Thursday, April 11, 2013

எந்த பொண்டாட்டியும் முதல் இரவு அறையை விட்டு வெளிநடப்பு பண்ண மாட்டா, ஏன்?

1. மிகைப்படுத்தப்பட்ட அன்பை விட பெண்கள் அதிகம் விரும்புவது நகைப்படுத்தப்பட்ட அன்பையே # பவுன் விலை 26,000 ரூபா



---------------------------


2.   பசு மாட்டிடம் இருந்து பால் கறப்பது எப்படி என சொல்லித்தரும் விவசாயிக்கான படிப்புதான் பாலியல் கல்வியா?



--------------------------


3.  வாழ்க்கை பூரா மனைவி பண்ற கொடுமைகளை சகிச்சுக்கிட்டு குழந்தையின் நலன் கருதி அடக்கி வாசிக்கும் அனைத்து கணவர்களும் வாழ்நாள் சாதனையாளர்களே


-------------------------


4. இந்து சாமி , முஸ்லீம் சாமி , கிறிஸ்டியன் சாமி என எந்த சாமியை நீ நம்பினாலும் சுப்ரமணியம் சாமியை மட்டும் நம்பி விடாதே !




---------------------------------


5. சிட்டு குருவி , இன்று உலகமே உன்னை கொண்டாடும் நாள் .உன் நினைவாக சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுவார்கள் தமிழர்கள்



------------------


6. பா ஜ க .அதிமுக இரு கட்சிக்கும் இது நல்ல வாய்ப்பு.காங்கிரசை எதிர்க்க.ஆனால் அவர்கள் அதை உணர்ந்ததாகத்தெரியவில்லை.




------------------------


7. பரதேசியில் ஒரே ஹீரோ - ஒட்டுப்பொறுக்கி.இந்திய தேசத்தில் ஏகப்பட்ட வில்லன்கள்.எல்லோரும் ஓட்டுப்பொறுக்கிகள்





----------------------------------


8. தி மு க வின் அடுத்த இலக்கு கட்சிக்கு மாணவர் அணி அமைப்பதாக இருக்கும் # அரண்டுட்டாங்க





----------------------------



9. தமிழ் இனத்தலைவர் மு க சுயநலவாதி என சொல்வதால் நான் அதிமுக அல்ல. ஜெ ஒரு எதேச்சாதிகாரி என்று சொல்வதால் நான் தி மு க அல்ல




-------------------------


10. அழகிரி - அப்பா. நாம எல்லாரும் களி சாப்டற மாதிரி கனா கண்டேன்.பலிச்சிடுமோ?



---------------------------------


11. த இ தலைவர் -மேடம்.என் நாடகம் எப்டி? சோனியா - சி பி ஐ ரெய்டு வரப்போகுது.முடிஞ்ச வரை சொத்தைக்காப்பாத்திக்கப்பாருங்க





-----------------------

12. வாழ்க்கை ஒரு வட்டம்.இன்னைக்கு விலகுனவங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க.



-----------------------


13. திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி# எப்டிப்பார்த்தாலும் தானைத்தலைவரால தமிழ்நாட்டுக்கு நட்டம் தான் வரும் போல




--------------------------


14. அய்யோ ராமா ! எல்லாம் டிராமா!



-----------------------------


15.  உயிருனும் மேலான உடன் பிறப்பே!ஆதாயம் இல்லாம நான் ஆத்தோட போக மாட்டேன்.பொறுத்திரு.எல்லாம் ஒரு ராஜ தந்திரமே!




---------------------------


16. தமிழ் இனத்தலைவர் திடீர் னு தியாகி ஆகிட்டாரே? நிஜமாவே திருந்திட்டாரோ?





------------------------


17. ஏ ஆர் ஆர் ஏன் உண்ணா விரதம் இருக்கலைன்னு ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க




----------------------------------


18. தலைவா விஜய் பஞ்ச் - நானே பாஸ்பரஸ் தெளிச்ச ஒரு கற்பூரம் .பத்த வைக்க ்.தீக்குச்சி எதுக்கு?





-------------------------


19. ஆதரவு தொடர கருணாநிதி புது நிபந்தனை # பந்திலயே உக்கார வேணாம்னுட்டாங்களாம்.இலைல ஓட்டைன்னானாம்



---------------------------


20. நடிகை -(money) மணியோசை கேட்டு எழுந்தேன்.நெஞ்சில் ஆசை கோடி (ரூபா சம்பளம்)சுமந்தேன்





-------------------------


21.  பாலா வின் பரதேசியில் நடித்ததால் நாயகி வேதிகா உடல் இளைத்து பாதி கா ஆகிட்டாராம்



--------------------------------


22. மேனேஜர் ன் மீட்டிங் பேச்சு டச்சிங்கா இருந்தது.கடைசி வரை ஸ்டெனோ மேல் வெச்ச கையை எடுக்கவே இல்ல




--------------------------------



23. அடுத்தவர் கருத்தை முன் கூட்டியே கணிப்பதில் விற்றுத்தீர்கின்றன சர்வே எடுத்துத்தள்ளும் பத்திரிக்கைகள்.




---------------------------


24. கோபக்காரியா இருந்தாலும் எந்த பொண்டாட்டியும் முதல் இரவு அறையை விட்டு வெளிநடப்பு பண்ண மாட்டா




---------------------------


25. அரசியல் கணக்குல புலி ன்னு பேர் எடுத்தவங்க ஊழல் பெருச்சாளிகளா இருக்காங்க.





----------------------

0 comments: