Friday, March 22, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 22.3.2013 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

1.மறந்தேன் மன்னித்தேன்.தெலுங்கில் குண்டெல்லோ கேதா‌வ‌ரி என்ற பெய‌ரில் சென்ற வாரம் வெளியான படத்தின் தமிழ் பதிப்பு மறந்தேன் மன்னித்தேன். நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு படத்தை தயா‌ரித்து முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார்.


FILE
1986 ஆகஸ்டில் கோதாவ‌ரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆந்திரா மாநிலத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. வீடுகள், சொத்துகள் நாசமானதுடன் பல உயிர்கள் காவு வாங்கப்பட்டன. இந்த துயர நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கோதாவ‌ரி கதையிலு கதையை - எழுதியவர் ராமராவ் - முறைப்படி வாங்கி இந்தப் படத்தை மஞ்சு எடுத்துள்ளார். படத்தை இயக்கியிருப்பவர் குமார் நாகேந்திரா. ஆனால் கதை, திரைக்கதையிலும் இவரது பெயரையே போடுகிறார்கள்.

ஆதியும், மஞ்சுவும் கணவன், மனைவி. கோதாவ‌ரியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் இருவரும் மாட்டிக் கொள்கிறார்கள். உயிர் போகும் நிலையில் இருவரும் தத்தமது முதல் காதலை நினைத்துப் பார்க்கிறார்கள். இந்த பிளாஷ்பேக்கில் ஆதியின் காதலியாக வருகிறார் தாப்ஸி.

ஆந்திராவில் படம் சூப்பர்ஹிட். தமிழில் கோதாவ‌ரியின் கதை எடுபடுமா என்பது நாளை தெ‌ரிந்துவிடும். இளையராஜாவின் இசை படத்தின் பலங்களில் ஒன்று என்கிறார்கள்.

சென்சார் இதற்கு யு சான்றிதழ் தந்துள்ளது.

erode v s p release

மறந்தேன் மன்னித்தேன் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/03/blog-post_609.html


2. கருப்பம்பட்டி -அ‌ஜ்மல் நடித்திருக்கும் கருப்பம்பட்டியை சுந்தர் கே., சுந்தர் பிக்சர்ஸ் சார்பில் தயா‌ரித்துள்ளார். இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. 

ஒரு கெட்டப்பில் தொங்கு மீசை பாகவதர் தலைமுடி என வித்தியாசமாகத் தோன்றுகிறார் அ‌ஜ்மல். எழுதி இயக்கியிருப்பவர் பிரபு ராஜா சோழன்.


ல்பத்தின் ஹைலைட் 'நாட்டி ராஜா ராஜா...’ பாடல். இந்தியாவின் டிஸ்கோ கிங் பப்பி லஹிரி 80-களின் இந்தி இசைச் சாயலில் பாடி இருக்கிறார். 'ஸிந்தகி, குச் நஹி’ போன்ற எளிய இந்தி வார்த்தைகளைப் போட்டு மழலைத் தமிழில் அவர் பாடி இருப்பது அழகு. நவீன், முகேஷ், செந்தில், சுர்முகியின் கலகல குரல்களில் ஒலிக்கும் 'கருப்பம்பட்டி கருப்பம்பட்டி...’ பொங்கல் கொண்டாட்டப் பாட்டு. கோரஸ் குரலாக ஒலிக்கும் 'கண்ணம்மா சின்னக் கண்ணம்மா’ - ஊர்ப் பக்கம் மஞ்சள் தண்ணீர் ஊற்றி விளையாடும் மாமன் மகள்களுக்கு டெடிகேட் செய்யலாம். 'அடலேறு காளையெல்லாம்...’ பாட்டு செம கும்மாங்குத்து. பாடலெங்கும் தமிழர்களின் வீரத்தை வார்த்தைகளில் வார்த்திருக்கிறார் கவிஞர் கபிலன். சயனோரா பிலிப்பின் மெட்டாலிக் குரலோடு கார்த்திக்கின் ஜிலீர் குரலும் இணைந்து பார்ட்டி டான்ஸ் மூடு கொடுக்கிறது 'ஓ இந்திரா... ஓஹோ இந்திரா...’ பாடல்.

