Tuesday, October 30, 2012

நீலம் புயலால் கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு ஆபத்தா?

1. கரையைக் கடக்கும் நீலம் புயல்- கலங்க வைக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையம்!
 Environmentalists Worry Over Cyclone Nilam
சென்னை: சென்னை அருகே மகாபலிபுரம் அல்லது கல்பாக்கத்தில் நாளை கரையைக் கடக்கப் போவதற்கு முன்பே நிலம் புயல், ஒரு "சூழல்" புயலை உருவாக்கியிருக்கிறது.


மகாபலிபுரம்


சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் மகாபலிபுரம் இருக்கிறது. இது ஒரு சுற்றுலாத்தலம். பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல்லவர் காலத்து கற்சிற்பங்கள் சிற்பக் கலையின் சாட்சியமாக இருந்து வருகிறது. ஏற்கெனவே இயற்கையின் கோரத்தாண்டவத்தால் பல கற்கோவில்கள் கடலுக்குள் புதையுண்டு போயிருக்கின்றன. தற்போதும் கூட எப்போது வேண்டுமானாலும் எஞ்சியிருக்கும் கற்சிற்பங்களையும் கடல் கபளீகரம் செய்துவிடக் கூடும். இந்நிலையில் நாளை மகாபலிபுரத்தில் நிலம் புயல் கரையைக் கடந்தால் நூற்றாண்டுகள் வரலாறு பேசும் எச்சங்கள் ஏதாவது மிஞ்சுமா என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவலை!


கல்பாக்கம்


தமிழகத்தில் கால் நூற்றாண்டுகாலமாக செயல்பட்டு வந்தாலும் கல்பாக்கம் அணு உலையால் பாதிப்பு இருந்து வருகிறது என்றே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது கூடங்குளம் அணு உலைக்கு மிகக் கடுமையான போராட்டம் ஓராண்டாக நடந்து கொண்டிருக்கிறது.


நேற்று கூட சென்னையில் 25க்கும் மேற்பட்ட இயக்கங்களின் தலைவர்கள், தொண்டர்கள் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சட்டசபை முற்றுகைப் போராட்ட நடத்தி கைதாகி இருந்தனர். இந்நிலையில் நாளை நிலம் புயல் கரையைக் கடக்கும் என்று சொல்லப்படுகிறது.



கல்பாக்கத்தில் கரையைக் கடக்கும் போது கடலை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் அணு மின்நிலையத்திற்குப் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. மேலும் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் அடிக்கப் போகும் புயல் காற்றில் அணு உலைகள் என்னாகுமோ என்றும் கேள்விக்கணைகளை அடுக்கி வருகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

நெல்லை : பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் ஆபாச படம் திரையிடப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் திரைப்படத் தணிக்கை குழுவினர் கடந்த 26.8.2003 அன்று அந்த தியேட்டருக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். இதில் ஆபாச படத்தில் நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் ஆகியோர் நடித்த காட்சிகள் இடம் பெற்றன.


இதையடுத்து பிலிம் சுருளை கைப்பற்றிய போலீசார், நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கர் உள்ளி¢ட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் தியேட்டர் மேலாளர் பாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து மற்ற 9 பேர் மீதான வழக்கு நெல்லை குற்றவியல் முதலாவது எண் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ராமலிங்கம் முன்னிலையில் நடந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து நடிகை ஷகிலா, தினேஷ் உள்ளிட்ட 9 பேரும் கோர்ட்டில் ஆஜராயினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் 9 பேரையும் விடுதலை செய்வதாக கூறினார். 




Inline image 1


சுடர் முருகையா அவர்களின் மின்னஞ்சல் முகவரி [email protected]. இந்த மின்னஞ்சல் முகவரிக்கும் கவிதைகளை அனுப்பலாம்.

நன்றி:

திரு. கன்னிக்கோவில் ராஜா, மின்மினி ஹைக்கூ இதழ்.
தட்ஸ் தமிழ்
தினகரன்

2 comments:

பொன் மாலை பொழுது said...

//நூற்றாண்டு வரலாறு பேசும் எச்சங்கள் ஏதாவது மிஞ்சுமா என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கவலை.//


அந்த வரலாற்று ஆய்வாளர்களையும் நாளை முதல் அங்கே கடல் கரையின் அருகிலேயே இருக்கசொல்லுங்கள்.

பொன் மாலை பொழுது said...

தேவையற்ற வதந்தியை பரப்ப நீங்களும் காரணமாக இருக்கவேண்டாம் செந்தில்.
Be sensitive while posting some thing very sensitive.