Tuesday, December 04, 2012

சில பதிவுகள் நீக்கமும், அதற்கான என் விளக்கமும்

சில மாதங்களுக்கு முன் நான் குறிப்பிட்ட  சில பதிவுகளை என் வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டேன்.அதை ஒண்ணும் ரகசியமா செய்யலை. ட்விட்டர்ல காரணத்தை சொல்லி தான் நீக்கினேன். உடனே ஏகப்பட்ட விவாதங்கள், கேள்விக்கணைகள், அலை பேசியில் விசாரிப்புகள். எனவே ஒரு தன்னிலை விளக்கமாக இந்தப்பதிவு.


ராஜன் - சின்மயி சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தபோது ராஜனுக்கு ஆதரவாக  3 பதிவுகள் எழுதி இருந்தேன். அந்தப்பதிவு வெளியிட்டு ட்விட்டரில் லிங்க் கொடுக்கும்போதே மாயவரத்தான் “ அநாகரீகமான டைட்டில் “ என மென்ஷன் பண்ணி ட்வீட் போட்டிருந்தார். அப்போதே டைட்டிலை மாற்றி விடலாமா? என நண்பர்களிடம் கேட்டபோது வல்கராக எதுவும் இல்லை , வசீகரமான டைட்டில் தான் ,மேலும் பதிவின் சாராம்சம் பற்றி யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை , எனவே நீக்க வேண்டிய அவசியம் இல்லை என குறிப்பிட்டனர். நானும் அப்படியே விட்டு விட்டேன்.


பதிவுகள் வெளியாகி  பல மாதங்கள் கழித்து சின்மயி அவர்களின் அம்மா என்னை  அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஒருவருடன் நடந்த அலை பேசி உரையாடலையோ , சேட்டிங்க் விபரங்களையோ அப்படியே வெளிப்படுத்துவது  நாகரீகமான செயல் அல்ல என்பதால் நான் அது பற்றி பதிவு ஏதும் இதுவரை எழுத வில்லை. ஆனால் இப்போது ஒரு நெருக்கடி. அதனால் இந்த கட்டுரைக்குத்தேவையான குறிப்பிட்ட அங்கத்தை மட்டும் சொல்கிறேன்.

 பலரும் எள்ளி நகையாடுவது போல், கிண்டல் செய்வது போல் அவர் என்னை மிரட்டவில்லை. கூகுள் சர்ச்சில் சின்மயி என டைப் செய்து சர்ச் குடுத்தால் என் பதிவுதான் வருகிறது எனவும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது எனவும் சொன்னார். ஒரு பெண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் நீங்கள் அதே போல் ஒரு பெண்ணின் அம்மாவின் மனதைப்புரிந்து கொள்வீர்கள் எனவும் கூறினார்.அவராக நேரடியாக பதிவுகளை நீக்குமாறு சொல்லவில்லை.


 நானாக அவரிடம் “ இந்தப்பதிவு உங்கள் மனதை காயப்படுத்துகிறது என்றால் அதை உடனே நீக்கி விடுகிறேன்” என்றேன்.பதிவு எழுதி அடுத்த நாளே நீங்கள் இதே போல் ஃபோனில் பேசி உங்கள் ஆட்சேபத்தை தெரிவித்திருந்தால் அப்போதே நீக்கி இருப்பேன் என்றும் சொன்னேன். அதே போல் அடுத்த நாளே பதிவுகளை  நீக்கி விட்டு அது பற்றிய அறிவிப்பை ட்விட்டர் டைம் லைனில் தெரிவித்தேன்.


இந்த சம்பவம் நடந்து 5 மாதங்கள் கழித்துத்தான் ராஜன் கைது சம்பவம் நடந்தது.


ஸ்க்ரீன் ஷாட் பர பரப்பாக பேசப்பட்டது .அப்போது நேரடியாகவோ , மறைமுகமாகவோ  சி பி தான் அதை எடுத்திருப்பார் என  யார் யார் எல்லாம் அவதூறாக செய்தி பரப்பினார்கள் , அதற்கான பின் புலங்கள் என்ன என்பதை பார்ப்போம்




1. தளபதி 87 87  - இவர்தான் முதன் முதலாக டைம் லைனில் “ சி பி தான்  ஸ்க்ரீன் ஷாட் எடுத்திருக்க வேண்டும் “ என்று  சொன்னவர். காரணம் இவர் அடிபப்டையில் தீவிர விஜய் ரசிகர். நான் பல முறை விஜய் அவர்களை கலாய்த்து ட்வீட்ஸ் போட்ட போதெல்லாம் பயங்கரமாக பொங்கியவர்.என்னை அஜித் ரசிகர் என தவறாக நினைத்து என்னை கோபப்படுத்த  ஏதோதோ ட்வீட்டி யவர்.


 டைம்லைனை ரெகுலராக வாசிப்பவர்களுக்கு என்னைப்பற்றி நன்றாகத்தெரியும். நான் அனைத்து நடிகர்களையும் ரசிப்பவன். அதே சமயம் அவரவர் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்தப்படத்தை பிரமோட் பண்ணி வரும் நல்ல ட்வீட்ஸ்களை ஆர் டி செய்யும் அதே நேரம்  அந்த ஹீரோவை கலாய்த்தும் ட்வீட்ஸ் போடுவேன். அஜித் , கமல் ரசிகர்கள் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்வார்கள் , ஆனால் விஜய் ரசிகர்கள் ரொம்ப டென்ஷன் ஆகி கண்டபடி திட்டுவார்கள் . அலை பேசியில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். பிளாக்கில்  கார சாரமான கமென்ட்கள் போடுவார்கள்.


விஜய் ரசிகர் என்ற ஒரே ஒரு காரணத்தினால்தான் அவர் இந்த சந்தர்ப்பத்த்தில் இப்படி என் மீது பழி சுமத்தினார்.



2. யுவ கிருஷ்ணா - லக்கி லுக் யுவா புதிய தலைமுறை பத்திரிக்கையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். இவர் தமிழ் இனத்தலைவரும் ,  தன் குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் ஈழத்தமிழருக்காக  ஆட்சியையே துறக்க தயாராக இருப்பதாக சொல்லிக்கொள்ளும்  தனிப்பெரும் தலைவர் கலைஞரின் தீவிர அபிமானி .


நான் கடந்த 2 வருடங்களாகவே கலைஞரை தாக்கி , அவரது சந்தர்ப்பவாதத்தை நக்கல் அடித்து எழுதும் ட்வீட்களை , பதிவுகளை கடுமையாக எதிர்ப்பவர். கூகுள் பஸ்ஸில் ( இப்போ இல்லை முதல்ல ) என் பதிவுக்கான லிங்க் கொடுத்து “ இப்படியும் ஒரு கேவலமான , முட்டாள் தனமான பதிவா? “ என நக்கல் அடித்து கமெண்ட் போட்டு வருபவர் . ஒரு வகையில் எனக்கு அது உதவியாகவும் இருந்தது.

  காற்று வாங்கிக்கொண்டு இருந்த என் பிளாக் அவர் தாக்கி அடிக்கடி லிங்க் கொடுக்க கொடுக்க அதிகம் பேர் என் தளத்திற்கு வர ஆரம்பித்தார்கள் . கூகுள் பஸ்சில் அவருக்கு அதற்காக நன்றி தெரிவித்தேன். உடனே அவர் சுதாரித்துக்கொண்டார். அதற்குப்பின்  அப்படி லிங்க் ஏதும் தருவதில்லை .


 சினிமா விமர்சனங்கள் எழுதும்போது  இயக்குநருக்கு சில கேள்விகள் என்று ஒரு பகுதி வரும். அதில் லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி சொல்லி இருப்பேன். இவர் அவருக்கு  தமிழ் தெரியுமா? என்று நக்கல் அடிப்பார்.ஹாலிவு இயக்குநர் படிப்பதற்குத்தான் அந்த பகுதி என்று நம்பும் அப்பாவி .

 ராஜன் கைது நடந்த போது நான் ட்விட்டரில் இல்லை. என் பிளாக்கில் ஏதோ ஒரு போஸ்ட் போட்டு அதற்கான லிங்க்கை ட்விட்டரில் கொடுத்து விட்டு பின் ட்விட்டர் வந்த போது “ இழவு வீட்டில் சுண்டல் விற்காதீர் “  என்றார். எனக்கு சுருக் என்றது . என்ன விஷயம் என டைம் லைனை பார்த்த பின் தான் ராஜன் கைது விஷயமே எனக்குத்தெரியும்,


 அப்போதே  ராஜன் கைது என்ற போஸ்ட்டை போட்டேன்.


 அப்போது அபாரமான தன் புத்திசாலித்தனத்தை வெ:ளிப்படுத்தும் விதமாக் அவர் “ சி பி ஏன் கோழைத்தனமாக ராஜனுக்கு ஆதரவாக எழுதிய பதிவுகளை இப்போது நீக்கினார்? “ என்று கேள்வி எழுப்பினார். பாவம் அவருக்கு நான் நீக்கி  6 மாதங்கள் ஆன மேட்டர் தெரியவில்லை .


புலனாய்வு இதழ்கள் , நாளிதழ்கள் , ராஜ் டி வி யின் கோப்பியம் ஆகியவற்றில் ஒரு தலைப்பட்சமாக செய்திகள் வந்த போது  நான் யுவகிருஷ்ணாவிடம் டைம் லைனில் கேட்டேன் “ நீங்கள் ராஜனின் நெருங்கிய நண்பர் , புதிய தலைமுறையின் முக்கியப்பொறுப்பில் இருப்பவர் . நீங்கள் நினைத்தால் ஒரு கட்டுரை எழுதி மக்களுக்கு உண்மை நிலவரத்தை புரிய வைத்திருக்கலாமே? என்றேன். அதற்கு அவர் சாமார்த்தியமாக “ அபப்டி நான் முக்கிய பொறுப்பில் இல்லை “ என நழுவிக்கொண்டார். 


ஆக யுவ கிருஷ்ணா எனக்கு எதிராக பேசுவதற்கு இந்த 2 காரணங்கள் தான் .



3.  லாரிக்காரன் - இவர் ஒரு ட்விட்டர் லாங்கரில்  சென்னை பதிவர் சந்திப்புக்குப்பின் ராஜன் சி பி யை தாக்கி போட்ட பதிவின் காரணமாக  அவர் உளவு வேலை பார்த்திருக்கக்கூடும் என யூகத்தின் அடிப்படையில் கேள்வி எழுப்பி இருந்தார். இவருக்கும் , எனக்கும் எந்தபப்கையும் இல்லை . ஆனால் டைம் லைனில் கோவை ஆண்ட்டனி  ஒரு ட்வீட்டில் “ நடுநிலை வகிப்பதாக சொல்லும் சி பி ,லாரிக்காரன், ரைட்டர் சி எஸ் கே மூவரின்  ட்வுசர் கிழிகிறது” என டைம் லைனில் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதச்மாக அந்த ட்வீட் லாங்கர் அமைந்தது . எனவே அது ஒரு தற்காப்புக்காக போடப்பட்டது என யூகிக்கிறேன், மற்ற அப்டி லாரிக்காரன் அவர்களுக்கும், எனக்கும் எந்த வித முன்பகையும் இல்லை 



4. ராஜனின் நண்பர்கள்  - ராஜன் கண்டிஷன் பெயிலில் வெளிவந்த அடுத்த நாள் சேட்டைக்காரன் அவர்கள் “ உங்களைப்பற்றி இப்போதான் தெரிந்து கொண்டேன், உங்களைப்பின் தொடர்ந்ததற்கு வருத்தப்படுகிறேன் என்று ட்வீட் போட்டு அன் ஃபாலோ செய்தார். அதை வழி மொழிந்து ஃபிரியாவிடு டேவிட் , புது மாப்ளை ரகு  உட்பட 5 பேர் அன்ஃபாலோ செய்தார்கள் . அவர்கள் ஏன் அபப்டி செய்தார்கள் என்று தெரிய்வில்லை.ஆனால் அவர்களுக்கும் எனக்கும் முன் விரோதம் ஏதும் இல்லை .(சேட்டைக்காரன் என்பவர் பதிவுலகில் உள்ள நாகேஷ் டி பி வைத்தவர் அல்ல, ட்விட்டர் அக்கவுண்ட்டில் கவுண்டமணி டி பி வைத்தவர், நேரில் அறிமுகம் இல்லை)



5. சென்னை செந்தில் CHN -இறுதியாக இந்த லிஸ்ட்டில் வருபவர் சென்னை செந்தில் . இவருக்கும் , எனக்கும் நல்ல பழக்கம் இருந்தது. நேரில் இருவரும் இரு முறை சந்தித்து இருக்கிறோம். நல்ல புரிதல் உண்டு. கருத்து வேற்றுமை எப்போ நிகழந்ததுன்னா கசாப் தூக்கில் இடப்பட்டபோது “ நான் அசைவர்கள் ஆடு கோழி ஆகியவற்றை வெட்டி கொலை செய்து  அந்த டெட் பாடியை சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு மரண தண்டனை பற்றி பேச தகுதி இல்லை “ என கருத்து தெரிவித்தேன்.


மனித நேயர்கள் நாளை தீவிரவாதிகள்  ஒரு விமானத்தை கடத்தி வைத்து “ இந்த பயணிகளை விடுவிக்க  கசாப்பை விடுவிக்கச்சொன்னால் என்ன செய்வார்கள்? என கேட்டேன். அதில் அவருக்கு மனஸ்தாபம் .


அவர் நேற்று ஒரு பெண்ணுடன் டைம் லைனில் பேசிய ஒரு ட்வீட்டை ஃபேவரைட் செய்து வைத்தேன். அது வருக்குப்பிடிக்கவில்லை. இப்படி ஃபேவரைட் செய்து வைத்தால் பின்னால் எனக்குத்தான் ஆபத்து. மாடரேட் செய்து ஜாலிக்காக சில ஆர் டி கள் செய்வது , தனிப்பட்ட உரையாடல்களை ஃபேவரைட் செய்வது சரி அல்ல என்றார். நான் உடனே “ ஓக்கே “ என்று சொல்லி விட்டேன் .


 இந்த மனத்தாங்கல்கள் தான் அவரை எனக்கு எதிராக பேசத்தூண்டியது




இப்போ பதிவுகளின் நீக்கம் பற்றி ஒன்றைக்குறிப்ப்ட வேண்டும் .இது எனக்கு முதல் அல்ல . ஆல்ரெடி பல சந்தர்ப்பங்களில் பல பதிவுகளை நீக்கி இருக்கிறேன். நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்கள் என என்றுமே நான் அடம் பிடித்ததில்லை . யாராவது மனம் புண்படுமாறு இருக்கு என கருத்து தெரிவித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் , தனி நபர் தாக்குதலாக இருந்த பலவற்றை நீக்கி இருக்கிறேன், வலுவான காரணங்கள் இல்லாமல் நீக்கச்சொன்ன பதிவுகளை நீக்க முடியாது என்று சொல்லி இருக்கிறேன் .



1. 2010 ஆம் ஆண்டு கடைசில் எல்லா செல் ஃபோன்களில் வந்த , பரவிய ஜோக்  ஒன்று - அது கலைஞர் , ஆ ராசா சமப்ந்தப்பட்ட ஜோக். அதை ஜோகஸ் பதிவாக 20 ஜோக்ஸ் கொண்ட ஒரு பதிவாக போட்டிருந்தேன். அது வரம்பு மீறியதாக இருக்கிறது என சென்னிமலை திராவிட முன்னேற்றக்கழக ஒன்றியச்செயலாளர் அலை பேசியில் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அந்த குறிப்பிட்ட ஜோக்கை மட்டும் நீக்கி விட்டேன் .


2. சிங்கப்பூரைச்சேர்ந்த பிரபல ட்வீட்டர்  கோவை வந்த போது நடந்த சம்பவங்களை கிண்டல் பண்ணி ஒரு காமெடி கும்மி போஸ்ட் போட்டிருந்தேன். தனி மெயிலில் அவர் அந்தப்பதிவு தன் மனதை பாதிப்பதாகவும் , தனி மனித தாக்குதல் இருப்பதாகவும் கேட்டுக்கொண்டதன் பேரில் அந்தபப்திவை நீக்கி விட்டேன்


3. சென்னை ட்வீட்டர் சந்திப்பில் ஒரு ட்வீட்டரைப்பற்றிய வர்ணனைகள் அவருக்குப்பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் ஏதும் என்னிடம் கேட்டுக்கொள்ளாமலேயே குறிப்பிட்ட வரிகளை மட்டும் நீக்கி விட்டேன் .



4. ட்விட்டர் டைம்லைனில் பிரபல ட்வீட்டர் டி பி பற்றி நான் அடித்த கமெண்ட் அவருக்கும், அவர் நண்பருக்கும் பிடிக்க வில்லை என்பதை அறிந்ததும் அந்த கமெண்ட்டை நீக்கி விட்டு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.


5. கருங்காலி என்ற படத்தின் சினிமா விமர்சனத்தில் அந்தபப்டம் ஒரு கில்மாபப்டம் என்ற வரியை அகற்றுமாறு அதன் இயக்குநர்  மு களஞ்சியம் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் என்னையும் , கேபிள் சங்கரையும் தனித்தனியே கிட்டத்தட்ட மிரட்டினார், ஆனால் நாங்கள் அந்த  வ்ரிகளை நீக்க ஒத்துக்கொள்ளவில்லை .


6. நடு நிசி நாய்கள் பட விமர்சனம் வந்த  போது  2 பதிவுகள் இயக்குநரை தாக்கி எழுதி இருந்தேன். கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களின் உதவி இயக்குநர் என தன்னை அறிமுகம் செய்த நபர்  அந்த பதிவை அகற்றுமாறு மிரட்டினார், நான் ஒத்துக்கொள்ளவில்லை. அனானி பெயரில் கேவலமாக கமெண்ட் போட்டார்.


 இதை எல்லாம் எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால் நான் செய்தது தவறு என்று தெரிந்தால்  அதை ஒத்துக்கொண்டு அதற்காக மன்னிப்புக்கேட்கத்தயங்க மாட்டேன் என்பதையும் , அதே சமயத்தில் செய்யாத தவறுக்காக அவதூறை சுமக்க மாட்டேன் என்பதையும் தெளிவு படுத்தவே..


அட்ராசக்க ஒரு செய்தி ஊடகம். பர பரப்பான செய்திகள் அதில் பகிரபப்டும் . ராஜனின் நண்பர்களுக்கு உள்ள வருத்தம் நான் ராஜனுக்கு எதிராக பத்திரிக்கைகளில் வரும் செய்திகளை எல்லாம் போஸ்ட்டாகப்போடுகிறேன் என்பதே .


 அது தவறு. இதுவரை 11 பதிவுகள் ராஜனுக்கு ஆதரவாக , எதிராக கலந்து கட்டி போட்டிருக்கிறேன். ஆல்ரெடி எங்களுக்குள் கருத்து வேறு பாடு இருந்ததால் என் கருத்து மட்டும் நான் எழுதவே இல்லை. அப்படி எழுதினால் அது ஒரு தலைப்படசமானதாக பார்க்கப்படும் என்பதாலாயே அதை தவிர்த்தேன்.

 நெல்லை டேவிட் ( ஃபிரியா விடு மாமு ) ராஜனுக்கு ஆதரவான பதிவுகளான  துணுக்கு எழுதிய கட்டுரை , விமலாதித்த மாமல்லன் எழுதிய கட்டுரையை எல்லாம் சி பி ஏன் வெளியிட வில்லை என கேட்ட போது ஒரு மணி நேரத்தில் அந்த பதிவை வெளியிட்டேன்.



நேரில் சந்தித்துப்பழகிய பரிசலுக்கும், ராஜனுக்கும் என்னைப்பற்றித்தெரியும், சுற்றி இருப்பவர்கள் தான் சந்தேகங்களை எழுப்புகிறர்கள்.


 கடைசியாக ஒரு வரி - ராஜனுக்கு நான் நண்பனா? எதிரியா? என்பதை காலம் சொல்லும். ஆனால் கண்டிப்பாக துரோகி இல்லை என்பதை உறுதியாக நான் இப்போது சொல்கிறேன். மேலும் எனக்கும் இந்த ஸ்க்ரீன் ஷாட் மேட்டருக்கும் எந்த சமப்ந்தமும் இல்லை என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்



டிஸ்கி -  1 - மிரட்டலுக்குப்பின்னும் நான் நீக்காத பதிவுகள்

1 கருங்காலி - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/08/blog-post_2810.html


2 இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு கடிதம் -http://www.adrasaka.com/2011/02/blog-post_7783.html

3 நடுநிசி நாய்கள் - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2011/02/18_18.html
  டிஸ்கி 2 - இதுவரை என் ட்விட்டர் வாழ்க்கையில் அன்ஃபாலோ, பிளாக் ஏதும் இருந்ததே இல்லை. யாரையும் நான் அப்படி செய்ததில்லை. வீட்டில் , ஆஃபீசில் ஏற்படும் மன அழுத்தத்தை மறக்க ஜாலியாக இருக்கவே இங்கே வருகிறோம், இங்கேயும் பிரச்சனை என்றால்?

16 comments:

Admin said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது. கருத்துக்களை கருத்துக்களால் வெல்லும் நல்ல மனநிலை எல்லோருக்கும்வரவேண்டும்

யுவகிருஷ்ணா said...

இப்போது பதினாறாம் நாள் காரியம் நடந்துக் கொண்டிருக்கும் வீட்டில் சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறீர்கள் :-(

settaikkaran said...

தல, இந்த இடுகையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற ட்விட்டர் சேட்டைக்காரன் (ட்விட்டரில் கவுண்டமணி படம் போட்டிருப்பவர்) நானல்ல என்பது உங்களுக்குத் தெரியும். இதைப் படிக்கிற பலர் என்னை (முன்பு நாகேஷ் படமும், தற்போது என் சொந்தப்படமும் போட்டிருக்கிற) அந்த சேட்டைக்காரனாக எண்ணிவிடும் வாய்ப்பிருப்பதால், நான் அவரல்ல என்று இதன் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

settaikkaran said...

மேலும் தற்போது நான் ட்விட்டரிலோ, முகநூலிலோ, கூகிள் ப்ளஸ்சிலோ கூட இல்லை என்பதையும் உபரியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே இந்த சேட்டைக்காரனுக்கும் சி.பி.செந்தில்குமாருக்கும் இடைப்பட்ட நட்பு அப்படியே இருக்கிறது என்பதையும் தெளிவாய்க் குறிப்பிட விரும்புகிறேன். நன்றி!

யுவகிருஷ்ணா said...

என்னாது? பதிவுகளை நீக்கி ஆறு மாசம் ஆச்சா?

போனை போட்டு தூக்கிடுவேன்னு மிரட்டினதுமே அக்.1ஆம் தேதி பயந்துப்போயி தானே தலை பதிவுகளை தூக்கினீங்க?

அதுவுமில்லாமே ராஜனும், சரணும் அரஸ்ட் ஆனப்போ அந்தம்மாவுக்கு பி.ஆர்.ஓ. மாதிரி அசிங்கமா செயல்பட்டு நீங்க அம்பலப்பட்ட கதையை எல்லாம் இத்தனை நாள் கழிச்சி எல்லாம் மறந்துட்டிருப்பாங்கன்னு எப்படி நினைக்கறீங்க?

நீங்க ஒரு மட்டமான மனிதன் :-(

”தளிர் சுரேஷ்” said...

தூற்றுவார் தூற்றட்டும்! போற்றுவார் போற்றட்டும்! நாம்,தொடர்ந்து பயணிப்போம்!

நாயோன் said...
This comment has been removed by the author.
rajamelaiyur said...

விடுங்க தல .. அது லக்கி லுக இல்ல , bad லுக் ..

அப்பாவி யாராது மாட்டுனா ஓவரா ஓட்டுவன்க்க .. சிலநாட்களுக்கு முன் தனபாலன் சார ஓட்டுனவங்க தானே இவங்க ...

rajamelaiyur said...

/ யுவ கிருஷ்ணா said...

இப்போது பதினாறாம் நாள் காரியம் நடந்துக் கொண்டிருக்கும் வீட்டில் சுண்டல் விற்றுக் கொண்டிருக்கிறீர்கள் :-(

//

ஆமாம் இவர் அந்த பிரச்னையில் இருந்து சாப்பிடாம , தூக்கம் இல்லாம வருத்தத்தில் மட்டும் தான் இருக்கார் .

rajamelaiyur said...

இதையும் படிக்கலாமே :

google தெரிந்ததுதும் தெரியாததும்

தமிழ் பையன் said...

யுவா, உங்களின் வருத்தம் எனக்குப் புரிகிறது. ஆனால், சிபியை சாடுவது தவறான இலக்கை நோக்கி விட்ட அம்பு. மட்டமான மனிதன் என்பது போன்றவற்றை நீக்கி விடவும். இது எனது தாழ்மையான கருத்து.

செங்கோவி said...

உங்கள் விளக்கப்பதிவுக்கு நன்றி சிபி..


ஒரு பதிவை எழுதும் பதிவர்க்கு, அதை நீக்கும் உரிமையும் இருப்பதாகவே கருதுகிறேன். பதிவுலகின் பலம்/பலவீனமே கட்டற்ற சுதந்திரம் தான். எனவே சிலநேரங்களில் வார்த்தைகள் தடித்து வந்து விடுவதும் சகஜம் தான். அதை பின்னர் நாமே உணர்ந்தோ அல்லது பிறர் சுட்டிக்காட்டி உணர்ந்தோ, பதிவை நீக்குவது ஒன்றும் தப்பில்லை தான்.

ஆனால் இந்த விளக்கத்தை பதிவை நீக்கியபோதே நீங்கள் அளித்திருக்கலாம். அப்படி அளிக்காததாலேயே சரியான நேரத்தில் நீங்கள் மட்டும் ஒரு ரகசிய சமரசம் மூலம் எஸ்கேப் ஆகிவிட்டதாக ஒரு தோற்றம் வந்துவிட்டது.

வழக்கம்போல், எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு பதிவுகளைத் தொடருங்கள்.

நாயோன் said...

என்ன சிபி? அக்டோபரில்தான் பதிவுகளை அழித்தீர்களா? உங்கள் மேலிருந்த நம்பிக்கை போகிறது.. தவறான தகவல் அளிக்காதீர்கள்... உங்கள் இதுபோன்ற தகவல் பிழைகளின் காரணமாக உங்களின் மொத்த செயல்பாடுகளின் மேலும் சந்தேகம் வலுக்கிறது. ;-(((((((((

நாயோன் said...

நீங்கள் சொன்னவை உண்மை என நம்பி இதற்கு முன்பு நான் போட்ட கமெண்ட்டை அழித்துவிட்டேன்.

Manimaran said...

//இவர் தமிழ் இனத்தலைவரும் , தன் குடும்பத்தைப்பற்றி கவலைப்படாமல் ஈழத்தமிழருக்காக ஆட்சியையே துறக்க தயாராக இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தனிப்பெரும் தலைவர் கலைஞரின் தீவிர அபிமானி//

யுவா மீதான தனிமனித தாக்குதலில் கலைஞரைப் பற்றிய நக்கல் எதற்கு..?

Angry Bird said...

டேய் ராஜபாட்டை கூஜா..பதிவர்லாம் பேசும் போது உனக்கு என்னடா இங்கே வேலை என் புடாக்கு.