Sunday, November 25, 2012

பரதேசி - கலக்கல் ட்ரெய்லர், பாலாவின் பேட்டி

http://chennai365.com/wp-content/uploads/Poster/Paradesi-Movie-Latest-Posters/Paradesi-Movie-Latest-Posters-Stills4355Aa12.jpg

பாலாவின் பரதேசி படம் விரைவில் ரீலிஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்



. இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு பரதேசி என்று பெயரிட்டிருக்கிறார் பாலா. படத்தின் சூட்டிங் முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து பாலா,


. இதனால் அடுத்த மாதம் மத்தியில் பரதேசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரதேசி படத்துக்கு பிறகு விஷாலை வைத்து படம் இயக்க பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.


நன்றி - தினமலர்



பாலாவின் ’பரதேசி’! சில தகவல்கள்!


அவன்-இவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் ’பரதேசி’. நடிகர் முரளியின் மகன் அதர்வா,தன்ஷிகா,வேதிகா ஆகியோர் ஹீரோ ஹீரோயின்களாக நடிக்க நடிகை உமா ரியாஸ்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘எரியும் தணல்’ என்ற மலையாள நாவலைத் தழுவி எடுக்கப்படும் பரதேசி. தமிழ்நாட்டின் மலைக்கிராமப் பகுதிகளில் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்த பரதேசி, கேரளாவின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மூணார், குற்றாலம் போன்ற பகுதிகளில் கடைசிகட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது டப்பிங் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது பரதேசி யூனிட்.


இந்த படத்தில் 
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை தன்ஷிகா அரவான் படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்ஷிகாவின் கதாபாத்திரம் பெரிதாக பேசப்படாமல் போனதால் தன்ஷிகாவிற்கு எமாற்றமே.ஆனாலும் மனம் தளராமல் பாலா படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் தன்ஷிகா. 

பாலா படத்தில் நடிக்கும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு சினிமா உலகில் ஒரு நல்ல மார்கெட் கிடைக்கும். எனவே தன்ஷிகா அரவானில் விட்டதை பரதேசியில் பிடிக்கிறாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மாத இறுதியில் பரதேசி படத்தின் இசை வெளியிடப்படும் எனத் தெரிகிறது. பரதேசி படத்தின் மொத்த ஷூட்டிங் ஷெட்யூல் 90 நாட்கள் தான் என்கிற போது படம் ரிலீஸ் செய்ய தாமதம் ஆகாது என்கின்றனர் படக்குழுவினர்.
 
 நன்றி - நக்கீரன் 

http://www.cinegemini.com/wp-content/uploads/2012/10/bala-in-paradesi-movie-stills-adharvaa-murali-9.jpg

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அதர்வா முரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா C குமார், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



திரைப்படத்தின்  படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் இடைவிடாது நடைபெற்று முடிவடைந்துள்ளது.



சிறப்பு தகவல்கள்:


http://www.galatta.com/assets/gallery/movie/paradesi-9683/image-big/paradesi-18.jpg

இயக்குனர் பாலா இசை அமைப்பாளர் G V பிரகாஷ் குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் முதன் முறையாக இணைந்து பணி புரிந்திருக்கிறார்.

பரதேசி படத்தின் படப்பிடிப்பு 90 நாட்களில் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.




இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியிட உறுதி செய்யப்பட்டுள்ளது.


நன்றி - தமிழ் மீடியா  

ஆனந்த விகடனில் வந்த பரதேசி பாலாவின் பேட்டி -http://www.adrasaka.com/2012/10/blog-post_7245.html





0 comments: