Friday, October 26, 2012

ஆரோகணம் - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtlkTxJ1iFmgoiSECtbk5ghCcxge-zbG74omb9KFzCWKwGOcM3n2kGI-KQqX0CoM-e8I2Gilrz8cdcqkzwx-puwvOiQTEM1aQcEU0j7k1qMzGbjq5TfPlQK0R97aRrIXPu9tBOeIgXM-U/s1600/Aarohanam.jpg

எங்கேயும் எப்போதும் படத்துல வர்ற மாதிரி ஓப்பனிங்க்லயே ஒரு ஆக்சிடெண்ட். விபத்துக்கு காரணமானவங்க மேல் தட்டு வர்க்கத்தை சார்ந்த ஃபீமேல் தட்டு சர்ப்பங்கள்.. ஐ மீன் 2 ஹை கிளாஸ் லேடீஸ். விபத்துக்குள்ளானது  ஒரு சாதாரண லேடி.. 


அந்த லேடி மேரேஜ் ஆகி 2 குழந்தைகள் இருக்கு.. தேர்தல் வர்ற நேரத்துல எல்லாம் எப்படி கலைஞருக்கு ஈழத்தமிழர் நினைவு வருதோ அப்படி  இக்கட்டான டைம்ல  எல்லாம் அந்த லேடிக்கு பயங்கர கோபம் வருது.. என்ன கோளாறுன்னா . ஒரு வித மன நோய் .அதாவது சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் தனுஷ்க்கு மயக்கம் என்ன, 3 ஆகிய படங்களில் வருமே அந்த மாதிரி பை போலார் டிஸ் ஆர்டர் வியாதி,.,

புருஷன் காரன் சரி இல்லை.. பொதுவாவே  ஆம்பளைங்க அக்கம் பக்கம் பாரடா சின்ன  வீடுடா, ஆகாசப்பார்வை என்ன?ஜொள்ளு ராசா அப்டிங்கற மனோபவம் உள்ளவங்க என்ற மனோ பாவம் உள்ள அவ புருஷன் அவளை அம்போன்னு விட்டுட்டு வேற ஒரு லேடி பின்னால போயிடறான், எலக்‌ஷன் முடிஞ்சதும் கேப்டனுக்கு ஜெ டாட்டா காட்டின  மாதிரி.. ,


அவ தனியா 2 பேரையும் வளர்த்தறா.ஒரு பொண்ணு, ஒரு பையன், பொண்ணுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியாச்சு . இந்த மாதிரி ஒரு சூழல்ல தான் இந்த விபத்து நடக்குது, என்ன ஆகுது? என்பதே மிச்ச கதை.. 




அபலைப்பெண்ணா, மனநோய் பிடித்த பெண்ணா வர்ற விஜி நடிப்பு ஓக்கே. அவர் நெத்தில இருக்கற எட்டணா சைஸ் குங்குமத்துக்கு சமமா அவர் கண்கள்  அடேங்கப்பா.. சாமி வந்த மாதிரி ஆடும்போதும், திடீர் திடீர்னு  முறைக்கும்போதும் அப்ளாஸ் வாங்குகிறார்.அழகி சீரியல் ரொம்பவே யூஸ் ஆகி இருக்கு போல..



அவரது பொண்ணா வரும் ஃபிகர்  யார்னு சரியா தெரியல , பேரு ஜெயகுஹோனினு நினைக்கறேன். சிக்குன்னு இருக்கு பாப்பா.. மிக கண்ணியமான ஆடை வடிவமைப்பால், கவுரவமான தோற்றத்தால் மனம் கவர்கிறார்.



அழகிரி மாதிரி கெட்டப்ல வரும் ஜெயப்ரகாஷ் தேவை இல்லாத கேரக்டர், அதே போல் சம்பத். உமா பத்மநாபன் பியூட்டி பார்லர்க்கு 2 டைம் அட்டர் டைம்ல போய்ட்டு வந்த மாதிரி ஓவர் மேக்கப், ஆனாலும் ரசிக்க வைக்கிறார், அவர் கூட வரும்  லேடி கி கி கி


http://www.tamilnow.com/movies/gallery/aarohanam/tamil-movie-aarohanam-332.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஏய், டிரைவர் வெச்சுக்கலையா? 


