Wednesday, September 19, 2012

புரோட்டா சூரி பேட்டி @ கல்கி - சுசி , சசி, ரசி , வி வி சி

பரோட்டா சூரி
 http://www.mysixer.com/wp-content/uploads/2011/12/Soori.jpg
வளர்த்தது சுசியண்ணே... வார்த்தது சசியண்ணே!

சஞ்சய்

சாப்பாட்டு ஐட்டங்களில் எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்காதது பரோட்டாதான். ‘வெண்ணிலா கபடிக்குழுபடத்துல வர்ற காமெடிக்காக பதிமூணு பரோட்டாவை சாப்புட வெச்சார் சுசீந்திரன் அண்ணன். ‘களவாணிபடத்துல பஞ்சாயத்து வாயில பால் டாயிலு ஊத்துவோமே... அந்த மாதிரி கொலை முயற்சிதான் என்னைய பதிமூணு பரோட்டா சாப்புட வெச்சதும். ஆனா, இன்னிக்கு பரோட்டா சூரிங்கிற பேரே நெலச்சுப் போச்சு.


சாமி கும்பிடாதீங்கன்னு soன்ன பெரியார் எப்படி கடைசி வரைக்கும் ராமசாமிங்கிற பேரைச் சுமந்து அலைஞ்சாரோ... அந்த மாதிரிதான் என்னோட நெலமையும்..."- சோக்க வைக்கும் வட்டார வழக்கில் வயிறு குலுங்க வைக்கிறார் சூரி. ‘மனம் கொத்திப் பறவை’, ‘பாகன்’, ‘சுந்தரபாண்டியன்என சமீப காலப் படங்களில் தவிர்க்க முடியாத காமெடிச் சூறாவளி சூரிதான்.


இந்த வெற்றி எத்தனை வருடப் போராட்டத்தின் பலன்?


வருஷமாண்ணே முக்கியம்? ஒரு தடவை ஆபாவாணன் soன்ன வார்த்தைங்கதான் ஞாபகத்துக்கு வருது. ‘சினிமாவுக்கு வராட்டி நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருப்பீங்க?’ன்னு அவர்கிட்ட கேட்டாங்க. ‘சினிமாவுக்கு வர முயற்சி பண்ணிக்கிட்டு இருப்பேன்னு soன்னார். 96-வது வருஷ லாஸ்டுல சென்னைக்கு வந்தவன். அலையாத தெரு இல்ல. பாக்காத ஆள் இல்ல. சினிமாவுல நுழையிற வரைக்கும் வயித்தக் காப்பாத்தணுமே... அதனால என்ன வேலை கிடைச்சாலும் செய்வேன்.


நான் பெயின்ட் அடிக்காத பில்டிங்கே தி.நகர் ஏரியாவுல இல்ல. 13 வருஷ போராட்டத்துக்கு அப்புறம்தான் சுசீந்திரன் அண்ணனோட பார்வை கிடைச்சது. சங்கம் தியேட்டர்ல உட்கார்ந்துவெண்ணிலா கபடிக்குழுபடம் பாக்குறேன். பரோட்டா காமெடியைப் பாத்துட்டு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது. ‘எனக்கா இத்தனை கைதட்டல்னு நெனச்சதுல ஃபிட்ஸ் வந்த மாதிரி கைகாலு ரெண்டும் இழுத்துக்கிச்சு. அத்தனை வருஷ போராட்டத்தையும் ஒத்த நிமிஷத்துல ஜெயிச்ச மாதிரி இருந்துச்சு!"


சமீபத்துல உங்களை சிலிர்க்க வெச்ச பாராட்டு?



‘போராளிபடம் பார்த்துட்டு சுசீந்திரன் அண்ணன் பேசினாரு. ‘சசிக்கும் சமுத்திரக்கனிக்கும் நீ ரொம்ப கடமைப்பட்டிருக்கடா... ரொம்ப சரியான இடத்துல உன்னைய கொண்டுவந்து நிறுத்தி இருக்காங்கன்னு சொன்னாரு. கண்ணுல தண்ணி வந்திடுச்சு. என்னைய வளர்த்தது சுசீந்திரன் அண்ணன்னா... நல்ல நடிகனாய் வார்த்தது சசியண்ணன்தான். அவரோடசுந்தரபாண்டியன்படத்துல என்னைய தூக்கி வெச்சுக் கொண்டாடி இருக்காரு. நாலு பேரை ஜெயிக்க வெச்சு ரசிக்கிற மனுஷன் சசியண்ணன். அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன்."


சினிமாவுல நினைச்ச இலக்கை அடைஞ்சுட்டீங்களா?


இப்போதானே விழுந்து எழுந்து நடக்குற குழந்தையாகி இருக்கேன். இன்னும் நெறைய தூரம் ஓடுற அளவுக்கு ஆசையும் கனவும் இருக்கு. பாண்டிராஜோடகேடி பில்லா கில்லாடி ரங்கா’, கனி அண்ணனோடநிமிர்ந்து நில்’, சற்குணம் அண்ணனும் தனுஷும் இணைஞ்சு பண்ணுற படம்னு நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சமீபத்துல பொண்டாட்டிய அழைச்சுக்கிட்டு தி.நகர்ல உள்ள ஜவுளிக் கடைக்குப் போயிருந்தேன்.

நம்மையும் ஒரு மனுஷன்னு மதிச்சு சில பேரு ஆட்டோகிராப் கேட்டாங்க. அப்போ அங்கே நின்ன செக்யூரிட்டி கூட்டத்தை சரிபண்ண வந்தாரு. நான் அவரோட கையப் புடிச்சு, ‘அண்ணே என்னைய தெரியலையா... நாந்தாண்ணே இந்த ஃப்ளோருக்கு பெயின்ட் அடிச்சவன். நீங்ககூட சரியா அடிக்கச் சொல்லித் திட்டுவீங்களே... ஞாபகம் இல்லியான்னு கேட்டேன். நம்பவும் முடியாம நம்பாம இருக்கவும் முடியாம அவர் திகைச்சு நின்னாரு பாருங்க... யாருக்குள்ள யாரு ஒளிஞ்சிருக்காங்கன்னு யாருக்குமே தெரியாதுண்ணே..."

1 comments:

Unknown said...

கல்கியில படிச்சாச்சு cp !
- வாழ்த்துக்கள் !