Wednesday, August 31, 2011

மங்காத்தா - மீடியம் ஹிட்டா? மெகா ஹிட்டா? - சினிமா விமர்சனம்

http://www.thangameen.com/Images/ContentImages/admin/mangatha-016.jpg 

பொறி பறக்கும் ஒன் லைன்  ஸ்டோரி, மாஸ் ஓப்பனிங்க் ஹீரோ,கிளாமர் குயின்ஸ்ஸாக கட்டுடல் கன்னிஸ் 3 முத்தான ஃபிகர்ஸ் , சூப்பர் ஹிட் ஸாங்க்ஸ் 4 இத்தனையையும் கையில் வைத்துக்கொண்டு வெங்கட் பிரபு சிக்ஸர் அடிப்பார் என்று பார்த்தால் ஃபோர் அடிக்கவே தட்டு தடுமாறி இருக்கிறார்..

ஏற்கனவே மணிரத்னம் திருடா திருடா படத்தில் எடுத்த ஒன் லைன் தான்.. 500 கோடி பணம் , அதை அபேஸ் பண்ண அந்தப்படத்தில்  3 கேங்க் , இந்த படத்தில் 2 கேங்க்,ஒரே வித்தியாசம் இந்தப்படத்தில் போலீஸ் ஆஃபீசர்ஸே வில்லன் வேலையை செய்கிறார்கள்.. 

அஜித்துக்கு கொஞ்ச நாள் கேப்க்கு பிறகு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு.. ஆண்ட்டி ஹீரோ..ஆனால் அதற்காக அவர் 40 வயசு கேரக்டருக்கு 50 வயசு மாதிரி ஓவரா நரை முடி காட்டி இருக்க தேவை இல்லை.. டான்ஸ் காட்சிகளில் புது சுறு சுறுப்பு, சில மெனக்கெடல்கள்,வாக்கிங்க் போறதை எல்லாம் குறைச்சு ,இடைவேளை ட்விஸ்ட்டின் போது வாலி சிரிப்பு சிரித்து பல புதிய நடிப்பின் பரிமாணங்களை தொட முயற்சி செய்துள்ளார்.. வரவேற்கலாம்..

திரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா, பீமா படங்களோடு ஒப்பீடு செய்கையில் இதில் அவர் மேக்கப் , கெட்டப், நடிப்பு எல்லாம் சுமார் தான்.. பாடல் காட்சிகளில் கூட அவரால் சோபிக்க முடியாமல் போனது சோகமே... 


http://www.southdreamz.com/wp-content/uploads/2011/08/Mankatha-trisha-hot.jpg

லட்சுமிராய் ஆள் செம ஹைட் என்பதால் வில்லி ரோலுக்கு நல்ல பொருத்தம்,அவரை முடிந்த அளவு “யூஸ்” பண்ணிக்கொண்டது இயக்குநரின் சாமார்த்தியம்.

அங்காடித்தெரு அஞ்சலிக்கு தம்மாந்தூண்டு கேரக்டர்.... ஆண்ட்ரியாவுக்கும் அதே..

ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன் கிழடு தட்டிப்போன முகத்துடன் வருகிறார்.. படத்தில் வரும் எல்லா போலீஸ் கேரக்டர்களும் கிராப்பை குறைத்து க்ளோஸ் கட்டிங்க்கில் வரும்போது இவர் மட்டும் ஹிப்பி தலையுடன் ஃபங்க் முடியுடன் வருவது இவரது கேரக்டர் ஸ்டடிக்கு கிடைத்த அடி.. 

http://www.cinespot.net/gallery/d/82031-1/Lakshmi+Rai+Hot++Photos.jpg

 படத்தில் ரசிக்க வைத்த வசனங்கள்

1.  XQS  மீ மிஸ்.. நீங்க யாரு..?

அடப்பாவி.. நைட் பூரா என் கூட இருந்துட்டு இப்போ கேள்வியைப்பாரேன்?

சாரி. மப்பு.. 

2. நேத்து நான் தப்பா நடந்துக்கிட்டேனா?

நேத்து சரியாதான் நடந்துக்கிட்டே.. இப்போதான் தப்பா நடக்கறே.. கண்டுக்க மாட்டேங்கறே....

3.  பசங்க சும்மா இருந்தாலும் இந்த பொண்ணுங்க சும்மா இருக்க விட மாட்டாங்களே...

4.  உங்க வயசு என்ன?

அப்பா.. அவர் கிட்டே ஏன் வயசை கேட்கறீங்க?

பொண்ணுங்க கிட்டே தானே வயசை கேட்கக்கூடாது,..?

பொண்ணுங்க இருக்கறப்பவும் வயசை கேட்கக்கூடாது...

 5. ஹாய். குடிக்கவா வந்தீங்க..?

என்னைப்பார்த்தா குடிகாரன் மாதிரியா தெரியுது?

6. நானும் எவ்வளவு நாள் தான் நல்லவன் மாதிரியே நடிக்கறது?

7.  எனக்கு அந்த ஃபிகர்  வேணாம்.. 

நீயே நினைச்சாலும் அது உனக்கு செட் ஆகாது. நீ அதுக்கு லாயக்கில்லை.. 

8.  லைட் போட்டூட்டு வண்டி ஓட்டலாம், லைட்டா போட்டுட்டு வண்டி ஓட்டக்க்கூடாது...டைட்டா இருக்கனும் சரக்கு உள்ளே.. 

9.  நான் ஏன் வேலைக்கு போகனும்?நான் நினைச்சா எனக்கு கீழே 80 பேர் வேலை செய்வாங்க. 

அதுக்கு ரொம்ப செலவாகுமே..? 


http://hothubshot.com/hothub_files/2010/04/lakshmirai-bath-hot-hub.jpg

10. ஏய்.. நீ எப்படி இங்கே வந்தே.?

டார்லிங்க்.. எப்படி வந்தேன்னு கேக்காதே..? எதுக்கு வந்தேன்னு கேளு.. 

தண்ணி அடிச்சிருக்கியா?

ம்..

வீட்டுக்குத்தெரியுமா?

வீட்டுக்கு ஏன் தெரியனும்?அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சா போதாதா?

ஆனா ஒண்ணு மட்டும் உண்மை ஆணோ, பொண்ணோ தண்ணி அடிச்சா எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக்ஸா சொல்ல முடியுது?

11.  யார் எவ்வளவு சரக்கு அடிச்சிருந்தாலும் அவங்கவங்க வீட்டுக்கு போகும்போது கொஞ்சமாவது மப்பு தெளிஞ்சிடும்....

12.  பல் துலக்கிட்டு வீட்டுக்குள்ள போ.. அம்மா கண்டு பிடிக்க மாட்டாங்க. 

13.  வாங்க மாப்ளை.. மாப்ளைக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா..

வேணாங்க.. இப்போதான்... 

14.  என்ன வந்ததுல இருந்து சீரியஸாவே இருக்கீங்க?

காமெடி பண்ண நான் என்ன சந்தானமா?

15.  சிக்னல் ஓப்பன் பண்ணப்போறோம். நீ ரெடியா இருந்துக்க. 

பிறந்ததுல இருந்தே நான் ரெடி தான்.. 

16.  ஹூம்.. இவ்வளவு பணம் இருந்து என்ன? சுகர் பேஷண்ட் மாதிரி எதையும் அனுபவிக்க முடியல.. 

17.  அதென்னவோ தெரியல.. மப்பானாலே இளையராஜா பாட்டெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwmFxhW-0NSMJEqhevRJe4yFU8pRCr2PA9uiMVJLc4dLMNN92EhzhG51-iA1q8Mw6m33Ra0GduM_FJGbQa0fZ157_6-kfWI83R8jFYTsT5ICXnDImDcGBZzQ3HWx0p37TJZdyNKDhDSbg/s1600/Anjali_In_Saree_00.jpg

இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்

1. இடைவேளை வரை செம ஸ்பீடான திரைக்கதை. க்ளைமாக்ஸில் சொல்லப்படும் சஸ்பென்ஸ்.. 

2.  பணத்துடன் செல்லும் டிரக்வேனை டிராஃபிக்கில் பாடியை மட்டும் அலாக்காக மாற்றுவது.. அதை நம்பும் வகையில் காட்டியது. 

3. லட்சுமிராய்  பிரேமை சுடாமல் திடீர் என ஆள் மாற்றி சுடும் சீன் நல்ல ட்விஸ்ட்.. 

4. கிரிக்கெட் சூதாட்டம் என ட்ரெண்டுக்கு தக்க வகையில் திரைக்கதையில் அதை நுழைத்த விதம்.. 

5. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் முடிந்த வரை குழப்பம் வராத அளவு கதை சொல்ல முயன்றது. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheY-DGZozoCU69Bdj4V29yGkl2amHGYo2fz-rf1Gfig6c4m0YH7tOqfEzhLjhqv4wLGyMT3TLCgPZlK8RW5nOycfMDdYp9nJaU3Yg3PE2lG-GdQWc5YahTuf5YXVTOBURKfF_L_yuw_hE/s1600/andrea08.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள், சில சந்தேகங்கள், சில ஆலோசனைகள்

1.  செம டெம்ப்போ பாட்டான விளையாடு மங்காத்தா பாட்டை அஜித்தே பாடுவது போல் காட்டாமல் பேக் டிராப்பில் பாடல் மட்டும் ஒலிக்க அஜித்தை சும்மா டான்ஸ் மட்டும் பண்ணுவது போல் காட்டி இருக்கலாம். இன்னும் கெத்தாக இருந்திருக்கும்..

2.  ஏமாற்றி காதலிப்பதாக நடிக்கும் அஜித்தை விட உண்மையாக காதலிக்கும் த்ரிஷா முகத்தில் காதல் ரசமே சொட்டவில்லையே ஏன்?த்ரிஷாவின் காதல் உண்மையாக பதிவு செய்யப்பட்டால்தான் அஜித் அவரை ஏமாற்றும்போது அதன் எஃபக்ட் எடுபடும்?

3. என்னதான் ஒருவன் பணத்தின் மேல் ஆசை உள்ளவனாக இருந்தாலும் காதலியின் அல்லது காதலி என நம்பவைத்து ஏமாற்றும் பெண்ணின் தந்தையை அப்படியா ஓடும் காரிலிருந்து வீசி எரிவார்கள்?வில்லன் இமேஜை வலிய அஜித் மேல் திணிப்பது போல் இருக்கே?பெண்கள் இந்த காட்சியை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களே?

4. ஓப்பனிங்க் சாங்கில் அஜித் முதலில் லட்சுமிராய் உடன் டான்ஸ் ஆடுகிறார்.. பின் அங்கே வரும் த்ரிஷாவுடன் ஆடுகிறார்.. ஆனால்  அடுத்த ஷாட்டில் அஜித்தின் வீட்டுக்கு திடீர் விசிட் அடிக்கும் த்ரிஷாவிடம்  அஜித் லட்சுமிராய் அட்ரஸ் கேட்டு வந்த பெண் என பொய் சொல்லும்போது அவர் லராயை தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை.. எப்படி?

5.  போலீஸ் டிபார்ட்மெண்ட்டே ஒரி போலீஸ் ஆஃபீசரை தற்கொலை செய்தது போல் செட் பண்ணுகிறது , ஆனால் அதே ஆஃபீசரை எந்த கெட்டப்பும் மாற்றாமல் பேரை மட்டும் மாற்றி அதே கேசில் நடமாட விடுகிறதே . எப்படி?

6.  பணத்தை யாராவது தனியே வந்து எடுத்தால் கூட்டாளிகள் செல்ஃபோனுக்கு அலாரம் அடிப்பது போல் செட் செய்த பிரேம் பின் எப்படி அவர்களை ஏமாற்றுகிறார் என்பதை காட்டவே இல்லையே?

7. பணத்தை அடைவதையே குறியாக இருக்கும் அஜித் ஏன் பிரேமை யூஸ் பண்ணி அலாரம் கொலாப்ஸ் செய்ய முயற்சியே எடுக்கவில்லை?

8. இந்தப்படத்தை அஜித் ரசிகர்கள், பெண்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளூம்படி இன்னும் பாலிஷாக செய்திருக்கலாம்... பண விஷயத்தில் மட்டும் அஜித் கெட்டவர் என காட்டி.. காதலி, தோழி எல்லோரையும் பணத்துக்காக கொலை செய்யக்கூட அஞ்சாதவர் என காட்டி இருக்க தேவை இல்லை. அதை பலரால் ஜீரணிக்க முடியாது. 

http://s4.hubimg.com/u/1248939_f520.jpg

ஏகன், அசல், ஆஞ்சநேயா போன்ற தோல்விகளால் துவண்டு கிடந்த  அஜித் ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான படமே , ஆனால் வாலி, பில்லா ரேஞ்சுக்கு இல்லை..

 ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி  செண்ட்டர்களில் 50 நாட்கள்.,  சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்.. 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42 

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க்கிங்க் - ஓக்கே

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள், அஜித் ரசிகர்கள் பார்க்கலாம்

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்.

ஃபிகரு அவனோட லவ்வரா? சம்சாரமா?ன்னு எப்படி கண்டுபிடிப்பது?







1. என் சம்சாரம் செய்யும் சமையலை சகிக்க முடியல.

மாப்ளே.. உன் பாடு எவ்வளவோ தேவல,என் சம்சாரத்தையே என்னால சகிச்சுக்க முடியலையே?

---------------------------

2. ஸ்ருதிஹாசன் பாய்ஸ் சித்தார்த்தை லவ்பண்றது கமல்க்கு பிடிக்கலையே,ஏன்?

ஆமா இவர் பாட்டுக்கு புத்தர் மாதிரி பாதிலயே கழட்டுவிட்டுட்டுபோய்ட்டா?

----------------------

3. குதிரை சவாரி செய்தபோது நித்யானந்தா தவறி விழுந்தார் #அண்ணனுக்கும் சவாரிக்கும் ராசி இல்லை போல,ஒண்ணு கேமராவுல விழுந்துடறாரு,அல்லது கீழே

----------------------------

Litoral Argentino



4. இன்ஸ்பெக்டர் சார்,என் சம்சாரம் என்னை அடிச்சுட்டா.

விடய்யா ,நான்கூட நேத்து என் மனைவிகிட்டேஅடிவாங்குனேன்,புகாரா குடுத்தேன்?#வீ .வீ . வாசப் படி

-----------------------------------

5. தலைவருக்கு ஜி கே கம்மின்னு எப்படி சொல்றே?

காஜல் அகர்வால்,சோனியா அகர்வால் 2 பேரும் அகர்வால் ஸ்வீட்ஸ் கடை ஓனர்ஸா?ன்னு கேட்கறாரே?

-------------------------------




6. சதீஷ்,நாம 2 பேரும் லவ் பண்ணி 3 வது நாள்லயே  எம் மேல சந்தேகப்படறீங்களே?

ஜெயந்தி,விளையாடாதே,அதுக்குள்ள 3 மாசம் முழுகாம இருக்கறதா சொல்றியே?

-------------------------------

7. நீ என் எதிரே நிற்கும்போது என் நிழல் உன் மீது விழுந்தது,பூமியில் ஒரு சந்திர கிரஹணம் நிகழ்ந்தது#நீ செக்கச்சிவப்பு,நான் கட்டக்கறுப்பு

--------------------------

8. உன் காதலியை எதுக்கு ஆத்துல தள்ளி விட்டே?

எப்போ பார்த்தாலும் நான் முழுகாம இருக்கேன்னு ஒரே டார்ச்சர்,அதான் போய் முழுகுன்னு தள்ளி விட்டேன்.

---------------------

9. பைக்ல பின்னால உட்கார்ந்துட்டுபோற பொண்ணு 2 சைடும் கால் போட்டுட்டு ஒட்டி உறவாடுனா அது அவன் லவ்வரா இருக்கும்,பட்டும் படாம அமர்ந்தா மனைவி!!

-----------------------

10. புராணங்களில் சொல்லப்படும் ஒருயுகம் என்பது 43,20,000 வருடங்களாம்,உனக்காக ஒரு யுகம்வரை காத்திருப்பேன்னு எவனாவது கதை விட்டா ஃபிகரே !நம்பாதே!

--------------------------------

a

11.வெற்றியாளன் அடிக்கடி தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும், காதலன் தன் காதலைப்புதுப்பிக்கவேண்டும், காதலியை அல்ல

----------------------------

12. நல்ல வெயிட்டான இடமா பாருங்கன்னு சொன்னீங்களே?

தரகரே! கடுப்பைக்கிளப்பாதீங்க!மாப்ளைக்கு 62 கேஜி வெயிட், பொண்ணுக்கு 120 கேஜி வெயிட்

----------------------------

13. இந்தப்படத்துல கதைப்படி ஹீரோயினை கடைசி வரை தொடாம லவ் பண்றீங்க!

சாரி சார், எனக்கு கதை பிடிக்கலை!

-------------------------

14. டியர், எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கு.

இவ்வளவ் தானே? லிப்ஸ்டிக் போடாதே!

---------------------------

15. ஏய் மிஸ்டர், உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என் கிட்டேயே என்னை லவ் பண்றதா சொல்வே?

லூசாம்மா நீ? உன்னை லவ் பண்றதை உன் தங்கச்சிட்டயா சொல்ல?

------------------------------


16. ஆண்ட்டி ஹீரோ கேரக்டர் ஏன் வேணாம்னு சொல்றீங்க?

ஹீரோயினா 40 வயசு ஃபிகரை போட்டு உயிரை எடுப்பானுங்க!

--------------------------

17. தலைவருக்கு பல குடும்பங்கள் இருக்காம்.

எப்படி கண்டுபிடிச்சாங்க?

182 ரேஷன்கார்டுகள்ல குடும்பத்தலைவர் பெயரா அவர் பேரு இருந்துச்சாம்

--------------------------

18.பொண்ணு கூட தனியா பேச மாப்ளை ஆசைப்படறார்.

இந்தாங்க பொண்ணோட செல் நெம்பர், அந்த ரூம்ல யாருமே இல்லை, போய் பேசிட்டு வாங்க!

------------------------------------

19. ரொம்ப மென்மையான காதல் கதை என்பதால் நத்தை என டைட்டில் வெச்சேன்.

அதான் படம் இவ்ளவ் ஸ்லோவா போகுதா?

-------------------------

20.  ஒருமித்த போராட்டங்கள் இது வரை நமக்கு கற்றுக்கொடுத்த நீதி மக்கள் எழுச்சியுடனும் விழிப்புடனும் இருந்தால் இறுதி வெற்றி மக்களுக்கே என்பதே

-------------------------


21. 56 நாட்கள் கூடுதல் ஆயுள் தான் என்றாலும் அந்த மூவர் மன நிலையும் ரொம்பவே கொடூரமானது,மரணபயத்தை உள்ளடக்கியது

-------------------------------

22. தூக்குத்தண்டனையை சட்டப்புத்தகத்தில் இருந்தே தூக்கு!மனித நேயம் மலர தூக்குத்தண்டனையை நீக்கு!

----------------------------

23. பக்கத்து வீட்டு பரமேஷ்க்கு என்மேல் ஒரு கண்ணுடி.

ம்க்கும், அவனுக்கு உன் தங்கச்சி மேல இன்னொரு கண்ணு,ஜாக்கிரதைடி..

--------------------------

24. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!தமிழர்களை நம்பினோர் தூக்கிலிடப்படார்

-----------------------------

25. தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்பதெல்லாம் பழைய சாக்கு.மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதே புதிய நோக்கு

---------------------------


26. நிருபர் - மேடம், உங்க புருஷனை ஏன் டைவர்ஸ் பண்ணீட்டீங்க?

      நடிகை - அடிக்கடி என் பர்சனல் மேட்டர்ல தலையிடறாரு!

----------------------------


27. ஷூட்டிங்க் கிளம்பற அமலாபாலை தலைவர்  “ வாங்க மேடம்”னு வரவேற்கறாரே? ஏன்? 

ஏற்கனவே லோக்பாலை வரவேற்கலைன்னு அவருக்கு கெட்ட பேராம்.!

---------------------------


28. மாப்ளைக்கு கோபம் வநதா அடிச்சுடுவாரு,ஜாக்கிரதை! 

ஹா ஹா பொண்ணுக்கு கோபம் வந்தா கடிச்சுடுமாம், டபுள் ஜாக்கிரதை

------------------------------


29. ஹாஸ்பிடலை பார்த்ததும் சாமியார்க்கு ஏன் மூடு வந்ததாம்?

அங்கே 500 பெட் இருந்ததே?

---------------------


30. மிஸ்!உங்களை நான் இன்னைக்கு சாயங்காலம் 5 மணில இருந்து லவ்பண்ணப்போறேன்,ஏன்னா அதுதான் நல்லநேரம்.

அட லூசுப்பையலே!இனிதாண்டா உனக்கு கெட்டநேரம்

---------------------------------------


Tuesday, August 30, 2011

மணிரத்னம் ஒரு சகாப்தமா? ஒரு அழகிய ஆராய்ச்சி - பாகம் 2

இந்தப்பதிவின் முதல் பாகத்தை படிக்காதவர்கள் http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_6519.html  


http://www.iaac.us/mic/mic_roja.jpg

 ரோஜா(1992 ) - இந்தப்படத்தில் இருந்துதான் மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மான்  கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டார். சின்ன சின்ன ஆசை பாடல் சூப்பர் ஹிட். ஆடியோ கேசட்டில் ஏ சைடு, பி சைடு என திரும்பி திரும்பி ஒரே பாட்டை ரெக்கார்டு செய்யும் புதிய திருப்பு முனையை இப்பாட்டு உண்டாக்கியது. சத்யவான் சாவித்திரி கதைதான். தன் கணவனின் உயிரை காப்பாற்ற தீவிரவாதிகளிடம் போராடும் மனைவியின் கதை.. சொன்ன விதத்தில் ஜெயித்தார்.வைரமுத்து சின்ன சின்ன ஆசை பாடல்க்காக இயக்குநரிடம் மொத்தம் 260 ஆசைகள் எழுதிக்கொடுத்ததாகவும், அதில் இருந்து தேவையானதை அவர் தேர்வு செய்ததாகவும் குமுதம் பேட்டியில் கூறி இருந்தார்..

இந்தப்படத்தின் வெற்றி இந்திய அளவில் மணிரத்னத்துக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத்தந்தது என்பதால் அவர் அடுத்தடுத்த படங்களில் அதே போல் தேசிய பிரச்சனையை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.. அதுவரை அவரது டேஸ்ட்க்கு படம் எடுத்தவர்  அதற்குப்பின் ஹிந்தியில் டப் பண்ண வேண்டுமே என்பதற்காக கதையில் ஆல் ஓவர் இந்தியா ரிலேட்டட் பிரச்சனை என்ன ?என்பதை கவனமாக கதையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.. 

http://chennaionline.com/film/Preview/Aug09/Images/Roja-Movie-Stills01.jpg

சூப்பர்ஹிட் பாடல்கள் 1. சின்ன சின்ன ஆசை 2. ருக்குமணியே  ,ருக்குமணியே  அக்கம் பக்கம் என்ன சத்தம்?  3. காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே 4. புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

இந்தப்படம் ஈரோடு அபிராமியில் 62 நாட்கள் ஓடியது.

http://newtamilhits.com/movieimages/Thiruda-Thiruda_b.jpg
திருடா திருடா ( 1993) - படம் பூரா யாராவது ஓடிட்டே இருப்பாங்க.. ஒரு ட்ரக் நிறையா கோடிக்கணக்குல பணம்,அதை கடத்திடறாங்க. அதை கைப்பற்ற 2 கோஷ்டிகள், அவங்களை பிடிக்க சி பி ஐ , இதுக்கு நடுவே ஒரு காதல் என கதை போகும்..  படம் ஜாலியா போனாலும் ,தியேட்டர்ல சுமாராத்தான் போச்சு.. 

http://incap.files.wordpress.com/2009/06/541.jpg

க்ளைமாக்ஸ்ல ராசாத்தியை காமெடி பீஸ் ஆக்கிட்டு 2 ஹீரோக்களும் பணத்தை குறியா நினைக்கும் நினைப்பை ரசிகர்கள் ஏத்துக்கலை.. பாடல்கள் சூப்பர் ஹிட்ஸ்/..இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBBwoiDub5iCnrcdM_k74llZ9Jr6Germ3UhSwofSnAudsI9dO8fJLc0sdIIl-hN-b3CZZDgmc4Ab8lWpUU7I1iaIzgpX-gl8rZ8-mwK8rcfr6w36hMMAkoKs6IT2KHGIRCVOVi3d22pgo/s320/Thiruda+Thiruda.png

பாடலாசிரியர் - வைரமுத்து 1. கண்ணும் கண்ணும் - மனோ 2.கொஞ்சும் நிலவு - அனுபமா 3. வீரபாண்டிக் கோட்டையிலே- மனோ, கே.எஸ் சித்ரா 4. தீ தீ - கரோலீன் , 5. ராசாத்தி - சாகுல் ஹமீத்  , 6. புத்தம் புது பூமி- கே.எஸ் சித்ரா, மனோ

ஈரோடு அபிராமில இந்தப்படம் 38 நாட்கள் ஓடுச்சு.. 

http://www.musiqbuzz.com/tamil/movie/bombay/photos_gallery/bombay-photo-gallery-1266232253.jpg
பம்பாய் - (1995) - ரோஜா படத்துக்குப்பிறகு அதை விட அதிகமான ரீச் இந்த படத்துக்கு கிடைச்சதுக்கு முக்கிய காரணம்  பாபர்மசூதி இடிப்பு, இந்து முஸ்லீம் பிரச்சனையை சாமார்த்தியமா ஒரு காதல் கதையின் ஊடாக சொன்ன விதம் தான்.. 

பலரது மனம் கவர்ந்த சீன்கள்

1. கண்ணாளனே பாட்டின்போது அர்விந்தசாமி  ஒரு தூணில் காலை வைத்து உதைத்து தன் காதல் இயலாமையை வெளிப்படுத்தும் நுணுக்கமான சீன்.. அதே சீனில் அவரது தங்கை அவரை மிரட்டுவதும் அவள் கையை இவர் மடக்குவதும்.

2.  இந்து முஸ்லீம் கலவர சீனில் சிறுவர்கள் தங்கள் நெற்றியில் போட்ட பட்டையை அழித்துக்கொள்வது

3. உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாடல் காட்சியில் மிதக்கும் அழகுடன் மனீஷா ஸ்லோ மோஷனில் வருவதும், அவரது ஷால் கிளையில் மாட்டுவதும் , மதம் என்னும் ஷால்லை அவர் துறப்பதுமாக சிம்பாலிக் ஷாட்.

http://www.indianetzone.com/photos_gallery/5/bombay_10466.jpg

விருதுகள்

1.1996 அரசியல் திரைப்படக் குழுமம் (அமெரிக்கா)வென்ற விருது - சிறப்பு விருது- பம்பாய் - மணிரத்னம் 2.1996 தேசிய திரைப்படவிருது(இந்தியா)வென்ற விருது - சிறந்த தொகுப்பாளர்- சுரேஷ் எர்ஸ்வென்ற விருது - நார்கிஸ் டத் விருது- சிறந்த திரைப்படம் - பம்பாய் - மணிரத்னம்
1995 பில்ம்பேர் விருது (இந்தியா)வென்ற விருது - விமர்சகர்கள் விருது - பம்பாய் - மணிரத்னம் , வென்ற விருது - சிறந்த நடிப்பிற்காக - மனிஷா கொய்ராலா
 இத்திரைப்படம் வெளியிடப்பட்டபொழுது சிங்கப்பூர், பாகிஸ்தான் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.பம்பாய் ஆரம்ப இசையானது ஆங்கிலத்திரைப்படமான லோஎட் ஒஃவ் வார் என்ற திரைப்படத்தில் உபயோகப் படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாடல்கள்

பாடலாசிரியர் - வைரமுத்து 1. அந்த அரபிக்கடலோரம் - ஏ.ஆர். ரஹ்மான் 2. பூவுக்கு என்ன- நோல், அனுபமா , 3. உயிரே உயிரே- ஹரிகரன், கே.எஸ் சித்ரா, 4. குச்சி குச்சி - ஹரிகரன், சுவர்ணலதா, 5. கண்ணாளனே - கே.எஸ் சித்ரா 6. பம்பாய் ஆரம்ப இசை- ஏ.ஆர். ரஹ்மான்

ஈரோடு அபிராமியில் 60 நாட்கள் ஓடி தேவி அபிராமியில் பின் 100 நாட்கள் வரை ஓடியது.. 

http://i1.peperonity.info/c/DDD547/598626/ssc3/home/009/arhits/tamil_iruvar.jpg_320_320_0_9223372036854775000_0_1_0.jpg
இருவர் ( 1997) - மணிரத்னம் இயக்கிய படங்களில் இது ஒரு மைல் கல் என சொல்லலாம்.. படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறாததற்கு  காரணம் கடைசியில் சொல்றேன்..

எம் ஜி ஆர் , கலைஞர் இருவருக்கும் இடையே நிகழ்ந்த இது வரை வெளியில் வராத சில உண்மைகள் பிரமாதமாக சொல்லப்பட்டிருக்கும் படம் இது..

பிரகாஷ்ராஜ் கலைஞராகவும், மோகன்லால் எம்ஜிஆராகவும் போட்டி போட்டு நடிக்க ஜெவாக ஆணவம், அகங்காரம் பிடித்த அழகு எனும் செருக்கால் ஆடவனை பொம்மை போல் நடத்திய  ஜெவாக ஐஸ்வர்யா ராய் நடித்தார்.. பொதுவாக ஐஸூக்கு நடிப்பு சுமாராகத்தான் வரும், அவரது நடிப்புப்பற்றாக்குறையை அவரது அழகு சரிப்படுத்தி விடும்..ஆனால் அவர் இந்தப்படத்தில் வி என் ஜானகி கேரக்டரில் அமைதிப்பதுமையாகவும், ஜெ வாக அலட்டல் ராணியாகவும்  மாறுபட்ட நடிப்பை வழங்கி இருப்பார்..

http://www.cinemaal.com/uploads/thumbs/1974806151mooshoo.gif

மிக நுணுக்கமான காட்சிகள்

1. எம் ஜி ஆர் வெளியே கிளம்பிம்போது வேண்டும் என்றே ஜெ அவரை கூட்டத்துக்கு தாமதமாக போக சொல்வது. கலைஞர் பேசிக்கொண்டிருக்கும்போது தாமதமாக வரும் எம்ஜிஆர்க்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைப்பதை கலைஞர் சங்கடத்துடன் பார்ப்பது..

2. தனிமையான தருணத்தில் எம்ஜிஆரை வேண்டும் என்றே ஜெ அலைக்கழிப்பது. தன்னை கெஞ்சும் நிலைக்கு கொண்டு வருவது...

3. எம் ஜி ஆர் கலைஞரை கட்டி அணைக்கும் காட்சியில்  எம் ஜி ஆரின் முகத்தை க்ளோசப்பில்  காட்டி அவர் வில்லத்தனமாய் உதட்டை மடித்து  சிரிப்பதை காட்டுவது..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyc2r6ktghFPZAS0aBr4vat328d88ornpA0mMmdA_ALwVgC27iMDYC7TKdU0CoiLHm0A1LV7bIfdDi14QWrrSfpy3cFKwkKp7ozr9fbZ2GsS6SEfSruexSfS42r9pSa4wWD44naTHZFvMA/s1600/iruvar002.jpg

கதை - திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்) இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர்.எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடிபடுத்திக்கொள்கின்றாரிவரத் தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார்.


இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது.முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும், ஆன்ந்தும் பகைவர்களாகின்றனர்.

இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார்.

இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார்.இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.

விருதுகள்

1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா), வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த துணை நடிகர் - பிரகாஷ் ராஜ் , வென்ற விருது - வெண் தாமரை விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்

சூப்பர்ஹிட் பாடல்கள் 1. ஆயிரத்தில் நான் ஒருவன் ,நீங்கள் ஆணையிட்டால் படைத்தலைவன் , 2. நறுமுகையே, நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்.. 3. ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி! கேள்விக்குப்பதிலும் என்னாச்சு? 4. கண்ணைக்கட்டிக்கொள்ளாதே, கண்டதை எல்லாம் நம்பாதே தோழா! 5.  பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை 6. வெண்ணிலா

இந்தப்படம் தமிழில் ஹிட் ஆகாததற்கு முக்கிய காரணம் ஒரு கடவுளாக நினைக்கப்பட்ட எம் ஜி ஆர் -ன் மைனஸ் பாயிண்ட்ஸை மக்கள் ஏற்றுக்கொள்ள அல்லது நம்பத்தயார் இல்லை என்பதே!

 - தொடரும்

ஆண்கள் ஏன் ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்?


1.பாலிவுட்டின் வளரும் நடிகைகளில் சரா கானும் ஒருவர்-தினமலர் செய்தி#26 வயசு ஆச்சே இன்னுமா வளர்ந்துட்டு இருக்கு?#டவுட்டு

---------------------------------

2. இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!#என்னய்யா நியூஸ் போடறீங்க.. எதுக்கு பரபரப்பு? கிளு கிளுப்புன்னு போடுங்க .. அப்ப்டியே ..லிங்க் ப்ளீஸ்   pls

-------------------------------

3. மிஸ், டைம் ப்ளீஸ் என்றேன், ரொம்ப ஓல்டு டெக்னிக் என்றாள். ஓல்டு ஈஸ் கோல்டு என்றேன்#கடலை ஸ்டார்ட்ஸ்

-----------------------------

4. சூப்பர் ஃபிகருடன் சேர்ந்து வெளியே வரும் மொக்கை ஃபிகர் கூட சீன் போடுவதை ஆண் வேறு வழி இல்லாமல் பொறுத்துக்கொள்கிறான்

-------------------------

5. மதிமுக பூப்படைந்துவிட்டது - நாஞ்சில் சம்பத்#சாரி அண்ணே.. ஒரு சின்ன கரெக்‌ஷன் மூப்படைந்து விட்டது,அவ்வளவு தான் , இனி எழ முடியாது.

-------------------------




6. தியேட்டரின் பால்கனியில்  நுழைந்ததும் கிடைத்த இடத்தில் அமர்பவர்கள் ஜஸ்ட் சிநேகிதர்கள், கார்னர்சீட் தேடிப்போய் அமர்பவர்கள் காதலர்கள்#ஜிகிடி

------------------------

7. நீ ஏன் என்னிடம் ஒரு தடவை கூட கோவிச்சுக்கவே மாட்டேங்கறே?என்று முனகி கோபித்துக்கொண்டாள் காதலி#ஸ்.. ஷ்.. அப்பா .. முடியல

---------------------

8. பெண்கள் பெரும்பாலும் வழிவதில்லை,பெண்களுக்கு அவர்கள் முன் இருக்கும் ஏராளமான தூண்டில்களிடமிருந்து தப்பிக்கவே நேரம் சரியாக இருக்கிறது

------------------------

9. சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகாத காரணத்தால் பெரும்பாலான  ஆண்கள் தங்களை ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்

-----------------------

10. காதலியிடம் அடிக்கடி பொய் சொல்க.சத்தியம் பண்ணுங்க என்பாள்,உன் மீது சத்தியம் என்று தொடுவதற்கு எதார்த்தமான வாய்ப்புக்கள் கிடைக்கும்@#ஜிகிடி

----------------------------


a
11. காதலிக்கும்போது பெண்கள் காதலன்மீது வைக்கும் அன்பை காதல் தோல்வி அடைந்த பின்னும் ஆண்கள் காதலி மீது வைத்திருப்பார்கள்


--------------------------

12. 100% தூய்மை, 100 % நேர்மை என யாருமே இங்கே கிடையாது,சின்ன சின்ன தவறுகளுக்காக மனிதர்களை நீ ஒதுக்க ஆரம்பித்தால் நீ தான் தனியன் ஆவாய்

-------------------------------

13. அர்த்தம் அற்ற வார்த்தைகளை விட அர்த்தம் உள்ள மவுனம் சிறந்தது

-----------------------------

14. முக்கியமான ஒன்றைத்தொலைக்கும்போது யாராவது மனம் மகிழ்வார்களா? நான் மகிழ்ந்தேன், என் இதயம் தொலைக்கையில்

----------------------------

15. என்னுடன் பேசவே கூடாது எனும் வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய்!எப்போதாவது நீயாய் வந்து பேசுவாய் எனும் எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன்.

---------------------------------



16. நாத்திகவாதியாய் இருப்பவர்கள் காதலியின் நலனுக்காக பிரார்த்திக்கும்போது ஆத்திகவாதி ஆகிவிடுகிறார்கள்

-----------------------------

17. இழப்பதற்கு உன் நினைவுகள் தவிர வேறெதுவும் இல்லை என்னிடம்,மறப்பதற்கு என் காதல் தவிர வேறெதுவும் இல்லை உன்னிடம்

--------------------------

18. உன்னை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பணித்தாய், உன் அளவு கடந்த அன்புகளை என் மேல் திணித்தாய்

------------------------

19. விமானத்தில் தனியே தொலை தூரம் நீ 32 மணி நேரம் பயணித்தாய்! நான் 64 மணிநேரம் கழித்து திரும்பினேன்


-------------------------

20. நீ என்னை உன்னவனாய் நினைக்க ஆரம்பித்த நாளை என் முதல் பிறந்த நாளாய் எண்ண ஆரம்பித்தேன்

-------------------------



21. உன்னைச்சுற்றி அமையும் ஒரு பாதுகாப்பு வளையமாய் நான் மாற முடிந்தால் சந்தோஷப்படுவேன்

------------------------

22.அடிக்கடி என் கனவில் நீ வரும்போதே நான் உஷார் ஆகி இருக்க வேண்டும் , நீ கனவாகவே கரையப்போகிறாய் என்று


---------------------

23. மெலோடி சாங்க்ஸ் ரசிக்கும் பெண்கள் எல்லோரும் மென்மையான மனம் படைத்தவர்கள் அல்ல, அடிப்பாட்டை விரும்பும் ஆண்கள் வன்மையான குணம் உள்ளவர்கள் அல்ல

----------------------------

அனகா அலங்காமணி - ஸ்குவாஷ்
24.சேலை பெண்கள் முந்தானையை சரி செய்வதை விட 4 மடங்கு அதிகமாக சுடிதார் பெண்கள் துப்பட்டாவை சரி செய்கிறார்கள்#மைக்ரோநோட்டாலஜி

-----------------------

25 காதலிக்காதவன் கவிதை எழுதும்போது வார்த்தைகளாக வந்து விழும்,காதலிப்பவன் கவிதை எழுதும்போது வரி வரியாக மிதந்து வரும்#முப்பொழுதும் அவள் கற்பனை

--------------------

26 பெண்கள் கால் விரல் மிஞ்சி பட்டா போடப்பட்டவள் என்பதை  காட்டிக்கொடுப்பது போல் ஆண்களுக்கு?நாங்க தான் ஷூ போட்டுக்கறோமே? #யாரு கிட்டே?

-----------------------

27 சரக்கு ஸ்மெல்,சிகரெட் ஸ்மெல் இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் பெண் ஆணின் முத்தம் விரும்புகிறாள்#கில்மாலஜி

------------------

28. சுடிதார் பெண்களின் துப்பட்டா போடும் ஸ்டைல் தான் அவரது டிரஸ்சிங்க் சென்சை தீர்மானிக்கிறது#டிரஸ்ஸாலஜி

------------------------



29. கோயிலுக்குப்போவதால் மனநிம்மதி,ஓசி பிரசாதம்,ஏசி போட்டது மாதிரி குஜிலியின் கூல் பார்வை மூன்று பலன்கள் இருப்பதால் ஆன்மீகவாதியாகு#ஜிகிடி

---------------------

30.நெயில் பாலீஸ் வைப்பது ஃபிகர்களின் பழக்கம்,இயற்கை மருதாணிச்சிவப்பை ரசிப்பது ஆண்களின் வழக்கம்#ஜிகிடி

---------------------------

31 கலைநிகழ்ச்சிகளில்,விழாக்களில் மேடையில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சாமான்யன்,ஆடியன்ஸ் தரப்பில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சரித்திரன்#ஜிகிடி

-----------------------

32 ஒற்றை நாடிப்பெண்களுக்கு ஒற்றைஜடை அழகு,ரெட்டைநாடிப்பெண்களுக்கு ரெட்டை ஜடை அழகு என்று நினைப்பது அழகிய முட்டாள் தனம்#ஜிகிடி

------------------

33. ஜிமிக்கி அணிந்த பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்,ஆனால் அவர்கள் ஆண்களுக்குப்பிடிக்காத மாடலில் பெரிய சைஸ் ரிங்க் மாட்டி கடுப்பேற்றுகிறார்கள்

rainbow rose

Monday, August 29, 2011

சமீராரெட்டிதான் எனக்கு கரெக்ட் மேட்ச் - விஷால் வில்லங்க பேட்டி - காமெடி கும்மி

http://www.latesttamil.in/wp-content/uploads/2011/08/VediLatestTamil.jpg

எனக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்!


'' 'அவன் இவன்’ ஹேங் ஓவர்... ஓவர். இப்போ நான் 'வெடி’க்கு ரெடி. 'அவனா இவன்’னு நீங்க கேக்குற அளவுக்குப் படபட தடதடன்னு வெடிக்கும் இந்த 'வெடி’!'' - புஜங்களின் இறுக்கத்தைச் சோதித்துக் கொண்டே பேசத் தொடங்குகிறார் விஷால்.

சி.பி - காம்பினேஷனே சரி இல்லையே வெடி கடி ஆகப்போகுது பாருங்க.. 



1. ''நடிக்கிற ரெண்டு படத்துல ஒண்ணு ஆக்ஷன்னு ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டீங்களோ?''

 சி.பி - ஆமா, அண்ணன் கமல் பாணியை ஃபாலோ பண்றாரு, ஒரு  படம் டப்பா , 2வது படம் படு டப்பா.. இப்படி!!!!!!!!!!!! 




''என் கேரியர்ல 'சண்டக் கோழி’, 'திமிரு’ படங்களுக்கு செம வெயிட்டேஜ் இருக்கு. அப்படிப் பரபரன்னு ஒரு ஆக்ஷன் படம் இப்போ பண்ணா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பிரபுதேவாகிட்ட 'படம் பண்ணலாமா’னு கேட்டேன். உடனே 'சரி’ன்னு ரெடி ஆகிட்டார்.

சி.பி - அவரு கிட்டே தமாஷுக்கு நயன்தாரா கல்யாணம் பண்ணிக்கலாமா?ன்னு கேட்டதுக்கும் உடனே ஓக்கேன்னு ரெடி ஆனவர் ஆச்சே?


http://reviews.in.88db.com/images/sameera-prabhu-deva-vedi-shooting-still.jpg

'வெடி’ தெலுங்குப் படத்தோட ரீ-மேக். சினிமாவில் எந்தப் படம் ஜெயிக்கும்னு சொல்ல முடியாது.

சி.பி - இது வேணா உண்மை தான் ,கண்ட கண்ட படம் எல்லாம் ஹிட் ஆகுது.. சாந்தி அப்புறம் நித்யா படம் போட்ட முதலீட்டை விட 12 மடங்கு லாபமாம், இதைப்பார்த்த புரொடியூசர் அடுத்த படம் பக்தப்பிரகலாதனா எடுப்பாரு?



புதுசா கதை சொல்ற டைரக்டர் கதையை மட்டும்தான் சொல்வார். எங்கே ஃபைட் வரும், எங்கே பாட்டு வரும்னு நாமதான் யோசிக்கணும்.  அப்படி யோசிச்சும்கூட சில படங்கள் அடி வாங்குது. இந்த ரிஸ்க் இல்லாம ஜெயிச்ச படத்தை ரீ-மேக் பண்றது நல்ல விஷயமாப் பட்டுச்சு. ஹிட் படம் கொடுக்குறது மட்டுமில்லாம, நடிகனா அடுத்த ஸ்டேஜுக்குப் போகணும். அந்த முயற்சியில்தான் இப்போ தீவிரமா இருக்கேன்!''

 சி.பி - ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க, அவன் இவன் படத்துல நீங்க இதுவரைக்கும் செஞ்ச பாவத்துக்கெல்லாம் பரிகாரமா கலக்கி எடுத்துட்டீங்க, நளின நடிப்புல. வெல் ஷெட்

2. ''என்ன திடீர்னு மியூஸிக் டைரக்டரா விஜய் ஆண்டனியை கமிட் பண்ணி இருக்கீங்க?''

''ஒண்ணு தெரியுமா... விஜய் ஆண்டனி லயோலா காலேஜ்ல எனக்கு கிளாஸ்மேட்.

 சி.பி - CLASS MATE? OR GLASS MATE?

அவ்வளவு பெரிய கிரவுண்ட்ல ரெண்டு பேரும் நடையா நடந்து அவ்வளவு கதை பேசி இருக்கோம். இவ்வளவு நாள் அவர் கூட படம் பண்ணாம இருந்ததே தப்பு. இப்போ அவரைப் பிடிச்சுட்டேன். செம ஹிட்பீட் போட்டு எங்க நட்புக்கு மரியாதை செஞ்சிருக்கார்!''

http://www.southdreamz.com/wp-content/uploads/2009/12/sameera-reddy-hot-in-maxim-magazine-photo-stills-3.jpg


3. ''இதுவரை ரவுடிகளோடுதான் கட்டிப் புரண்டு உருண்டுக் கிட்டு இருந்தீங்க. இப்போ சமீரா சிக்கிட்டாங்கபோல...''


சி.பி  - கேள்வி கேட்கற ஆளுக்கு லொள்ள பாரு, எகத்தாளம் பாரு. அந்த பச்ச புள்ளய பாருங்கய்யா... அந்த பால் வடியற முகம் பார்த்தா யாருக்காவது சண்டை போட மனசு வருமா?




''அடப் போங்க... வெட்கமா இருக்கு! இதுவரை என்கூட நடிச்ச ஹீரோயின் எல்லாரும் என்னை அண்ணாந்து பார்த்துதான் பேசுவாங்க.

சி.பி - ஏன்? லட்சுமிராய், ஷில்ஃபா ஷெட்டி,அனுஷ்கா, இலியானா இவங்க எல்லாரும் உங்களை விட ஹைட் ஆச்சே? இவங்க கூட நடிக்கறது?


டூயட் ஆடும்போதுதான் ரொம்பக் கஷ்டமா இருக்கும். ஆனா, சமீரா எனக்குக் கிட்டத்தட்ட சரியான உயரத்தில் இருக்காங்க. டான்ஸில் அவங்களோட போட்டி போட முடியலை. ஆனாலும், ஈடு கொடுத்திருக்கேன்.

 சி.பி - ஹி ஹி, ஓக்கே ,புரிஞ்சிடுச்சு.. நோ மோர் எக்ஸ்பிளேனேஷன்ஸ்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTECg0b14zE5vK5RSSNW95dVnMw7BXVKufgyZcFRjvWhMEd7MUom3Ik2lBYSvKgWlClCMqWCn53bN2LO-AyKmo-kEAek4-t8q73w2HVF5Pd2ThOl06UvtoGH4N3HoHtJVINpwLnOUqi98/s1600/Hot+Sameera+Reddy+Navel++1.jpg




4. ''வரலட்சுமியோடு காதல்ல இருக்கீங்க, ஊர் சுத்துறீங்கன்னு சொல்றாங்க. 'நான் காதலில் இருக்கிறேன். அந்தப் பொண்ணும் சினிமா சம்பந்தப்பட்ட பொண்ணு தான்’னு முன்னாடி நீங்களே சொன்னீங்க. ரெண்டையும் முடிச்சுப் போட்டுக் கலாமா?''
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ27DDHyr9RsvOnACcgG3leVi3UPbTVNx0jsZSwmltTBxWuAygzRYhEOIyiFbjcUxsMSbjlb9ePMDhHqCei-wOowrcxHhuzcFmY4CD9Hle6tmO1HskmuZs-pxg-QvtEtrvmgSt6wYV3tAw/s1600/Actress-Sameera-Reddy-hot-photos-in-white-123bolly-com-20.jpg

''எனக்கு ஃப்ரெண்ட்ஸ் அதிகம். அதிலும் கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப ரொம்ப அதிகம். அதில் வரலட்சுமியும் அடக்கம். எல்லார் கூடவும் ரெஸ்டாரென்ட், சினிமான்னு ஊர் சுத்துவேன். 'காதலிக்கிறேன்’னு பேட்டியில சொல்றவனுக்கு காதலிக்கிற பொண்ணு யாருன்னு சொல்ல தைரியம் இருக்காதா சார்? இப்போதைக்கு காதல், கல்யாணம் எதுவும் இல்லை. 2012-ல் உலகமே அழியப்போகுதுன்னு சொல்லிட்டு இருக்காங்க. அதுக்குள்ள எதுக்கு ஒரு பொண்ணு வாழ்க்கையை நாமளே கெடுக்கணும்னு அமைதியா, சிங்கிளா இருக்கேன். இது போதும் இப்போதைக்கு!''

 சி.பி - வரலட்சுமி உங்க கூட எப்பவும் வர்ற லட்சுமியா? ரொம்ப டிரை ஸ்கின் என்பதால் வற லட்சுமியா? டவுட்டு

thanx - vikatan,

ஃபிகரு ஒற்றை நாடியா? ரெட்டை நாடியா? எது டாப்?


1.ஒற்றை நாடியா இருந்தா பிடிக்குமா?ரெட்டை நாடியா இருந்தா பிடிக்குமா?எனகேட்டாள்  காதலி.நீ என் உயிர் நாடியா இருந்தா பிடிக்கும்னேன்#காணாத காதல்

-----------------------------

2. ஐ லவ் யூ சொல் 

என்றேன்.

ம்ஹூம், அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் 

என்றாள் காதலி.

அப்போ பேச நேரம் இருக்காது

என்றேன்,முகம் சிவந்தாள்

--------------------------

3. நறுமணக்காதல் என்பது என்ன?மல்லிகைச்சரத்தை கூந்தலில் சூடிய காதலி ஸ்கூட்டி ஓட்ட நீ பின்னால் அமர்ந்து செல்லும்போது நீ அனுபவிப்பது#லவ்வாலஜி

---------------------

4. அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் என்றாள் காதலி,கூடா நட்பு கேடா முடியும் என்றேன்,ஓக்கே சொன்னாள் #தாங்க்ஸ் டூ கலைஞர்

--------------------------

5. நான் சேலையில் அழகா? சுடியில் அழகா? என்றாள் காதலி.ரோஜா செடியில் அழகா? கூந்தலில் அழகா? என்றேன்

------------------------


Nayantaras family forces Prabhu Deva


6. பத்திரிகையாளர் வேடத்தில் பூனம் பஜ்வா!#விருந்து,திரைச்சித்ரா மாதிரி மஞ்சள் பத்திரிக்கையா இருக்கப்போகுது, நிறைய பேரு மங்களகரமானதுங்கறாங்க

--------------------------

7, கவர்ச்சிக்கு மாறுகிறார் அனுயா!#என்னமோ வீடு மாறுகிறார்ங்கற ரேஞ்ச்ல நியூஸ் போடறாங்களே?இத்தனை நாளா குணச்சித்திரத்தை கொட்டிமுடிச்சுட்டாங்களா?

-----------------------------------

8. என் கிட்டே உனக்கு பிடிச்ச அம்சம் எது? என்றாள் காதலி.. டோட்டலாகவே நீ அம்சமா இருக்கியே அது தான் என்றேன்#லவ்வாலஜி

--------------------

9. இனி எனக்கு ஒரு SMS கூட அனுப்பாதே என்று கோபமாக SMS  செய்தாள் காதலி. ஓக்கே டன் என்று SMS  ரிப்ளை அனுப்பினேன்#ஊடல்

-----------------------------

10. 25 வயதுக்கு குறைவானவர்கள் "சரக்கு' அடிக்க தடை வரலாம்-செய்தி#நல்ல வேளை,சரக்கு அடிக்கறதுக்கு மட்டும் தடை வருது

A Hamster funny trick...:)
funny_hamster-wallpaper-960x640.jpga

11.மவுன சாமியார் மன்மோகன் சிங் : சத்ருகன் விமர்சனம் # என்னது? சாமியாரா? ச்சே! ச்சே!  “அப்படி” எல்லாம் இருக்காது

------------------------

12. பிரதமருக்கு சம்மன் -ஆ. ராசா வலியுறுத்தல் # கூட்டாளியை காட்டிக்கொடுத்த ஷோக்காளி!!!!

---------------------

13.ஆண்களை எடை போடுவதில் பெண்கள் கில்லடிகள், ஆனால் என்ன பரிதாபம்னா அவங்களும் ஓவரா எடை போட்டுடறாங்க # ஓவர் வெயிட் ஓமனாஸ்

------------------------------

14.  நமக்குப்பிடித்தமானவர்கள் மனதிற்குப்பிடித்தமானவை நமக்கும் பிடித்துப்போவது திண்ணம்

------------------------------

15. 60- ஆம் கல்யாணத்தை ஆர்ப்பாட்டமா கொண்டாடுனா சாதா தலைவன், 60 கல்யாணம் அமுக்கமா பண்ணிக்கிட்டா அவன் தான் சரித்திரத்தலைவன்

---------------



16. கண்களால் கிறங்கடித்தால் அது பெண்கள், உதடுகளால் சரக்கடித்தால் அது ஆண்கள்

--------------------------

17. டியர்,உன்னைப்பார்க்கும்போது எனக்கு குதிரை ஞாபகம் தான் வருது, இன்னா ஹைட் நீ?

சாரி. உன்னைப்பார்க்கறப்ப எனக்கு கழுதை ஞாபகம் தான் வருது

----------------------------------

18. வீட்ல இருந்த லேண்ட் லைன் ஃபோன் கனெக்‌ஷனை ஏன் கட் பண்ணிட்டீங்க தலைவரே?

நில மோசடி வழக்கு பாய்ஞ்சிட்டா?

------------------

19.  மெல்லத்திறந்த கதவு பட பாடலான தேடும் கண் பார்வை  தவிக்க தமிழின் சிறந்த கஜல் பாடல் #  SPB பேட்டி  IN  குமுதம்

---------------------------

20.  யோவ் பி ஏ, லிவ்விங்க் டுகெதர்னா என்னய்யா?

தலைவரே! மகளிர் அணித்தலைவி கூட இருக்கீங்களே? அதுதான்

-----------------------


 
 

21 தலைல அடிச்சுக்கிட்டே ஆடியன்ஸ் படம் பார்க்கறப்ப பல்லை கடிச்சுக்கிட்டே வசனம் பேசுறவரு எங்க கேப்டன் #CaptainBirthday


--------------------------

22. முதல் முறையா பேக் ஷாட் அறிமுகப்படுத்துனவரே எங்க கேப்டன் தான் ( ஃபைட் சீன்ல )

---------------------------


23. வாதாடும் உன் உதடுகளை அடைக்க எனக்கு வாதிடும் சாமார்த்தியம் இல்லாததால்  குறுக்கு வழியை  தேர்ந்தெடுத்தேன் # கிஸ்ஸாலஜி

---------------------------

24. ஃபிகரைப்பார்த்துட்டு இருந்தா லைஃப் போயிடும் , ஃபிகரைப்பார்க்காம விட்டா  ஃபிகர் போயிடும், ஃபிகரா? லைஃபா?

