Sunday, July 22, 2012

கொலை செய்யப்பட்ட நடிகை லைலா கான் - கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம்

Laila Khan murder: a family vacation that turned tragic




இந்தி நடிகை லைலா கான், அவரது தாய் மற்றும் உறவினர்கள் என, ஆறு பேரை சொத்துக்காக கொலை செய்தேன் என, போலீசில் சிக்கியுள்ள பர்வேஸ் தக் தெரிவித்துள்ளார். இவர், லைலா கானின் தாயார் ஷலீனாவின் மூன்றாவது கணவர்.



மகாராஷ்டிர தலைநகர் மும்பையில், ஓஷிவாரா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் லைலா கான். பிரபல பாலிவுட் நடிகை. இவரது இயற்பெயர் ரேஷ்மா படேல். 


இவரின் தந்தை நாதிர் படேல், தாய் ஷலீனா படேல்,50. இவரின் மூத்த சகோதரி ஹஸ்மீனா. சகோதரர்கள் சாரா மற்றும் இம்ரான். இவர்கள், பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள். திடீர் மாயம்பாலிவுட் நடிகை லைலா கான், கடைசியாக, 2008ம் ஆண்டு, பிரபல நடிகர் ராஜேஷ் கன்னாவுடன், "வாபா என்ற இந்தி படத்தில் நடித்தார். தன் தாய் ஷலீனா படேலுடன் வசித்து வந்த லைலா கான், கடந்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி முதல், தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மாயமாகி விட்டார்.

அவர்களை காணவில்லை என, அவரின் தந்தை நாதிர் படேல், மும்பை போலீசில் புகார் செய்தார். புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை. நடிகையின் மொபைல்போன் எண்ணை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மும்பை புறநகர் பகுதி, லகாட்புரியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து, கடைசியாக பேசியது தெரிந்தது. அங்கு போலீசார் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை.


எலும்பு கூடுகள்: நடிகை லைலா கான் மற்றும் குடும்பத்தினர் மாயமாகி ஓராண்டுக்குப் பின், காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில், அவரது உறவினரும், வனத்துறை ஒப்பந்ததாரருமான பர்வேஸ் தக் என்பவர், போலீசில் சிக்கினார். மோசடி வழக்கில் கைதான அவரிடம் நடத்திய விசாரணையில், மாயமாகிவிட்ட லைலா கான் மற்றும் அவரது குடும்பத்தினர், கொலை செய்யப்பட்டு விட்டது தெரிந்தது. 


இரு தினங்களுக்கு முன், பர்வேஸ் தக்கை அழைத்துக் கொண்டு, நாசிக் அருகே உள்ள லகாட்புரி பகுதியில் உள்ள லைலா கானின் பண்ணை வீட்டுக்கு, போலீசார் சென்றனர். அங்கு போலீசார், பர்வேஸ் தக் குறிப்பிட்ட இடங்களை தோண்டிப் பார்த்த போது, ஆறு எலும்புக் கூடுகள் சிக்கின. அவற்றை போலீசார் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பினர்.

மூன்றாவது கணவர்தொடர்ந்து பர்வேஸ் தக்கிடம் போலீசார் விசாரித்த போது, அவர் கூறியதாவது:""நான் லைலா கானின் தாயார் ஷலீனாவின் மூன்றாவது கணவர். கடந்த ஆண்டு லைலா கான், விடுமுறையை கழிப்பதற்காக, தன் குடும்பத்தினருடன் லகாட்புரி பண்ணை வீட்டிற்கு சென்றார். அப்போது, தன் இரண்டாவது கணவரான ஷேக் ஆசிப்பை, சொத்தின் பாதுகாப்பாளராக நியமிக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். 


அதற்கான பொது அதிகார பத்திரத்தையும் தயார் செய்தார். இதனால், நான் மிகுந்த கோபம் அடைந்தேன். சொத்தை அபகரிக்க திட்டமிட்டேன்.ஆத்திரத்தில் லைலாவின் தாயார் ஷலீனாவை கொலை செய்தேன். அதை நடிகை லைலா கானும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் பார்த்து விட்டதால், எனக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு வாய்ப்புள்ளதால், அவர்களையும் தீர்த்துக் கட்டினேன்.


 கொலை செய்த பின், அவர்களது உடல்களை பண்ணை வீட்டிலேயே புதைத்தேன்.இவ்வாறு பர்வேஸ் தக் கூறினார்.நடிகை லைலா கானின் தாய் ஷலீனாவின் முதல் கணவர் நாதிர் படேல், இரண்டாவது கணவர் ஷேக் ஆசிப் மற்றும் மூன்றாவது கணவர் தான் பர்வேஸ் தக்.


நன்றி - தின மலர்

1 comments:

Unknown said...

கொலையாளி சொன்னா சரிதான் தல....