Friday, January 25, 2013

விஸ்வரூபம் - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்

விஸ்வரூபம் படத்தின் ட்ரைலரை வைத்தே படத்தின் கதையை யூகித்துவிடலாம். கமல், படத்தின் ஆரம்பத்தில் பெண் தன்மையுடன், நாட்டியம் கற்றுத்தருபவராக வருகிறார். கமலின் மனைவி பூஜா, அவரை கண்காணிக்க ஒருவரை அனுப்புகிறார். அந்த துப்பறிபவர், கமலைப் பற்றிய ஒரு ரகசியத்தை கண்டுபிடிக்கிறார். அதிலிருந்து விஸ்வரூபம் எடுக்கிறது கதை.

இந்த மாதிரி கதைக்கு படம் முழுவதும் விறுவிறுப்பாக இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் விஸ்வரூபத்தின் பின்பாதியில் விறுவிறுப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். ஆஃப்கானிஸ்தான் காட்சிகள் அருமையாக இருக்கிறது. தமிழ் படங்களுக்கு இது புதுசு என்பதால் நிச்சயம் மக்களை கவரும்.

இசை நவீனமாக இருக்கிறது. படத்தில் கதக் நடன பாட்டு மட்டும் தான் இருக்கிறது. இன்னொரு பாடல், காட்சிகளின் பின்னணியில் வரும். பாட்டுகளை குறைத்ததற்கு கமலை பாராட்ட வேண்டும்.

பல இடங்களில் வசனம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. வசவச என்று இல்லாமல், வாய்க்குள்ளயே பேசாமல் கூர்மையான வசனங்கள்.

ஆன்ட்ரியா எதற்கு வருகிறார் என்று ஒருவர் விமர்ச்சித்து இருந்தார். ஆனால் படத்தில் கமல் ஆளுமை செலுத்தும் காட்சிகளே சுமார் ஒரு மணி நேரோமோ ஒன்னேகால் மணி நேரோமோ தான் இருக்கும். மற்ற இடங்களில் கதையோடு வருகிறார்.

பல காட்சிகளில் ரத்தமும், தூக்கு போடுவது, கழுத்தை அறுப்பதையும் காண்பிக்கிறார்கள். ஆதலால் சிறு குழந்தைகளை இந்தப் படத்திற்கு கூட்டிட்டுப் போகாமல் இருப்பது நல்லது.

தடை செய்யும் அளவிற்கு இந்தப் படம் ஒர்த்தா? ஒரு காட்சியில் தீவிரவாதி ஒருவர் தான் மதுரை, கோவை மற்றும் இன்னும் இரண்டு ஊர்களில் ஒழிந்து இருந்ததாக கூறுகிறார். பின் ஒரு காட்சியில் தீவிரவாதிகள் தொழுகை செய்வது போல் இரண்டு நொடிகள் காண்பிக்கிறார்கள். படத்தில் குரானை காண்பித்ததாக எனக்கு நினைவில்லை. இதை வைத்து நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

படத்தின் ஆரம்பத்தில் பிராமணர்களை சீண்டும் வகையிலும் ஒரு வசனம் வருகிறது.

படத்தில் பெரிய ரகசியம் ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொண்டால், இந்த தடை விசயம் நகைச்சுவையாக இருக்கும்.

இது தியேட்டரில் பார்க்க வேண்டிய படம். நியுயார்க் மற்றும் ஆஃப்கானிஸ்தான் காட்சிகளின் பிரமாண்டம் அப்படி. கிராஃபிக் ஹெலிகாப்டர்களை குறைத்திருந்திருக்கலாம் :) ஏ மற்றும் பி சென்டர்களில் நன்றாக ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. விஸ்வரூபம் - பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு படம். 



 





அவர் போட்ட ட்வீட்ஸ் ரிலேட்டட் த ஃபிலிம்


1.விஸ்வரூபம் ஓகே. கதைக்கு ஏற்ற விருவிருப்பு கொஞ்சம் கம்பி.



