Monday, December 10, 2012

கடல் - ஏ கீச்சான் ,நெஞ்சுக்குள்ளே காதல் பாடல்

http://moviegalleri.net/wp-content/uploads/2012/02/mani_ratnam_kadal_movie_first_look_posters.jpgமணிரத்னம் அடுத்து இயக்க இருக்கும் படத்திற்கு கடல் என்று பெயரிட்டுள்ளார். இதனை அவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ராவணன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க போகும் படத்திற்கு பூக்கடை என்று பெயர் வைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இப்படம் பற்றி பல்வேறு தகவல்களும் வெளியாகின. இந்நிலையில், பூக்கடை என்ற தலைப்பு எங்களுடையது என இயக்குனர் சரணிடம் உதவியாளராக இருந்த சதீஷ் என்பவர் புகார் கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த டைரக்டர் மணிரத்னம், என் படத்தோட தலைப்பு பூக்கடைன்னு நான் சொல்லவே இல்லை. நான் வைக்காத தலைப்புக்கு எதற்காக பிரச்னை? என்று கூறினார்.


இந்நிலையில் தனது அடுத்தபடத்திற்கு கடல் என்று பெயர் வைத்துள்ளதாக மணிரத்னம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் கவுதமும், நாயகியாக சமந்தாவும் நடிக்க இருப்பதாகவும், முக்கிய வேடத்தில் அர்ஜூனும், தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க போவதாகவும் கூறியுள்ளார்.


"கடல்" படம் தமிழக மீனவர்கள் பிரச்னையை எடுத்து சொல்லும் படமாகவும், அதில் ஒரு அழகிய காதல் கதையும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.கோடம்பாக்கமே ஆச்சர்யத்துடன் பேசிக்கொள்ளும் விஷயம்... மணிரத்னத்தின் கடல் படத்திலிருந்து ஹீரோயின் சமந்தா வெளியேறிவிட்டதுதான்!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhbd-gPDCPLDJ8JEyUwY5fjptqV-haFxFtEGPBIJ6RZxSpSEJjvCBVf4yYr5S4fhRCe7WJ_OUfCw814s-h5ysu7vRhwvASMBFM_mz_WLE6t_YLdvwiYh_uhPMPdbIMa8G-t9XCOhNxTSE/s1600/manirathnam+ar+rahman+samantha+kadal+movie+stills+wallpapers+first+look+hellotolly.com+(3).jpg



ஏன்? என்னாச்சு? எப்படி?


என ஒவ்வொருவரும் மணிரத்னம் ஸ்டைலிலேயே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்!


http://chennaionline.com/images/articles/November2012/53d2ff12-8f9c-4f86-a92a-0e23357b9a5fOtherImage.jpg


கார்த்திக் மகன் கவுதம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தென் தமிழகத்தின் கடற்கரையோர கிராமங்களில் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.


மணிரத்னத்தைப் பொருத்தவரை இந்தப் படம் அவருக்கு பெரிய சவால். காரணம், தொடர்ந்து அவரது படங்கள் பாக்ஸ் ஆபீசிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அவரது சமீபத்திய வெளியீடான ராவண், தமிழ், தெலுங்கு, இந்தி மூன்றிலுமே படுதோல்வி கண்டது.



எனவே பார்த்துப் பார்த்து கடல் படத்தை உருவாக்கி வருகிறார்.




சமந்தா இந்தப் படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டதும், தனது வாழ்க்கையில் இந்தப் படம் மறக்கமுடியாததாக அமையும் என்று சந்தோஷப்பட்டார்.


ஆனால் இப்போது திடீரென்று படத்திலிருந்து விலகிக் கொள்வதாக சமந்தா அறிவித்துள்ளார். கவனிக்க... மணிரத்னம் நீக்கவில்லை... சமந்தாவே விலகிக் கொண்டதாக அறிவித்துள்ளார்.



தமிழில் இனிமேல்தான் சமந்தாவுக்கு வெற்றிப் படம் அமைய வேண்டும். இந்த சூழலில் பெரிய வாய்ப்பு ஒன்றிலிருந்து தானாகவே விலகிக் கொண்டிருக்கிறாரே... என்னவாக இருக்கும்? என்று பேச ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்...



இப்போதைக்கு, நீதானே என் பொன்வசந்தம், ஷங்கர் படம் மற்றும் கார்த்தியுடன் பிரியாணி ஆகியவை சமந்தாவின் கைவசம் உள்ளன.


சுனாமியே வந்தாலும் மணிரத்னத்திடமிருந்து அவர் படம் குறி‌த்த சிறு தகவல்கூட பெயராது. நாமே துப்பறிந்து பகிர்ந்து கொண்டால் மட்டுமே உண்டு. இரண்டாவது சாய்ஸ் வைரமுத்து. படத்துக்கான பப்ளிசிட்டி நேரத்தில் வைரமுத்து படத்தின் அருமை பெருமை பற்றி தனது விறைப்பு தமிழில் வண்டியாக கொட்டுவார்.








தென்னக கடற்கரையோரம் மையம் கொண்டிருந்த மணிரத்னமும் டீமும் இப்போது அந்தமானை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அங்கு நடக்கிறது. ஹீரோயின் சமந்தா விலகிக் கொண்டதால் அவருக்குப் பதில் ராதாவின் இளைய மகள் துளசியையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தானும், கார்த்திக்கும் அறிமுகமானது போல் கடலில் தனது மகளும் கார்த்திக்கின் மகனும் அறிமுகமாவதில் ராதாவுக்கு கொள்ளை மகிழ்ச்சி. இது கடல் என்றால் அது அலைகள் ஓய்வதில்லை. பெய‌ரில்கூட பொருத்தம் என்று பெருமை கொள்கிறாராம்.





துளசிக்கு இப்போது 14 வயதுதான் ஆகிறது. அதற்குள் மணிரத்னம் பட ஹீரோயின் என்ற பெரும் சுமை எதுக்கு என்றும் இன்னொருபுறம் சர்ச்சை சலசலக்கிறது.



மௌனமாக இருந்தே அனைத்தையும் ஆஃப் பண்ணிவிடுவார் மணிரத்னம். 
மணிரத்னத்தின் சமீபத்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெ‌ரிய அளவில் சாதிக்கவில்லை. யானை இளைத்தாலும் தந்தம் இளைக்காதில்லையா. மணிரத்னத்தின் புகழை இந்த ச‌ரிவு எதுவும் செய்யவில்லை.



அவர் இயக்கி வரும் கடல் இன்னும் பத்து சதவீதம் முடியவில்லை. அதற்குள் பத்திரத்துடன் படத்தை விலை பேச ஆரம்பித்திருக்கிறார்கள். நமக்குக் கிடைத்த தகவல் உண்மையெனில் கடலுக்கு முதலில் வலை வீசியவர்கள் ஜெமினி பிலிம்ஸ். மாஸ் ஹீரோ இல்லாத கடலின் தமிழக திரையரங்கு உ‌ரிமையை மட்டும் 25 கோடிக்கு அவர்கள் கேட்டதாக தெ‌ரிகிறது. தெலுங்கு, கேரள உ‌ரிமை, தொலைக்காட்சி, ஆடியோ, வெளிநாட்டு உ‌ரிமைகள் தனி.மணிரத்னம் இந்த டீல் குறித்து வழக்கம் போல் எதுவும் சொல்லப் போவதில்லை. வைரமுத்து ஏதாவது வாய் திறந்தால்தான் உண்டு.

கடல் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்த 70 நாட்களில் முடித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காதல் படமான கடலில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிக்க துளசியை மலையாளக் கரையோரத்தில் இருந்து கூட்டி வந்திருக்கிறார்கள். மணப்பாடு, அந்தமான், கேரளா கடற்கரையோரங்களில் கடல் படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள். கவுதமும் துளசியும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை காட்டியதில் ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறார் மணிரத்னம். அர்ஜூன், அரவிந்த் சாமி, லக்ஷ்மி மஞ்சு, பொன்வண்ணன், பசுபதி மற்றும் தம்பி ராமையா என பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் கடலில் களம் இறங்கியிருக்கிறார்கள். 


இயக்குனர் மணிரத்னம், ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையே, அதிக இடைவெளி எடுத்துக் கொள்வார். ஒரு படம் வெளியாகி, நீண்ட நாட்களுக்கு பின் தான், அடுத்த படத்துக்கான பணிகளை துவங்குவார். தற்போது, இந்த நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார், அவர். "கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும்,  அந்த படத்துக்கான, இறுதி கட்ட பணிகள் இன்னும் முடிவடையவில்லை. ஆனாலும், இப்போதே, அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு படத்தை, மணிரத்னம் இயக்கப் போகிறார். இந்த படத்துக்கான. கதை விவாதத்தில், மணிரத்னமும், ஜெயமோகனும், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன.


thanx - thats tamil, dinamalar, cine 123  


நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் முதல் சினிமா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம். கடல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் கவுதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், மீடியா அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கவுதமின் ஸ்டில்களை வெளியில் விடாமல் மறைத்து வந்தார் மணிரத்னம். manirathnam releases another first look of goutham மேலும் படங்கள் இடையில் ஒருமுறை கவுதமின் ஸ்டில் யதேச்சையாக வெளியாகிவிட, பதறிப்போய், அதை நீக்கச் சொன்னதெல்லாம் நடந்தது. இந்த நிலையில் கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது முற்றிய கத்தரிக்காயை வெளியில் காட்டி வியாபாரம் செய்தாக வேண்டுமே... எனவே தினத்துக்கு ஒரு ஸ்டில்லாக வெளியிட ஆரம்பித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு கடல் ஃபர்ஸ்ட் லுக் என்ற பெயரில் கவுதம் முகத்தைக் காட்டாமல் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம். இப்போது அதில் கொஞ்சம் முன்னேற்றம். கவுதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள டிசைனை வெளியிட்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இதே ரேஞ்சுக்கு படத்தின் ஹீரோயினான ராதா மகள் துளசியையும் காட்டப் போகிறார். .

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2012/12/manirathnam-releases-another-first-look-of-goutham-165767.html
ஏ கீச்சான் பாடல்

Nenjukulla Kadal Official Song - AR Rahman

 
 
 

0 comments: