Monday, December 17, 2012

டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் வில்லித்தனமான பேச்சு

புதுடில்லி:""ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும்; அவர்களின், அரிசி, பருப்பு போன்ற, உணவு தேவைகள் நிறைவேறி விடும்,'' என, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியுள்ளார். இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சோனியா தலைமை:
டில்லியில், நேற்று முன்தினம், "அன்னஸ்ரீ யோஜனா' என்ற, உணவு பாதுகாப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த அந்த விழாவில், டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித் பேசியதாவது:அன்னஸ்ரீ யோஜனா, அருமையான திட்டம். இதில், மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களுக்கான மானியம், பொதுமக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். "ஆதார்' அடையாள அட்டை மூலம், பொதுமக்களின் வங்கிக்கணக்கில், 600 ரூபாய் நேரடியாக சென்று சேர்ந்து விடும்.இந்தப் பணத்தை கொண்டு, மிக அழகாக குடும்பம் நடத்த முடியும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, இந்த தொகை போதுமானது. "ஆதார்' அடையாள அட்டை வைத்துள்ள, குடும்ப உறுப்பினர்களில், மிக மூத்த வயதுடையவரின் கணக்கில், இந்தத் தொகை வரவு வைக்கப்படும்.இவ்வாறு, ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.

இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 



அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர், முக்தார் அப்பாஸ் நக்வி கூறும்போது, ""நூறு ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால், இந்த தொகை போதுமானதாக இருக்கலாம். இப்போது, நிச்சயம் போதாது. இது போன்று பேசுவதன் மூலம், ஏழை மக்களை, காங்., அவமரியாதை செய்கிறது,'' என்றார்.

26 ரூபாய்போதும்:
"பணக்காரர்கள் நிறைந்த காங்., கட்சியில், ஏழைகளுக்கு இடமில்லை' என, பொதுவாக கூறப்படுவது உண்டு. காங்., தலைமையிலான, மத்திய அரசின், திட்டக் கமிஷனின், துணை தலைவராக இருக்கும், மாண்டேக் சிங் அலுவாலியா, "தனிநபர் உயிர் வாழ, நாள் ஒன்றுக்கு, நகரங்களில், 32 ரூபாயும், கிராமங் களில், 26 ரூபாயும் போதும்' என, தெரிவித்திருந்தார்.அதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது; காங்., பொது செயலர், ராகுல் கூட, மாண்டேக் சிங்குக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க, டில்லி முதல்வர், ஷீலா தீட்ஷித்தும், ஏழை மக்களின் துயரம் பற்றி தெரியாமல், குடும்பத்தை நடத்த, 600 ரூபாய் இருந்தால் போதும் என, தெரிவித்துள்ளது, "ஏழைகள் மீது அந்த கட்சிக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது' என்கிறார், டில்லி அரசியல் பார்வையாளர் ஒருவர்.

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதம், 600 ரூபாய் இருந்தால் போதும் என, திருவாய் மலர்ந்துள்ள ஷீலா தீட்ஷித், மாத சம்பளமாக, ஒரு லட்சம் வரை பெறுகிறார். அவரின் மகனும், கிழக்கு டில்லி தொகுதி, காங்., எம்.பி.,யு மான, சந்தீப் தீட்ஷித், அதே அளவுக்கு பெறுகிறார்.

செழிப்பான குடும்பம்:பஞ்சாபின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஷீலாவின், மறைந்த கணவர், உமாசங்கர் தீட்ஷித், உத்தர பிரதேசத்தின், செல்வ செழிப்பான குடும்பத்தை சேர்ந்தவர்.ஷீலா, சிறு வயது முதல், மக்கள் பிரதிநிதியாகவும், அமைச்சராகவும் இருந்தவர் என்பதால், அவருக்கு சாமானிய மக்களின் துயரம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என, எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


thanx - dinamalar




மக்கள் கருத்து 



1. இங்கே கருத்து சொல்லி இருக்கும் திரு ரமேஷ் மற்றும் சாடிக் அவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசாங்கம் என்ன மானியமாக மாதம் 6000 ரூபாயா குடுக்குது. அத வச்சுக்கிட்டு மக்கள் உழைக்காம சோம்பேறி ஆக போறாங்க, 600 ஓவாய வச்சிக்கிட்டு இன்னைக்கு ஒரு தனி மனிதனால கூட வாழ முடியாதுன்னு சாமானியனுக்கும் தெரியும். மானியம் என்பது என்ன? கஷ்ட படுரவங்களுக்கு அவங்க கஷ்டத்த குறைக்க குறைஞ்ச விலைல பொருள குடுக்குறதுதான் மானியம். அதும் கிட்டத்தட்ட 70 கோடிக்கும் மேல வாழற நம்ம இந்தியால இது தேவை, ஏழை மக்களை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம மானியத்த ஒழிக்கணும்னு சொல்றிங்களே நீங்க எல்லாம் மனசார முடியாதவங்களுக்கு ஒரு உதவி கூட செய்ய மாட்டிங்கனு நல்ல தெரியுது 






2. பிஜேபியோடு சேர்ந்து கொண்டு ஒப்பாரி வைப்பதே பிழைப்பாகி விட்டது சிலருக்கு. ஷீலா என்ன தவறாக சொல்லி விட்டார், ஆதார் அட்டை மூலம் மாதம் அறுநூறு கிடைத்தால் ஒரு குடும்பத்துக்கு போதுமானது என்றால், படுத்துக் கொண்டு சாப்பிடுவதற்காக சொல்லவில்லை. மறைமுக மானியமாக கிடைத்து கொண்டிருக்கும் இப்பணத்துடன் குடும்ப வருமானமும் சேர்ந்தால் சுலபமாக குடும்பம் நடத்த முடியும் என்பதே அவர் பேச்சின் சாராம்சம். நம்மை பொறுத்த வரை இந்த மான்யங்களையே நிறுத்தி விட்டு விலைவாசியை குறைப்பதற்கும் வேலையில்லா திண்டாத்தை போக்குவதற்கும் பயன் படுத்தினால் நல்லது என்பதே சரியானதாக இருக்கும். 




3. Sekar
 Sekaran ஐய்யய்யோ...இந்த தொகை மிக மிக அதிகம்..அறுநூறு ரூபாயா..அடேங்கப்பா..இவ்ளோ தொகை வைத்துகொண்டு மக்கள் என்ன செய்வார்கள்? சுவிஸ் வங்கியில் கணக்கை ஆரம்பித்துவிடுவார்கள். சொன்னால் கேளுங்கள்..தயவு செய்து இவ்ளோ தொகையை கொடுக்காதீர்கள்..சேர்த்து வைக்க வங்கி இருக்காது..எல்லா செலவும் போக மீதி கூட ஐநூற்றி தொண்ணூறு ரூபாய் மீதமிருக்கும். அப்படியே உடனே சுவிஸ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டியதுதான். ஷீலா அவர்கள் என்செய்வார்கள்..? அவர்கள் வாழுகின்ற விதம் அப்படி..ஏழைகள் என்றால் என்ன என்று கேட்பார்கள்..அல்லது வயிற்றில் ஈரத்துணியை போட்டு கொண்டு வாழ்ந்தால்..இதே அதிகம்தான். கோபுரங்களில் வாழ்பவர்கள்..குடிசைகள் பற்றி தெரிய நியாயமில்லை..ஒரு லட்சத்தை தினசரி வாடகையாக கொடுத்து வாழும் வசதி படைத்த மத்திய அமைச்சர்கள் உள்ள நாடு அல்லவா இது..இன்னமும் பேசுவார்கள்..இது போதும் பிரச்சாரத்திற்கு..காங்கிரஸ் காணாமல் போக இது போதும்.. 





4. இலக்கு எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் வைத்துக்கொண்டால்தான் நமக்கு முயற்சி என்பது இருக்கும். அரசியல்வாதிகள் இப்படி கீழ்த்தரமான இலக்குகள் வைத்துக்கொள்வதால்தான் நாடு முன்னுக்கே வராமல் இருக்கிறது. அறுநூறு ரூபாயில் ஒருவர் மட்டுமே வாழ்க்கை நடத்துவது கடினம். மனிதனின் அடிப்படை தேவைகள் என்பது உணவு, உடை இருப்பிடம் என்ற மூன்றும்தான். அதில் உணவுக்கு மட்டுமே ரூபாய் ஆறுநூறு போதாது. ஆறு நூறு ரூபாய்க்கு நாளுக்கு மூன்று வேளை சாப்பாடு (ரொட்டி) யார் கொடுக்கிறார்கள்? ஒரு ஆளின் தினக்கூலியே முன்னூறு ரூபாய்க்கும் அதிகம். மாதம் இரண்டு நாள் வேலை செய்துவிட்டு மற்ற நாட்கள் எல்லாம் சோம்பேறிகளாக இருந்தால் போதுமா? டெல்லி முதலமைச்சர் என்ன சொல்லவருகிறார்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் மாறினால்தான் நாடு முன்னுக்கு வரும். ஒரு ஆளின் மாத வருவாய் மூன்று ஆயிரம் என்ற இலக்கு இருக்கவேண்டும் என்பது என் கருத்து. அப்போதுதான் அரசியல்வாதிகளும் வேலை செய்வார்கள். மக்களும் உழைப்பார்கள். மக்களுக்கு இந்த அளவு வருவாய் வரவில்லை என்றால், அப்படிப்பட்டவர்களுக்கு அரசே ஊதியம் தரவேண்டும் அல்லது எதாவது ஒரு நிரந்தரமற்ற வேலையாவது தந்து ஊதியத்திற்கு வழி செய்யவேண்டும். இதை செய்யாதவரை நாடு முன்னேறியதாக சொல்லிக்கொள்வதில் அர்த்தமே இல்லை. ..





5. 1965 லே நானும் என் கணவரும் 400ரூவா சம்பளத்துலே குடுமபம் நடத்த என்ன பாடு பட்டோம்னு தெரியுமா? அப்போ காய்கள் அவ்ளோமலிவு , பால் 35காசுதான் லிட்டர்க்கு. ஒரு லிட்டர் பால் வாங்கினா போரும் அரிசி நல்லரகம் 38காசு மலிவுரகம் 26காசு , 1கிலொ பருப்பும் 20காசு 30காசுதான் பிறகு கொஞ்சம்கொஞ்சமா ஏறி 2 /3 ரூவாயாச்சு. வீட்டுவாடகை 45ரூவா மின் பில் 14 டு 20 ரூவா ஆகும் பத்துகாசுக்கு முள்ளங்கிவாங்கினாலபூம்பிஞ்ச்ஜாக இருக்கும் ஒரு முள்ளங்கி வாங்கி கொஞ்சம் சாம்பர்லே போடு மீதிய பொரியலும் செஞ்சுருவேன் பொரியலும் செஞ்சுருவேன் இதே டெல்லிலே தான் இருந்தேன் என் கணவர் 1000/ ரூவா சம்பளம் வாங்கும் போது 1980ம் ஆண்டு வரை வீட்லே டிவி வாங்கலேஒரு ற்றான்சிச்ட்டர் தான் உண்டு . muunupillaikal படிச்சாகணும் அப்போ எல்லாம் பள்ளி சம்பலம்கூட கம்மிதான் தமிழ் பள்ளிலேதான் படிச்சாங்க 8ம் வகுப்புவரை பீஸ் 3ரூவாதான் டியூஷன் எல்லாம் போகலே தாமே தான் படிச்சாங்க டீசர்கலும் நல்ல கத்துகொடுத்தாங்க பிள்ளைகளும் சின்சியரா படிச்சாங்க , 9ம் வகுப்பிலேந்து 10ரூவாதான் பீஸ் .+1 +2 க்கு எடுக்கும் க்ரூப் பொருது 15 டு 20 ரூவாய்தான் , இப்போ வாரம் 10 000 / வாங்கினாலும் போராதுன்ர நிலை , ஏழைகளும் தம் பிள்ளைகள் நல்ல பெரிய பல்லிலே ஆங்கிலவழி லே படிக்கவைக்க ஆசைபடுராக, இப்போதும் பல பெத்தவங்க தாம் தான் கஷ்டம் படறோம் தம் பிள்ளைக நல்லா வாழனும்னு உளைக்கிராக அரசு சொல்லுது 2000/போரும்னு ஷீலா திக்ஷித்துக்கு வரும் சம்பளம் எவ்ளோ ஒரு சாமானியனுக்கு வரும் சம்பளம் எவ்ளோ , இந்தம்மா சூக்க ரொட்டியும் தாலும் தின்னுட்டு போகமுடியும் வயசாச்சு இன்று செத்தால் நாளை சங்கு , வளரும் பிள்ளைக நிலை என்ன என்று தெரிஞ்சுதான் பேசுராகளா , யாருகண்டது இதுகளெல்லாம் ஒருவேளைக்கே 200 ரூவா சிலவு செய்வாக ,

0 comments: