Monday, October 01, 2012

OH MY GOD - சினிமா விமர்சனம்

http://cdn.koimoi.com/wp-content/new-galleries/2012/09/OMG-Oh-My-God-Movie-Review-Poster.jpg 

தமிழில் வந்த முதல்  சயின்ஸ் ஃபிக்‌ஷன்  சிறுகதை புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும். அப்புறம்  தமிழில் வந்த அந்த மாதிரி  டைப் படம் சிம்புதேவனின் அறை எண் 305 இல் கடவுள்.அதே டைப்ல குஜராத் நாடகமான  காஞ்சி விருத் காஞ்சி , மற்றும் ஹிந்தி நாடகமான கிருஷ்ணன் வெர்சஸ் கன்னையா  ஆகியவற்றின் தழுவல் தான் இந்த ஓ மை காடு ஹிந்திப்படம் .


 தான் ஒரு நாத்திகவாதியா இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஆத்திகவாதிகள் வாக்குகள் வாங்கித்தான் கலைஞரால சி எம் ஆக முடிஞ்சுது,,அந்த மாதிரி ஹீரோ அடிப்படையில் நாத்திகர் என்றாலும் அவர் பண்ற பிஸ்னெஸ் எல்லாமே கடவுள் சம்பந்தப்பட்ட பொருட்களான  சிலைகள்,புனித நீர் , கங்கா தீர்த்தம் இந்த மாதிரி அயிட்டங்கள் தான்.


ஹீரோவோட மனைவி ஆன்மீகப்பழம்.எந்த நல்ல காரியம் அல்லது யாகம் செஞ்சாலும் எப்படி ஜெ , நல்ல நேரம் பார்த்து செய்யறாரோ அந்த மாதிரி டைப்.இந்த கடவுள் நம்பிக்கை சம்பந்தமா 2 பேருக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும்.




 ஒரு நாள் திடீர்னு பூகம்பம் வருது.ஹைவேஸ்காரங்க எப்படி கேப்டனின் கல்யாண மண்டபத்தை மட்டும் குறி பார்த்து இடிச்சாங்களோ அந்த மாதிரி . ஊர்லயே ஹீரோவோட கடை மட்டும் தான் பூகம்ப பாதிப்புக்கு உள்ளாகுது இன்சூரன்ஸ் கம்ப்பெனி இயற்கைச்சீற்றங்களுக்கு பொறுப்பேத்துக்க முடியாதுன்னு எஸ் ஆகிடறாங்க .இதுக்கெல்லாம் காரணம் ஹீரோவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததுதான் அப்படின்னு மனைவி சொல்றா. ஹீரோ செம காண்ட் ஆகிடறாரு.


இப்போ ஹீரோ உலகத்தில் உள்ள அனைத்து மதக்கடவுள் மேலயும் கேஸ் போடறார்.எல்லா மத சாமியார்கள், பாதிரியார்கள் எல்லாருக்கும் நோட்டீஸ் அனுப்பறார். நஷ்ட ஈடு கேட்கறார். ஆரம்பத்துல எல்லாரும் ஹீரோவை லூஸ் மாதிரி பார்க்கறாங்க..


 ஆனா அவர் தானே வக்கீல் மாதிரி கோர்ட்ல  விதி பட சுஜாதா மாதிரி கலக்கு கலக்குன்னு கலக்கறார். இப்போ நாடே பத்தி எரியுது.நாட்டு மக்கள் செம்மறி ஆடு கணக்கா ஹீரோவுக்கு சப்போர்ட் ஆகறாங்க.


 திடீர்னு கடவுள் வர்றாரு. என்ன நடக்குது என்பதுதான் சுவராஸ்யமான மிச்சக்கதை.. 



எம் ஆர் ராதா ரத்தக்கணீர் நாடகம், சோ முகம்மது பின் துக்ளக்  என  சூப்பர் ஹிட் நாடகங்கள்ல நடிச்சு அதை சினிமா ஆக்கி மெகா ஹிட் கணட மாதிரி  பரேஷ் ராவல் நாடகத்துல நடிச்சு சினிமால்யும் அநாயசமா நடிச்சிருக்கார். கோர்ட் காட்சிகள் பொறி பறக்குது. வசனகர்த்தாதான் அதுக்குக்காரணம்னாலும் நடிப்பும் பக்க பலம். 


 பகவான் கிருஷ்ணரா  அக்‌ஷய் குமார். சுமாரான நடிப்பு.

http://image3.mouthshut.com/images/ImagesR/2012/9/OMG-Oh-My-God-925662626-3459785-1.jpg?a=9/29/2012%2011:03:42%20AM


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. சீரியஸா போகும் திரைக்கதையில் நயன் தாராவின் முன்னாள் காதலர் பிரபு தேவா - சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியின் டப்பாங்குத்து  டான்ஸ்.


2. பஸ்ஸில் தீர்த்தக்கமண்டலத்தில் சரக்கு வெச்சு ஆண்கள் எல்லாம் ஷேர் பண்ணிட்டு இருக்கும்போது ஒரு லேடி அதை வாங்கிக்குடிப்பது ஆல்ரெடி பல தமிழ்ப்படங்கள்ல பார்த்தது என்றாலும் ஜாலியான சீன்


3. தெளிவான திரைக்கதை ரெண்டேகால் மணி நேரம் ஓடும் படத்துல 20 நிமிடம் மட்டும் தான் ஸ்லோவா போகுது . மற்ற எல்லா இடங்கள்லயும் செம ஸ்பீடு


4. படத்தில் தேவையற்ற டூயட் , செண்ட்டிமென்ட் சீன்ஸ் எல்லாம் வைக்காம படத்துக்கு என்ன தேவையோ  அந்த சம்பவங்களை மட்டும் திரைக்கதை ஆக்கியது. 


5. பொறி பறக்கும் வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பிளஸ்.. அதுவும் கோர்ட்டில் அவர்  நாத்திக வாதம் பேசும்போதும், ஆன்மீக வாதிகளை மடக்கும்போதும் சபாஷ் வசனகர்த்தா சொல்லத்தோணுது


http://i.indiglamour.com/photogallery/hindi/movies/2012/July16-1/OMG-Oh-My-God/wide/OMG-Oh-My-God_2145rs.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1.  ரிலையன்ஸ் கம்பெனில ஒரு பிரச்சனைன்னா நீ டைரக்டா அம்பானிட்ட தான் பேசுவியா? டீலர்ட்ட பேசுவியா? அதே மாதிரிதான் கடவுளால ஒரு பிரச்சனைன்னா கடவுளோட ஏஜெண்ட்டுகள்னு தன்னை சொல்லிக்கற ஆட்கள்தான் பதில் தரனும் , அவங்க தான் அதுக்கெல்லாம் பொறுப்பு 



2.  இன்சூரன்ஸ்காரங்க கண்டிஷன்ஸ் அப்ளைனு கை கழுவப்பார்க்கறாங்க , ஆனா கடவுள் நான் உங்களை கை விட மாட்டேன்னு சொல்லிட்டே கண்டுக்காம இருக்கார்


3.  யாருய்யா நீ? உன் பேரென்னா? 

 கிருஷ்ண வாசுதேவ் கோகுல் ( அவ்ளவ் தானே, என்னமோ கூகுள் ஓனர் மாதிரி பில்டப் எதுக்கு - திஸ் வசனம் பை அதிகப்பிரசிங்கி சி பி )


நையாண்டி வேணாம்

 யோவ், நிஜமா நான் கடவுள் தான்யா 



4. கடவுளைப்பற்றி போதிக்கறோம்னு என்னைக்காவது நாங்க சர்வீஸ் டேக்ஸ் கட்டுன்னு கேட்டோமா? இப்போ அவரால ஒரு நஷ்டம்னு ஆனதும் எங்க கிட்டே நட்ட ஈடு கேட்டா எப்படி? 



5. மதவாதிகள் தங்களோட வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கறதில்லை. எதையாவது உளறி அவங்க இமேஜையும் கெடுத்துக்கிட்டு கடவுள் பேரையும் கெடுக்கறாங்க.. 


6. குழந்தை சாக்லெட் வேணும்னு அப்பா கிட்டே அடம் பிடிக்குது, அப்போ தன் குழந்தைக்கு சாக்லெட் வாங்கித்தர வேண்டியது  அப்பாவோட கடமை, அதே மாதிரி தான் கடவுளும். பக்தனோட வேண்டுகோளை கோரிக்கைகளை நிறைவேத்தனும் , அதை செய்யலைன்னா அவன் எபப்டி கடவுள்?



7. இப்போ ஆன்மீகம் ஒரு தொழில் ஆகிடுச்சு 


8. நம்ம நாட்ல ஸ்கூலுக்கு போறவங்களை விட கோயிலுக்கு போறவங்க தான் அதிகம்


9. பாலாபிஷேகமே டோட்டல் வேஸ்ட்தான். வெளீல பசில ஏகப்பட்ட ஏழைங்க துடிக்கும்போது வெறும் கல்லுக்கு ஊற்றப்படும் பால் வீணாத்தானே போகுது?


10. கடவுள் இருக்கார்ங்கறதை நீங்க ஒத்துக்கலையா? 


 யோவ்! நான் தான் கடவுளே!


11.  நீ கீதோபதேசம் படிச்சிருக்கியா? 

 இல்லை.அவ்ளவ் பெரிய புக், நோ ஃபோட்டோ . எவன் பொறுமையா உக்காந்து படிப்பான்? 



12. பைபிள் , கீதோபதேசம் எல்லாமே  மனிதனின் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் விளக்கம் அளிக்கும் பதில்களோட இருக்கு. அதை முதல்ல முழுசா படிச்சுட்டு வந்து அப்புறமா தர்க்கத்துல ஈடு படனும் 


13. சுகமும் துக்கமும் வரும்போது இரண்டையும் சமமாக பாவிப்பனே யுக புருஷன்


14. உலகில் நடக்கும் அனைத்து நல்லது கெட்டதுக்கும் நானே பொறுப்புன்னு கடவுள் எல்லா மதத்திலும் சொல்லி இருக்கார் 


15. கடவுளோட வேலை மனிதனை உருவாக்குவது மட்டுமே, பாவ புண்ணியங்கள் எல்லாம் மனிதனின் வேலைகள்

16. கோயில்ல சாமி கும்பிடறவங்களுக்கு  மட்டும் மரணம் சம்பவிக்காமயா இருக்கு? அப்புறம் அவங்க சாமி எதுக்காக கும்பிடனும்? என்ன யூஸ்?


http://thecommonmanspeaks.com/wp-content/uploads/2012/09/Oh-My-God-movie2.jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. தன்னோட கடை பூகம்பத்துல நாசமாப்போயிடுச்சுன்னு ஹீரோ தன்  வீட்ல இருந்து டி வி நியூஸ் பார்த்துத்தான் தெரிஞ்சுக்கறாரு. என்ன கொடுமை சார் இது? ஊருக்கே தெரிஞ்சு சேனல், மீடியா கவர் பண்றவரை இவர் என்ன பண்ணிட்டு இருந்தார்? பக்கத்து கடைக்காரங்க ஃபோன் போட்டு சொல்லி இருக்க மாட்டாங்களா? அட்லீஸ்ட் போலீஸ் கூட தகவல் சொல்லி இருக்காதா?


2. ஹீரோ கோர்ட்ல கடவுள் மேல கேஸ் போட்டுட்டார். ஓக்கே .தெரு மக்கள் எல்லாம் கிண்டல் பண்றாங்க.மதவாதிகள் வந்து மிரட்டிட்டு போறாங்க . இதுக்கெல்லாமா ஒரு மனைவி தன் 2 குழந்தைகளை கூட்டிட்டு கோவிச்சுட்டு அப்பா வீட்டுக்கு போவாங்க . பொதுவா இந்த சம்சாரங்க பட்டுப்புடவை எடுத்து தர்லை,தன் பேச்சை கேட்காம புருஷன் தன் அம்மாவுக்கு புது டூத் பிரஷ் வாங்கிக்குடுத்து 50 ரூபா தண்டம் பண்ணிட்டார்னு முக்கியமான பிரச்சனைக்குத்தானே அம்மா வீட்டுக்கு கோவிச்சுட்டு போவாங்க?


3. படத்துல முதல் பாதி வரை சராசரி ஆளா, கொஞ்சம் பயந்த சுபாவமா உள்ள ஹீரோ கோர்ட் காட்சிகளில் அநாயசமா , கம்பீரமா பேசுவது எப்படி? அதுவும் ஜட்ஜே வியக்கும் வண்ணம் பட்டாசை கிளப்பறாரே? ஒரு வை கோவோ ஒரு ஆ ராசாவோ அப்படி செஞ்சாங்கன்னா பேசிக்கலா அவங்க லாயர்ஸ் அல்லது சட்டம் படிச்சவங்க. ஆனா ஹீரோ அதிகம் படிக்காதவர். பயந்த சுபாவம் உள்ள அவர் கோர்ட்டை பார்த்து நடுங்க வேணாம்? விஜய் டி வி கோபிநாத் ரேஞ்ச்சுக்கு அவர் விளாசுவது ரசிக்க முடிஞ்சாலும் லாஜிக் உதைக்குதே?