2. தியேட்டரில் செம கூட்டம் முன்னாடி உட்காரத்தான் இடம் கிடைத்தது.


3. ஆஃப்கானிஸ்தான் காட்சிகள் தமிழ் படங்களுக்கு புதுசு. ஒளிப்பதிவு அருமை. இசை ஓக்கே



4. அந்த கதக் பாட்டு மட்டும் தான். இன்னொரு பாட்டு பின்னணியில் மட்டும் வருது!


5. தடை பண்ணும் அளவிற்கோ 150 கோடி அள்ளும் அளவிற்கோ ஒர்த் இல்லை!



6. பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் வசனங்கள்.


7. ஒரு தீவிரவாதி தான் மதுரை, கோவை மற்றும் 2 ஊர்களில் மறைந்து இருந்ததாகக் கூறுவார். அவ்வளவு தான்


8,. வழக்கு தொடுத்தவர்கள் நீதிபதியிடம் திட்டு வாங்கலாம் 


9. இந்தியா மாதிரியே ஒருத்தன் தியேட்டரில் போனில் பேசினான். கமல் வரும்போது கத்தி, கை தட்டினார்கள் :)


10. விஸ்வரூபம் படத்தின் முழுக்கதையை யாரிடமும் கேட்காமல் போய் பார்த்தால் படம் சுவாரசியமாக இருக்கும்.


11. ஆரம்பத்தில் பூஜா கவர்ச்சியாக சில நொடிகள் வருவார். அவ்வளவு தான். ஆண்ட்ரியாவிற்கு கவர்ச்சி காட்சிகள் இல்லை :)



12. படம் 150 கோடி கலெக்சன்னுக்கு வொர்தா?இல்லையா?


அந்த அளவிற்கு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் நல்ல வசூல் வரும். எந்திரன் மாதிரி இருந்தால் தான் 150 கோடி அள்ள முடியும் 1

எந்தவித எதிர்ப்புமே இல்லாமல் படம் வெளிவந்திருந்தால் நல்ல லாபம் பார்க்க வாய்ப்பே இல்லைல..

Carmike Galleria 6, Pittsburgh இல் படம் பார்த்தாராம்







விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
Posted Date : 13:35 (25/01/2013)Last updated : 13:50 (25/01/2013)
சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், இரு தரப்பினரும் அமர்ந்து பேசி இவ்விவகாரத்திற்கு தீர்வு காணவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

"என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படப் பிரச்னைகளை அறிந்து மிகவும் வேதனைப்படுகிறேன்.

கமல்ஹாசன் எனது 40 ஆண்டு கால நண்பர். யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்துகோள்ளாதவர் என்பதை நன்கு அறிவேன். இத்திரைப்படம் தணிக்கையான பிறகு தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பே இஸ்லாமிய சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்தே இஸ்லாமிய சமூகத்தின்மீது கமல் கொண்டுள்ள மதிப்பையும் மரியாதையையும் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

மேலும், கமல்ஹாசன் இந்தப் படம் தயாரிக்க சுமார் 100 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு என்னென்ன சிரமங்கள் அனுபவித்திருக்கிறார் என்பதை அறியும்போது என் மனம் கலங்குகிறது.

கமல் ஒரு சாதாரண கலைஞன் அல்ல. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு செல்வதற்குக் காரணமாக உள்ள மகா கலைஞன். இதையெல்லாம் மனதில்கொண்டு இந்தப் படத்தை முழுதாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தில் மாறி, கமல் வந்த பிறகு கலந்துபேசி, கதைக்கு பாதிப்பு வராத வகையில் சரிசெய்து படத்தை வெளியிட உறுதுணையாக இருக்குமாறு மிலாது நபி வாழ்த்துகளுடன் இஸ்லாமிய சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


 




விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு ஆன்லைனில் குவி்கிறது ஆதரவு!
Posted Date : 12:31 (25/01/2013)Last updated : 12:31 (25/01/2013)
- சரா

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில்,  நடிகர் கமல்ஹாசனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
சினிமா ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பாலிவுட் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கமல்ஹாசனுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிடும் இளைஞர்களும், ஆர்வலர்களும் கமல்ஹாசனின் முயற்சியைப் பாராட்டியும், விஸ்வரூபம் விவகாரத்தில் அவருக்கு எதிரானச் சூழல்களை விமர்சித்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அளவில் கமல்ஹாசனுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் சூழலில், தமிழகத்தில் இருந்து திரையுலகினரின் ஆதரவுக் குரல்கள் குறிப்பிடத்தக்க அளவில் எழுப்பப்படாததையும் அவர்கள் கண்டித்துப் பதிவிட்டுள்ளனர்.
ட்ரெண்டிங்கில் கமல்ஹாசன்...

டிவிட்டர் டிரெண்டில் கமல்ஹாசனின் பெயர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞனான கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரத்தை பறிப்பது சரியல்ல என்கிற ரீதியில் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் இடப்படுகிறது.

'இந்தியா ஒரு சுதந்திர நாடு. கமல்ஹாசன் தனித்துவம் வாய்ந்த திறமையாளர். அவர் தனது கருத்துகளைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு' என்று ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் டிவிட்டியுள்ளார். அந்த ட்வீட் 1000-க்கும் மேலானவர்களால் பகிரப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் குறும்பதிவுகள் #Kamal Haasan #Vishwaroopam முதலான ஹேஷ்டேக்-குகளுடன் ஆயிரக்கணக்கில் வலம் வந்துகொண்டு இருப்பதால் இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிரெண்டிங்களில் பேசுபொருள் ஆகி இருக்கிறார் கமல்ஹாசன்.

டிவிட்டரில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பதிந்த குறும்பதிவுகள் அப்படியே...

Shekhar Kapur: “I stand up for #kamalhassan right 2 show d world #vishwaroopam n let d people decide, especially after Censor Board has passed the film.You?”

Ronnie Screwvala: “I think we are all going to another extreme – being moral police for “everythin” – not good at all.”

Anubhav Sinha: “Is the Tamil Nadu government saying that they do not recognise CBFC? Or they can’t handle law and order? Or they subscribe to the objection? When a government needs to ride on a movie star, you should know how intellectually and politically bankrupt they are.”

Siddharth: “Ban on ‘Vishwaroopam’ is a regressive, back to the dark ages blow to Tamil cinema by the Tamil Nadu government… how do we make a change?”

R Madhavan: “My Anbu Tamil Makkale.We have been one of the most secular states ever.Let not that ever be snatched from us.Vishwaroopam deserves a release.”

Madhur Bhandarkar: “I am appalled by the Tamil Nadu government’s decision to ban Kamal Haasan’s ‘Vishwaroopam’. After the film has been passed by the censor board. Not done.”

Manoj Bajpayee: “It is disappointing to hear that state government of Tamil Nadu banned ‘Vishwaroopam’ after the film is censored. That brings the importace of censor in question.”

Amit Khanna: “The ban on Kamalhaasan’s Vishwaroopam is totally uncalled for!Condemnable.”

Lakshmi Manchu: “It is appalling what’s happening with #vishwaroopam.. Pls don’t mix films w cheap politics. This insane cultural mafia shd end!!!”
 நன்றி - விகடன் 


 



மக்கள் கருத்து


1. கமல் அவர்களுக்கு வணக்கம் ,

படம் எடுக்க எவ்வளவோ கதை இருக்கிறது . அதே போல் நல்ல கதைகளை மக்களுக்கு தந்து இருகிறேர்கள் . இப்படி கூட எடுக்கலாம் .
1. இலங்கை அரசு என் தமிழன் அனைவரும் விடுதலை புலி என்று கொள்கீரதே அதை பற்றி எடுக்கலாம்.
2. தண்ணீர் தராமல் தமிழனை பாகிஸ்தான்காரன் போல் பாக்கும் கர்நாடக பற்றி எடுக்கலாம் .
3. நம் அணையை வைத்து கொண்டு நமக்கு தண்ணீர் தராமல் இருக்கும் கேரளா பற்றி எடுக்கலாம் .
4. உங்களின் அருமையான கல்யாணங்களை பற்றி எடுக்கலாம்.
5. குஜராத் கலவரம் பற்றிய உண்மையான சம்பவங்களை பற்றி எடுக்கலாம்.
6. தெனாலி, அவ்வை சண்முகி , பஞ்ச தந்திரம் போல நெறைய நகை சுவை படம் எடுக்கலாம்.
7. தமிழ் நாட்டில் நடக்கும் சாதி கலவரம் பற்றி படம் எடுக்கலாம்.
8.ஆப்கான் மற்றும் ஈராக் நாட்டில் நடக்கும் அமெரிக்காவின் வீரத்தை பற்றி எடுக்கலாம் .
9. நம் நாட்டில் நடக்கும் ஊழல் பற்றி படம் எடுக்கலாம்
10.நம் நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறை வண்ணம் தடுக்கும் முறையில் படம் எடுக்கலாம்.
11.அப்துல் கலாம் , ஏ ஆர் ரஹ்மான் , சானியா மிர்சா , திப்புசுல்தான் , முஸ்லிம்களின் சுதந்திர பங்கு , தமிழ் முஸ்லிம்களின் வரலாறு ஆகிய வற்றை பற்றி எடுக்கலாம்.
12. இந்தியாவின் இந்து , இஸ்லாமியர்களின் ஒற்றுமை பற்றி எடுக்கலாம்

இதை எல்லாம் விட்டு விட்டு திவீரவதிகளாக எங்களை காட்டி எங்களிடமும் பணம் சம்பதிகாதே , தமிழகத்தில் குழப்பத்தை உருவாக்காதே -


2.தமிழக சினிமாத்துறையினரும் சந்தர்ப்பவாதிகளே, தமிழக அரசியல்வாதிகளைப்போல....இன்னைக்கு கமலுக்கு ஆதரவு தெரிவித்தால் ஒரு வேளை நாளைக்கு நம் படத்தை பார்க்க வர மாட்டார்களோ, காசு பனம் பாக்க முடியாதோ என்ற கோழைத்தனம்...அதற்க்கெல்லாம் அப்பாற்பட்டு தான் நினத்ததை சொல்லும் துணிச்சல் கமல் போன்ற வெகு சிலருக்குத்தான் உண்டு...அதனால் தான் இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து நிற்கிறார் அவர்...அழுத்தம் கொடுக்க கொடுக்கத்தான் வைரம் மென் மேலும் ஜொலிக்கும்... நீ வென்று வா தலைவா... வெற்றி விழா நாயகன் நீ.


3. bvimalnath 3 Hours ago
முச்லிம்கலை தவராக சித்தரித்து இருக்கிரார்கல் என்பது ஒருதரப்பாரினது வாதம் ஆனால்மும்பையில் 26\11ல் நடைபெட்ட்ர தீவிரவாத தாக்குதலில் கையில் க்லர் கயிரை கட்டிக்கொன்டு 56 பேர்கலை சுட்டுக்கொன்ரவன் யார் அவன் யென்ன இனம்? கார்கில்லில் தீவிரவாதியைப்போல நுழைந்து மரைமுக தாக்குதலில் ஈடுபட்டானே அவ்ன் எந்த நாடு நாட்டுனடப்பினைச் சொல்லக்கூட கருத்துச்சுதந்திரம்யில்லையென்ரால் ஜனனாயகனாடென்ரு சொல்லிக்கொல்லுவதில் அர்த்தம் என்ன இருக்கிரது
 

3 comments:

RAMA RAVI (RAMVI) said...

தங்கள் பதிவிலிருந்து விஸ்வரூபம் படம் பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி பகிர்வுக்கு.

everestdurai said...
This comment has been removed by the author.
everestdurai said...

அருமை செந்தில்