Tuesday, June 05, 2012

நான் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கேன்னா.......


 https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-snc6/149793_358002940929367_102856449777352_1006961_1666476748_n.jpg




1.மிஸ், நான்தான் உங்களை லவ் பண்ற முதஆளா?



ஆமா, லவ் பண்ணி 1 வருஷம் ஆகியும் சும்மா தொண தொணன்னு பேசிட்டு மட்டும் இருக்கற முதஆள் நீங்க தான்


---------------------------


2.  நான் ஏன் இவ்வளவு முட்டாளா இருக்கேன்னா எப்படியும் பொண்ணுங்க அறிவாளியை முட்டாள் ஆக்கிடுவாங்க, ஏன் அவங்களுக்கு சிரமம்?ஹி ஹி


------------------------------


3 மனசுக்குப்பிடிச்சவரின் தவறுகளை ( -) நாம் கண்டு கொள்வதில்லை,பிடிக்காதவர்களின் சின்ன சின்ன குறைகளை நாம் ஒதுக்கி விட முடிவதில்லை


-----------------------------------

4. பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் மத்திய அரசிலிருந்து விலகுவோம் - மு.க # சோனியா - நீங்க முதல்ல விலகுங்க, அப்புறம் நாங்க வாபஸ் வாங்கறோம்


-----------------------------------

5  நம் உள்ளங்கைகள் இரண்டும் இணைந்திருந்தபோது நம் நான்கு கண்களும் கலந்திருந்தது

----------------------

6.  பொய் சொன்ன வாய்க்கு விருந்தே கிடைத்தது. நீ அழகென்றேன்! உன் உதட்டால் மென் ஒத்தடம் இட்டாய்!


---------------------------

7.  சேவல்களை நாம் என்றும் ரசித்ததே இல்லை, நம் இருவரையும் பிரிக்கும் முதல் பறவை அதுதான்



---------------------------

8. . என் கவிதைகளுக்கான கருப்பொருள் தீரும்போதெல்லாம் உன் கண்களை ஒரு முறை பார்த்து என் கற்பனையை கூர் தீட்டிக்கொள்வேன்



---------------------------------
9. .  உன் வாசம் வீடெங்கும் விரவிக்கிடக்கிறது.. உன் அழகு அறை எங்கும் பரவிக்கிடக்கிறது! நீ மாலை வரும் வரை தாக்குப்பிடிக்க அவை போதும்


-------------------
10.  . உன் அழகு ஜெவின் அகம்பாவம் போல் அதீதமாய்! என் அன்பு கலைஞரின் பொய் போல் கணக்கற்றதாய்!



------------------------------


11. சென்னை மெரினாவில் கடல் சீற்றம்: பொதுமக்கள் குளிக்க தடை ..# இதை சாக்கா வெச்சு வீட்டுல கூட குளிக்காம இருந்திடாதிங்க


------------------------------

12. பெண்கள் கண்ணுக்குப்போடும் ஐ டெக்ஸ் மையை நரை மீசை மறைக்க பயன்படுத்தலாம் என முதன் முதலில் கண்டு பிடித்தவன் தமிழனே! # டையிங்க் மாஸ்டர்


-------------------------------------


13. திருமணம் ஆனதும் ஆண்கள் கற்றுக்கொள்ளும் முதல் பாடம் மனைவி சேலை கட்டும்போது அவர்கள் காலடியில் அமர்ந்து சேலைக்கு மடிப்பு பிடிப்பதே:)



------------------------------------

14. குட் மார் னிங்க் மேடம் என்றேன், முறைத்தார், சிரித்தேன் # அப்ரைசல் ஊ ஊ ஊ ஊ



----------------------------


15. கணவன்மார்கள் பனியன் அணியும்போது தங்கள் மனைவியின் உதவி நாடுவதில்லை, ஆனால் ... ஹி ஹி ஹி மியாவ் # நீதி - ??


------------------------------


16,  கலகங்கள் ஒழிந்தால் ,கழகங்கள் அழிந்தால் தமிழ்நாட்டுக்கு நன்மை பிறக்கும்,தமிழன் வாழ்வு சிறக்கும்


----------------------

17. நித்யானந்தாவுக்கு சைவ சித்தாந்தம் தெரியுமா? புதிய "வீடியோ'வால் சர்ச்சை # நான் பேசிக்கலி சைவம், பிசிக்கலி அசைவம் - நித்தி



-----------------------------


18.நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் வறுமை பாதிக்குப் பாதி குறைந்து இருக்கிறது.''- மன்மோகன் சிங் # அத்தனை ஏழைகளையும் நாடு கடத்தீட்டீங்களா?


--------------------------------

19. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், பி.ஏ.சங்மாவை ஆதரிக்க வேண்டுமா- ஏ.பி.பரதன் # மொடாக்குடின்னா ஓக்கேவா?


------------------------------

20.  பாரத் பந்த், பஸ் ஓடலைன்னா லீவா?ன்னு கேட்டேன், அப்போ ஆஃபீஸ்லயே தங்கிக்கோன்னுட்டாரு டேமேஜர் , நற நற


------------------------------



3 comments:

chinnapiyan said...

வழக்கம்போல் எல்லாம் கலந்து. நன்றி வாழ்க வளர்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20.ஆவது , உண்மையிலேயே டேமேஜர்தான்.

முட்டாப்பையன் said...

http://www.etakkumatakku.com/2012/06/blog-post_05.html

ஆல் பார்டீஸ் இங்க வாங்க.