Monday, March 25, 2013

2013 மாணவர் புரட்சி! - 456

2013 மாணவர் புரட்சி!





a

thanx - ju vi 


readers view

1.இது தமிழ் நாட்டில் காங்கிரஸை ஒழிக்கும் போராட்டமாக மாறியே ஆக வேண்டிய நிலைமை இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் ஒரு சரியான தலைமைக்குழுவை உடனே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 1948 முதல் இன்று வரை சிங்களர்கள் செய்த அத்தனை கொடுமைகளையும், அதற்கு துணை போனவர்கள் பற்றிய செய்திகளையும் தொகுத்து ஒரு கையேடாக ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் பதிப்பித்து அவற்றை நாடெங்கும் உள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

மக்களுக்கு இந்த பிரச்சனை பற்றிய முழு விபரமும் தெரிந்தால் மட்டுமே இந்தியாவை ஆட்சி செய்வோர் இதை சரியாக கையாள்வார்கள். இல்லையெனில் இது இத்தாலிய சமாச்சாரமாகவே இருக்கும்.


2. நான் பள்ளிகூடம் படிக்கும்போது ஜெயவர்த்தனேவை கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டு ஊர்வலம் சென்றது நினைவில் நிழலாடுகிறது... மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்... அதே நேரத்தில் படிப்பிலும் கவனமாக இருங்கள்... ஏனெனில் படிப்பும் முக்கியமாச்சே...



3 நன்றி..நன்றி...நன்றி..கொடுமையாய் மாண்டுபோன அந்த அப்பாவி சனங்களின் சார்ப்பில் என் நன்றிகள் !! கோரமான மரணத்தை ...வலியை செய்த ....செய்ததையதுக்கு உதவி செய்த எல்லா ************* தண்டனை ...எதாவது கிடைக்க வேணும். அப்பவாது அந்த அப்பாவிகளின் ஆத்மா கொஞ்சமாவது ஆறுதல் அடையும். நடை பிணமாய் அந்த வலியுடன் வாழும் மிச்சமான உயிர்களுக்கும் ஒரு சின்ன ஆறுதல். நினைத்து பார்க்க முடியாத ...தாங்க முடியாத ..தினம் தினம் ..நெஞ்சு வலியோடு நாம் வாழும் வாழ்வு. எமக்கே அப்படி என்றால் ..அதை அனுபவித்தவர்கள் எப்படி வாழ்வார்கள் ? 21 centure ல் இதை செய்துவிட்டு ......ஒ ..சொல்ல வார்த்தை வருகுது இல்லை.



4. ஜெயா செய்த நல்ல காரியம் எதுவெனில், கல்லூரியின் முன்பு மட்டும் புரட்சி செய்த கல்லூரி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியதால், வீதியெங்கும், ஊரெங்கும், மாவட்டம்தோறும், மாநிலம் எங்கும் எழுச்சியின் முழக்கம். விடாதீர்கள், விடுதலை, நீதி கிடைக்கும் வரை.

0 comments: