Thursday, December 06, 2012

காதலன் பரதேசி போல் இருந்தால் கவலைப்படேல்


Photo: எதற்காக இவ்வாழ்க்கையென

கேள்வியெழும்போதெல்லாம்

உனைக்காட்டி 

எனைக்கூட்டி வருகிறது

இந்நேசம்....





# நேசமினிது
1.நம்ம பொண்ணு எடுத்தோம் , கவுத்தோம்னு பேசுது 



விசாரி, லவ்வர் பேரு கவுதமாக்கூட இருக்கலாம் 



-----------------------


2. மனிதன் ல ரஜினிக்கு ஜோடியா நடிச்ச ரூபினி கமலுக்கு இப்போ ஜோடியா நடிச்சா விஸ்வரூபினி ? 




------------------------


3. ரயில்ல ,பஸ் ல ஸீட் புல் ஆனா ஸ்டேன்டிங்ல வரலாம் விமானத்துல மட்டும் ஏன் அது அனுமதி இல்லை? # கிறுக் சிந்தனை 




--------------------------


 4. முதல் மரியாதையில் எஸ் ஜே சூர்யா - அந்த நிலா வைத்தான் நான் (முதன் முதலா ) கையில பிடிச்சேன்.என் BF க்காக ( BESTFRIEND) 




------------------


5. லேடி டாக்டர் அழகா ஆப்பிள் மாதிரி இருந்தா நீ ஆப்பிளே சாப்பிடாதே! ( டெய்லி என் ஆப்பிள் கீப் அவே த டாக்டர் ) 




--------------------




Photo: வான்மழை பெற்ற 
முத்துச்சிப்பியின் ஒரு துளி போல்
உனக்குள் தொலைவேன்
ஒரு நாள்...

# நேசமினிது...


6. பாலா மெஸ்மரிஸம் செய்து விட்டார் : -சிலிர்த்த வேதிகா!:# சரி , அப்புறம்? 



---------------



7. மனைவி கோபமாக தயிர் மத்துடன் தாக்க வந்தால் செஸ் ப்ளேயர் போல் தடுப்பாட்டமாக அவர் இடையில் கிச்சு கிச்சு மூட்டவும் # கி கி கி 




------------------


8. திருமணவாழ்க்கை சுபிட்சமாக இருக்க கணவன் தன் மனைவி எது சொன்னாலும் ஆமோதித்தோ மவுனம் காத்தோ இருந்தா போதும் 




-------------------


9. வீம்புக்காக வாதிடும்போது விவாதத்தை தவிர்த்தல் இரு தரப்புக்கும் நல்லது ;-)) 



-----------------


10. மிஸ்டர் க்ளீன் அப்டினு உங்களுக்கு எப்படி பேரு வந்தது? ஆஃபீஸ்ல கறை படியாத கையா?



 ம்ஹூம் வீட்ல விளக்குமாறு பிடிச்ச கை



-------------------



Photo: என்னை மறைத்துக்கொண்ட
நாளொன்றில் தான்
வந்து விழுந்தது நேசத்தின் நிழல்



11.  தமிழகத்தில் நக்சலைட்ஸ்,மாவோயிஸ்டுகள் இல்லை-ஜெ# நக்ச”லைட்ஸ்” ஒழிக்கத்தான் கரண்ட் கட் பண்ணீங்களா? மேடம் அடடே!



--------------------


12. சத்ரியனாய் இரு... சாணக்யனாய் இரு... வீரனாய் இரு உனக்கு திருமணம் ஆகும் வரை


-----------------



13. கடவுளே!கருவூலம் ( மூலஸ்தானம் )எல்லாசன்னதிலயும் ஏன் இருட்டா இருக்கு?



 பக்தா! மின்வெட்டால் தமிழர்கள் கஷ்டப்படுவதை உலகத்துக்கு உணர்த்த


--------------------

14. இனி நான் காட்டப் போவது புதிய ஆட்டம் -ராமதாசு # ஆமா இவர் பெரிய காஜல் அகர்வால்




-------------------------


15. உங்க பட பட்ஜெட் 60 கோடியா? எப்டி?


 லாரி லாரியா ஆடியன்ஸ் கூட்டிட்டு வர வேணாம்? 



---------------



Photo: யாருக்கும் தெரியாமல்
வளர்த்து வைத்த ஆசைதான்
உன்னை கண்ட நாளில் 
கால்முளைத்து
காதலானது

16. பஸ்ஸில் ஒரு மிஸ்ஸிடம் - உங்களைப்பார்த்ததும் காதலில் விழுந்துட்டேன் .



 டேய் கஸ்மாலம், அதுக்கு ஏண்டா மேல வந்து விழறே? தள்ளி நில்டா பேமானி


---------------------


17. புருஷன் - பொண்டாட்டி 2 பேரும் சேர்ந்து நீயா? நானா? பார்க்கலாம், தப்பில்லை. ஆனா  அவங்களுக்குள்ள நீயா? நானா?  பார்க்கக்கூடாது




------------------



18. என்னடி? உன் லவ்வர் பரதேசி மாதிரி இருக்கான்.



 பொறுத்திருந்து பார்டி, என்ன ஓட்டம் ஓடப்போறான்னு



--------------------




19. நைட் டைம்ல பொண்டாட்டி “ என்னங்க” அப்டின்னு இழுத்தா ஆபத்து, நீங்க நைசா தூங்கிட்ட மாதிரி நடிச்சுட்டா எந்த செலவும் இருக்காது ;-)



-----------------------


20. ஹீரோ பேரு டைட் டைகர் , ஹீரோயின் ஒரு லூசு ஃபிகர் , படத்தோட பேரு என் கவிதை என் உரிமை




------------------------





21. அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு இல்லை- ஆனால் அரசுக்கு ஆதரவு- கருணாநிதி # அதாவது மனைவி பகை, மச்சினி உறவு? விளங்கிடுச்சு தலைவா!



-------------------


22. மிஸ்.டெய்லி 365 காதல் கவிதை எழுதறீங்க?


 யார் அந்தப்பையன் ? ச்சே ச்சே எல்லாம் டுபாக்கூர் கற்பனை டைம் பாஸ்க்கு




--------------------


23. சனத் ஜெயசூரியா ரகசியமாக 3-வது திருமணம் # விரைவில் சிக்சர் அடிக்க வாழ்த்துகள்




-----------------------


24. அரசு பஸ்கண்டக்டர்கள் சிலர் ஒரு ட்ரிப்க்கு இப்படி பிச்சை எடுத்து ரூ 160 சராசரி சைடு வருமானம் பார்த்துடறாங்க



--------------------


25. டியூட்டிக்கு வரும்போதே பெட்ரோல் பங்க்கில் சில்லரை மாற்றி வருவதை விட ஒரு டவுன் பஸ் கண்டக்டருக்கு வேறு என்ன வேலை?



----------------------
 
2 ரூபாய் சில்லறை தராமல் பிச்சைக்காரத்தனமாய் 60 வயது பெண்ணிடம்  பிச்சை எடுத்த கண்டக்டர்.சென்னிமலை டூ ஈரோடு ரூட் 11்

26. 2 ரூபாய் சில்லறை தராமல் பிச்சைக்காரத்தனமாய் 60 வயது பெண்ணிடம் பிச்சை எடுத்த கண்டக்டர்.சென்னிமலை டூ ஈரோடு ரூட் 1





-------------------


27.  குழந்தைகள் நலன் கருதியும் வெளியில் சொன்னால் கேவலம் என்பதாலும் மனைவிகளின் அடக்குவார்த்தனம் கணவர்களால் பொறுத்துக்கொள்ளப்படுகிறது



-----------------------


28. பால்தாக்கரே பற்றி பேஸ்புக்கில்விமர்சித்த பெண்ணை கைது செய்த் எஸ்.பி. சஸ்பெண்ட்- ்# ஊ(ழ)ழ் (ல்) வினை உறுத்து வந்து ஊட்டும்




-----------------------


29. திருமணத்துக்குப்பின்னும் நம் பெற்றோரை நல்ல முறையில் பராமரிக்கத்துணை புரிந்தால் அவரே நல்ல துணைவி.



------------------------


30. கார்த்திகை மகாதீபம் இன்று .இதை முன்னிட்டு அய்யங்"கார்" பிகர்களை மட்டும் சைட் அடிக்க முடிவெடுத்தால் நீயும் உருப்படாமல் போகும் தமிழனே ;-



----------------------------


31. சுயமரியாதை திருமணவிழாவை சென்னையில் நடத்தினார் வீரமணி-# சுய மரியாதை vs திருமணம் முரண்..




----------------


Photo

1 comments:

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பதிவு மிக மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/