Tuesday, April 23, 2013

கவுரவம் - சினிமா விமர்சனம்



மொழி , அபியும் நானும் போன்ற பிரமாதமான படங்கள் கொடுத்த ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணியா இப்படி ஒரு படம் கொடுத்திருக்காங்க? என கேள்வி எழுப்பும் வகையில் ஒரு சறுக்கல் படமாக இப்போது வழக்கொழிந்த கவுரவக்கொலையை பேஸ் பண்ணி எடுத்திருக்காங்க. யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற பழமொழியை பொய்யாக்கி திரைக்கதையில் தடுமாறி இருக்கும் ராதாமோகன் ( வசனங்களில் மட்டும் இன்னும் அதே கம்பீரம் காட்டுவது படத்துக்கு பெரிய பலம். 

ஹீரோ ரோட்டில் கார்ல போறார். எதேச்சையா அவர் ஸ்கூல் மேட் ஒருத்தரோட ஊர் கண்ல பட அவரைப்பார்க்கலாம்னு ஊருக்குள்ளே வண்டியை விடறார். அங்கே அவரோட நண்பர் ஆளைக்காணோம்.ஏதோ லவ் மேட்டர். ஆள் எஸ். அந்த ஊர் டாக்டர் ராம்தாஸ் மாதிரி ஆள்ங்க குடி இருக்க வேண்டிய ஜாதி வெறி பிடிச்ச ஊர். கவுரவக்கொலைகள் , கலவரங்கள் நடக்கும் ஊர்.அப்பேர்ப்பட்ட ஊரில் காணாமப்போன நண்பனை எப்படி தேடிக்கண்டுபிடிக்கறாங்க என்பதே மிச்ச மீதிக்கதை 


இது ஒரு தெலுங்குப்படமோ என எண்ணும் அளவுக்கு ஏகப்ப்ட்ட ஆந்தரா வாசனை படம் முழுக்க. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனாவின் தம்பி அல்லு சிரிஷ் தான் ஹீரோ . இதயத்தை திருடாதே நாகார்ஜூன் மாதிரி அவருக்கு வாய் ஏன் அப்படி இருக்கு? அண்ணனுக்கு நடிப்பெல்லாம் வர்லை .பக்கத்துல 4 கண் நொங்கு மாதிரி குளு குளுனு ஒரு ஃபிகர் இருந்தும் நரசிம்மராவ் கணக்கா அவர் ஏன் முகத்தை அப்படி வெச்சிருக்காரோ? தேறுவது ரொம்ப கஷ்டம் . ஒரு வேளை ஆந்திராவில் பாஸ் மார்க் வாங்கலாம் .

 


ஹீரோயின் யாமினி கவுதம் . வெய்யிலில் நின்னு காய்ஞ்சு போன தமனாவின் சாயலில் , மாநிற தேவதையாய்   அவர் முகம். படம் முழுக்க துப்பட்டாவை கழுத்து ஒண்ட போட்டிருக்கும் அவரது மேனரிசம் ஐ லைக் இட். ஆனாலும் நோ யூஸ் . பாப்பா பூஸ்ட் குடிக்காமயே வளர்ந்திருச்சு போல . அவர் நெற்றியில் பொட்டு வைத்திருக்கும் அழகும் , ஆடை அணிகலன்களில் காட்டும் நேர்த்தியும் அழகு. ராதாமோகனின் பட ஹீரோயின்களுக்கே உரித்தான் கண்ணியம் இதிலும் உண்டு . எதிர்காலம் உண்டு .



பிரகாஷ் ராஜ் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரை முன்னிறுத்தாமல் கதைக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் அவர் வந்து போவது மனசுக்கு ஆறுதல் . அவரது தம்பிகளின் நடிப்பும் கன கச்சிதம் . நாசர் ஏமாற்றவில்லை . ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமாரவேல் இதிலும் நல்ல ரோல் பண்ணி இருக்கார். குட் .


