Monday, April 09, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 5


பண்ணிக்குட்டி ராமசாமி:
1. உங்க பாசுக்கு (ஆபீஸ்) நீங்க பண்ணிட்டு இருக்கறது தெரியுமா? தெரிஞ்சா என்ன செய்வீங்க?

ஹி ஹி யோவ் ராஸ்கல் ராம்சாமி.. நான் என்ன கொள்ளை கொலையா பண்றேன்.. ரவுசு..?!கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போறதுதானே?ஃபீல்டு ஒர்க்கர்ஸ் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்?ஆனாலும் தெரிஞ்சா சங்குதான் ஹி ஹி ஆஃபீஸ் மேனேஜர் ஃபோன் நெம்பர் கேட்ட்ராதேயும் அடுத்த கேள்வியா.. ஹி ஹி 





2. உங்க ஸ்கூல் டைம் கேர்ள்பிரண்டை [அதான் முன்னாள் (இப்பவும் முன்னாள்தானே?) காதலி] இப்போ திடீர்னு பார்க்கும் போது, ஏன்டா சிபி இன்னும் நீ திருந்தலியான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?


ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் )  


3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?

10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை.. 


4. நீங்க இப்படி வாராவாரம் வெள்ளிக்கெழமைன்னா பிட்டுப்படம் பார்க்கறது வீட்ல தெரியுமா?


ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)


5. திடீர்னு நமீதாவை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவீங்க?

எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)


6. நீங்க கிழி கிழின்னு விமர்சனத்துல கிழிச்ச படத்தோட டைரக்டரை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன்?

சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. 


7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது.  இருக்கும்..


8. என்னைப் போன்றவர்கள் உங்களை கலாய்க்கும் போது சமய்ங்களில் ஓவராகவும் போய்விடுகின்றது. எப்பொழுதாவது வருத்தப்படும்படி நேர்ந்ததுண்டா?

ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களில் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. 

9. நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?

யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?


10. பதிவு எழுதி அதுனால அடிவாங்கி இருக்கீங்களா? இல்ல வேற தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?

கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேஸ் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்.. 

11. திரைத்துறையில் நுழைவதற்கு முயற்சி செஞ்சிருக்கீங்களா? இல்ல இனிமே செய்வீங்களா? என்ன பண்ண போறீங்க?

சினிமாத்துறை லட்சியம்.. சின்னத்திரை நிச்சயம்./.... நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்க ஆசை.. ஆனா அதுல கலந்துக்க 10 படம் எடுக்கனும்.. ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. அது போக.. ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?



நாற்று - நிரூபன்: 

சிபி அவர்களிடம் இரு வேறுபட்ட கேள்விகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன். 



1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?


       அடுத்த கட்டம் என்ற ஒரு சுவராஸ்யம் தான்.. இதற்கு அடுத்த கட்டம் என்று ஒன்று இருந்தே தீரும்.. காலத்தின் கைகளில் அந்த மாற்றம் நடந்தே தீரும்.. 





2. முது பெரும் நகைச்சுவைப் படைப்பாளி என்ற அடிப்படையிலும், உங்களின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்தும் நான் உங்களிடன் எழுப்பும் வினா,
வலைப் பதிவினூடாக ஆக்க இலக்கியங்கள் அல்லது படைப்பிலக்கியங்களின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தமிழக இலக்கிய சஞ்சிகைகளுக்கு நிகரான வளர்ச்சியினை இவ் வலைப் பதிவுகளும் எட்டக் கூடிய அல்லது பரந்து பட்ட அளவில் வாசகர்களிடம் சென்று சேரக் கூடிய வழி முறைகள் உருவாகுவது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா?


     இப்போதே அதன் தாக்கம் அதிகமே.. ஃபிஷர்மேன் ட்வீட் ஏற்படுத்திய தாக்கம் பிரமாதம்.. முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் ரிசல்ட் தெரிய 7 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது நெட்டில் வரும் விமர்சனங்களால் படம் ரிலீஸ் ஆகி 4 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிரது. பட தயாரிப்பாளர்கள் இணைய எழுத்தாளர்கலை மதிக்கிறார்கள்..
இணைய வாசகர்கள் இப்போது சராசரியாக 10000 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.. இது பல மடங்கு உயரும்,உயரனும்.. 


ஜோஸ்பின் பாபா:

நண்பா, உங்கள் நகைச்சுவை உணர்வின் பின் புலன் என்ன?

   ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோக சம்பவங்கள் இருக்கும். சிலர் அந்த சோகங்களை மனசுக்குள் வைத்துப்பூட்டிக்கொண்டு மறுகுகிறார்கள்.. சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. தானும் சிரிக்க மற்ரவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலை.. அந்த கலையை நான் 12 வது படிக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து விட்டேன்..

சார்லி சாப்ளின் கவிதை ஒன்று நினைவு வருது..
"நான் மழையில் நனைய விரும்ப காரணம்
என் கண்ணீர் யாருக்கும் தெரியாமலே போகட்டும் என்று தான்"
நான் நகைச்சுவை மழையில் நனைவதும் மற்றவர்களை நனைய வைப்பதற்கும் அதுவே காரணம். 



மதிசுதா 

1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும். 
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?



ஹா ஹா நேரே கேட்காமல் சைட்ல நின்னா கேக்க முடியும் ( SIDE   NOT SIGHT) 
ஹெட் வெயிட் எனக்கு இல்லாததற்குக் காரணம் நிஜமாகவே என் வீடு சுடுகாட்டின் அருகே தினம் தினம் பிணங்கள் போகும் பாதையில் வீடு அமையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை எளிதில் புரிந்து கொள்வான். 

அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன். 


2.தங்கள் கருத்துப்படி ஒரு பதிவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?


     மனிதனாக இருக்க வேண்டும். தன்னால் யாருக்கும் கெடுதல் வரக்கூடாது. ஏதாவது செய்தால் அது மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்.நமக்குள்ள அடிச்சுக்க கூடாது. சிரிக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் விழிப்புணர்வு பதிவுகள் போடலாம்


சூ. மஞ்சு - யாழ் கணினி நூலகம்

1. உங்களை பதிவுலகத்திற்கு வர தூண்டியது எது? அதாவது என்ன நோக்கத்திற்காக காலடி வைத்தீர்கள்? 

 அப்படி  ஒரு நோக்கம் எல்லாம் ஒண்ணூம் இல்லை. நல்ல நேரம் சதீஷ் தான் என்னை இங்கே இட்டாந்தார்.. ஏதாவது திட்டனும்னா அவரை திட்டுங்க ஹி ஹி





   ஆனந்த விகடன் இல் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போடும் ட்வீட்கள் வலை பாயுதே என வர ஆரம்பித்தது.. பலத்த வரவேற்பை பெற்றது.. அதிலும் புகுந்து பார்த்துடலாம்னு நினைச்சேன். அதே போல் கேபிள் சங்கரின் பிளாக் பற்றிய விமர்சனம் விகடனில் வந்தது.. நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..


2. அந்த நோக்கத்தை அடையும் திசையில் உங்கள் பயணம் தொடர்கிறதா? 


ம் .. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் காலம் தான் நல்ல பதில் சொல்லும், கூடவே வாசகர்களும் நண்பர்களூம் தான் சொல்ல வேண்டும்.



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4, 5 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 - இதன் 4 ஆம் பாகம் படிக்காதவங்க  http://www.adrasaka.com/2012/04/4.html

23 comments:

Unknown said...

மதியம் வணக்கம்!

கடம்பவன குயில் said...

கழுவுற மீன்ல நழுவுற மீன் நீங்கன்னு இப்பவும் நிருபிச்சுட்டீங்க......ராமசாமி அண்ணன் கேள்விகளுக்கு நல்லாவே நழுவல் பதில்கள்......

கல கல பேட்டி.....

சேகர் said...

ஒவ்வொரு பதில்களும் நகைச்சுவை மிகுந்தவையாக உள்ளது.. எப்டி தான் இப்டி எழுதுரீன்களோ...

தனிமரம் said...

வித்தியாசமான பேட்டியும் அதன் பதில்களும் இருந்துச்சு. தலைக்கனம் பதில் ஜோசிக்கின்ற வைக்கின்றது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மதியத்திற்கு அப்புறமான வணக்கம்!

rajamelaiyur said...

கேள்வி :
பதிவுகள் முலம் நீங்கள் மாதம் மாதம் சம்பாதிப்பது எவ்வளவு ? ( என்னை போல நல்ல , பாசமான , உண்மையான நண்பர்களே .. என டயலாக் விடக்கூடாது )

rajamelaiyur said...

கேள்வி :
நமக்கு பிடித்தது என நினைத்து பகிர்ந்த ஒரு செய்தியால் உங்களுக்கு பிரச்னை வந்த நிகழ்வு நடந்துள்ளதா ?

rajamelaiyur said...

கேள்வி : சொந்தமாக பல பதிவு எழுதினாலும் Copy & Paste பண்ணும சில பதிவுகளை வைத்து உங்களை குறை சொல்பவர்களை பற்றி என்ன நினைகின்றேர்கள் ?

rajamelaiyur said...

கேள்வி :எப்போவாது ஏன்டா இந்த பதிவுலகிற்கு வந்தோம் என நினைத்ததுண்டா ?

rajamelaiyur said...

கேள்வி : பதிவுலகில் உங்கள் வாரிசு யார் ?

முத்தரசு said...

ம்

ஹாலிவுட்ரசிகன் said...

அனேகமான கேள்விய நைஸா நழுவீட்டிங்களே?

தினேஷ்குமார் said...

வணக்கம் பாஸ் ... இப்பதான் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமா முடியுது இனி நானும் வருவேன்

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள் சிபி.

R. Jagannathan said...

பிட்டுப் படம் பார்த்த அனுபவம் - கணக்கு வாத்தியாரால தான சமாளிக்க முடியல? அதுக்கப்புறம் நீங்க எப்பவும் கணக்குல சென்டமாமே?!

கனிமொழி - ராசா சோக்கு இப்ப போட முடியுமா?!

-ஜெ.

முட்டாப்பையன் said...

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.

முட்டாப்பையன் said...

C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.

முட்டாப்பையன் said...

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.


C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.

முட்டாப்பையன் said...

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.


C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.

முட்டாப்பையன் said...

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.


C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

முட்டாப்பையனுக்கு என் கண்டனங்கள்!

முட்டாபையனின் பெயரை போலவே அவரின் கருத்துக்களும் உள்ளது.

ராஜி said...

நல்ல நேரம் சதீஷ் தான் என்னை இங்கே இட்டாந்தார்
>>>
பதிவுலகுக்கே சூனியம் வச்ச புண்ணியவான் அவர்தானா?! கைக்கு சிக்கட்டும் அப்புறாம் இருக்கு அவருக்கு கச்சேரி

மாதேவி said...

கலக்கல்.