------------------------

25.  வெற்றி ஒரு போதும் உன்னைத்தேடி வராது, நீ தான் அதை தேடி செல்ல வேண்டும்

----------------------------



26  மற்றவர்கள் மனதைத்தொடும்படி உன் பேச்சு இருக்க வேண்டும் எனில் உன் பேச்சு உன் உள்ளத்திலிருந்து வர வேண்டும், உதட்டிலிருந்து அல்ல!

-------------------------

27. அன்னா முன்னேற்றக்கழகம் ஒன்று உருவானால் பல கழகங்கள் வாழ்வில் கலவரங்கள் நிகழ்வது திண்ணம்

-----------------------------


28. இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்: 100-வது நாளையொட்டி பேரவையில் ஜெயலலிதா # அப்போ கொடுத்த வாக்கு எல்லாம் ஊ ஊ ஊ வா?

--------------


29. டியர், நான் கணக்குல வீக் என்பதால் என்னை ரிஜக்ட் பண்ணிட்டியா? ஏன்?

டேய், லூசு, கணக்கே சரியா வர்லை, நீ எப்படி ஒருஃபிகரை கணக்கு பண்ணப்போறே?

--------------------------

30.  பசங்க கலர் கலரா பேனா எடுத்துட்டு போறதுக்கு காரணம் அவங்க வசம் ஏகப்பட்ட கலருங்க இருக்குன்னு காட்டிக்கறதுக்காக்கூடா இருக்கலாம்

--------------------------

 
 


31. எந்த ஊழலும் நடைபெறவில்லை, எல்லாம் முறைப்படிதான் நடந்துள்ளது - ஆ ராசா # முறைப்படின்னா சமமா பிரிச்சுக்கிட்டீங்களா?

----------------------

32. நான் என்ன சுகர் பேஷண்ட்டா? ஏன் முத்தம் தர மறுக்கிறாய்? பை ஃபிகர் பேஷண்ட் (ஃபிகரால் பேஷண்ட் ஆனோர் சங்கம்)

--------------------------

33. டியர், நீங்க ராணி, தேவி இந்த  2 புக்ஸ் மட்டும் படிக்க வேணாம்.

ஏன்?

அதுல லேடீஸ் பேரு இருக்கே?

-------------------------

34.  பழையவற்றை, வேண்டாதவற்றை எரிப்பது போகிப்பண்டிகை,மெய் ஆசைகளை, தீண்டாதவற்றை எரிப்பது போகப்பண்டிகை

--------------------------

35.  எடியூரப்பா,ஷீலாதீட்சித் -வித்தியாசம்? எடியூரப்பா தன் ஃபேமிலி வெல்த் மட்டும் பார்த்துக்கிட்டாரு, ஷீலாதீட்சித் காமன்வெல்த்தை கவனிச்சாரு

---------------------


 
 

36. தலைவரே!காமன்வெல்த் ஊழல் பற்றி ஏன் கருத்து தெரிவிக்கலை?

காமன் என்பது காமக்கடவுள்,ஆன்மீகத்தில் தலையிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திடும்.

----------------------------

37. அதிமுக ஆட்சி குறித்து ஒரு வருடம் கழித்தே கருத்து தெரிவிப்பேன்- விஜயகாந்த் #  அதாவது உள்ளாட்சித்தேர்தல் எல்லாம் முடிஞ்ச பிறகு?

-------------------------

38.  காதலிப்பவர்களுக்கு மட்டுமே காதல் புனிதம், காதலிக்காதவர்களுக்கும் , காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் அது பைத்தியகாரத்தனம்

----------------------

39.  கடவுளைக்கண்டவரை கண்டவர் யாரும் இலர், ஆனால் காதலை கண்டவர், உண்டவர் பலர் நம்முடன் இருப்பதால் கடவுளை விட காதல்-ல்  நம்பகத்தன்மை அதிகம்

---------------------

40. வடிவேலு மீதான நிலமோசடி - திடீர் திருப்பம் : சம்பந்தப்பட்ட நபரிடமே நிலத்தை ஒப்படைத்தார்!!  #  ஈரோடு NKKP ராஜா வகையறாக்கள் கவனிக்க

Saturday, August 27, 2011

ஜெ நினைத்தால் தூக்கு தண்டனையை ரத்து செயலாம்.. செய்வாரா ஜெ?

தூக்குக் கயிறை வெட்டும் கத்தி முதல்வர் கையில்!

தழுதழுத்த தமிழருவி மணியன்

டந்த 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 'மூன்று தமிழர்கள் உயிர்க் காப்பு இயக்கத்தின்’ சார்பில் நடந்த பொதுக் கூட்டம்... முன்பு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தையே அசை போடவைத்தது. அலை கடலெனத் திரண்டிருந்த கூட்டத்தின் முன், அடங்காத ஆவேசத்துடன் இயக்கத்தினர் பேசிய பேச்சுக்கு, பெரும் வீச்சு!

 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் மணியரசன் எடுத்த எடுப்பிலேயே, ''காந்தி நம் தேசத் தந்தை என்று கூறிக்கொண்டு, அன்பு, அமைதி, சமாதானம் குறித்து வாய் கிழிய முழங்கும் மத்திய அரசே, தூக்குத் தண்டனையை உடனடியாக நீக்கு. 'பழிக்குப் பழி... ரத்த வெறி...’ என்ற போக்குடன் நீ தொடர்ந்து செயல்பட்டால், இந்தியாவின் தேசத் தந்தையாக கோட்சேவைப் பிரகடனம் செய். அசோகச் சக்கரத்தை அப்புறப்படுத்திவிட்டு தூக்குக் கயிறை வை!'' என்று சீற, கூட்டம் முறுக்கேறி நிமிர்ந்தது.


அடுத்துப் பேசிய தமிழருவி மணியன், ''தமிழினத்தின் உண்மை​யான தலைவர் பழ.நெடுமாறன் அவர்களே... தமிழினத்தின் உண்மையான தளபதி வைகோ அவர்களே...'' என்று புன்முறுவலுடன் ஆரம்பிக்க, தி.மு.க. மீதான முதல் அட்டாக்கை கரகோஷத்தோடு ரசித்தது கூட்டம்.

தொடர்ந்த மணியன், ''இன்று இனத்தைக் காட்டிக்கொடுப்பதுதான் காங்​கிரஸின் ஒரே அடையாளமாக இருக்கிறது. அந்தக் கட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் வரை யாரும் ஓயக் கூடாது. கடந்த தேர்தலில் பி.ஜேபி. போட்ட பிச்சையில் காங்கிரஸ் சார்பில் ஐந்து பேர் சட்டமன்றம் போனார்கள்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஓர் இடத்தில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை என்ற சூழலை நீங்கள் உருவாக்கினால், உங்கள் மான உணர்வு உலகுக்கு உணர்த்தப்படும். ப.சிதம்பரம் குறித்து எனக்கு முன்பு சிலர் பேசினார்கள். விதி வசத்தாலும், வினைப் பயனாலும் தமிழனாக வந்து உதித்தவர் சிதம்பரம். உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தமிழன், மூன்று தமிழர்களின் உயிரைப் பறிப்பதற்கு பரிந்துரை செய்தால், 'அவர் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம்தானா?’ என்று சந்தேகமாக இருக்கிறது...'' எனக் கொந்தளித்தவர், ''தமிழக முதல்வர் அவர்களே... இந்த மூன்று தமிழர்களின் தூக்குக் கயிறை அறுத்து எறியும் கத்தி உங்களிடம்தான் இருக்கிறது. உங்களால் மட்டுமே இது முடியும்!'' என்ற கோரிக்கையுடன் முடித்தார்.

தண்டனைக்கு உள்ளான தமிழர்களுக்காக, கடந்த காலத்தில் நடத்திய சட்டப் போராட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய பழ.நெடுமாறன், ''விரைவில் நமது இயக்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிர் காக்க வலியுறுத்துவோம்!'' என்றார்.

கடைசியாக மைக் பிடித்த வைகோ, ''சில நாட்களுக்கு முன்பு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்திக்க, வேலூர் சிறைக்குப் போனேன். மூவர் முகத்திலும் நான் எந்தக் கலக்கத்தையும் பார்க்கவில்லை. பதற்றம், பயம் இன்றி எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்தார்கள். ஏன் தெரியுமா? 'தாய்த் தமிழகம் தங்களைக் கைவிடாது, காப்பாற்றும்’ என்ற நம்பிக்கைதான் காரணம்.

உலகத் தமிழர்கள் அனைவரும் தற்போது முதல் அமைச்சரின் உரிமையை எதிர்பார்த்துக் காத்து இருக்கிறார்கள். 'முதல்வர் அவர்களே... மூவர் உயிரைக் காத்திடுக... வரலாற்றுச் சாதனை புரிந்திடுக... விதி 162-ஐ கையில் எடுங்கள்’ என்பதே அனைவரின் கோரிக்கை. இனி யாரிடத்தில் போய் நாங்கள் முறையிடுவோம்? 'கருணை மனுக்களை ஜனாதிபதி விரைவில் நிராகரிக்கப்போகிறார்’ என்று நம்பத் தகுந்த தகவல் வந்ததும், உடனடியாக டெல்லிக்கு ஓடினேன்.

பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, 'மூன்று நிரபராதிகளைத் தூக்கிலிட முயலாதீர்கள்’ என மனு கொடுத்து மன்றாடினேன். ஆனால், அந்தக் கல்லுளிமங்கர் கண்டுகொள்ளவில்லை. அடுத்த சில நாட்களில் கருணை மனு நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கோத்தபய ராஜபக்ஷே விமர்சிக்கிறான். மத்திய அரசே நீ இலங்கைத் தூதரை அழைத்துக் கண்டித்தாயா? அவன் யார் எங்கள் சட்டமன்றத் தீர்மானத்தை விமர்சிக்க? அது யாரோ ஒரு சிலரின் குரல் அல்ல... ஏழரைக் கோடி தமிழர்களின் குரல்!'' என்று முழங்கிய வைகோ, இறுதியாக, ''மூவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அமைதியாக இருக்கிறோம். எதிர்மறையாகப் பேச விரும்பவில்லை.

அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால்... அந்தச் சம்பவம் நடந்தது 1991. இது 2011. நினைவில் வைத்துக்கொள். அவர்களுக்கு ஆபத்து என்றால், இன்னும் நிறைய முத்துக்குமரன்கள் வருவார்கள். தீயை தங்கள் மேல் வைத்துக்கொள்ள அல்ல..! தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காமல் இதே போக்குடன் நீ செயல்பட்டுக்கொண்டுஇருந்தால்... இந்தியா சுதந்திரம் அடைந்தது 1947... ஆனால், 2047-ல் தமிழ்நாடு உன்னோடு இருக்காது!'’ என்று கர்ஜிக்க... ஆர்ப்பரித்தது கூட்டம்!


''கௌரவத்தைக் கைவிடுங்க!''

மூவர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் குரல் கொடுக்கும், ராமதாஸ், திருமாவளவன், சீமான் ஆகியோர் எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்துக்கு வரவில்லை. அவர்கள் கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் வந்திருந்தனர். ''அனைத்துக் கட்சி சார்பில் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுக்கு வராமல் அப்படி என்ன கௌரவம் பார்க்கிறாங்களோ? இவங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தா, அடுத்த முறை புறக்கணிக்கக் கூடாது!'' என்று தமிழ் உணர்வாளர்கள் பேசிக்கொண்டனர்.


தூக்கு?

அதிர்ச்சி அரசியல்... திகில் விவரங்கள்

''அம்மா, மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் சாவின் மடியில் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள். இத்தனை வருடங்களாக வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும்!'' - கடந்த ஜூ.வி. இதழ் மூலமாக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேரறிவாளன் வைத்திருந்த கண்ணீர்க் கோரிக்கை இது. ஆனால், இந்தக் கண்ணீர் இன்னமும் அரசுத் தரப்பை அசைக்கவில்லை என்பதுதான் துயரம்!

ஆம்; நடக்கக் கூடாது என நினைத்தது, நடந்தேவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக்கு ஆளாகி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருடைய கருணை மனுக்களும் சமீபத்தில் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து மூவருக்கும் தூக்கு வேளை நெருங்கிவிட்டதாகப் பரபரப்புக் கிளம்ப, தமிழகம் முழுக்க உருக்கமான கோரிக்கைப் போராட்டங்கள் நடந்தன.

இலங்கையின் போர்க் குற்றங்களைக் கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி கண்ணீர்க் கரங்கள் நீண்டன. சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிரான சட்ட வடிவத்தை ஜெயலலிதா இயற்றுவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது.


ஆனால், அந்த நம்பிக்கையை தகர்க்கும் விதமாக, சிறைத் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதிரவைத்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 25-ம் தேதி மாலை உள்துறைச் செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா மூலமாக வேலூர் சிறைக் கண்காணிப்பாளருக்கு ஸ்பீட் போஸ்ட்டில் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், ''நடவடிக்கை எடுப்பதற்கான கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன். நடவடிக்கை எடுத்த பின் உடனடியாக அரசுக்கு அறிக்கை அனுப்பவும்!'' என மிகச் சுருக்கமான முறையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


மூவருடைய தூக்குத் தண்டனைக்கும் எதிராக நிச்சயம் தமிழக அரசு குரல் கொடுக்கும் என உறுதியாகப் பலரும் நம்பி இருந்த வேளையில், அதிர்ச்சிகரமான இந்த முடிவு எப்படி எடுக்கப்பட்டது?

இது குறித்துப் பேசும் அரசுத் துறையில் உள்ள உணர்வாளர்கள், ''கருணை மனு நிராகரிக்கப் பட்ட கடிதம், கடந்த 16-ம் தேதியே தமிழக அரசுக்கு வந்துவிட்டது. உடனே அரசுத் துறை செயலாளர்கள் அந்தக் கடிதம் குறித்து ஆலோசனை நடத்தி, முதல்வரிடம் தகவல் சொன்னார்கள். 'கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் இது குறித்து எந்த முடிவு எடுப்பதும் சரியில்லை. அதனால், கூட்டத் தொடர் முடிந்த பிறகு இதுபற்றிப் பேசலாம்!’ என்றார் முதல்வர்.

அதனால், இப்போதைக்கு இந்த விவகாரத்தில் பயப்பட வேண்டியது இல்லை என்கிற நிலை நிலவியது. இதற்கிடையில், கிருஷ்ணசாமி, சரத்குமார், ஜவாஹிருல்லா, தனியரசு உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து முதல்வரிடம் பேச முயற்சித்தார்கள். சீமான் மூலமாகவும் முதல்வருக்கு உருக்கமான கோரிக்கை வைக்க முடிவானது. 'முதல்வரை நேரடியாக சந்தித்து கோரிக்கை வைப்போம்’ என எம்.ஜி.ஆர். நகர் கூட்டத்தில் நெடுமாறன் பகிரங்கமாகவே அறிவித்தார். ஆனால், இதற்கிடையில் எங்கிருந்து உத்தரவு வந்ததோ... அரசுத் தரப்பு அதிகாரிகள் 25-ம் தேதி காலையில் இருந்தே பரபரப்பாக இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கினார்கள்.

முதல்வரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஃபைல் முதன்மைச் செயலாளர் சாரங்கியின் டேபிளுக்குக் கொண்டுவரப்பட்டது.

'இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. உடனே மத்திய அரசின் கடிதத்தை சிறைத் துறைக்கு அனுப்பிவிடுங்கள்’ எனச் சொல்லிவிட்டாராம் சாரங்கி. 'அரசு உத்தரவு வந்த ஏழு நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்’ என சிறைத் துறை அதிகாரி டோக்ரா ஏற்கெனவே அறிவித்திருக்கும் நிலையில், அரசுத் தரப்பின் இந்த வேகம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. 26-ம் தேதி காலையில் கடிதம் சிறைத் துறைக்குக் கிடைக்க, அடுத்த ஏழு தினங்களுக்குள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனையை அதிகாரிகள் நிறைவேற்றக் கூடும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக செயல்படாவிட்டாலும், அந்தக் கடிதத்தைக் கிடப்பில் போட்டு வைக்கலாம் என்பதுதான் முதல்வரின் எண்ணமாக இருந்தது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசின் பெயரைச் சொல்லி இந்த விவகாரத்தை விரைவுபடுத்திவிட்டார் கள்.

முதல்வர் நல்லது செய்ய நினைத்தும் அதிகாரிகள் சிலரால் நிலைமை கைமீறிப் போய்விட்டது தமிழக அரசு கைவிரித்துவிட்ட நிலையில், முறைப்படியான சட்டப் போராட்டங்களால் மட்டுமே மூவருக்குமான தூக்குத் தண்டனையைத் தடுக்க முடியும். ஐந்து நாட்களுக்குள் சட்ட ரீதியான தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியாமல் போனால்... மூவருக்கும் எந்த நேரத் திலும் தூக்குக் கயிறு விழும்!'' என்கிறார்கள் ஆதங்கமாக.


அரசுத் தரப்பில் பேசும் அதிகாரிகளோ, ''கொலையானவர் முன்னாள் பிரதமர் என்கிற நிலையில் ஒரு மாநில அரசால் இந்த விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. கொலையாளியை நியாயப்படுத்தும் செயல்பாடாகக் கருதப்பட லாம் என்பதற்காகவே, முறைப்படி கடிதம் சிறைத் துறைக்கு அனுப்பப்பட்டது!'' என்கிறார்கள்.


இதற்கிடையில் சீமான் மூலமாக தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன், முருகன் சாந்தன் மூவரின் சார்பில் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியை களம் இறக்கும் வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட உணர்வாளர்கள் பலரும் ஒன்றுகூடி சட்டப் போராட்டம் நடத்தவும் தீவிர வேலைகள் நடக்கின்றன. 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பல விவகாரங்களில் நீதிமன்றம் மூலமாக தடை வாங்கிய பல தீர்ப்புகளை முன் உதாரணமாக வைத்து மூவருடைய உயிர்களையும் காப்பாற்ற முடியும்’ என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.


கைவிடப்பட்ட இந்த மூவரின் உயிரை அடுத் தடுத்த சட்டப் போராட்டங்களாவது மீட்டுக் கொடுக்குமா? கண்ணீரோடு காத்திருக்கிறார்கள், கவலைப்பட மட்டுமே தெரிந்த தமிழர்கள்!

thanx -ju vi