 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. ஆட்டிசக்குறைபாடுள்ள அந்தப்பையனின் அக்காவாக வரும் ஒரு செம கட்டை பாலுமகேந்திரா பட ஹீரோயின் மாதிரி மிளிர்கிறார். அவரை இன்னும் நல்லா பயன் படுத்தி இருக்கலாம் ( அதாவது படத்துல )


2. ராஜேஸ்வரியின் அண்ணியாக வருபவர் பூ விழி வாசலிலே ஹீரோயின்  கார்த்திகா மாதிரி முகச்சாயலில் , ஹேர் ஸ்டைலில் பாந்தமா வர்றார்.  ஆள் நல்ல உயரம் ( அளந்து பார்த்தியா  ராஸ்கல் ) 


3. ஹீரோவின் நண்பராக வருபவர் நம்ம ட்விட்டர் ஐ ஆம் கார்க்கி போன்ற முகச்சாயலில் , குறும்பில் , டைமிங்க் விட் அடிப்பதில் கலக்குகிறார். சில காட்சிகளில் எங்கேஎ இவரே ஹீரோயினை கரெக்ட் பண்ணிடுவாரோ என பதை பதைக்க வைக்கிறார்,. 



4. ராதாமோகனின் ஆஸ்தான வசனார்த்தா விஜி  பிரமாதமான வசனங்கள் படத்துக்கு பெரிய பலம்


5. பெண்களைக்கவரும் கண்ணியமான வசனங்கள் , ஆங்காங்கே ஒளிப்பதிவு இயற்கைக்காட்சிகளை சுட்டுப்போட்டது , லொக்கேசன் செலக்சன்



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தொலைஞ்சு போன ஒரு ஆளை படம் பூரா த்தேடி அலைவது இது வரை தமிழ் சினிமாவில் தோல்வியையே அதிகம் கொடுத்திருக்கு. உதாரணம் - சுஜாதா கதை வசனத்தில் உருவான  ப்ரியா, கரை எல்லாம் செண்பகப்பூ இயக்குநர் சுசி கணேஷின் ஃபைவ் ஸ்டார் .. அப்படி இருக்கும்போது என்ன தைரியத்தில் இந்த கதைக்கருவை தேர்வு செஞ்சீங்க? 


2. படம் போட்டு 2 வது ரீலிலேயே என்ன நடந்திருக்கும் என்ற சஸ்பென்ஸ் எல்லாருக்கும் தெரிஞ்சிடுது. ஆனா படத்தை இழு இழுன்னு இழுக்கும் இயக்குநருக்கோ, படத்தில் ஹீரோவுக்கோ அது தெரியாமல் போனது ஆச்சரியம் 


3. ஜாதிக் கலவரத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணை யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று குமரவேல் சொல்லும் போது ஏன் நீ செய்து கொள்ளக் கூடாது என்று சிரிஷ் கேட்குமிடம் சேரனின் பொற்காலம் வடிவேல் சீனை சுட்டு இருக்கிறது 


4. லவ் பண்ணி ஓடும் ஹீரோயின் நகையை ஏன் அண்ணி கிட்டே கழட்டி கொடுக்கனும்? அண்ணிக்கு அதில் ஏதோ சம்பந்தம் இருக்கு என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணவா? சாரி, அது ஒர்க் அவுட் ஆகலை 


5. நாவல் அல்லது சிறுகதைல ஒரு கேரக்டரை காட்டாமயே அதை தேடுவது ஓக்கெ, ஆனா சினிமான்னு வரும்போது அந்த கேரக்டரை ஆல்ரெடி அறிமுகப்படுத்திடனும் . யார்னே தெரியாத 2 பேரை படம் பூரா தேடிட்டே இருந்தா அலுப்பு வந்துடும் 


6. ஹீரோ சொன்னதும் எல்லா ஃபிரண்ட்சும் வேலையை எல்லாம் விட்டுட்டு கிராமத்துல வந்து செட்டில் ஆகிடறாங்க . அவங்களுக்குனு ஃபேமிலி , சம்சாரம் எல்லாம் கிடையாதா ? பூவாவுக்கு என்ன பண்ணுவாங்க?


7. படத்தோட ஓப்பனிங்க்ல நண்பர்கள் 60 பேர் வந்திருக்காங்கன்னு வசனம் வருது. அவங்களைக்காட்டும்போது 53 பேர் தான் இருக்காங்க. அதே நியூஸ் டி வி ல வரும்போது 50 பேர்னு  சொல்ற மாதிரி சீன் வருது. ஏன் இந்த குழப்பம் ?


 


8. படம் பூரா டென்னிஸ் கோர்ட் டொக்கா வரும் ஹீரோயின் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் ஒரு பனியன் , ஜீன்ஸ் மட்டும் போட்டு  நமீதா மாதிரி நெஞ்சை நிமிர்த்தி வருவது எப்படி? நான் அப்படியே ஆடிப்போய்ட்டேன் , ஹி ஹி 


9.காணாமப்போன சண்முகம்23 ந்தேதி எழுதுன லெட்டர் சென்னையிலிருந்து அவர் கிராமத்துக்கு 24 ந்தேதியே வருவது எப்படி?  25 தானே வரும்? இப்போ சென்னை ல இருந்து போஸ்ட் செய்யப்படும் லெட்டர் அடுத்த நாள் காலைல ஈரோடு வருது . அது பிரிக்கப்பட்டு அடுத்த நாள் தான் சென்னிமலை வருது . இதே மாதிரி தானே எல்லா கிராமங்களுக்கும் இருக்கும் ?


10. கோர்ட் ல ஜட்ஜ் உட்கார்ந்து இருக்கும்போது ஒரு ஆள் அத்து மீறி கோர்ட் உள்ளே வந்து கலாட்டா பண்ணும்போது யாருமே தடுத்து நிறுத்தலையே?



11. காதலை எதிர்க்கும் ஒரு குடும்பத்தில் உள்ள ரவுடி  லவ்வர்சை கொலை செய்து ஒரே குழியில் புதைப்பது எப்படி? ஜாதி வெறி உள்ளவன் தனித்தனி குழியில் தானே புதைக்கனும்?


12. பொதுவா ஜாதி வெறியில் கொலை செய்வது , செஞ்ச உடனே தீ வெச்சுத்தான் கொளுத்துவாங்க . அப்போதான் ஆதாரம் அதிகமா சிக்காது ( என கொலையாளிங்க நினைப்பாங்க ) ஆனா புதைச்சு மாட்டிக்குவது எப்படி?


13.  அந்த கிராமத்துக்கு மீடியா வந்து கூடுவது நம்பும்படி இல்லை . அதே போல் புரட்சிப்பாட்டு எடுபடலை . செயற்கை


14. மகள் ஓடிப்போய்ட்டா என்னும்போதே கல்லுளி மங்கன் போல் இருக்கும் அப்பா மகன் ஜெயிலுக்குப்போய்ட்டான் என்பதற்காக  தற்கொலை செய்வது எப்படி?


15 . படத்தில் வரும் எல்லா கிராமத்து கேரக்டர்களுமே  அதி புத்திசாலித்தனாமாய் வசனம் பேசுவது எப்படி? 






 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஃபாரீன்காரன் மளிகைச்சாமான் விற்கக்கூட இந்தியா தான் வர்றான் , ஆனா  நாம ஏன் அங்கே போகனும்?


2. நீ வந்த ஃபிளைட்ல ஏதாவது ஃபிகர் இருக்கா?

 நான் வந்தது ஏர் இந்தியாவுல . 50 வயசுப்பாட்டிதான் இருந்தது




3. இப்படியே விட்டா நம்மாளுங்க எலெக்சனுக்காக தொகுதி எம் எல் ஏவையே கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க


4. அவனுக்கு ஊர் இல்லாம போச்சு , எனக்கு பிள்ளை இல்லாம போச்சு



5. சன்முகம் எந்த தப்பும் செய்யலை, ஆனா கீழ் ஜாதில பொறந்ததே  தப்புதான்


6. இயற்கையை விட்டு மனிதன் எப்போ விலக ஆரம்பிச்சானோ  அப்பவே அழிவு ஸ்டார்ட்  ஆகிடுச்சுன்னு அர்த்தம் . உயிரினங்கள்லயே செப்பல் போட்டுட்டு நடப்பது மனிதன் மட்டும் தான்


7. ஆறு மணீக்கு மேல சந்திரமுகி வருமா? குஷ்பூவுக்குத்தான் கோயில் கட்னாங்க , ஜோதிகாவுக்குமா? சந்திரமுகிக்கப்புறம் காஞ்சனா எல்லாம் வந்துட்டுப்போயிடுச்சே?


8. நாங்க பொறக்கும்போது இருக்கும் கஷ்டம் எங்க பொணத்துக்கும் இருக்கும்


9.  சென்னைக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. என்னை யாரும் என்ன ஜாதின்னு கேட்டதே இல்லை. என்னைப்பொறுத்தவரை சென்னை தான்  எனக்கு எல்லாமே , என் அன்னை கூட அதுக்குப்பின்னால தான்


10. சென்னைல மட்டும் தான் கிழிஞ்சதும் ஃபேஷனு , கிழிச்சதும் ஃபேஷனும் ( கிழி கிழி - கலா மாஸ்டர்)


11. காணாமப்போனவனைத்தேடலாம், ஆனா ஓடிப்போனவனைத்தேடுனா ஓடிட்டே தான் இருக்கனும்


12, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கவுரவம் இருக்கும். சொத்து சேர்ப்பது மாதிரி அதை சேர்த்து வெச்சிருப்பாங்க


13. ஒரு பொண்ணு குடும்பத்துல இருக்கும் வரை தான் மரியாதை . ஓடிப்போய்ட்டா முடி - மயிர் மாதிரிதான்


14.  அடேங்கப்பா , ஒரு விதவைத்தாய் மட்டும் இந்த கேங்க் ல இருந்தா பி வாசு படம் மாதிரி ஆகி இருக்கும்



15. அடிமைகள் எல்லாம் சேர்ந்து  கொண்டாடுவதா சுதந்திரம்


16. நாம முதன் முதலா பார்க்கும்போது மாட்டுடன் இருந்துச்சே அதான் அவங்க எனகு மாட்டுப்பொண்ணு ஹி ஹி


17.  மேடம், ஒரு டவுட்டு , லாயர் ஆகனும்னா இந்த புக்ஸ் எல்லாம் வாங்கி வெச்சா போதுமா? இல்லை படிச்சே ஆகனுமா?

 

18.  இவ்ளவ் பிரச்சனை உள்ள ஊர்ல உங்கப்பா டைம் டேபிள் போட்டு லவ் பண்ணி இருக்காரு


19. அந்த பாட்டியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே?

 உன் ஃபேஸ் புக் ஃபிரண்டா இருக்கும் 


20. என்னது அவ உனக்கு பிரில்லியன் கேர்ளா? வேணாண்டா. நாமளே ஒருத்தனை தேடி இங்கே வந்திருக்கோம், இப்டி பண்ணினா உன்னைத்தேடி நாங்க டெண்ட் அடிக்க வேண்டி வரும்


21. நானும் இதே ஊர்ல தான் இருக்கேன். இந்த தகவல்கள் எல்லாம் எனக்குத்தெரியலையே?


 மேடம், உங்களுக்கு வேலை வெட்டி இருக்கும்


22.  நான் மீன் சாப்பிட்டதே முதல் மரியாதைல  சிவாஜியைப்பார்த்துத்தான் . ஆட்டுக்கறி சாப்டதே ராஜ் கிரனைப்பார்த்துத்தான் ( நல்ல வேலை , முதல் இரவு கொண்டாடுனதே வாலி படத்துல அஜித் - சிம்ரனைப்பார்த்துத்தான்ன்னு சொல்லலை )


23. காதல் தோன்றுவதற்கும் , மறைவதற்கும் அற்பமான காரணங்களே போதும்னு ஜெயகாந்தன் சொல்லி இருக்காரு  ( கர்ப்பமான காரணங்கள் தான் நிறைய ஹி ஹி )


24.  என்னடா சப்பாத்தி கருகிடுச்சு?

 சப்பாத்தி வேகுவதற்கும், கருகுவதற்கும் அற்பமான காரணங்களே போதும் ( கலாய்ச்சுட்டாராம் )


25.  அவன் மெயில் ஐ டி கண்டு பிடிச்சு எப்டியாவது பாஸ்வோர்டை கண்டு பிடிக்கனும்

 யூ மீன் ஹாக்கிங்க்

 யா

  இங்கே பக்கத்துல ஜெயில் எங்கே இருக்கு?

 ஏன்?

 நானே போய் அங்கே அட்மிட் ஆகிக்கறேன்


26. சினிமால கூட நான் அப்பப்ப ஆக்ட் பண்ணி இருக்கேன்

 நடு நிசி நாய்கள் ல 4 நாய்கள் வருமே அதுல ஒரு நாய் இவன் தான் ஹி ஹி


27. நாட்ல மீடியாக்கள் இருக்கும் அளவு பர பரப்புச்செய்திகள் இல்லை. அவனவன் பேயா அலைஞ்சுட்டு இருக்கான்


28. சார், ஆல்ரெடி பாதுகாப்பு கொடுத்தாச்சு  இன்னும் என்ன பண்ன? போலீஸ் ஸ்டேஷனையே பெயர்த்து எடுத்து வெச்சாத்தான் உண்டு


29. கோயிலுக்கு போய்ட்டு வர்ற கேப்ல எல்லாம் வில்லன் வந்துட்டுப்போறான்?

 மங்காத்தா படத்தை விட இதுல வில்லன்க அதிகம்


30. செத்தாதான் அழனும், கொன்னா கோபம் தான் வரனும்


31. இந்த ஊர்ல 4 திசைகளிலும் சுடுகாடு இருக்குன்னு சொன்னாங்க, ஆனா ஊரே சுடுகாடாத்தான் இருக்கு


32.  நீ அவளை கொல்லனும்னு கொல்லலை. ஆனா நான் சாகாம செத்துட்டு இருக்கேன்


33. ஒரு குழந்தையைக்கொல்லவா இன்னொரு குழந்தையை பெத்தேன்?


34. உங்க மானம் போச்சுன்னு நினைச்சா நீங்க செத்திருக்கனும். அவளைக்கொன்னிருக்கக்கூடாது  





ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


 குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க்  -   2.5 / 5


 சி. பி கமெண்ட் - ராதா மோகன் ரசிகர்கள் , பெண்கள் பார்க்கலாம் . மற்றபடி தியேட்டரில் படம் பார்க்க பொறுமை வேணும் . பொறுமை எருமையை விட பெருசு.. 



டிஸ்கி - ராதா மோகன் படம் பூரா ஹீரோயினை கண்ணியமாத்தானே காட்டி இருந்தாரு , எப்டி ஸ்டில்ஸ் எல்லாம் கிளாமரா இருக்கு?ன்னு யாரும் கேட்காதீங்க. அட்ரா சக்க வுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு ,. அதை மெயிண்ட்டெயின் பண்ண வேணாமா? ஹி ஹி


உதயம் NH4 - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/04/nh4.html

2 comments:

விஸ்வநாத் said...

அட்ராசக்க கெளரவம் வாழ்க

Pulavar Tharumi said...

வழக்கமான உங்கள் முத்திரையுடன் நல்ல விமர்சனம் :)