Monday, October 29, 2012

மயிலு - சினிமா விமர்சனம்

http://mimg.sulekha.com/tamil/mayilu/mayilu_m.jpg

அழகிய கிராமம்.ஹீரோவுடன் வலிய வந்து  பழகிய ஹீரோயின் ஒரு அசந்தர்ப்பமான சந்தர்ப்பத்துல 2 பேரும் மேரேஜ்க்கு முன்னேயே  கில்மா பண்ணிடறாங்க. 2 பேரும் சொந்த பந்தம் தான். அத்தை பொண்ணு முறைதான், நோ வில்லன்ஸ். ஆனா ஹீரோ எதிர்பாராத விதமா அந்த கிராமத்துக்கு சாமி குறி சொல்லும் , அருள் வாக்கு சொல்லும் கோடாங்கியா மாறிடறாரு.கோடாங்கிக்கு பொய் சொன்னா அறவே பிடிக்காது.


கோடாங்கியா மாறின பின் கிட்டத்தட்ட சாமியார் கணக்கா நித்தி மாதிரி இல்ல ஒரிஜினல் அந்தக்கால சாமியார் மாதிரி ஹீரோ ஆகிடறாரு. மேரேஜ் பண்ணிக்கற மாதிரி தெரியல.வழக்கமா எல்லாரும் பயன்படுத்தும் ஆயுதமான “ நான் மாசமா இருக்கேன்”னு ஹீரோயின் ஒரு பொய்யை சொல்லி மேரேஜ் பண்ணிக்கறா.


 அதுக்குப்பின் என்ன நடக்குது என்பதே கதை. இடைவேளை வரை படம் ஜாலியா கிராமத்து கல்யாண கலாட்டாக்கள் , இழவு வீட்டில் நடக்கும் சுவராஸ்யமான பதிவுகள் , கரகாட்டம் , கில்மா ஆட்டம்னு செமயா போகுது. ஹீரோ கோடாங்கியா மாறினதும் திரைக்கதை  படுத்துக்குது.



படத்துல பாராட்டப்படவேண்டிய முதல் அம்சம் ஹீரோயின் ஷம்மு  தான். முமைத்கானின் கண்ணிய வடிவாக்கமாய் உருமாற்றிய முக அமைப்பு , மீனாவின் நடிப்பு சாயல் , ஆல்பம் ஹீரோயின் தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீக்கு தங்கச்சி மாதிரியும்  இருக்காங்க.லாங்க் ஷாட்ல தூக்கக்கலக்கத்துல பார்த்தா அமலா பால் மாதிரி . புதுமுகம் மாதிரியே தெரியல. என்னா நடிப்பு. வெல்டன்!கிட்டத்தட்ட  ஜோதிகா நடிப்புக்கு கிட்டே வந்துட்டாங்க.. மாத்தி யோசி, பாலை படங்கள்ல நடிச்சிருந்தாலும் இதுதான் ஷம்முவுக்கு முதல் படம் , வெரி லேட் ரிலீஸ்


 இவர் காஞ்சிவரம் என்ற படத்துல பிரகாஷ்ராஜ்க்கு மகளா நடிச்சவர்.


 http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/abirami/uploads/Kollywood/2012/Oct/26/Mayilu_Movie_Stills/profile_Mayilu_Movie_Stillsf19658604d31626dca9d5cefc4dcedb8.jpg



இசை ஞானி இளையராஜா இசையில் ரொம்ப நாளைக்குப்பிறகு கிராமத்து தெம்மாங்கு ப்பாட்டுகளை குதூகலமா கேட்க முடியுது. ஆனால் இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம், ஏன்னா இளையராஜா கிட்டே நாம இன்னும் பெருசா எதிர்பார்க்கிறோம்.ஆனா ஒரு விஷயத்துல இவரை பாராட்டனும்.பெரிய பேனர் கம்பெனிக்கு ஒரு மாதிரி, சின்ன பேனர் லோ பட்ஜெட்டுக்கு ஒரு மாதிரின்னு இவர்  இசை அமைப்பதில்லை.. 


ஹீரோ ஸ்ரீ புதுமுகம், வந்தவரை ஓக்கே, கோடாங்கி ஆன பின் கெட்டப் எடுபடலை. மைனா விதார்த் 4 சீன்ல வர்றார் . கஞ்சா கறுப்பு காமெடிக்கு .

http://moviegalleri.net/wp-content/gallery/palai-movie-stills/palai_movie_stills_66.jpg

 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. பின்னால திரைக்கதைக்கு உபயோகமா இருக்கட்டும்னு ஆரம்பத்துல இருந்தே  ஹீரோயினை கிட்டத்தட்ட அலைஞ்சான் பார்ட்டியாக காட்டியது சபாஷ். பல இடங்களில் நாயகியின் முக பாவனைகள் பிரமிக்க வைக்கின்றன, குறிப்பா ஹீரோ ஹீரோயினுக்கு முன்னே நிற்கும் கோழியை பிடிக்க 2 கையையும் விரித்து கிட்டே வருகையில் ஹீரோயின்  தன் கழுத்துக்கு கீழே குனிந்து பார்த்துக்கொண்டு அவனை தூண்டுவதும் , அதைத்தொடர்ந்து வரும் கலாய்ப்புகளும் தமிழுக்கு புதுசு..மணிரத்னம், ஷங்கர் கூட நாயகிகளை இவ்வளவு துணிச்சலா காட்டியது இல்லை ( மணிரத்னத்தின் மேக்சிமம் எக்ஸ்போஸ் ஹீரொயின் அக்னிநட்சத்திரம் அமலா ,ஷங்கர் -இந்தியன் மணீஷா , ஊர்மிளா)


2. ஒரு கிராமத்துல கல்யாண கலாட்டாக்கள் எப்படி நடக்கும்? மாப்ளை  வீடு பொண்ணு வீட்டுக்கு லாரில வரும்போது ஏட்டிக்கு போட்டியா டேப்ல பாட்டு போட்டு விடுதல், கலாட்டா , பாட்டுக்கு பாட்டு என களை கட்டும் ஆரம்ப கட்ட 3 ரீல்கள் கலக்கல்ஸ் ரகம் 


3. கஞ்சா கறுப்பு இழவு வீட்டில் தனக்கு அழைப்பு இல்லை என புலம்பி ரணகளப்படுத்தும் காட்சி , பஞ்சாயத்து தனக்கு அபராதம் விதித்ததும் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பது, அவங்க கொஞ்சம் குறைச்சதும் மீண்டும்  ஒரு முறை விழுந்து இன்னும் குறைப்பது என இயல்பான ரசிக்க வைக்கும் கிராமத்து கலாட்டாக்கள் 


4. ஹீரோயின் வீம்புக்காக ஹீரோவின் உள் பனியன் போட்டு வரும் சீன். என்னதான் அந்த பனியனுக்குள்ளே பிரா போட்டிருந்தாலும்  ஒரு பெண்ணை வெறும் முண்டா பனியன் மட்டும் அணிந்து பார்ப்பதில் கிக் தான் 



5. கிராமத்துக்கு கெட்ட சகுனம் வந்தாச்சு என்பதை நாசூக்காக இயற்கை உணர்த்தும் ஏரியில் செத்துப்போன மீன்கள் காட்சிப்படுத்துதல் ஒளிப்பதிவு அழகு.. 


6. ஹீரோயின் ஹீரோவை வம்புக்கு இழுப்பதும் அவராக ஹீரோவை கலாட்டா பண்ணும் அனைத்து காட்சிகளும் இயற்கை. வீட்டில் தனிமையில் இருவரும் கில்மா பண்ணுவதற்கான சூழல் வருவதும் கிக் ஏற்றும் காட்சிகளும்  நாசூக்கு 

7.
1) யாத்தே                                        -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, பவதாரனி( கொண்டாட்ட பாட்டு)


2) துக்கமென்ன                              -           ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரீட்டா ( சோகம்)



3) ஆத்தி சொக்க                             -            ரீட்டா ( கிளு கிளு)

4) கல்யாணமாம் கல்யாணம்   -            ரீட்டா, சின்னப்பொன்னு,டிப்பு


5) என்ன குத்தம்                               -             இளையராஜா, தர்ஷினி


6) நம்மளோட பாட்டு தாண்டா  -             கார்த்திக்,திப்பு,சைந்தவி கோரஸ் ( உறுமி பாட்டு )

 என ஆறு பாடல்களில் 3 ஹிட் , 3 கேட்கும்படி இருக்கு


http://cine-talkies.com/tamil/movie-stills/mayilu-movie-stills/mayilu-movie-stills-101.jpg




திரைக்கதையில் சில ஆலோசனைகள் , சில சந்தேகங்கள் 


1.  ஹீரோயின் மேரேஜ் ஆகி முதல் இரவுல எதுக்காக ஹீரோ கிட்டே அந்த உண்மையை சொல்றா? அவன் கோடங்கி, பொய் சொன்னா பிடிக்காது, அப்டினு ஆல்ரெடி உணர்ந்தவ தானே? மேரேஜ் ஆகி குழந்தை எல்லாம் பிறந்து நல்ல புரிதல்க்கு பின் அதை சொல்லி இருக்கலாமே? ஏன் முந்திரிக்கொட்டைத்தனம்? பொதுவா பொண்ணுங்க இந்த மாதிரி விஷயம்னா கமுக்கமா இருப்பாங்களே? 


2. ஹீரோ மேல தான் எல்லா மிஸ்டேக்கும். ஆனா ஹீரோயின் தப்பு பண்ணின மாதிரியே திரைக்கதை நகருதே? குற்ற உணர்ச்சில ஹீரோயின் துடிக்கறது ஓவர். ஹீரோயின் பொய் சொன்னது தப்புன்னா மேரேஜ் ஆன உண்மையை வீட்டுக்கு சொல்லாம ஹீரோ மறைப்பதும் பொய் தானே? ஒரு பொய்யை வாய் விட்டு சொன்னாலும் அது பொய் தான், ஒரு முக்கிய உண்மையை சொல்லாமல் மறைத்தாலும் அது பொய் தானே?


3. ஹீரோ ஹீரோயினை மேட்டர் பண்ணி முடிச்ச பின்  மேரேஜ் பற்றி பேசவே இல்லை.. கோடாங்கி ஆக அவர் நிர்ப்பந்திக்கப்படும்போது எனக்கு ஒரு கமிட்மெண்ட் இருக்கு என்னால கோடாங்கி ஆக முடியாதுன்னு அடிச்சு சொல்ல வேண்டியதுதானே? மேரேஜில் இருந்து எஸ் ஆகவே அவர் கோடாங்கி ஆகறாரோன்னு ஆடியன்ஸ்க்கு ஒரு டவுட் வருவது மாபெரும் மைனஸ் 


4. ஹீரோயின் உடல் நலம் இல்லாமல் இருக்கும்போது கிராமத்து மருத்துவர்கள் செக் பண்ணி ஒண்ணும் இல்லைனு சொல்லிடறாங்க, அந்த காட்சிக்கு அடுத்த காட்சியில் ஹீரோயின் தான் கர்ப்பம் என ஹீரோவிடம் சொல்றா. அப்போ ஏன் ஹீரோ கேட்கலை? நேத்துத்தானே டாக்டர்ஸ் செக் பண்ணாங்க, ஏதும் சொல்லலையே? என . சரி வா டாக்டர்ட்ட போய் பார்ப்போம்னு ஏன் அவன் கூப்பிடலை?


5. முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு படங்களில் வருவது போல் ஹீரோ தனியா படுப்பதும், ஹீரோயின் அவரை வீழ்த்த நினைப்பதும் கிளு கிளு மேட்டர் தான். ஆனா இந்தக்கதைல ஆல்ரெடி 2 பேருக்கும் மேட்டர் நடந்து முடிஞ்சுடுது. அப்புறம் அவங்க மேரேஜ்க்கு பிறகு கில்மா பண்ணினா என்ன? பண்ணாட்டி என்ன? எதுக்கு அப்படி மெஸ்மரிச லுக்?   ( கவுண்டமணி - அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே, இனி நீ  வயசுக்கு  வந்தா என்ன? வராட்டி என்ன? காமெடி போல் ) 


http://www.koodal.com/cinema/gallery/actress/shammu/shammu_5_326200933323123.jpg


6. பொதுவா வயசுப்பசங்க, பொண்ணுங்களை வீட்டில் தனியா விட்டுட்டு பெற்றோர் போக மாட்டாங்க. அதுவும் மாமன்முறைப்பெண்ணை திடீர்னு தன் பையனோட வீட்ல தனியா விட்டுட்டு எப்படி வெளியூர் போவாங்க ? அதே போல் ஹீரோயின் அம்மா தன் வீட்டை விட்டு வெளியேறும் காரணமும், ஹீரோவின் வீட்டில் தங்கி  ஹீரோயின் ஹீரோ கூட கில்மா பண்ணி முடிஞ்ச அடுத்த சீன்ல மீண்டும் தன் வீட்டுக்கு அழைத்து செல்வதும் செம காமெடி. கூட்டிக்கொடுக்கவே கூட்டிட்டு வந்தாரா? அப்படின்னு ஒரு பெஞ்ச் ரசிகன் நக்கல் அடிக்கறார்  ஹா ஹா 


7. ஹீரோவும் , ஹீரோயினும் தனியா இருக்கும் அந்த காட்சி செம கிளு கிளு, ஆனா அந்த டெம்போவை மாற்றி திடீர்னு சாதா டூயட் ஆக்கியதில் தெரியுது இயக்குநரின் பக்குவமின்மை. அதை செம கில்மா சிச்சுவேஷன் ஆக்கி இருக்க வேண்டாமா? 


8.  குடிகாரர்கள் வாமிட் எடுக்கும் சீன்களில் கேமரா ஆங்கிள்களில் கவனம் தேவை. என்னமோ நம்ம மேலயே வாமிட் பண்ற ,மாதிரி இருக்கு 


 9. கிராமங்களில் திருமணமான பொண்ணுங்க நெற்றி வகிட்டில் குங்குமம் வெச்சுக்குவாங்க. படத்தில் காட்டப்படும் அனைத்து கிராமத்துப்பெண்களில்  ஒருவர் கூட  அப்படி வைக்கலையே? ஒரே ஒரு சீன்ல க்ளைமாக்ஸ்ல ஹீரோயின் காட்சியின் முக்கியம் கருதி வைக்கறாரு. ஆனா அவருக்கு மேரேஜ் இடைவேளை அப்பவே ஆகிடுது


10 . கிராமங்களில் தாவணி அல்லது ஜாக்கெட் ஏதோ ஒன்றுக்கு மேட்சுக்கு மேட்சாகத்தான்  ஜடையில் ரிப்பன் கட்டுவாங்க. ஆனா ஹீரோயின் பல காட்சிகளில் பச்சை ஜாக்கெட், மஞ்சள் தாவணி ஆனால் சிவப்பு ரிப்பனில் வர்றார்.


11. படத்தில் க்ளைமாக்ஸ் காட்சி மகா மோசம். சும்மா எளனி  சீவுவது போல் ஹீரோ ஹீரோயின் தலையை சீவிடறார். கள்ளக்காதலன் வெச்சிருந்த மனைவிக்கு கணவன் கொடுக்கும் தண்டனையை ஒழுக்கமான மனைவிக்கு தருவது ஏற்க இயலாது. க்ளைமாக்ஸ் ஐடியா கொடுத்தவரை  அடுத்த பட டிஸ்கஷனுக்கு கூட்டிச்செல்வதும் , காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும் 1 தான்  


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU-hHEIkdlFRIhr3Qhu54fRPiawb07u6fXjIcbYpz1cQd1tDnZj67oHxjCPAlo5bu4zxrO6crepp1iR576MSuUcRciDDBOskQmpK4LDMas4WMHdg6HUJpQx2vxa_XGRJw2EqfqlUHbj6U/s320/Shammu-hot-romance-with-Simbu.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்  


1.  நாயை ஏவுனா நாய் வாலை ஏவுச்சாம் 


2. கோழி இறகுக்கூடைக்குள்ளே  எறும்பு ஊறுது போல 


 எச்சி ஊறுதுன்னு சொல்லு புள்ள.. உனக்கு கோழிகுழம்புதான் வேணும்னா கேட்டு வாங்கிக்கோ



3. கட்டில் போட்டு படுத்து தூங்கினாலும் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.. டேய்.. எங்கேடா போறே? கிளாஸ் நடந்துட்டு இருக்கு. 



சார், கட்டிலை வீட்டுல இருந்து எடுத்துட்டு வரப்போறேன்



4. இது பழைய கை மாதிரி தெரியுது?  ( டபுள் மீனிங்க் )


5. பெரிய ஆள் , சின்ன ஆள் தராதரம் பார்த்து பேசுப்பா.. 


 காலம் காலமா நீங்க  பெரிய ஆளாவே இருப்பீங்க?நாங்க உங்க கால்ல விழுந்தே கிடப்போமா? 



6. உங்க பூசாரித்தனமும் வேணாம், பொங்கச்சோறும் வேணாம் 


7. வெடக்கோழி போடற முத முட்டையை எடுத்து  மனசுக்கு பிடிச்சவங்களோட காலடி மண்ணெடுத்து தொட்டு அவங்க  வர்ற வழில உடைச்சா  சாரைப்பாம்பு கணக்கா நம்மையே சுத்தி சுத்தி வருவாக 


8. ஊர்ல இருக்கற எல்லா பசங்களும் வந்து  விரட்னாலும் இவ விரட்டிடுவா, இப்போ இப்படி பம்முறாளே? இன்னா மேட்டரா இருக்கும்? 


9.  பல்லி விழுது தள்ளி உக்காருங்க


----------

பல்லி விழுது தள்ளி உக்காருங்க

அயய்யயோ 


 பார்த்தியா . ஒரே வரிதான் சொல்லும் விதத்துல பதட்டத்தை ஏற்படுத்த முடியுதா? 


10. என்னை விட்டுட்டுப்போகனும்னா வெட்டிட்டுப்போ 


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 40 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே 






சி.பி கமெண்ட்ஸ் - இளைய ராஜா ரசிகர்கள் பாட்டுக்காகவும் , கிராமத்துக்கலாச்சாரங்களை ரசிப்பவர்கள் ,பிரமாதமான ஒரு நடிகையின்  நடிப்பை ரசிப்பவர்கள் படம் பார்க்கலாம். முதல் பாதி செம ஸ்பீடு , பின் பாதி போரு , க்ளைமாக்ஸ் அக்கப்போரு. ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன் .இந்தப்படம் 5 வருஷம் முன்னேயே எடுத்தாச்சு, இப்போதான் ரிலீஸ் ஆகுது, பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் பேனர்ல வந்திருந்தா  இன்னும் நல்லா இருந்திருக்கும்


http://fingertipszone.com/cinema_images/tamil/mayilu/mayilu_2.jpg

0 comments: