Sunday, September 30, 2012

சி.பி .செந்தில்குமார் -ன் கேவலமான ஜோக்ஸ்

`1.யுவர் ஆனர்..,ஜாமீன்ல வெளில வந்து நான் என் பக்தர்களுக்கு உபதேசம் பண்ணலாமா?!

பண்ணிக்கோ! ஆனா, தூர தேசம் மட்டும் போய்டாதே...,

..................................................................

2. போலீஸ் வளையத்தை விட்டு சாமியார் தப்பிச்சுட்டாராமே?!

ஆமா! அக்னி வளையத்துக்குள்ள போய் உக்காந்துக்கிட்டார்.

................................................................

3. மனைவிக்குப் போய் பயப்படுறிங்களே!?

அவ அடிச்சா ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்..., வாங்குறது யாரு?!

............................................................................

4. அந்த நடிகை பேட்டில குழப்பறாங்களே?!

எப்படி?

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னெ என்ன பண்ணுனீங்கன்னு கேட்டதுக்கு “மாடலிங்க்”னு சொன்னாங்க. மாடலிங்குக்கு முன்னேன்னு கேட்டதுக்கு சினிமான்னாங்க.

...............................................................................

5. உனக்கும் அந்த ஆந்த்ரா ஃபிகருக்கும் எப்படி லவ் உண்டாச்சு?

நான் பேசறது அவளுக்கு புரியலை. அவ பேசறது  எனக்கு புரியலை. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கனும்ங்குறதுக்காக லவ் பண்ணோம்.

............................................................................



Apple Iphone Ku competition.
Banana Iphone :P


6. ஃபோட்டோகிராபர் பொண்ணை ஒரு தலையா காதலிக்குறேன்.

சீக்கிரமா உன் லவ்வை எக்ஸ்போஸ் பண்ணு.

..............................................................................

7. உங்க படத்தோட கிளைமேக்ஸுல ஹீர்ரோ, ஹீரோயின், வில்லன் எல்லாரும் இறந்துடுற மதிரி காட்டுறிங்களே ஏன்?

அப்பதான் எவனுக்கும் சம்பளம் தரத் தேவையில்லை.


....................................................................

8. புரடியூசர் சார்.., எனக்கு ஒரு படம் டைரக்ட் பண்ண சான்ஸ் குடுங்க. கொன்னு  எடுத்துடுறேன்.

படம் எடுத்து கொன்னுடுவிங்களோ!?

............................................................................

9.சைக்குளோன், லைலா(லைலா புயல்) மீண்டும் வருகிறதாம்...,
 அதனால் எல்லா ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிடுங்க. மிண்டோ ஃபிரெஷ் சாப்பிடுங்க. ஏன்னா லைலாவை பண்ணா இம்ப்ரெஸ், மஜ்னு சாப்பிட்டாரு மிண்டோ ஃபிரெஷ்.

.................................................................................

10.  ஒரே ஃபிகருக்கே எல்லா பணத்தையும் செலவு பண்ணி ஏமாந்து விடாதே -நியூ  நித்தி ஆனந்தா.

.........................................................................



11. நான் ஏன் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னேன் தெரியுமா? இங்கிலீஷ்ல ரொம்ப சின்ன வார்த்தை.

I ஸ்வீட்டான வார்த்தை லவ். அனபான ஆள். நீ(U) அதனாலதான்.  I love you னு சொன்னேன்.

............................................................................

12.எவ்வளவு பெரிய சூப்பர் ஃபிகரா இருந்தாலும் எலுமிச்சைப்பழம் மாதிரி கலரா இருந்தாலும், ஐஸ்வர்யா ராய், தமன்னா சாயல்ல இருந்தாலும் அந்த ஃபிகரோட நிழல் கருப்பாதான் இருக்கும்.

........................................................................

13. வாழ்க்கை அழகானதா? சவாலானதா?

அழகான சவால்.

........................................................................

14. டியர்  என்னை லவ் பண்றீங்க. ஆனா, மேரேஜ் பண்ணிக்க மாட்டீங்கறிங்களே ஏன்?

உன் மீது “மையல்”ன்னா ஓ.க்கே. சமையல்ன்னா நாட் ஓக்கே.

......................................................

15.100, 50, 150, 200, 250, 300 இந்த நம்பர்ல  எந்த நம்பர் உங்களுக்கு பிடிச்சிருக்கோ அந்த அமௌண்டுக்கு என் நம்பருக்கு ரீசார்ஜ் பண்ணிடுங்க.

................................................................................





16.  சூரியனை சுற்றினால் வெந்து போவீர்கள். சுரிதாரை சுற்றினால நொந்து போவீர்கள்- ஊரை மட்டும் சுற்றுவோர் சங்கம்.


................................................................





17. மாட்டுக்கு புல் வை.

ஓக்கே டாடி. ரூ.500/ குடுங்க


எதுக்குடா?


மாட்டுக்கு ஒரு ஃபுல் வெச்சுட்டு கன்னுக்குட்டிக்கு ஒரு குவார்ட்டர் வைக்கத்தான்.

.......................................................................

18. எப்படி உனக்கு மட்டும் அமாவசைல நிலா தெரியுது?

”தேங்க்ஸ் டூ வாசன் ஐ கேர்”.

...............................................................................

19. நொடிக்கு நொடி தடுமாற்றாம்தான். இருந்தாலும் ஒரு மாற்றமாகத்தான் இருக்குது என் வாழ்வு. உன் மீது நான் கொண்ட காதலால்.

....................................................................................

20. கற்பனைகள் எப்போது கடவுள் ஆனதோ மனிதன் அப்போதிலிருந்தே முட்டாள் ஆகிவிட்டான். 




---------------------





டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு யோசிச்சு ஜோக் எழுதுனாலும் மொக்கை, படு கேவலம்னு சொல்றாங்க. அதனால சிரித்து மகிழ சிரந்த ஜோக்குகள்னு டைட்டில் வெச்சா நிறைய பேருக்கு வேலை.  டைட்டில்ல நாமளே கேவலமான ஜோக்ஸ்னு சொல்லிட்டா ஒரு பய இந்த ப்ப்பதிவை குறை சொல்ல முடியாது கி கி  - பை  விளக்கம் கொடுத்தே வீணாப்போனோர் சங்கம் ( யார் அந்த வீணா? ஹி ஹி )



2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவ்வளவு கேவலமான ஜோக்குகளை போட்ட சிபி -யாருக்கு எல்லோரும் ஒரு ஓ... போடுங்க...

Ivan Yaar said...

இதுல ஜோக் எங்கே இருக்கு ?