Saturday, December 10, 2011

சில்லறை ஜோக்ஸ் ( சில் அறை - ஏ சி )



1.  மிஸ்... உக்ககிட்டே  ஏகப்பட்ட  டேலண்ட்  இருக்கு...  நீங்க  ஏன்  ஒரு  வலைப்பூ  தொடக்கக்கூடாது? ( BLOG)


அப்புறம்  என்னை  எல்லாரும்  ‘பிளாக்கர்’-னு  (BLACK)சொல்லிடுவாங்களே? மீ செக்கச்சிவப்பு


----------------------------------
2. .தலைவரே!  வாட்ச்ல  மணி  பார்க்கக்கூட  உங்களுக்கு  தெரியாதாமே?


எவன் சொன்னது?  பார்ப்பேன்.  ஆனா,  டைம்  என்ன?-னு சொல்லத்தெரியாது.


-------------------------------------
3. உங்க சம்சாரம் வந்தா மட்டும் டபக்னு சீட்டைவிட்டு எந்திரிக்கறீங்களே? ஏன் மேனேஜர் சார்?

ஹி ஹி ஒரு மரியாதைதான், பயம்னு நினைச்சுடாதீங்க

---------------------------------------

4. என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..

அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு

---------------------------------------

5. புத்தகத்தை பார்த்து அப்படியே ட்விட்டர்ல எழுதுறீங்களா?

ச்சே, ச்சே, கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்குவேன், இல்லைன்னா அட்டக்காப்பின்னு சொல்லிடுவாங்க

-----------------------------------------



6. சிம்புவுக்கும், அவரோட அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? 

அப்பா செட் போடறதுல மன்னன், பையன் செட் பண்றதுல கண்ணன் # ஆர்ட் டைரக்‌ஷன் &; ஹார்ட் டைரக்‌ஷன்

----------------------------------------

7. ஃபிகரு-  என் பின்னால பல பசங்க பைத்தியமா சுத்தறாங்க.. 

ஆல்ரெடி பைத்தியமா? சுத்த ஆரம்பிச்ச பின் பைத்தியமா?

----------------------------------------

8. ஏய் மிஸ்டர்! பொண்ணுங்களை உரசுறதுக்காகவே டவுன் பஸ்ல வருவீங்களா?

இல்லையே? அப்பப்ப எலக்ட்ரிக் ட்ரெயின்லயும் வருவனே? # யார் கிட்டே?

----------------------------------

9. Mr, உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு.

மிஸ், கண் எரிஞ்சா ஐ ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க, வயிறு எரிஞ்சா அல்சர் ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க

------------------------------------

10. நான் ஒரு புதுமுகம்னு அலட்சியம் ஏதும் பண்ணாம டைரக்டர் நல்லா என்னை கவனிச்சுக்கிட்டார்.. 

“புதுசு”ங்கறதால தான் “கவனிச்சிருப்பார்”

---------------------------------------


11. வேல்முருகன் பிஞ்சில் பழுத்த பழம் தூக்கி எறிந்து விட்டேன்-டாக்டர் ராமதாஸ் # என்னாது? பிஞ்சுலயே பழுத்துட்டாரா? அவர் என்ன சிம்புவா?

-----------------------------------

12. பிரம்மாண்டமான ‘எலைட் ஷாப்’ மது பார்களை திறக்கிறது தமிழகஅரசு # டாக்டர் ராம்தாஸ் எங்கிருந்தாலும் வந்து தாம் தூம் என குதிக்கவும்

-----------------------------------

13. டேய் லூஸு, சொந்தமா எதுவும் யோசிக்கமாட்டியா? 

ஹலோ மேடம் , அந்தளவு மூளை இருந்தா நாங்க ஏன் ட்விட்டருக்கு வாரோம்? கதை எழுத போயிருப்போமே?

---------------------------------

14. அதிமுக கூட்டணி இருக்கிறதா?இல்லையா?- ஜெவுக்கு கிருஷ்ணசாமி கேள்வி# யோவ், நாங்க எல்லாம் ஜட்ஜ் கேட்டாலே கண்டுக்காத ஆளுங்க, யார் கிட்டே?

------------------------


15. நீ எழுதறதை எவனும் படிக்க மாட்டான்.. 

அது எங்களுக்கும் தெரியும்.. தன் கையே தனக்கு உதவி, நாங்களே எழுதி நாங்களே படிச்சுப்போம்

----------------------------------------


16. நீங்களே கவிதை எழுதிட்டு நீங்களே நல்லாருக்குன்னு சொல்லிக்கறிங்களே? வெட்கமா இல்ல? 

ம்ஹூம்.. வேற யாருமே சொல்லலைன்னா வேற என்னா பண்ண?

-----------------------------------------


17. நாமகல்லில் பஸ் 'பாடி பில்டிங்' தொழிற்சாலை: அரசு அறிவிப்பு # கூகுள் பஸ் மாதிரி மூடாம நடந்தா சரிதான்

------------------------------------

18. என் மனைவிக்கு ரொம்ப இறக்க சுபாவம்.. 

இரக்கமா? இறக்கமா? 

அதாவது என்னை, எங்கம்மாவை இறக்கி இறக்கி பேசுவா

-------------------------------------

19. மாப்ள படு சில்லறை பார்ட்டினு சொல்றீங்களே, பார்த்தா டீசண்ட்டா இருக்கார்? 

அட நீங்க வேற ஏ சி ரூம்ல தான் இருப்பாரு( சில் அறை)

------------------------------------------

20. படத்துல ஜோடியா நடிக்கறப்ப எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிடுச்சு.

ஓஹோ, அப்புறம் எப்டி மாசமா இருக்கீங்க? பிசிக்ஸ்ம் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

-------------------------------------------

A

டிஸ்கி - மேலே உள்ள ஃபோட்டோக்கள் அனைத்தும் என் சொந்த ஊர்ல , என் சொந்த கேமராவுல எடுக்கப்பட்ட சொந்த ஃபோட்டோக்கள் ஹி ஹி

41 comments:

ராஜி said...

Tweetlam super. Adhaivida, Padangal super.

RAMA RAVI (RAMVI) said...

டிவிட்ஸ் நன்றாக இருக்கு.அதைவிட படங்கள் அற்புதமா இருக்கு.

கோகுல் said...

சொந்த ஊர்,சொந்த கேமிரா கலக்குங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அட்ரா சக்க சில்லறை ஜோக்ஸ்?

Yoga.S. said...

மேலே இருக்கிறது என் சொந்த ஊர்ல,சொந்தக் கமராவுல, சொந்தமா எடுத்தது!////க்..கும்!

Yoga.S. said...

மேலே இருக்கிறது என் சொந்த ஊர்ல,சொந்தக் கமராவுல, சொந்தமா எடுத்தது!///ஆமா,இவரு பெரிய அசோக்குமாரு!!!!!

சக்தி கல்வி மையம் said...

சென்னிமலையா அது?

MANO நாஞ்சில் மனோ said...

கொடிகாத்தகுமரன் வாழ்ந்த பூமின்னு பெருமையா சொல்லுடா அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

மணி பாக்கத்தெரியாதவன் எல்லாம் தலைவர் ஆனால் நாடு உருப்படுமா..?

MANO நாஞ்சில் மனோ said...

வேல்முருகன், ராமதாசுக்காக ஒரு கொலையும் முன்பு செய்ததாக தகவல் உண்டு, மறைந்த போலீஸ் ஆபீசர் பிரேம் குமார், அந்த கொலை கேசுல எப்பிடியாவது வேல்முருகனை உள்ளே தள்ளிரனும்னு முயன்றும் முடியவே இல்லை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது சொந்த கேமரா வச்சிருக்கிரியா இருடி, என்னைக்காவது கையில மாட்டாமலா போயிருவே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
2. .தலைவரே! வாட்ச்ல மணி பார்க்கக்கூட உங்களுக்கு தெரியாதாமே?

எவன் சொன்னது? பார்ப்பேன். ஆனா, டைம் என்ன?-னு சொல்லத்தெரியாது.
/////////


அப்ப அந்த தலைவருக்கு நேரம் நல்லாயில்லன்னு சொல்லுங்க....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
3. உங்க சம்சாரம் வந்தா மட்டும் டபக்னு சீட்டைவிட்டு எந்திரிக்கறீங்களே? ஏன் மேனேஜர் சார்?

ஹி ஹி ஒரு மரியாதைதான், பயம்னு நினைச்சுடாதீங்க

/////////////-

நீங்க உட்காருங்க சிபி...
ஓ.. விட்ல வந்திருக்காங்களா..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////

4. என் படத்துல இதுவரை யாருமே சொல்லாத மெசேஜ் இருக்கு..

அட போங்க சார்.. என் செல் ஃபோன்ல கூடத்தான் புது மெசேஜ் 12 இருக்கு

//////////////


படத்தில மெசேஜ்.. மெசேஜ்... அப்படின்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன...?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////

5. புத்தகத்தை பார்த்து அப்படியே ட்விட்டர்ல எழுதுறீங்களா?

ச்சே, ச்சே, கொஞ்சம் ஆல்டர் பண்ணிக்குவேன், இல்லைன்னா அட்டக்காப்பின்னு சொல்லிடுவாங்க
////////////

பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்து விட்டதான் ரிலீஸ் பண்ணுவோம்...

வரலாறு முக்கியம் அமைச்சரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////

6. சிம்புவுக்கும், அவரோட அப்பாவுக்கும் என்ன வித்தியாசம்?

அப்பா செட் போடறதுல மன்னன், பையன் செட் பண்றதுல கண்ணன் # ஆர்ட் டைரக்‌ஷன் &; ஹார்ட் டைரக்‌ஷன்

///////////


அப்புறம்... அவரு TR... இவரு STR...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////////
8. ஏய் மிஸ்டர்! பொண்ணுங்களை உரசுறதுக்காகவே டவுன் பஸ்ல வருவீங்களா?

இல்லையே? அப்பப்ப எலக்ட்ரிக் ட்ரெயின்லயும் வருவனே? # யார் கிட்டே?

///////////


அப்ப ஒரு கேப் கிடைக்க கூடாது...

Unknown said...

கலக்கல் விட்டுக்கள்....மக்களே அண்ணே என்ன சொல்றாரு கவனிங்க..இனி தன் சொந்தகேமரா மூலமா எடுத்த போட்டோவ மட்டும்தான் பதிவுல போடுவாராம் ஹிஹி!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
9. Mr, உன்னை பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு.

மிஸ், கண் எரிஞ்சா ஐ ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க, வயிறு எரிஞ்சா அல்சர் ஸ்பெஷலிஸ்ட்டை பாருங்க
////////////


எனக்கு நெஞ்செரிச்சல்... யாரை பார்க்கனும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சொந்த கேமரா ஓகே...

அது என்ன சொந்த ஊரு... அவ்ளோ பெரியா ஆளா நீர்... சொந்தமா ஊரு வச்சிக்கிட்டு இருக்க...

Mohamed Faaique said...

அடேங்கப்பா... சொந்தமா உரே வச்சிருக்குர சில்லரைப் பாட்டியா நீங்க???

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல பதிவு (இது எனது சொந்தக் கருத்து)

வெளங்காதவன்™ said...

:-)

rajamelaiyur said...

ரகளை ....

rajamelaiyur said...

super

Admin said...

எப்பவும் போல காமெடி கலாட்டா.

Unknown said...

மாமா தூக்கிடுலாமா...?

மாமா தூக்கிடுவமா...?

விக்கி என்னத்தையா

சிபியோட ஆட்டைத்தான்....
சைடுடிஸ்க்கு ஆச்சு...ஹஹஹ

ஸ்ரீராம். said...

நான்கு, பதினான்கு.....:))))

சொந்த ஊர் சொந்த போட்டோஸ் கிராம வாசனையுடன் அருமை.

Unknown said...

வழக்கம் போல நகைச்சுவைப்
பதிவு
நன்று நன்றி!

புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan said...

அருமை.

குறையொன்றுமில்லை. said...

தினம் ஒரு பதிவுக்கு எங்கேந்துதான் மேட்டர் பிடிக்கரீங்க?

சேக்காளி said...

படங்கள் மட்டும் தான் சொந்த சரக்கு.மற்றதெல்லாம் டிவிட்டருல லவட்டுனது ஒத்துக்கிட்ட ஒங்க நேர்மையே பாராட்டைப்பெறுகிறது.

கடம்பவன குயில் said...

ட்விட்ஸ் கலக்கல். படங்கள் அருமை.

எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது உங்க டிஸ்கியே...

சொந்த ஊரு, சொந்த காமிரா, கலக்குங்க சிபி கலக்குங்க....

Menaga Sathia said...

சூப்பர்ர்ர் ட்வீட்ஸ்!! இந்த ட்வீட்ஸ்லாம் எங்கருந்து கன்டுபிடிக்கிறீங்க??

சுதா SJ said...

மேனகாவின் டவுட் தான் எனக்கும்.... இதெல்லாத்தையும் எங்க இருந்து பாஸ் கண்டு புடிக்கிறீங்க??? கலக்கல்

சுதா SJ said...

பாஸ் அந்த சிம்பு & சிம்பு அப்பா செட் கலக்கல்.... ஹா ஹா.....

சிசு said...

4 -வது நல்ல மெசேஜ் சிபி...

சிசு said...

ஆமா... ட்விட்டர்-ல எழுதுறவங்க மேல அப்பிடி என்னாங்க கொலைவெறி... இந்த வாரு வாரியிருகீங்க....

(5 -ம், 13 - ம்..)

சிசு said...

ப்ளாக்-ல எழுதுறவங்களை பிளாக்கர் அப்பிடீன்னு சொல்றோம்...
ட்விட்டர்-ல எழுதுறவங்கள என்னான்னு சொல்றது??!!! # டவுட்டு...

Yaathoramani.blogspot.com said...

படங்கள் இயற்கையாக இருந்தது
நகைச்சுவைத் துணுக்குகள் அனைத்தும்
புதியதாகவும் ரசித்துச் சிரிக்கும்படியாகவும் இருந்தது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 10

துரைடேனியல் said...

Vazhakkam polave Kalakkal Sago.