நோ, பிரைவேசி போயிடும் 



2. அண்ணே, பார்ட்டிக்கு லேட் ஆகுது


 அந்த பார்ட்டியை  விடுடா, இந்த பார்ட்டியை பாரு



3. இந்தக்காலத்துல பொண்டாட்டி நல்லா இருக்கும்போதே  தொடுப்பு வெச்சுக்கறானுங்க, இவ இப்படி இருக்கா.. நான் வேற ஒரு பொண்ணு கூட போனா என்ன தப்பு?


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-aarohanam-movie-audio-launch/images/tamil-movies-aarohanam-movie-audio-launch01.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தமிழ் சினிமான்னா மினிமம்  2 மணி நேரமாவது ஓடற மாதிரி நீளம் வேணும் , இல்லைன்னா தமிழனுக்கு குடுத்த காசு வேஸ்ட்டோன்னு எண்ணம் வந்துடும், இருந்தாலும்  30 நிமிஷத்துல சொல்ல வேண்டிய கதையை சுவராஸ்யமாய் ஒன்றரை மணி நேரம் இழுத்து சொன்னது.



2. கே பாலச்சந்தர் மூலம் பப்ளிசிட்டிக்காகவோ, நிஜமாகவோ ஒரு பாராட்டை வாங்கி அதை விளம்பரம் பண்ணியது 



3. ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன், வேலை வாங்கிய விதம் , வெரி லோ பட்ஜெட் ( ஜஸ்ட் 34,55,500 தானாம்)  எல்லாம் அபாரம், திரைக்கதை அமைத்த விதம்  அழகு.


http://www.cinemahour.com/gallery/events1/audioreleases/Aarohanam%20Movie%20Audio%20Launch/5684599Aarohanam_Movie_Audio_Launch-(7).jpg

திரைக்கதையில் சில ஆலோசனைகள்



1. படத்துல முதல் ரீல்லயே அந்த லேடி உமா கிட்டே இங்க்லிபீஸ்ல பேசிட்டே இருக்கு, அது எப்படி சாமான்ய ஜனங்களுக்கு புரியும்? அட்லீஸ்ட் திரையிலாவது தமிழ்  மொழிபெயர்ப்பை ஓட விட்டிருக்கலாம், ஒரு லைன், 2 லைன்னா பரவாயில்லை, கிட்டத்தட்ட  ஏ 4 ஷீட்ல ஒன்றரை பக்கம் பேசுது


2. ஜெயப்ரகாஷ்க்கு இங்க்லீஷ் தெரியாது ஓக்கே, ஆனா இங்க்லீஷ் தெரிஞ்ச ஒரு பி ஏ வைக்கூடவா கூட வெச்சுக்க மாட்டார்? ஒரு எம் எல் ஏ வேற அவரு.. அந்த காமெடி எடுபடலை




3. நோயால் பாதிக்கப்பட்ட ஹீரோயின் ஹாஸ்பிடல் உள்ளே.. பையனும், பொண்ணும்  டாக்டர் எதிரே. சைக்கிள் கேப்ல டாக்டர் எதுக்கு  ஆறுதல் சொல்ற மாதிரி அந்த பொண்ணு தோள்ல தட்டிக்குடுக்கறாரு? பயப்பட ஒண்ணும் இல்லைன்னு வெறும் வசனமா சொன்னா போதாதா? அவர் ஃபேமிலி டாக்டரும் இல்லை, அடிக்கடி பார்த்து பழக்கம் ஆன டாக்டரும் இல்லை


4. ஓப்பனிங்க் சீன்ல 45 கிமீ வேகத்துல போகும் கார் ஹீரோயினை ( 50 வயசு ) இடிச்சு அவரை 7 அடி உயரத்துல தூக்கி போடுது. ஆனா அவர் மேல ஒரு கீறல் கூட விழலை.. நம்பற மாதிரியே இல்லை. ஆனா சால்ஜாப்பா ஒரு டயலாக் பின்னால சேர்த்து இருக்கீங்க. ( இதெல்லாம் மெடிக்கல் மிராக்கிள், 10 வது மாடில இருந்து  கீழே விழுந்தவன் எல்லாம் துளி காயம் இல்லாம பிழைச்சிருக்கான்னு ) ஆனாலும் உறுத்துது



5. படத்துல ஹீரோயினுக்கு என்ன ஆச்சு? என்ற சஸ்பென்சை மெயிண்ட்டெயின் பண்ணீன மாதிரி விபத்து நடந்ததையே கடைசில காட்டி இருந்தா இன்னும் பெப் கூடும்


6.  ஹிட்சாக்கின் கருத்தான ஒரு சஸ்பென்ஸ்  எப்படி இருக்கனும்கற  விளக்கப்படி காட்சிகள் இல்லை. ஆடியன்ஸ்க்கு  ஹீரோயின்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுடுது, ஆனா படத்துல வர்ற கேரக்டர்ஸ்க்கு தெரியல , அவங்க பாட்டுக்கு 3 ரீல்க்கு தேடிட்டே இருக்காங்க. போர் அடிக்குதே. பொதுவாவே தமிழ் சினிமால பலர் பண்ற தப்பு இதுதான். புலன் விசாரணை படத்துல வர்ற மாதிரி கேரக்டர் காணாம போனா என்ன ரீசன்? எதனால காணோம் என்பது ஆடியன்சுக்கும் தெரியக்கூடாது


7. இந்தக்கதைக்கு சம்பந்தம் இல்லாம அந்த ஜொள்ளு ஜக்கு கேரக்டர் எதுக்கு?


8.  எப்படிப்பட்ட கெட்ட புருஷனும் பொண்டாட்டியை திட்டுவான், கண்டுக்காம இருப்பான், அன்பு செலுத்தாம இருப்பானே தவிர  “ நீ கைல காசு இல்லைன்னா என்ன பண்ணுவே? தொழிலா? அப்டினு எல்லாம் கேட்க மாட்டான். ஒரு பெண்ணா பெண்ணாதிக்கவாதியா அந்த வசனத்தை வெச்சாலும் ஆண்கள், பெண்கள் யாருமே அதை ஏத்துக்க மாட்டாங்க..


9. ஒரு மோசமான கணவன் உலகத்துல  பலர் இருக்கலாம், ஆனா மோசமான அப்பா அதுவும் பெண் குழந்தை கொண்ட அப்பா இருக்க முடியாது,  ரொம்ப ரேர். அப்படியே இருந்தாலும்  இந்த மாதிரி மேரேஜ் டைம்ல இப்படி நடந்துக்க மாட்டான்.


10.  எப்பவும் ஆணை வில்லனா காட்டனும்னா மனைவி மேல பாசம் இல்லாத மாதிரி காட்டுனா ஏத்துக்குவாங்க, ஆனா மகள் , மகன் மேல பாசம் இல்லாத கேரக்டர்னா செற்கையா இருக்கும்.


11. ஹீரோயினுக்கு விபத்தில் காயம் ஆகி , அந்த காயத்தை ஏற்படுத்திய குற்ற உணர்வில் ஹாஸ்பிடல் செலவை ஏற்று  அப்படியே  நோயை குணப்படுத்தினார்கள் என்று கதையை கொண்டு போய் இருக்கலாம், அதே போல் ஹீரோயினுக்கு அந்த நோய் வந்ததே கணவனின் கொடுமை தாங்காமல் தான் என்பது மாதிரி காட்டி இருக்கலாம்







எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 சி. பி கமெண்ட் - இது நல்ல படம் எடுப்பதற்கான ஆரோக்யமான முயற்சி தானே தவிர பலரும் சொன்னது போல் இது  பிரமாதமான படம் அல்ல. பெண்கள் , ஆரோக்யமான சினிமாவை விரும்புவர்கள் பார்க்கலாம்.


 இந்தப்படத்தை பற்றி சிலாகித்து கே பாலச்சந்தர் ஆற்றிய மேடைப்பேச்சு


http://www.adrasaka.com/2012/10/blog-post_620.html

3 comments:

கோவை நேரம் said...

வணக்கம் சித்தப்பு....உங்களுக்கு மட்டும் டைம் கிடைப்பது எப்படி,,,?

சுதா SJ said...

விஜிக்கா படம் பார்க்கலாம் என்று இருக்கேன்.. :))

'பரிவை' சே.குமார் said...

ம்... பார்க்கலாமா....