Sunday, September 02, 2012

அறிமுகப் படத்தில் உள்ளம் கொள்ளைகொண்ட அழகிகளின் பேட்டி

அறிமுகப் படத்தில் உள்ளம் கொள்ளைகொண்ட அழகிகளின் பயோடேட்டா இங்கே.... 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkwtg3hEyQ6Q8bTfrkvpKK5lxEedoBskAzJuhql8EDeuonnDWS5O4KhegY_xXvUjmTm51fzsZHsY2yPio032uhsu1gwqQIm2hX2-rVH2Nsj88Cz4idFypSjYjc1sQwiqurxVyrHbYk3iDg/s1600/Manisha+Yadav+at+Vazhakku+Enn+189+%25284%2529.jpg

'வழக்கு எண் 18/9’-ன் மனீஷா பெங்களூரு கிளி! 

''சமீபத்திய சந்தோஷம்?'' 


'' 'வழக்கு எண் 18/9’ படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆச்சு. அந்தப் பட புரொமோஷனுக்காக ஆந்திரா போனப்போ, அங்கே தமன்னாவைப் பார்த்தேன். 'பாலாஜி சக்திவேல் சாரோட 'கல்லூரி’ படம்தான் எனக்குப் பெரிய பிரேக் கொடுத்தது. அவர் படத்துல நடிச்சா, சீக்கிரமே முன்னுக்கு வந்துடலாம். நல்லா பெர்ஃபார்ம் பண்ணுங்க’னு வாழ்த்தினாங்க. மறுநாளே சுசீந்திரன் சார் இயக்கத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்’ படத்துக்கு கமிட் ஆனேன். அப்புறம் ஒரு தெலுங்குப் பட வாய்ப்பும் வந்திருக்கு!''



'' 'வழக்கு எண்’ படத்தில் கஷ்டமான சீன்?'' 


''அதுல என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துற ஹோம் வொர்க் எதுவும் இல்லை. என் வயசுப் பொண்ணுங்க எப்படி இருப்பாங்களோ, அதை அப்படியே பண்ணேன். ஆனா, நான் சைக்கிள்ல போகும்போது கார் வந்து வேகமா ஆக்சிடென்ட் பண்ற சீன்லதான் ரொம்பவே பயந்துட்டேன். அப்போ நான் பயந்து பதறி நின்னதை நினைச்சா, இப்பவும் சிரிப்பு வருது!''


''ரோல்மாடல்?'' 


''ஜோதிகா!''



அத்வைதா.. 'கொண்டான் கொடுத்தான்’  விழி அழகி! 

http://cinema.lankasri.com/photos/full/actresses/others/advaitha12.jpg

''நடிகை ஆனது எப்படி?'' 


''கிளாசிக்கல் டான்ஸ், ஃபோக், ஃப்ரீ-ஸ்டைல், மோகினி ஆட்டம்னு அத்தனையும் அத்துப்படி. தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா அஞ்சு வருஷம். ரோட்ல போனா, என்னைப் பார்க்கிற பசங்க கமென்ட்ஸ் அடிக்காம இருக்க மாட்டாங்க. இவ்வளவு தகுதிகளை வெச்சுக்கிட்டு நடிக்க வராம என்ன பண்றதாம்!'


''பியூட்டி டிப்ஸ்?'' 


''வெந்நீர் அதிகம் குடிப்பேன். நல்ல சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவேன். தினமும் பேஸிக் எக்சர்சைஸ், டென்ஷனா இருந்தா சாக்லேட். அவ்வளவுதான்!''


''சினிமா ஃப்ரெண்ட்?'' 


''சூப்பர்மேன் இளவரசு! ’கொண்டான் கொடுத்தான்’ ஷ§ட்டிங்ல குழந்தை மாதிரி என்னைப் பார்த்துக்கிட்டார். எந்தப் பிரச்னையோட போய் நின்னாலும், சுலபமாத் தீர்த்துவெச்சிடுவார்!''


''ஹீரோயின் போட்டி பலமா இருக்கே? சமாளிப்பீங்களா?'' 



''நான் மத்தவங்களைப் போட்டியா நினைக்கல. எனக்கு நான்தான் போட்டி!'



'ராட்டினம்’ ஸ்வாதி கேரள மோகினி! 

''ஸ்வாதி வரலாறு?'' 


'’திருச்சூர். ப்ளஸ் டூ. ஒரு தம்பி. மத்தபடி வரலாறு இனிமேதான் படைக்கணும்!''


''சினிமாவுக்காகப் பட்ட கஷ்டம்?'' 


''திருச்செந்தூர் கோயில்ல முதல் சீன். நானும் ஹீரோ லகுபரனும் பேசுறது, நடக்குறது, விளையாடுறதுனு மான்டேஜ் ஷாட்ஸ்தான். அதெல்லாம் டக் டக்னு டேக் ஓ.கே. ஆகவும் 'ஐ.... சினிமா ஈஸி’னு நினைச்சுட்டேன். மறுநாள் அம்மா அடிக்கி றப்போ, நான் அழுவுற சீன். ஆனா, அழுகையே வரலை. அப்புறம் நிஜமாவே அடிக்கச் சொல்லிட்டாங்க. பளார்னு விழுந்த அறையில், நிஜமாவே அழுதேன்!''



''கலகலன்னு பேசுறீங்க... ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியோ?'' 


''அய்யோ... படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி நான் செம சைலன்ட். வீட்லயே அதிகம் பேச மாட்டேன். யூனிட் ஆட்களோட பேசிப் பேசி வாயாடி ஆகிட்டேன். படபடன்னு நான் பேசுறதைப் பார்த்து ஃப்ரெண்ட்ஸே 'நீயாடி?’னு ஆச்சர்யப்படுறாங்க!''


http://moviegalleri.net/wp-content/gallery/pathirama-pathukkunga-swathi-hot-pics/pathirama_pathukkunga_actress_swathi_stills_9083.jpg


5 comments:

கோவை நேரம் said...

மாலை வணக்கம்

ananthu said...

பேட்டியும் , படங்களும் சூப்பர் , கிளுகிளுப்பான படம் ஒன்னு கூட இல்லியே ?! என்ன
திருருந்திட்டீங்களா ?

Yoga.S. said...

நல்ல பேட்டி!நல்ல படங்கள்.(போட்டோஸ்)

Yoga.S. said...

ananthu said...
பேட்டியும் , படங்களும் சூப்பர் , கிளுகிளுப்பான படம் ஒன்னு கூட இல்லியே ?! என்ன
திருந்திட்டீங்களா ?///!!!!!!!!!???????

ராஜி said...

நல்லதொரு பயனுள்ள ஆராய்ச்சி