Sunday, April 14, 2013

அஞ்சலியின் மறுபக்கம் - பாகம் 4 ( பொன்னியின் செல்வன் ரேஞ்சுக்கு )

அஞ்சலியின் மறுபக்கம் - மினி சினி தொடர் : பகுதி 4

மிழக போலீஸும் ஆந்திர போலீஸும் ஆளுக்கொரு திக்கில் தேடிக் கொண்டிருந்த நிலை யில், தாமாக வந்து ஆஜராகி இருக்கிறார் நடிகை அஞ்சலி.''என்னை யாரும் கடத்தவில்லை. தாங்கமுடியாத மன அழுத்தம் காரணமாக நானே தான் வீட்டைவிட்டு வெளியேறினேன். மும்பையில் நண்பர்கள் பாதுகாப்பில் இருந்தேன். போலீஸ் எனக்கு பாதுகாப்பு தருவதாக சொன்னதால் நான் இங்கு வந்திருக்கிறேன்.


 என் தரப்பு நியாயத்தை போலீஸ் துணை கமி ஷனர் சுதிர்பாபுவிடம் முழைமையாக சொல்லிவிட்டேன். தேவைப்பட்டால் விரைவில் மீடி யாக்களை சந்தித்து உண்மைகளைச் சொல்வேன்” என்று திடமாக சொல்லிவிட்டுப் போயி ருக்கிறார். அஞ்சலியின் தலை மறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதால் இனி, அவரது திரைமறைவு வாழ்க்கை ஆரம்பமாகும்.



இனி, அஞ்சலியின் மறு பக்கம்...


இருபது வயதில் ஒரு இளம் பெண் நடிக்க வந்தால் அவருக்கு துணையாக அப்பாவோ, அம்மாவோ, அண்ணனோ வருவார்கள். அவர்கள் தான் அந்தப் பெண்ணுக்கு மெய்க்காப்பாளர் போல் இருப்பார்கள். அஞ்சலிக்கு துணையாக சித்தி, சித்தப்பா, அண்ணன் என மூன்று பேரும் வந்தார்கள். இதனால் இந்த மூன்று பேரும் எது சொன்னாலும் அதைக் கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர் அஞ்சலி. தொடக்கத்தில் இவர்கள் சொல்வதெல்லாம் நல்லதாகவே பட்டது அஞ்சலிக்கு. ஆனால், போகப் போக கசக்க ஆரம்பித்தது.


தன்னை முன்னுக்கு கொண்டு வந்தார்கள் என்பதற்காக தனக்கு ஒப்பாத விஷயங்களை எல் லாம் சகித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணுக்கு. அப்படியும் எத்தனை நாளைக்குத் தான் சகித்துக் கொள்ளமுடியும்? ஒரு கட்டத்தில் எதிர்க்கவும், மறுக்கவும் ஆரம்பித்தார் அஞ்சலி. அவரை பணம் காய்ச்சி மரமாக நினைத்துக் கொண்டிருந்தவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்டிக்கிறோம் என்கிற பேரில் அஞ்சலிக்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


 பெற்றதாயைப் பிரிந்த ஏக்கம் அப்போதுதான் முதல் முறையாக அஞ்சலிக்கு வந்தது. எட்டா தூரத்தில் அம்மா இருந்ததால் தன்னுடைய கஷ்டங்களை உட்கார்ந்து சொல்லி அழக் கூட அவருக்கு ஆறுதலாய் ஒரு நிழல் இல்லை. இந்த ஏக்கமே அஞ்சலியை வெளிக்கிளம்ப வைத் தது. தன்மீது பரிவு காட்டிப் பேசிய நண்பர்கள் மற்றும் இயக்குனர்களோடு நிறையவே பொழுதை கழிக்க ஆரம்பித்தார். வீட்டிற்குள் இருந்த நெருக்கடிக்கு அது அவருக்கு ஆறுதல் தரும் மருந்தாக இருந்தது. வீட்டுக்குள்ளோ வேறு மாதிரியாய் பற்றி எரிந்தது. ’கண்டவர்களோடு சுற்றினால் இமேஜ் என்னாகும்?’ என்று தாவினார்கள்.


 ’எனக்கு சரி என பட்டதை நான் செய்கிறேன். நான் இன்னும் சின்னப் பெண் இல்லை உங் களுக்கு தேவை பணம் தானே அதற்கு எந்தக் குறையும் வராது. ஆனால், அதற்காக என்னை குத்திக் குத்தி அழ வைத்து ரசிக்காதீர்கள்” என்று குரலை உயர்த்தினார் அஞ்சலி. இப்படிப் பேசியதற்காக பலமுறை அஞ்சலி, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.



 ’’சித்தப்பா தன்னை முடியைப் பிடித்து இழுத்து அடித்ததாக இப்போது அஞ்சலி சொல்வது உண்மையாக தான் இருக்க முடியும். ஏனென்றால், அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் எங்கள் கண் எதிரி லேயே அஞ்சலியை மிரட்டியதை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்கிறார் ஒரு பிரபல சினிமா இயக்குனர்.



இத்தனையையும் போதாதென்று வேறுமாதிரியான சங்கடங்களையும் அஞ்சலி சந்திக்க நேர்ந் தது. நடிகர் விக்ரமின் அப்பா சினிமாவில் நடிக்க வந்து தோற்றுப் போனவர். அந்த வெறி யில்தான் அவர் தனது மகனை ஹீரோ ஆக்கினார். நடிகை மந்த்ராவின் அம்மா ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட். தன்னால் ஜெயிக்க முடியாததை மகள் மந்த்ராவை வைத்து ஜெயித்துக் காட்டினார், இன்றைக்கு திரை உலகில் பிரபலமாக இருப்பவர்களில் பலரது பின்னணி இப்படித்தான் இருக் கும். அஞ்சலியின் சித்தி பாரதி தேவியும் இந்த கேரட்க்டர் தான்.


எப்படியாவது கதாநாயகியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காக பூமணி படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு இயக்குனர் களஞ்சியத்தைச் சந்தித்தார் பாரதி தேவி. களஞ்சியத்தை மடுமல்ல பல இளம் இயக்குனர்களை சந்தித்து அப்போது சான்ஸ் கேட்டடார். அத்தனை பேரும் இனிக்க இனிக்க பேசினார்கள். ஆனால், யாருமே வாய்ப்பு தரவில்லை. களஞ்சியம் மட்டும் பாரதி தேவிக்கு ஆறுதலாய் பேசினார். களஞ்சியத்தின் நம்பிக்கை வார்த்தைகள் பாரதிதேவிக்கு பிடித் திருந்தது. 


அதேநேரம், தன்னால் சாதிக்க முடியாததை தன்னுடைய வளர்ப்பு மகள் அஞ்சலியை வைத்து சாதித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியை தனக்குளே வளர்த்துக் கொண்டார் பாரதி தேவி. அந்தவெறிதான் அஞ்சலியை கதாநாயகி அளவுக்கு உயர்த்தியது. தனக்காக வாய்ப்புக் கேட்டு அலைந்த காலங்களில் கனவுத் தொழிற்சாலையின் நெளிவு சுளிவுகளை நன்றாக தெரிந்து வைத்திருந்தார் பாரதி தேவி.


 வளர்ப்பு மகள் அஞ்சலியை ஜெயிக்க வைக்க அது அவருக்கு ரொம்பவே உதவியாக இருந்தது.இத்தனையும் செய்தது எதற்காக அஞ்சலிக்காகவா? இல்லை, அஞ்சலியால் வந்து கொட்டும் பணத்துக்காக. சினிமாவில் வந்த வருமானத்தை வைத்து, தானே படம் எடுக்க நினைத்தார் பாரதி தேவி. அதற்காக தனது இயக்குனர் தோழர்களிடம் கலந்து ரையாடல் நடத்தினார். சிக்கலே இங்குதான் ஆரம்பிக்கிறது.



சித்தி படம் எடுப்பது அஞ்சலிக்கு பிடிக்கவில்லை.அதை வெளிப்படையாகவே சொன்னார். இது சித்திக்கு பிடிக்கவில்லை. இருவரும் இப்படி முரண்பட்டதால் வீட்டுக்குள் பிரளயம் வெடித்தது. ’உன் பணம், என் பணம்” என்கிற அளவுக்கு வார்த்தைகள் தடித்தன. இதற்கு முந்தைய படங் களில் சில லகரங்கள் மட்டுமே அஞ்சலிக்கு சம்பளமாக தரப்பட்டது. அந்தப் பெண் முழுதாய் இருபது லட்சத்தை பார்த்ததே சேட்டை படத்தில் தான். ஆனால், அந்த வருமானத்தையும்  சினிமா தயாரிப்பில் போட துடித்தார் பாரதி தேவி.


அதை அறிந்து அந்தப் பூவும் புயலானது ’இதுவரை சம்பாதித்ததை எல்லாம் உங்களுக்கே கொடுத்துவிட்டேன் இனியாவது எனக்காக சம்பாதிக்க நினைக்கிறேன்” - அஞ்சலியிடம் இருந்து இப்படி வார்த்தைகள் வந்து விழும் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்திருக்க மாட் டார்கள். இப்படிச் சொல்வதால் தன்னுடைய எதிர்காலத்தையே பாழாக்கும் விதமாக காரியங் கள் நடக்கும் என்று அஞ்சலியும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.



அதுசரி, சித்தி சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு, திடீரென இப்படிப் பேச தைரியம் கொடுத்தது யார்?


சஸ்பென்ஸ்!


தொடரும்  ( ராஜேஷ் குமார் நாவல் மாதிரி ) 




சென்னை: "நடிகை அஞ்சலி தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாயாரும், எனது சகோதரியுமான பார்வதி தேவியிடம் ஒப்படைத்துவிட்டேன்" என்று அவரது சித்தி பாரதி தேவி கூறியுள்ளார்.
"'பலுப்பு' தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்ற நடிகை அஞ்சலி கடந்த 8ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதையடுத்து, அஞ்சலியின் சித்தி பாரதி தேவி சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.

ஆனால் புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால் சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் பாரதி தேவி.

இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் மும்பையில் இருந்து நடிகை அஞ்சலி, நேற்று முன்தினம் இரவு ஹைதராபாத்  துணை போலீஸ் கமிஷனர் சுதிர்பாபு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலி, என்னை யாரும் கடத்தவில்லை, தீவிர மன அழுத்தம் காரணமாகவே வெளியேறினேன் என்று கூறினார்.

நடிகை அஞ்சலியின் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்த நிலையில், அஞ்சலி தொடர்பான அனைத்து பொறுப்புகளையும் அவரது தாயாரும், எனது சகோதரியுமான பார்வதி தேவியிடம் ஒப்படைத்துவிட்டதாக அவரது சித்தி பாரதி தேவி கூறியுள்ளார்.


சென்னை காவல் நிலையத்தி்ல் கொடுக்கப்பட்டுள்ள புகார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஆகியவற்றை வாபஸ் பெறுவது குறித்து இரு தரப்பினரும் பேசி முடிவு செய்யப்படும் என்றார்.

தெலுங்கு படப்பிடிப்பில் கலந்து கொள்வது போல் ஏற்கனவே ஒப்பந்தம் ஆன தமிழ் படங்களிலும் நடித்துக் கொடுக்கும்படி அஞ்சலியிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் பாரதி தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தெலுங்கு படத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவிடம் பேசியிருப்பதாகவும் பாரதி தேவி கூறியுள்ளார்.

--------------------
 நடிகை அஞ்சலி விவகாரத்தி்ல் அரசியல் சதி: களஞ்சியம் சந்தேகம்

நடிகை அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ள இயக்குனர் களஞ்சியம், வரும் 24ஆம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் அவர் பங்கேற்கா விட்டால் நடிகர் சங்கத்தி்ல் புகார் செய்வேன் என்று கூறியுள்ளார்.
 
நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெறும் தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் களஞ்சியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, அவர் கூறுகையில், நடிகை அஞ்சலி பிரச்னையை பொருத்தமட்டில் குடும்ப பிரச்னை காரணமாக அவர் வீட்டை விட்டு ஓடிச்சென்று தனது சித்தி, சித்தப்பா மீது புகார் தெரிவித்துள்ளார். என் மீது அவர் சுமத்தியுள்ள புகார் வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகிறது.

நான் அஞ்சலியை கொடுமை செய்ததாகவும், சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், கொலை செய்ய முயற்சிப்பதாகவும் 3 குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.
அஞ்சலியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கும் தொடர்ந்து உள்ளேன். நீதிமன்றத்திலும் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன்.

லங்கை தமிழர் பிரச்னைக்காக என்னுடைய தமிழர் நலம் பேரியக்க அமைப்பு பாடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் மாநில தலைவராக நான் உள்ளேன். இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க. மீதும், காங்கிரஸ் அரசு மீதும் நாங்கள் குற்றம் சாட்டி வருகிறோம். இதனால் அஞ்சலி விவகாரத்தில் அரசியல் சதி இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

அஞ்சலி அபாண்டமாக என் மீது பழி சுமத்தி விட்டார், சேற்றை என் மீது மட்டுமின்றி எனது அமைப்பினர் மீதும் வீசி உள்ளார். தற்போது ‘ஊர் சுற்றும் புராணம்’ படத்தில் நான் கதாநாயகனாகவும், அஞ்சலி கதாநாயகியாகவும் நடித்து வருகிறோம். இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. சம்பவத்துக்கு முந்தைய நாளில்கூட என்னுடன் அஞ்சலி பணி செய்துள்ளார்.

இந்த படத்துக்கான அடுத்த கால்ஷீட்டை அஞ்சலி வருகிற 24ஆம்  தேதி கொடுத்துள்ளார். அன்றைய தினம் அவர் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கத்தில் அவர் மீது புகார் செய்வேன். பிரச்னைக்கு பிறகு அஞ்சலி என்னுடன் பேசவில்லை. 24ஆம் தேதி படப்பிடிப்புக்கு அவர் வந்தால் வழக்கம்போல் நான் அவருடன் நடிப்பேன்.


நன்றி - விகடன்

 டிஸ்கி - பாகம் 3 -

அஞ்சலி அதிரடி பேட்டி -தலைமறைவு ஏன்?

 

http://www.adrasaka.com/2013/04/blog-post_9801.html
 

 

அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

http://www.adrasaka.com/2013/04/blog-post_9624.html

 


1 comments:

'பரிவை' சே.குமார் said...

சித்தியும் களஞ்சியமும் ஓவர் பேச்சு...

சந்தேகமே இல்லை அஞ்சலி சொல்வதில் ஏதோ உண்மை இருக்கு....