Monday, December 19, 2011

சசிகலாவை கழட்டி விட்ட ஜெ - காமெடி கும்மி கலாட்டா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf7Awrr-3YJbN1IJ8vMiZ0-3lmPGQFVreYYhDE-AzUl6FBSWeErQ1HpW4dAFakhDyVJi7wsGL0XDuW-BfimkHnx7rr2dwrV4TX12cxi5KQjcW2WEutADWdd7P8X1CLXBfZ5VaEdGu7a9u0/s1600/jj-sasikala.jpg
அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், நடராஜன், தினகரன், சுதாகரன், திவாகர்(மன்னார்குடி), பாஸ்கரன்,ராமசந்திரன், வெங்கடேசன், ராஜராஜன், குலோத்துங்கன், ராவணன், மோகன் உள்ளிட்ட 12 பேரும் அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


சி.பி - அடேங்கப்பா, இவங்க எல்லாம் அதிமுகல இருந்தாங்கண்ணே இப்போத்தானே தெரியுது.. 


ஏறக்குறைய 25 ஆண்டு காலமாக சசிகலா மற்றும் அவரை சுற்றியுள்ள குடும்பத்தினர் கையில் இருந்த அ.தி.மு.க.,வில் முக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. சசி இல்லாமல் ஜெ., இல்லை என்ற நிலையை தகர்த்து எறிந்திருக்கிறார் ஜெ., .


சி.பி - உள்ளடி வேலைகள் என்ன நடந்ததோ, என்ன மர்மமோ யாருக்குத்தெரியும்?  


சமீப காலமாக ஜெ மற்றும் சசி குடும்பத்தினர் இடையே அரசல் புரசலாக புகைச்சல் இருந்து வந்ததாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கட்சியின் பொது செயலர் ஜெ., இன்று அ.தி.மு.,கவில் இருந்து மொத்தம் 12 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

சி.பி - இப்படித்தான் 2001 ல ஒரு தடவை டிராமா போட்டாங்க 


.இந்த 12 பேருடன் கட்சிக்காரர்கள் யாரும் இனி எவ்வித தொடர்பும் கொள்ள கூடாது என்று கடும் எச்சரிப்பும் வெளியிட்டுள்ளார். 12 பேரும் சசியின் நெருங்கிய வட்டாரம் ஆகும்.

 சி.பி - இனிமே ஆரும் அவங்க கூட சேரக்கூடாது, ஆரும் புழங்கக்கூடாது - நாட்டாமை

கடந்த 15 ஆண்டு கால வரலாற்றில் சசி குடும்பத்தினரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் கட்சியில் கோலோச்சி வந்திருந்தனர். கட்சியிலும் , ஆட்சிக்கு வந்தால் அரசிலும் இவர்கள் தலையீடு இல்லால் இருக்காது. அரசு துறை பொறுப்புகள் டிரான்ஸ்பர் மற்றும் கட்சியில் பதவி வேண்டுமானால் சசி வட்டராத்தையே நாட வேண்டிய நிலையில் அ.தி.மு.க., தொண்டர்கள் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இந்த கூட்டத்தனர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அ.தி.மு.க, தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியிருக்கிறது. ஜெ.,யின் அதிரடி நடவடிக்கையால் சசி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சி.பி - நடராஜன் மட்டும் ஜாலியா இருப்பார் ஹி ஹி


சசி நீக்கம் ஏன்., ? பரபரப்பு தகவல்: சசியை கட்சியில் இருந்து நீக்க ஜெ., எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பல பின்னணி தகவல்கள் இருந்துள்ளன. இது குறித்த விவரம் வருமாறு: சசிகலா மற்றும் அவரது வட்டாரத்தினர் கட்சியை தங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர். ]


அதாவது பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் ஜெ.,வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இதில் அவருக்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அவர் ஜெயிலுக்கு செல்ல நேரிட்டால் அந்நேரத்தில் என்ன செய்வது என பெரும் ஆலோசனை நடத்தியது சசி கூட்டம். இதன் ஒரு கட்டமாக நடராஜன் அ.தி.மு,.க.,வை தங்கள் வசம் கொண்டு வர தங்களுக்கு வேண்டிய கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசில் அதிகாரிகள் என பலரை தங்கள் இஷ்டம் போல் பொறுப்பில் கொண்டு வரதிட்டமிட்டார். 


சி.பி - ஓஹோ, ஓ பன்னீர் செல்வம் மாதிரி ஆல்டர்நேடிவ் சி எம் ஆகலாம்னு கனா கண்டாங்களோ?


இதற்கு சசியும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் இந்த உள்ளடி வேலை நடந்த போது தொலைபேசி உரையாடல் தமிழக உளவுத்துறைக்கு கிடைத்தது. இந்த தகவலை உளவுத்துறை மூலம் அறிந்து கொண்ட ஜெ., இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன. 

http://tamil.oneindia.in/img/2011/07/14-sasi-jaya300.jpg


 1.நம் கண்ணுக்குத்தெரியாத, நம் அறிவுகுப்புலப்படாத ஏதோ ஒரு மர்மம் போயஸ் தோட்டத்தில் ஒளிந்து கிடக்கிறது


------------------------------------------------
2. 18 - கூட்டுத்தொகை 9 - ராசியான எண் வர்ற தேதில தனக்கு ராசி இல்லாதவங்களை ஜெ ஒதுக்கி இருக்காங்களே?

-------------------------------------------------
3. ஏட்டிக்குப்போட்டியாக கலைஞர் தன் மகன் ஸ்டாலின், அழகிரி, கனிமொழியை கட்சியை விட்டு நீக்கீட்டால் இன்னும் நல்லாருக்கும்

----------------------------------------------
4. தமிழ்நாட்டில் யாருக்கும் தோழிகளே இருக்கக்கூடாது, ஜெ அதிரடி அறிவிப்பு , இளைஞர்கள் திகைப்பு @இமேஜினேஷன்


-----------------------------------------
5. கலைஞர் டி வி மானாட மயிலாட ஜட்ஜ் பதவியில் இருந்து கலா மாஸ்டர் நீக்கம் - ஏட்டிக்குப்போட்டி , தானிக்கு தீனி @ இமேஜினேஷன்

----------------------------------------
6. சசிகலா உச்ச நீதி மன்றத்தில் மனு - திடீர் என கழட்டி விட்டதுக்கு காம்பன்சேஷன் எதிர்பார்ப்பு ஹி ஹி ஹி

------------------------------------------
7. கல்தா கொடுத்தது கட்சிக்கு மட்டும்தான், மற்றபடி நட்பு நீடிக்கிறது - ஜெ???

--------------------------------------
8. எதிரிக்கூடாரத்திலிருந்து யார் வந்தாலும் கழகம் மானம் , ரோஷம் எல்லாம் பார்க்காமல் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளும் - கலைஞர் அழைப்பு ஹி ஹி

------------------------------------
9. ஹலோ,  நண்பா!! நாடே பரபரப்பா இருக்கு, முதல்ல உங்க தோழியை கூப்பிட்டு டூ சொல்லுங்க, அதான் ஃபேஷன்

---------------------------------------
10. நான் திருவள்ளுவரின் கூடாநட்பு பற்றி இப்போதான் படிச்சேன் - ஜெ விளக்கம், சசிகலா கலக்கம்

-----------------------------------
11. இனி வருடா வருடம் டிசம்பர் 18 கழட்டி விடும் நாளாக அறிவிக்கப்படுகிறது, எல்லாரும் நைஸா யூஸ் பண்ணிக்குங்கப்பா

--------------------------------
12. நான் ஜெவுக்கு புதிய தோழியாக இருக்க ஆசைப்படுகிறேன் - பிரேமலதா விஜயகாந்த் பேராசை அறிக்கை # கற்பனை

---------------------------------
13. சசிகலா நீக்கத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை, நான் ஆலோசனை ஏதும் கூறவில்லை, இது ஜெ எடுத்த முடிவு # அடுத்த வார துக்ளக் தலையங்கம்

----------------------------------

32 comments:

Unknown said...

செம குத்து போல ஹிஹி!

sathishsangkavi.blogspot.com said...

அம்மான்னா சும்மாவா....

கும்மாச்சி said...

புது செய்தியை வைத்து செம கலக்கல் சி.பி.

Admin said...

அம்மா ஆத்தா ஆயிட்டாங்களா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கா.கு. போதவில்லை!

RAMA RAVI (RAMVI) said...

செய்திகளுக்கு பிறகு நீங்க எழுதியிருக்கற டிவீட்டுகள் அருமை,அதிலும் 3 சிறப்பு!!

நிரூபன் said...

வணக்கம் அண்ணே..
அதிரடி சிட்டுவேசன் பதிவு..

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சசிகுமார் said...

மாப்ள உண்மையாவா... நீ சொல்லி தான் தெரியும்... உடனே தட்ஸ் தமிழ் பார்க்கணும் ரைட் வரட்டா... இனிப்பான செய்தி சொல்லி இருக்க....

நிரூபன் said...

அண்ணே...
இம்புட்டு வருசமா ஒன்னா இருந்தவங்க பிரிஞ்சதுக்கு தக்க காரணம் சொல்லி கடிச்சிருக்கிறீங்க.
ஹே...ஹே..

நிரூபன் said...

அண்ணே இனிமே போயாஸ் தோட்ட மர்மம் எல்லாம் சசிகலா வாயால் துலங்கும் என நினைக்கிறேன்.

ராஜி said...

எப்படியோ இனியாவது தமிழகத்துக்கு நல்லது நடந்தா சரி

வெளங்காதவன்™ said...

துக்ளக் தலையங்கம் கன்பார்ம்...

:-)

சக்தி கல்வி மையம் said...

விளங்கிடும்..

கோவி said...

//தமிழ்நாட்டில் யாருக்கும் தோழிகளே இருக்க கூடாது..//

ஐயோ.. அம்மா..

MANO நாஞ்சில் மனோ said...

இதெல்லாம் வெறும் நாடகமே, அம்மா சும்மா பல்ஸ் பாக்குறார்னு நினைக்குறேன்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இதுக்கு எதுக்குடா தன்மான[[இல்லாத]] தமிழனின் ஒரே தலைவன் [[த்தூ]] குடும்பத்தை உள்ளே இழுக்குறே ராஸ்கல்...!!!

Yoga.S. said...

வணக்கம்,சி.பி.சார்!ரொம்ப சந்தோஷப்பட்டுடாதீங்க! நாளைக்கே...........................................................?!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

சுதா SJ said...

யாரு..... அம்மா இல்ல....... இது இதுதான் அம்மா.. :)

சுதா SJ said...

இதை ஜெயா முதலிலேயே செய்து இருக்க வேண்டும்.... ஆனால் ஜெயா மேல் இருந்த அன்பால் திருந்துவார் திருந்துவார் என்று பார்த்து ஏமாந்து இப்போ செய்து இருக்கார்... இனி அம்மாவுக்கு எதிர்காலம் பிரகாஷம்தான்... அப்போ கருணாநிதி ??? அவ்வ்வ்வ்

Napoo Sounthar said...

ஹி.. ஹி..

ஸ்ரீராம். said...

18 ம் தேதி எங்கே முடிவு எடுத்தாங்க....இன்றுதானே முடிவு எடுத்துச் சொன்னாங்க...இன்று தேதி 19 அல்லவா?

பவள சங்கரி said...

அடங்கப்பா.... கலக்குறீங்களே.... சூப்பர் அப்பு!

Menaga Sathia said...

அம்மான்னா அம்மா தான்.....

அனுஷ்யா said...

பதிலுக்கு கலைஞர் கிட்ட இருந்து நீங்க எதிர்பாக்கிற ரியாக்ஷன்...எனக்கு புடிச்சுருக்கு..வழக்கம் போல சூப்பர் அண்ணே...

மகேந்திரன் said...

கூடுவதும் பிரிவதும் இவங்களுக்கு சகஜமப்பா....

சென்னை பித்தன் said...

ஆகட்டும் பார்க்கலாம்!

Anonymous said...

என்னமோ நடக்குக்து, மர்மமா இருக்குது...
உலகமாக கலாய்ப்பு சார்.......



இன்று.

காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

சரியில்ல....... said...

ஒவ்வொரு சானல்லயும் வேற வேற காரணம் சொல்றாங்களேன்னு கடுப்பாகி இங்க வந்தா, சிபி புது காரணம் சொல்லுறாரு. அப்போ எதுதாம்லே உண்ம?

சரியில்ல....... said...

(டு)ட்வீட்ஸ் எல்லாம் ஸ்வீட்ஸ்!

Anonymous said...

அண்ணே ஓட்டு போட்டாச்சு............
முதல் இடம் வர வாழ்த்துகள்


Voted @senthilcp for Best Indian Twitterer http://bit.ly/ewE4VC @HeadlinesIndia #HiFlyers2011

arul said...

kalakkunga imagination jokes are nice