Thursday, October 25, 2012

துப்பாக்கி - ஏ ஆர் முருகதாஸ் பேட்டி @ விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-b5WrP0UhqsLq0ubeVoR0swzCW1ridIDAjsKfy3yCtHlLkgTpaOYES_VzYEY2eeoc5OqJCePQzTJpagYqWM1lgHmmXrNQdDO9ma-vEZ4L87krtjVYw-pi3VEPGBrY0v6_V_or-ojPzes/s1600/383748_303843279635954_286579361362346_1017341_858724782_n.jpg"ஹீரோக்களிடம் இருக்கும் டெடிகேஷன் ஹீரோயின்களிடம் இல்லை!"

எம்.குணா
'துப்பாக்கி’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வந்து அமரும் ஏ.ஆர்.முருகதாஸ் முகத்தில் திருப்தி ததும்பும் புன்னகை. ''படம் பிரமாதமா வந்திருக்கு. இதுவரை விஜயைப் பிடிக்காதவங்களுக்குக்கூட 'துப்பாக்கி’ விஜயைப் பிடிக்கும்.



இங்கே படம் எடுக்கிறதுகூடக் கஷ்டம் இல்லைங்க... படத்துக்கு ஏத்த தலைப்பு பிடிக்கத்தான் போராட் டமா இருக்கு. ஐந்நூறு ரூபாயைக் கட்டிட்டு கோர்ட்ல கேஸ் போட்டுர்றாங்க. இப்பதான் பெரிய நிம்மதியா இருக்கு!'' - 'துப்பாக்கி’ தலைப் பைத் தக்கவைத்துக்கொண்ட உற்சாகத்தோடு பேசினார் முருகதாஸ்.




 ''தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத காலத்தில் 'குரு சிஷ்யன்’ படத்தை எஸ்.பி.முத்துராமன் 24 நாட்களிலேயே முடித்தார். படமும் ஹிட். ஆனால், இப்போது ஒரு ஹீரோவை வைத்து இயக்கும் படத்தை ஒவ்வோர் இயக்குநரும் வருஷக் கணக்கில் இயக்குவது சரியா?''  



''உங்கள் குற்றச்சாட்டு உண்மைதான். நான் என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஷூட்டிங், கால்ஷீட், பயணம்னு எதைப் பத்தியும் தெளிவான திட்டமிடல் இல்லை. அதுவும் போக, இப்போ தமிழ் சினிமாவுக்கு உலகம் முழுக்க மார்க்கெட்.


 சின்னமனூர் செல்வராசுக்கும் படம் பிடிக்கணும்; சின்சினாட்டி விக்கியையும் படம் அசத்தணும். அதுக்கான மெனக்கெடல், தரம் இதுக்கெல்லாம் ஒண்ணு, ரெண்டு வருஷ உழைப்பு தேவைப்படும்தான். அதைத் தப்பு சொல்ல முடியாது.''



''இந்தி சினிமாவில் உங்களுக்கு மார்க்கெட் இருக்கு. ஒரு தமிழ் ஹீரோவை வெச்சு இந்தியில் படம் பண்ணணும்னா யார் உங்க சாய்ஸ்?''



''விஜய், அஜித், சூர்யா... மூணு பேருமே என் சாய்ஸ்தான். இந்தியில் எனக்கு மட்டும் இல்லை... இவங்களுக்கும் நல்ல ஓப்பனிங் இருக்கு. 'துப்பாக்கி’ ஷூட்டிங் நடந்தப்போ, மும்பையில் எங்கே வெச்சு விஜயைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுபிடிச்சு, சேர்ந்து சேர்ந்து நின்னு போட்டோ எடுத்துக்கிறாங்க இந்திவாலாக்கள்.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjXJhCc7jf3go_t6dhz_4LaKuLii5a63a36ERZq-G4oV9doCZxF_3r5ihE89wxMsX6qI9e0nFsisehXBPh-uqcLIcQuQ8YulhN-YFq9HXzQKSGulrZ8kNlhbGqVL3eTWT9r57QJYM9dmo/s1600/0.jpg


அவருக்கே அது ஆச்சர்யமா இருந்துச்சு. விஜய்க்குள்ள ஒரு பிரமாதமான நடிகன் இருக்கான். இன்னும் சரியான தீனி கிடைக்காமத் தவிச்சுட்டு இருக்கான். அஜித் ஸ்க்ரீன்லதான் சாஃப்ட்டா இருக்கார். நேர்ல பழகும்போது அவர்கிட்ட இயல்பாவே இருக்கும் ஆக்ரோஷம், எமோஷன் எல்லாம் பிரமிப்பா இருக்கும். அஜித்தின் அந்த ராவான எனர்ஜிக்கு ஏத்த கதையில் இன்னும் அவர் நடிக்கலை. ஆக்ஷனோ, காதலோ... டபுள் செஞ்சுரி அடிச்சுட்டுப் போயிருவார் சூர்யா. இவங்க மூணு பேருக்கும் ஏத்த கதைகளை அமைச்சுட்டு நானே அவங்க ஒவ்வொருத்தரையும் இந்தியில் இயக்குவேன்.''




''அது என்ன... சினிமா விழாக்களில் நடிகைகளைப் பற்றிப் பேச்சு வந்தால் நீங்க சட்டுனு கோபப்படுறீங்க?''



''அந்த அளவுக்கு சிலர் என் மனசைக் காயப்படுத்தி இருக்காங்க. என் படத்தில் நடிச்ச ஒரு நடிகை பண்ண அலட்டல், பந்தா எல்லாம்... வேண்டாங்க... நினைச்சாலே சங்கடமா இருக்கு. ஹீரோ வர்ற காட்சி மட்டும் இல்லை, படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரமாதமா இருக்கணும்னு இழைச்சு இழைச்சு வேலை பார்ப்பேன் நான்.


 படத்துல ஒரு சீன்கூடத் தேவை இல்லாம இருக்கக் கூடாதுனு மொத்தத் திரைக்கதையையும் இறுக்கிப் பக்காவா வெச்சிருப்பேன். ஆனா, அந்த நடிகை 'எனக்குப் படத்துல தனியா பாட்டு வேணும்’னு  அடம்பிடிச்சாங்க. அவர் நல்லாத் தமிழ் பேசுவார். குரலும் நல்லா இருக்கும். அதனால, அவரோட சொந்தக் குரல்லயே டப்பிங் பேசச் சொன்னேன்.


http://www.vikatan.com/av/2012/06/mgqwyz/images/p14b.jpg



ஆனா, அதுக்கு பத்து நாள் எக்ஸ்ட்ரா கால்ஷீட் ஆகும்னு தவிர்த்தார். இத்த னைக்கும் என் படங்களில் ஹீரோக்களுக்குச் சரிசமமான ஸ்கோப் ஹீரோயின்களுக்கும் இருக்கும். அதான் சொல்றேன்... இங்கே ஹீரோக்களுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு சில நடிகைகளுக்குச் சுத்தமா இல்லை. இதோ இப்போ 'துப்பாக்கி’யில் நடிச்ச காஜலுக்கு கற்பூரப் புத்தி. நான் நினைச்சதுக்கும் மேல பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அசத்திட்டாங்க.''




''அது என்ன... 'மாற்றான்’ தொடர்பான உங்க ட்விட்டர் கமென்ட்ல 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு’னு சொல்லி இருந்தீங்க. கே.வி.ஆனந்த், சூர்யா... யார் மேல கோபம்?''



''நான் உதவி இயக்குநரா இருக்கும்போதே, ஒளிப்பதிவில் கே.வி.ஆனந்த் சார் ஜாம்பவான். ஒரு சீனியரா அவர் மேல் எனக்கு எப்பவும் மதிப்பு, மரியாதை உண்டு. சூர்யா என் மேல அன்பும் அக்கறையும்கொண்ட நண்பர். அவங்க ரெண்டு பேரையும் காயப்படுத்துறது என் நோக்கம் இல்லை. போன ரெண்டு மாசமாவே யாரோ ஒருத்தர், வேணும்னே என்னைப் பத்தி தப்புத் தப்பா ட்விட்டர்ல கமென்ட் பண்ணிட்டு இருந்தார். அவருக்கு நான் சொன்ன பதில்தான், 'பாப்பா, தள்ளிப்போய் விளையாடு.’ மத்தபடி அதுல வேற எதுவும் இல்லை!''

 நன்றி - விகடன்



http://www.glamourfm.com/wp-content/uploads/2011/03/Kajal-Agarwal-Hot-Photoshoot-in-Red-Dress-6.jpg

2 comments:

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

என்னங்க பேட்டிய இவ்ளோ சீக்கிறம் முடிச்சிட்டிங்க
எனி பர்சனல் எடிட்டிங்

முருகதாஸ் சொன்ன அந்த நடிகையை கண்டுபிடிச்சிட்டேன் ஆனா சொல்லமாட்டேனே
அப்புறம் யாரு கோர்ட்டு கேஸுனு அலையறது

நன்றி அண்ணா விஜய பத்தி பதிவு போட்டதுக்கு

துப்பாக்கிக்கும் வழக்கமான நடுநிலை விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்

சுதா SJ said...

அந்த நடிகை யாரு?????? அசின் ??? அவவ்வ்வ்வ்