4. பகவான் கிருஷ்ணரா ஒரு கேரக்டர் கொண்டாரமலேயே இந்தப்படத்தை  எடுத்திருக்க முடியும். இன்னும் ஓப்பனா சொல்லனும்னா படம் ஸ்லோ ஆகறதுக்கு காரணமே கடவுள் வரும் அந்த  23 நிமிட காட்சிகளே! 



5. பகவான் கிருஷ்ணர் தன் அவதாரத்துல  கைல சங்கு சக்கரம் சுத்திட்டு இருந்தார் ஓக்கே அதுக்காக நவ நாகரீக இளைஞனாக வருபவர்  கைல எந்நெரமும் பைக் சாவியை சுத்திட்டே எதுக்கு இருக்காரு? மகா எரிச்சல். 


http://images.jagran.com/inext/Inext_p_ebolly_12aug465.jpg


6. பகவான் கிருஷணர் தன் விஸ்வரூபத்தை கமலுக்கு முன்னாடியே காட்டனும்கறதுக்காக ஹீரோ முன்னால் அவதார தரிசனம் தர்றார், ஓக்கே  ஆனா அப்போ கட் ஷூ போட்டிருக்காறே? அது எப்படி? இது வரை வந்த சாமி படங்கள்ல வெறும் பாதங்கள் தானே? கடவுளும் செப்பல் ஆர் ஷூ போடனும்னா அப்புறம் அவரும் சராசரி மனிதன் தானா? 


7. ஹீரோ கோர்ட்ல வாதிடும்போது திடீர்னு கிறு கிறுனு வந்து மயக்கம் வர்ற மாதிரி கீழே விழறாரு. அப்போ ஜட்ஜே பதட்டம் ஆகி எந்திரிக்கறாரே? ஏன்? ஆனானப்பட்ட புரட்சித்தலைவிக்கே கர்நாடகா ஜட்ஜ் எந்திரிக்கலையே? ஒரு சாதாரண சாட்சி மயங்குனதுக்கு ஒய் சோ மெனி பட படப்பு? 


8. ஹீரோ கடவுளுக்கெதிரா வழக்கு போட்டதும் ஆரம்பத்துல பரிகாசம் செஞ்ச மக்கள் பின் அவருக்கு ஆதரவா இருந்தது ஓக்கே, ஆனா கோர்ட்ல அவர் சாதாரணமா மயக்கம் போட்டதுக்கு  என்னமோ ஒளி விளக்கு எம் ஜி ஆர் ரேஞ்ச்க்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் மெழுகுவர்த்தியோட பிரார்த்தனை பண்றது எல்லாம் ஓவரோ ஓவர், நல்ல வேளை இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு அப்டினு பாட்டெல்லாம் போடலை.


9. இந்தப்படத்துக்கு போஸ்டர் டிசைன் யாரு? வேஸ்ட்.  காமெடிப்படமா? மெலோ டிராமாவா? என யூகிக்க முடியாத படி ரொம்ப சராசரியா இருக்கு.. 


10. அக்சய் குமார் கடவுளா வர்ற சீன்ஸே தேவை இல்லைங்கறப்போ அவர் பைக்ல விஜய் மாதிரி சர்க்கஸ் எல்லாம் பண்றது செம காமெடி. பை த பை ஒரு ஜாலி கேள்வி. கடவுள் பாட்டுக்கு தனியா வந்துட்டாரே? ஜோடியையும் கூட்டிட்டு வந்தார்னா கொஞ்சம் ரொமான்ஸும் நடந்திருக்கும் , ஜாலியா டைம் பாஸ் ஆகி இருக்கும்

 http://www.sonakshisinhawallpapers.com/wp-content/uploads/2011/02/sonakshi-sinha-in-black-hot-wallpapers-500x375.jpg



சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புவர்கள் , ஹீரோயிசம் , ஃபைட், தாதா கதை பார்த்து சலித்தவர்கள் பார்க்கலாம். பெண்கள் ரசிச்சு பார்ப்பாங்க.. ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பார்த்தேன்