erode krishna release

கருப்பம்பட்டி -சினிமா விமர்சனம்

 http://www.adrasaka.com/2013/03/blog-post_1662.html



3. கந்தா" -எழுத்தாளர் பாபு கே.விஸ்வநாத் (திருவாரூர் பாபு) இயக்கிய படம் "கந்தா". கரண், மித்ரா குரியன், ராஜேஷ் நடித்துள்ளனர். வி.பழனிவேல் என்பவர் தயாரித்தார். வெளிநாட்டில் படித்து விட்டு சொந்த ஊரான தஞ்சாவூருக்கு திரும்பும் கரண், அங்கு நடக்கும் தாதாக்கள் கொட்டத்தை அடக்குவதுதான் கதை. படம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. தயாரிப்பாளருக்கு பணப் பிரச்னை அதனால் படம் வெளியாவது தள்ளிப்போனது. கரண் சம்பள பாக்கியை கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார் இப்படி பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு படம் கிடப்பில் கிடந்தது. இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்தும் இந்தப் படத்தை கை கழுவிட்டு "தேரடிவீதி" என்ற அடுத்த படத்தை இயக்கச் சென்று விட்டார். இப்போது தயாரிப்பாளர் ஒருவழியாக பிரச்னைகளை சமாளித்து வருகிற 22ந் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார்.


erode devi abirami release

கந்தா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2013/03/blog-post_495.html



4. நானும் என் ஜமுனாவும்’ படத்தை இயக்குனர் ஜெயதமிழ் உடன் இணைந்து பிரபல விநியோகஸ்தர் குருராஜா இயக்கியுள்ளார்.

நடிகர் பானுசந்தரின் மகன் ஜெயந்த், பெங்காலி நடிகை பௌலமி இருவரும் இதில் இணைந்து நடித்துள்ளார்கள்.
நானும் என் ஜமுனாவும் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் குருராஜா.
இயக்குனர் ஜெயதமிழ் உடன் இணைந்து இப்படத்தை குருராஜா இயக்கியிருக்கிறார்.
‘நான் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ளேன்.
கொலிவுட் படத்தை இயக்க, சரியான தருணம் பார்த்து காத்திருந்தேன்.
பல வருட திரையுலக அனுபவம் பெற்ற என் நண்பர்- இயக்குனர் ஜெயதமிலும் நானும் இணைந்து இந்தப்படத்தை இயக்கியுள்ளோம்.
திரை ரசிகர்களை நிச்சயம் இப்படம் திருப்திப்படுத்தும் என்று கூறியுள்ளார் குருராஜா.

erode anna

5.கண் பேசும் வார்த்தைகள்.   பாலாஜி சினி கிரியேஷன்ஸ் மற்றும் கான்சப்ட் பவுண்டேஷன் சார்பில் ஆர்.சரவணன் தயாரிக்கும் படம் கண் பேசும் வார்த்தைகள். இதில் செந்தில் நாயகனாக அறிமுகமாகிறார். இவர் டி.வி. தொடரில் நடித்தவர். நாயகியாக இனியா நடிக்கிறார். ஆடுகளம் முருகதாஸ், மதுமிதா, இளவரசு, சரண்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பாலாஜி இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் உறவினர் ஆவார். ‘உயிர்’ படத்தை தயாரித்தவர். எஸ்.பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர். 

காதல், காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து புதுமையான திரைக்கதையில் படம் தயாராகிறது என்றார் அவர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு சிங்கப்பூரில் நாற்பது நாட்கள் நடத்த உள்ளனர். 

தஞ்சை, திருவாரூரில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறது. 

ஒளிப்பதிவு : நாககிருஷ்ணன், இசை: ஷமந்த்நாத், எடிட்டிங்: சாபு, நடனம்: காதல் கந்தாஸ், ஸ்டண்ட்: செல்வம்.

6. AATHMAA - ( HINDI ) - A single mother fights against the supernatural in order to hold on to her daughter.



7. மாந்திரீகன் - இது ஒரு மலையாள டப்பிங்க் படம், ஜெயராம், பூனம் பாஜ்வா , தாமிரபரணி பானு நடிச்சது 


மாந்திரீகன் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2013/03/blog-post_6179.html

0 comments: