன்றும் சீரியஸான நோய் எதுவும் இல்லை" என்று பதறுகிறார்கள் அஞ்சலியை நன்கு தெரிந்தவர்கள்.



அஞ்சலி மற்றும் அவருக்கு எதிரான நம்பத்தகுந்த தரப்பினர்களுடன் பேசியதில் இருந்து கிடைத்த தெளிவான ஒரே விஷயம், 'நட்சத்திரம்'  தமிழ்த் திரைப்படத்தின் ஸ்ரீபிரியா கதாபாத்திரத்தின் நிஜம்தான் அஞ்சலி!

அந்த நிஜத்தை மிரட்டும் நிழல் எது?

பொறுத்திருங்கள்...

நன்றி - விகடன்


டிஸ்கி - இதன் முதல் இரு பாகங்கள் படிக்க 

அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

http://www.adrasaka.com/2013/04/blog-post_9624.html

1 comments:

'பரிவை' சே.குமார் said...

பத்திரிக்கைகளுக்கு அஞ்சலிக்கான செய்தி நல்ல தீனி... இதில் தொடர் வேறா... அதுசரி...