Saturday, December 22, 2012

திரிபுராவில் மக்கள் முன்னிலையில் நடந்த ரேப் , போலீஸ் அதிர்ச்சி

Woman stripped naked, gang-raped in Tripura

Published: Saturday, Dec 22, 2012, 15:07 IST
Place: Tripura | Agency: IANS
A housewife was stripped naked, gangraped and battered in full public glare in Tripura, police said Saturday.


"A 37-year-old woman was gang-raped at Bishalgarh in western Tripura Wednesday night. After the rape, the women was stripped naked, brutally beaten up and then tied to a tree," a police official told reporters here.


Based on the victim's complaint, police immediately swung into action and arrested seven people. However, three more accused, including the main one, are on the run.


Police said the accused dragged the house wife from her home and took turns to rape her before many people, including women. But no one dared to come forward to save the mother of a five-year-old.


The role of the husband is also being probed, the police official said.


Tripura Woman's Commission chairperson Purnima Roy strongly condemned the atrocious incident and asked the police to take stern action against the culprits.


People organised a protest rally at Bishalgarh, 25 km from here, over the incident.


நன்றி - DNA 

ஸ்ரீவைகுண்டம்: பள்ளி மாணவி கொலையில் ரவுடி கைது! 
Posted Date : 14:42 (22/12/2012)Last updated : 14:53 (22/12/2012)
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய  முயன்று கொலை செய்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்தவர்  பேச்சியம்மாள். இவரது மகள் புனிதா (வயது 13), நாசரேத்தில் உள்ள ஒரு பெண்கள்  மேல்நிலைபள்ளியில் 7 ஆம்வகுப்பு படித்து வந்தாள். தினமும் வீட்டில் இருந்து 2  கி.மீ. தூரத்தில் உள்ள தாதன்குளத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து ரயிலில் பள்ளிக்கு  சென்று வந்தாள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்ற புனிதா தாதன்குளம் ரயில்  நிலையம் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.அவளது ஆடைகள்  அகற்றப்பட்டு இருந்ததால்,அவள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி இருக்கலாம் என்று  போலீசார் கருதினர்.
புனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,இது குறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், தாதன்குளத்தை சேர்ந்த சுப்பையா (35) என்ற ரவுடியை போலீசார்  நேற்றிரவு கைது செய்தனர்.விசாரணையின்போது மாணவி புனிதாவை கொன்றதை  சுப்பையை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இது தொடர்பாக சுப்பையா அளித்துள்ள வாக்குமூலத்தில்,"எனது சொந்த ஊர் மணியாச்சி  அருகே உள்ள பாறைகுட்டம். என் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் போலீசார்  என்னை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த சில நாட்களாக  நெல்லையில் சுற்றி திரிந்தேன். எனது மனைவியின் வீடு தாதன்குளத்தில் உள்ளதால்  அங்கு சென்று தலைமறைவாக இருக்க நினைத்தேன்.

இதனால் கடந்த புதன்கிழமை மாலை நெல்லையில் நன்றாக மது குடித்து விட்டு  திருச்செந்தூர் செல்லும் ரயிலில் ஏறி தாதன்குளத்திற்கு சென்றேன்.அளவுக்கு அதிகமாக  மது குடித்திருந்ததால் தாதன்குளம் ரயில் நிலையத்தில் இறங்கியதும் என்னால் நடக்க  முடிக்கமுடியவில்லை.இதனால் அங்கேயே படுத்து தூங்கி விட்டேன்இரவு முழுவதும்  ரயில் நிலையத்தில் தூங்கிய நான் மறு நாள் காலை எழுந்து எனது மனைவி வீட்டிற்கு  சென்றேன்.

தாதன்குளம் ரயில் நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதி வழியாக செல்லும் போது அந்த  வழியாக மாணவி புனிதா நடந்து வந்தாள்.அவளை அங்குள்ள முட்புதருக்குள் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றேன்.  ஆனால் அவள் சத்தம் போட்டு அலறினாள்.இதனால் என்னால் அவளை பலாத்காரம்  செய்ய முடியவில்லை.

நடந்த விவரத்தை புனிதா வெளியே சொல்லிவிடுவாள் என்ற பயத்தில்,அவளை  துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு எனது மனைவி வீட்டிற்கு சென்று  விட்டேன்" என்று கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 


மேலும் பலருக்கு தொடர்பு 


இதனிடையே இக்கொலையில் சுப்பையா மட்டுமல்லாது மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி மாணவி புனிதாவின் உறவினர்கள் இன்று இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்,.

பாலியல் பலாத்காரம்: டெல்லி போராட்டத்தில் வன்முறை; தடிய்டியால் பதட்டம்! 
Posted Date : 12:35 (22/12/2012)Last updated : 15:16 (22/12/2012)
புதுடெல்லி: மாணவி பலாத்காரம் செய்யபட்டதை கண்டித்து டெல்லியில் ஜனாதிபதி வீடு  முன்பு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியும் கலைத்தனர்.இதனால் பதட்டம் ஏற்பட்டது. 
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைக்  கண்டித்தும்,பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்,குற்றவாளிகளுக்கு  தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,   மாணவ,மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களின் போராட்டம்  தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்றும் போராட்டம் நடத்தியவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய  மேற்ப்பட்ட போது, போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனையடுத்து வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கல் வீசித் தாக்கியதில் போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துன. 

இதனால் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போலீசார்  போராட்டக்காரர்களைக் கலைத்தனர். டெல்லி முழுவுதும் 5வது நாளாக பல்வேறு  அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகள்  காயம்

போலீசார் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகை செல்லும் பாதை  மூடப்பட்டது. தடியடி நடத்தினாலும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று  போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.தடியடில் பல மாணவ, மாணவியர்கள் காயமடைந்தனர்.  


போலீசார் தடியடி நடத்தியும் மாணவர்கள் கலையாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  போலீசார் தடியடி நடத்தியது சிறிது கலைந்த மாணவர்கள் மீண்டும் கூடியுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

இதனிடையே போராட்டம் தீவிரமடைந்துள்ளதால்,போராட்டக்காரர்களை சாந்தப்படுத்தும்  விதமாக, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை  விதிக்குமாறு பரிந்துரைக்கப்படும் என்று டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.


நன்றி -விக்டன்




0 comments: