Sunday, December 18, 2011

ஈரோடு பதிவர் சந்திப்பு - வெளிவந்த பல பதிவுலக ரகசியங்கள் பாகம் 1

 
 மேலே இருக்கும் மேடம் பொதிகை சேனல்ல செய்தி வாசிக்கறவங்களாம்


ஈரோட்டில் பதிவர் சந்திப்பு இன்று 18.12. 2011 ஞாயிறு வெற்றிகரமாக நடந்தது, 210 பேர் மொத்தம் வந்திருந்தாங்க.. அதுல வலைப்பதிவர்கள், ஃபேஸ் புக் , ட்விட்டர் நண்பர்கள் அனைவரும் அடக்கம்.. சென்னையிலிருந்து ஜாக்கிசேகர், கே ஆர் பி செந்தில், ஃபிலாஷபி பிரபாகரன், தண்டோரா மணீ ஜி , உண்மைத்தமிழன் , மெட்ராஸ் பவன் சிவகுமார்.. என நீளும் லிஸ்ட்.. வரிசையா பார்ப்போம்..

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃபோன், நாய் நக்ஸ் நக்கீரன் என்னமோ தீவிரவாதி ரேஞ்சுக்கு மிரட்டுனாரு.. நான் சிதம்பரத்துல ரயில் ஏறிட்டேன்.. ஈரோடு 8 மணிக்கெல்லாம் வந்துடுவேன், என்னை வரவேற்க ரெடியா இருந்துக்கோ என்றார்... அடங்கொன்னியா.. இவர் பெரிய சீமை சரக்கு ஷில்பாஷெட்டியா?ன்னு மனசுக்குள்ள நினைச்சுட்டு ஓக்கே டன் அப்டினு ஃபோன்ல சொன்னேன்.. 

அடுத்து ஆரூர் மூனா செந்தில்... 24 மணி நேரமும் மப்புல இருக்கற மாதிரியே டி பி ல ஃபோட்டோ வெச்சிருப்பாரே அவர் தான்..அவர், அண்ணே, நான் சேலம் தாண்டிட்டேன் ( அவ்வளவு பெரிய ஊரை எப்படித்தாண்டுனாரோ..?). 7.30 மணிக்கெல்லாம் ஈரோடு வந்துடுவேன்னாரு..இவர் எஸ் எம் எஸ் ல, ரொம்ப சிக்கனமாம், அடங்கொய்யால, சரக்கு அடிக்கறப்ப மட்டும் அந்த சிக்கனம் தெரியாதா?  ( ஆனா ஆள் தான் தாதா மாதிரி மிரட்ற டைப்ல உருவம், பச்ச மண்ணுய்யா .. செம ஜாலி டைப்)


சொன்ன படி 8 மணிக்கு டான்னு வந்த நக்கீரன் மிஸ்டு கால் குடுத்தார்.. நாமே மிஸ்டு கால் மன்னன், நம்ம கிட்டேயேவா?அப்டின்னு நானும் பதில்க்கு ஒரு மிஸ்டு கால் குடுத்தேன்.. அவர் சொல்ல வந்த தகவல் நான் ஈரோடு வந்துட்டேன்.. நான் சொன்ன தகவல் நான் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டேன்.. வந்தாரை வாழ வைக்கும் விருந்தோம்பல் பண்புக்காக 80 பைசா செலவானாலும் பரவாயில்லைன்னு நானே அவர்க்கு கால் பண்ணி ?”யோவ் , எங்கேய்யா இருக்கே?” ந்னு கேட்டேன்.. அவர் நீங்க சொன்ன படி ரயில்வே ஸ்டேஷன் ஆர்ச் வந்துட்டேன்..ப்ளூ கலர் சர்ட் போட்டிருக்கேன்னு அடையாளம் சொன்னாரு.. 

ஆளை கண்டு பிடிச்சு அவரை பிக்கப் பண்ணிட்டு ( பாருங்க மகா ஜனங்களே.. நான் எந்த ஃபிகரை யும் பிக்கப் பண்ணலை, ஒன்லி ஆண் பதிவர்) பழைய பாளையம் பஸ் ஸ்டாப்க்கு போனோம்.. ரோட்டரி சி டி ஹால் தான் ஸ்பாட்.. அங்கே போய் விசாரிச்சோம்.. அப்போ நக்கீரன் கேட்டார்..

யோவ், நீங்க லோக்கல் தானே.. எங்கே மீட்டிங்க்னு கூட தெரியாதா?


தமிழ்வாசி பிரகாஷ் , மீ, நாய் நக்ஸ் பிளாக் நக்கீரன், மெட்ராஸ் பவன் சிவக்குமார்

 ஹி ஹி எனக்கு கோயில், ஸ்தலம், தியேட்டர்  மட்டும் தான் தெரியும், இந்த கிளப் மேட்டர் எல்லாம் நமக்கு தெரியாது”

சரின்னு சித்தோடு சங்கவிக்கு ஃபோனை போட்டேன்.. நிற்க.. சங்கவின்னா ஃபிகர்னு யாரும் நினைச்சுடாதிங்க, சங்கவி வலைப்பூ  சதீஷ் , இவருக்கும் கில்மாவுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு.. கில்மா படத்துக்குப்பேர் போன மலையாளப்படம் அஞ்சரைக்குள்ள வண்டி,  கில்மா போஸ்ட்க்கு பேர் போனது அஞ்சறைப்பெட்டி ஹி ஹி . நிறைய பேருக்கு குழப்பம் வரும் , ஈரோடு மாவட்டத்துலயே 3 சதீஷ் இருக்காங்க.. 1. நல்ல நேரம் சதீஷ் ( ஜோதிடர்) 2. சங்கவி ( சதீஷ் ,சித்தார், பவானி) 3. ஜேம்ஸ்பாண்ட் 007 சதீஷ் ( டெக்னிக்கல் & இமேஜ்  ஃபோட்டோஸ் கலெக்‌ஷன்ஸ் போடற சதீஷ் )

கோமாளி செல்வா , வெங்கட் , மீ

சித்தார் சதீஷ்கிட்டே மண்டபம் எங்கேன்னு கேட்டா அவர் நமக்கும் மேலே இருப்பார் போல.. பழைய பாளையம் பஸ் ஸ்டாப்ல யாரையாவது விசாரிங்க, சொல்வாங்கன்னாரு.. அடங்கோ , அது எங்களுக்குத்தெரியாதாய்யா.. நீங்க வேணும்னா ஈரோடு  கதிர்க்கு ஃபோன் போட்டு கேளுங்களேன்.. இதுல ஒரு ரகசியம், நான் அவுட் கோயிங்க் கால் பேசறதுன்னா ஏர் செல் நெம்பரா இருந்தா மட்டும் தான் பேசுவேன், ஏன்னா எனக்கு ஏர் செல் டூ ஏர் செல் ஃப்ரீ.. இண்ட்டர் நேஷனல் ஃபிகரா இருந்தாலும் வேற கம்பெனி ஃபோன் என்றால் மீ பேச லேது ஹி ஹி , கதிர்ட்ட இருக்கற ஏர்செல் பிசியாவே இருந்துச்சு.. இன்னொரு பி எஸ் என் எல் நெம்பர் எனக்கு தெரியாது.. 

ஃபிலாஷபி பிரபாகரன் , மீ,
 அப்புறம் டீக்கடைல விசாரிச்சு ஸ்பாட்டை கண்டு பிடிச்சு மண்டபம் போனா அங்கே ஆல்ரெடி 8 பேர் இருந்தாங்க.. ஒரு அவசர அறி முகம்.. யார் யார்னு எல்லாம் நினைவில்லை.. அப்போ ஈரோடு கதிர் முதுகை தொட்டார் ( என் முதுகைத்தான் ) டக்னு திரும்பறப்ப அவர் செல் ஃபோனை தட்டி விட்டுட்டேன்.. ஜஸ்ட் மிஸ் ஆகி இருக்கும் , நல்ல வேளை பிடிச்சுட்டாரு..

ஆரூர் மூனா செந்திலை பிக்கப் பண்ணிட்டு  வர்றேன் -னு கிளம்புனேன்.. அப்புறம் பார்த்தா அவர் பாட்டுக்கு இங்கே மண்டபம் வந்துட்டு மெசேஜ் அனுப்பறார்.. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா ஆன் த வே-ன்னு சொன்னாங்க. நைட் 11 மணிக்கு ஈரோடு வந்து சேர்ந்தாங்க போல..

நான் சென்னிமலை கிளம்பி போய்ட்டேன், இன்னைக்கு காலைல 9.00 மணிக்கு பிரகாஷ் ஃபோன் பண்ணி நாங்க ஹால்க்கு வந்துட்டோம், நீங்க எப்போ வர்றீங்க?னு கேட்டாரு.. அரை மணி நேரத்துல அங்கே இருப்பேன்னேன்..

ரவி, ஜேம்ஸ் பாண்ட் சதீஷ், மீ, உண்மைத்தமிழன்

9.40 க்கு ஹால்க்கு வந்துட்டேன்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் எண்ட்ரன்ஸ்ல ஒரு குரூப்போட பேசிட்டு இருந்தாரு. புதிய தலை முறை தலைமை நிருபர் அதிஷா இருந்தாரு.. அவர் கேட்ட கேள்வி என்னை அதிர வெச்சுட்டுது.. “ ஏன் என் ட்விட்டர் அக்கவுண்ட்டை பிளாக் பண்ணி வெச்சிருக்கீங்க? ஃபாலோ பண்ண முடியலை? உங்க பிளாக் எல்லாம் ரெகுலரா படிப்பேன், மொக்கை படமா விமர்சனம் போட்டு கொலையா கொல்வீங்களே?ன்னார்.. 
அய்யய்யோ, நான் எதும் பிளாக் பண்ணலை, என்னையும் அறியாம எதையாவது க்ளிக் பண்ணி இருப்பேன், நான் டெக்னிக்கல் மேட்டர்ல ரொம்ப வீக் ( மேட்டர்ல ரொம்ப ரொம்ப வீக் ), உடனடியா பார்க்கறேன்ன்னேன்.. 

யுவ கிருஷ்ணா அவர் பக்கத்துலயே இருந்தாரு.. ட்விட்டர்லயும் சரி, பிளாக்லயும் சரி 15 வருஷம் முன்னால எடுத்த ஃபோட்டோவை வெச்சிருக்காரு ஜனங்களே..  யாரும் ஏமாந்துடாதீங்க.. ( நாம எவ்வளவோ தேவலை , 4 வருஷம் முந்திய ஃபோட்டோ தான் வெச்சிருக்கோம்.. ) அவர்ட்ட கேட்டேன், 




அண்ணே, ஏன் பழைய ஃபோட்டோ வெச்சீருக்கீங்க?

 எனக்கு பழசுதான் ரொம்ப பிடிக்கும்னாரு ( இவர் நடு நிசி கீச்சு மன்னன் போல - மிட் நைட்ல கில்மா ட்வீட் தான் நநிகீ )

நக்கீரன், நான் 2 பேரும் அப்படியே கீழே இறங்கி வந்தோம், எதிர்ல கோகுலத்தில் சூரியன் வெங்கட், சேலம் தேவா வந்தாங்க

எனக்கு அடையாளம் தெரியலை.. நக்கீரன் தான் சொன்னாரு.. வர்றது வெங்கட் போல? 

இருக்காது, அவர் டி பி ல சிந்தாமணி கலர் சட்டை தானே போட்டிருப்பாரு?இதுல வேற கலர் போட்டிருக்காரு.. அதுவும் இல்லாம டி பி ல சிவப்பா இருக்காரு, இதுல கலர் கம்மியா இருக்கே?

கே ஆர் பி செந்தில் ,(எங்கே செல்லும் இந்தப்பாதை) , மீ


அப்புறம் பார்த்தா ஆள் வெங்கட் தான்.. சேலம் தேவா ட்விட்டர் டி பி ல குழந்தை மாதிரி முகத்தை வெச்சிருக்காரே.. ஆள் ஆறரை அடி , ஓங்காம அடிச்சாலே ஒன்றரை டன் வெயிட் வரும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ்

உண்மைத்தமிழன் என்னை காட்டி என்னமோ மிரட்ற மாதிரி என்னமோ சொன்னாரு.. கிட்டே போய் என்னண்ணே? அப்டின்னேன்
தம்பி.. ரொம்ப ஓவரா ஆடாதே, உன் பிளாக்ல இனிமே ஃபிகருங்கற வார்த்தையே வரக்கூடாது, எந்த விமர்சனம் எழுதுனாலும் நீ ஹீரோயினை ஃபிகர்னு தான் வர்ணீக்கறியாம், நிறைய புகார் வருது.. அப்புறம் ஏதாவது பிரச்சனைன்னா நாங்க காப்பாத்த மாட்டோம்னாரு.. 

லக்கி லுக் மப்பு கிக் யுவ கிருஷ்ணா, மீ

ஃபிலாசபி பிரபாகரன் கிட்டே மெட்ராஸ் பவன் சிவக்குமார் வந்திருக்காரா?ன்னு கேட்டு செம பல்பு வாங்குனேன்.. அடப்பாவமே , அரை மணி நேரமா பேசிட்டு இருந்திங்களே. அவர் தான் சிவக்குமார்னார். அடங்கோ

மணி காலை 10.45  விழா ஆரம்பிச்சுது.. சிறப்பு விருந்தினர் புத்தகத்திரு விழா புகழ் ஸ்டாலின் குணசேகரன்....

தொடரும்


115 comments:

Unknown said...

live report hehe!

ராம்ஜி_யாஹூ said...

அருமை
இந்தப் பதிவிற்கு சாதாரண தலைப்பு இருந்தாலே போதுமே , நாங்கள் உள்ளே வந்து விடுவோம்

Yoga.S. said...

வணக்கம்,சி.பி!பார்க்க,கேட்க,படிக்க சந்தோஷமாயிருக்கு!(me 3-rd!)

சாதாரணமானவள் said...

ம்ம்ம்ம்ம்ம்.... வீட்ல அப்பா திட்டுவாரு... என் போட்டோவ எடுத்துடுங்க...

கோகுல் said...

நல்ல அனுபவம் தவற விட்டுட்டேன்.

சுடச்சுட போஸ்ட் பண்ணிட்டிங்க.,
தவற விட்ட அனுபவத்தை
இந்த பதிவில் பெற்றேன்.தொடருங்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

@ராம்ஜி_யாஹூ

hi hi ஹி ஹி ஒரு பழக்க தோஷம், வாங்க , ரொம்ப ந்நாளுக்குப்பின் வருகை

சி.பி.செந்தில்குமார் said...

@சாதாரணமானவள்

ஓக்கே ,எடுத்தாச்சு மேடம்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எந்த ஊர்ல பதிவர் சந்திப்பு போட்டாலும் யாராவது ஒருத்தர் உங்களை மிரட்டுராங்களே அது whyyyyyyyyyyyyyy?

சாதாரணமானவள் said...

Thank you so much... :)

சி.பி.செந்தில்குமார் said...

@விக்கியுலகம்

thampi தம்பி, உன்னைப்பற்றி ஒரு அதி பயங்கர ரகசியம் 3 ம் பாகத்திலும் , லேப் டாப் மனோ மேட்டர் 5 ம் பாகத்திலும் ஹி ஹி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பதிவர் சந்திப்புக்கு வர முடியாத ஏக்கம் பதிவு பார்த்து கொஞ்சம் குறைந்தது

சி.பி.செந்தில்குமார் said...

@Yoga.S.FR

நன்றி வணக்கம்

ஆமினா said...

தியேட்டர் கோயில் ஓக்கே... //மாடும்//கூட தெரியுமா உங்களுக்கு ஹி..ஹி...ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

@rufina rajkumar

ஒரு சின்னப்பையனை சீனியர் திட்டறது ,மிரட்டறது சகஜம் தானே?

சி.பி.செந்தில்குமார் said...

@ஆமினா

hi hi ஹி ஹி கரெக்ட் பண்ணிட்டேன்

நிரூபன் said...

வணக்கம் சித்தப்பூ...

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


நல்லா இருக்கீங்களா?

உங்க எல்லோர் கூடவும் போனில பேசனும் என்று நாய் நக்ஸ் அண்ணன் ஒழுங்கு செய்தாரு. ஆனால் நான் தான் தூங்கி எந்திருக்க டைம் லேட் ஆகிடுச்சு! சாரிங்க சொந்தங்களே!

அடியேனை மன்னியுங்கள் எங்கள் அன்னை தேசத்து உறவுகளே!

நிரூபன் said...

தல.........

நான் ரொம்ப மிஸ்ட் பண்ணிட்டேன்! பிலாசபி வேற TITANIC நாயகனின் தலை மாதிரி தலை வாரி வைச்சிருக்கார்..
அடுத்த முறை நானும் வந்திடுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்


பிலாசபியை 40++ ஆளு என்று நெனைச்சால் இப்படி ஒல்லியா 20++ ஆளா காண்பிக்கிறீங்களே!

நிரூபன் said...

யோ.அண்ணாச்சி! ஈரோடு சந்திப்பு வந்தவங்க ஏதும் பாவம் பண்ணினாங்களா?

நீங்க இரவிலும் கூலிங் கிளாஸை போட்டு பலரை ஓட விரட்டி விட்டீர்களாமே?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ப.கந்தசாமி said...

உள்ளூர்க்காரரு. உடனே பதிவப் போட்டுட்டாரு. நானு பஸ் புடிச்சு ஊட்டுக்கு வந்து காப்பி குடிச்சுட்டு பதிவ ஏத்தறதுக்குள்ள வட போயிடுச்சு. அடுத்த வருசத்துக்குள்ள ஒரு லேப் டாப் வாங்கி, அங்கனயே உக்காந்து மீட்டிங்க் முடியறதுக்குள்ள பதிவு போடாட்டி என் பேர மாத்தி வச்சுக்கறேன் சிபி. (ஏற்கனவே ஒரு தடவ மாத்தியாச்சுன்னு யாரு மொனகறது?)

நிரூபன் said...

மனோ அண்ணர் நாய் நக்க்ஸ் அண்ணரின் செல்லுக்கு கூப்பிட்டாங்களாம். ஆனால் நீங்க கூலிங் கிளாஸோட மண்டபத்தில நின்ற அதிசயம்...சிக்னலே கிடைக்கலையாமே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

Palaniappan Kandaswamy said...
உள்ளூர்க்காரரு. உடனே பதிவப் போட்டுட்டாரு. நானு பஸ் புடிச்சு ஊட்டுக்கு வந்து காப்பி குடிச்சுட்டு பதிவ ஏத்தறதுக்குள்ள வட போயிடுச்சு. அடுத்த வருசத்துக்குள்ள ஒரு லேப் டாப் வாங்கி, அங்கனயே உக்காந்து மீட்டிங்க் முடியறதுக்குள்ள பதிவு போடாட்டி என் பேர மாத்தி வச்சுக்கறேன் சிபி. (ஏற்கனவே ஒரு தடவ மாத்தியாச்சுன்னு யாரு மொனகறது?//

ஐயா...இந்த சிபி அண்ணாச்சி ரொம்ப மோசம்..

மண்டபத்தில இருந்து கொண்டே பதிவினை செல் வழியா சொல்லி போஸ்ட் பண்ணிடக் கூடிய ஆளைய்யா...இந்தாளு பதிவர் சந்திப்பிற்கு வரும் போதே மூனு பேரை ப்ளாக்கை மனேஜ் பண்ணச் சொல்லிட்டு வந்திருக்காரு!

நிரூபன் said...

Palaniappan Kandaswamy said...
உள்ளூர்க்காரரு. உடனே பதிவப் போட்டுட்டாரு. நானு பஸ் புடிச்சு ஊட்டுக்கு வந்து காப்பி குடிச்சுட்டு பதிவ ஏத்தறதுக்குள்ள வட போயிடுச்சு. அடுத்த வருசத்துக்குள்ள ஒரு லேப் டாப் வாங்கி, அங்கனயே உக்காந்து மீட்டிங்க் முடியறதுக்குள்ள பதிவு போடாட்டி என் பேர மாத்தி வச்சுக்கறேன் சிபி. (ஏற்கனவே ஒரு தடவ மாத்தியாச்சுன்னு யாரு மொனகறது?//

ஐயா...இந்த சிபி அண்ணாச்சி ரொம்ப மோசம்..

மண்டபத்தில இருந்து கொண்டே பதிவினை செல் வழியா சொல்லி போஸ்ட் பண்ணிடக் கூடிய ஆளைய்யா...இந்தாளு பதிவர் சந்திப்பிற்கு வரும் போதே மூனு பேரை ப்ளாக்கை மனேஜ் பண்ணச் சொல்லிட்டு வந்திருக்காரு!

நிரூபன் said...

அடடா..பதிவர் சந்திப்பைக் கூடப் புலனாய்வுத் தலைப்போட போட்ட எங்கள் கில்மா விமர்சனத் தலைவரே!
ஹி....ஹி...

நிரூபன் said...

எங்கைய்யா ப்ளாக் ஓனரு போயிட்டாரு! ஈரோடு ஜோதி தியேட்டரில ஏதும் படம் ஓடுதா...

நிரூபன் said...

உங்களின் நடையில் எண்பது பைசா சேமித்த காமெடி கலந்து சூப்பரா எழுதியிருக்கிறீங்க!

216 பேர் என்பது புல்லரிக்க வைக்கிறது! அடுத்த சந்திப்பில் அடியேனின் பிரசன்னமும் இருக்கும் என நினைக்கிறேன்!

மெட்ராஸ்பவனும், பிலாசாபியும் ப்ளான் போட்டோ உங்களை கவிழ்த்திருப்பாங்க என்று நினைக்கிறேன்!

சம்பத்குமார் said...

வணக்கம் நாங்க இப்பதான் வீடு வந்துசேர்ந்தோம்

வந்து பார்த்தா பதிவர் சந்திப்பின் சுவாரஸ்யங்கள்..

ம் கலக்குங்க சிபி அண்ணா..

நீங்க சொன்னா மாதிரி எப்படியும் 5 பதிவு தேர்ந்திடும் போல

ஹி..ஹி..ஹி..

நானும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..

சுதா SJ said...

அட நம்ம சிபி அண்ணே அழகா இருக்காரு........ பிரான்சில் பொண்ணு பாத்திருவோமோ??? ஹா ஹா..............

சி.பி.செந்தில்குமார் said...

@நிரூபன்

யோவ், ஈரோட்ல ஜோதின்னு தியேட்டரே இல்லைய்யா

சி.பி.செந்தில்குமார் said...

@Palaniappan Kandaswamy

avvavvvv டாக்டர் சார், கூல் பந்திக்கு நீங்க முந்திட்டீங்க, பதிவுக்கு நான் முந்திட்டேன் தானிக்கு தீநி சரி ஆகிடுச்சு

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
@நிரூபன்

யோவ், ஈரோட்ல ஜோதின்னு தியேட்டரே இல்லைய்யா//

அப்ப நீங்க கில்மா படம் பார்க்கப் போவீங்களே...அது என்ன சாந்தியா?

சுதா SJ said...

யுவகிருஷ்ணா உண்மைத்தமிழன் புகைப்படங்களுக்கு தேங்க்ஸ் .. :)

சி.பி.செந்தில்குமார் said...

>>துஷ்யந்தன் said...

அட நம்ம சிபி அண்ணே அழகா இருக்காரு........ பிரான்சில் பொண்ணு பாத்திருவோமோ??? ஹா ஹா..............

ஹி ஹி ஓக்கே ஆனா வயசு 16 க்குள் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் கொய்யால, இனி பத்துநாளுக்கு இந்த பதிவர் சந்திப்பு மேட்டர்தானா..?

சி.பி.செந்தில்குமார் said...

>>சம்பத் குமார் said...

வணக்கம் நாங்க இப்பதான் வீடு வந்துசேர்ந்தோம்

வந்து பார்த்தா பதிவர் சந்திப்பின் சுவாரஸ்யங்கள்..

ம் கலக்குங்க சிபி அண்ணா..

நீங்க சொன்னா மாதிரி எப்படியும் 5 பதிவு தேர்ந்திடும் போல

ஹி..ஹி..ஹி..

நானும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி..


5 நிச்சயம், 10 லட்சியம் ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

சுடசுட பதிவு, சுடசுட போட்டோ கலக்கல்...!!!

நிரூபன் said...

துஷ்யந்தன் said...
அட நம்ம சிபி அண்ணே அழகா இருக்காரு........ பிரான்சில் பொண்ணு பாத்திருவோமோ??? ஹா ஹா..............//

விக்கி அண்ணே! பன்னிக் குட்டி அண்ணே! மனோ அண்ணே!
இந்தக் கொடுமையைக் கேட்டும் மௌனமாக இருக்கிறீங்களா?

உடனே போனைப் போடுங்க சிபி அண்ணாவின் சம்சாரத்திற்கு!
அவருக்கு பிரான்ஸில பொண்ணு பார்க்கப் போறாராம் இவரு!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
@நிரூபன்

யோவ், ஈரோட்ல ஜோதின்னு தியேட்டரே இல்லைய்யா//

அப்ப நீங்க கில்மா படம் பார்க்கப் போவீங்களே...அது என்ன சாந்தியா?


பப்ளிக் பப்ளீக் அது நடராசா

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

எலேய் கொய்யால, இனி பத்துநாளுக்கு இந்த பதிவர் சந்திப்பு மேட்டர்தானா..?

விட்றா விட்றா, நமக்குள்ள என்ன?

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
>>துஷ்யந்தன் said...

அட நம்ம சிபி அண்ணே அழகா இருக்காரு........ பிரான்சில் பொண்ணு பாத்திருவோமோ??? ஹா ஹா..............

ஹி ஹி ஓக்கே ஆனா வயசு 16 க்குள் ஹி ஹி//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கோழி சிறுசு என்றாலும் குழம்பு நல்லா இருக்கனும் என்று அண்ணன் யோசிக்கிறாரு;-))))))))))))))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>>MANO நாஞ்சில் மனோ said...

சுடசுட பதிவு, சுடசுட போட்டோ கலக்கல்...!!!

நீயும் வந்திரிந்தா இன்னும் கலக்கல், அதே போல் ஆஃபீசர் மிஸ்ஸிங்க்

சி.பி.செந்தில்குமார் said...

என்னை நிரூபன் அண்ணன் என அழைத்தால் மைனஸ் ஓட்டு போடப்படும், தம்பி என அழைக்கவும் ஹி ஹி மீ யூத்

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@விக்கியுலகம்

thampi தம்பி, உன்னைப்பற்றி ஒரு அதி பயங்கர ரகசியம் 3 ம் பாகத்திலும் , லேப் டாப் மனோ மேட்டர் 5 ம் பாகத்திலும் ஹி ஹி//

ஹா ஹா ஹா விக்கி போட்டோ சிக்கிருச்சோ...??? என்னடா என்னைபற்றி சொல்லப்போகிறே, நக்கீரன் பல்பு வாங்கினதையா ஹி ஹி அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
@rufina rajkumar

ஒரு சின்னப்பையனை சீனியர் திட்டறது ,மிரட்டறது சகஜம் தானே?//

நீயாடா சின்னைப்பையன் ராஸ்கல்...

Prem S said...

கலக்குங்கள் அன்பரே

MANO நாஞ்சில் மனோ said...

சி.பி.செந்தில்குமார் said...
>>MANO நாஞ்சில் மனோ said...

சுடசுட பதிவு, சுடசுட போட்டோ கலக்கல்...!!!

நீயும் வந்திரிந்தா இன்னும் கலக்கல், அதே போல் ஆஃபீசர் மிஸ்ஸிங்க்//

ஆக நான் வராமலையே நக்கீரனை பல்பு வாங்க வைச்சிட்டேனே ஹி ஹி டேய் அவர் எனக்கு போனே பண்ணலை, மாறி வேற எங்கயோ அடிச்சிட்டாரு போல ஹா ஹா ஹா ஹா...

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
என்னை நிரூபன் அண்ணன் என அழைத்தால் மைனஸ் ஓட்டு போடப்படும், தம்பி என அழைக்கவும் ஹி ஹி மீ யூத்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


போடுங்க போடுங்க!
ப்ளஸ் வாற மைனஸ் ஓட்டா போடுங்க!

சம்பத்குமார் said...

@ மனோ அண்ணாச்சி நக்கீரன் அண்ணா போன்ல கூப்பிட்ட போது ஏன் பேசல....?

நீங்க லைன்ல இருக்கிறதா செல்போன loudspeeaker ல போட்டு மேடையில இருந்த மைக் முன்னாடி வச்சிக்கிட்டு உங்களுக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தார்

பாவம் அவரு ரொம்ப அனுபவிச்சுட்டார்..

வெளங்காதவன்™ said...

சந்தோசமா இருக்குய்யா!!!! நானும் அங்க வந்தேன்... ஆனா, யாராலையும் கண்டுபிடிக்க முடியல...
:-)

MANO நாஞ்சில் மனோ said...

சம்பத் குமார் said...
@ மனோ அண்ணாச்சி நக்கீரன் அண்ணா போன்ல கூப்பிட்ட போது ஏன் பேசல....?

நீங்க லைன்ல இருக்கிறதா செல்போன loudspeeaker ல போட்டு மேடையில இருந்த மைக் முன்னாடி வச்சிக்கிட்டு உங்களுக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டிருந்தார்

பாவம் அவரு ரொம்ப அனுபவிச்சுட்டார்..//

ஐயோ எனக்கு போனே வரல்லைய்யா வந்துருந்தா கண்டிப்பா பேசியிருப்பேன் அவ்வ்வ்வ்...

சரியில்ல....... said...

என்னது பதிவர் சந்திப்பு முடிஞ்சிருச்சா?

ராஜி said...

மனோ அண்ணா, சிபியோட கூலிங்க் கிளாஸை வாங்கி உடைச்சு போடுங்க. வீட்டுல பிள்ளைங்களாம் பார்த்துட்டு அலறுதுங்க

சரியில்ல....... said...

எனக்கு அழைப்பே தரலியே....

ராஜி said...

காலையிலிருந்து நிகழ்ச்சிக்கு வர முடியலையேன்னு ஏக்கமா இருந்துச்சு. இப்போ உங்க பதிவை பார்த்து பொறாமையா இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுடச்சுட பதிவு போட்டு அசத்திட்டீங்களே!
பாராட்டுக்கள், சார்.

ராஜி said...

க்ரூப் போட்டோ எடுக்கும்போது கூலிங்க் கிளாஸ் போடுவாங்க. நிகழ்ச்சி நடக்கும்போது கூடவா போட்டுக்கிட்டு இருப்பாங்க. நிஜமா சொல்லுங்க சிபி சார் அது ஸ்டைலுக்கா இல்ல 40 வயசானா வருமேஎ வெள்ளெழுத்து அதுக்கா?

சரியில்ல....... said...

நான் அழுவுறேன்.

வெங்கட் said...

அண்ணே.. கடைசி போட்டால நீங்க
கண்ணாடி போட மறந்துட்டீங்க..!!

:)

ராஜி said...

வெங்கட் said...

அண்ணே.. கடைசி போட்டால நீங்க
கண்ணாடி போட மறந்துட்டீங்க..!!

:)
>>>
ஐயையோ ,நீங்க ஏன் சார் ஞாபகப்படுத்துறீங்க? அப்புறம் போட்டோஷாப்புல கூலிங்க் கிளாஸ் இருக்குற மாதிரி ரெடி பண்ணி போட்டுட போறாரு.

ராஜி said...

எப்பவும் ஈரோடு, நெல்லை, கோவை ந்னு பதிவர் சந்திப்பு நடத்துறீங்க. எல்லா பதிவராலும் குறிப்பாக பெண்பதிவர்களால் வர முடியலை. ஆகவே மாவட்டந்தோறும் நடத்தலாமே..., அந்தந்த மாவட்டத்தில் உள்ள பதிவர்கள் ஏற்பாடு செய்யலாமே. பதிவர் சந்திப்பை நடத்தலாமேன்னு திரட்டிகளில் இல்லைனா கமெண்டுகளில் அறிவிக்கலாமே. பதிவர் சந்திப்புகளில் கலந்துக்க முடியலியேன்னு ஏங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையுமே

RAMA RAVI (RAMVI) said...

ரொம்ப நன்றாக இருக்கு ரிப்போர்ட்.
உங்க காமிராவுக்கு நல்ல வேலை.படங்கள் அமர்களமா இருக்கு.ஏன் பெண் பதிவர்கள் யாரும் வரலையா??

ரஹீம் கஸ்ஸாலி said...

இப்படி ஒரு சந்திப்பை மிஸ் பன்னிட்டோமே என்று ஏங்கும் அளவிற்கு இருந்தது உங்கள் வர்னணை. அடுத்த பாகம் எப்போது?

ரஹீம் கஸ்ஸாலி said...

நீங்க, ஜாக்கி அடுத்து இருப்பவர் யாருன்னு சொல்லலியே?

ரஹீம் கஸ்ஸாலி said...

நீங்க பில்லா அஜீத் ரசிகரா? கண்ணாடிய கழட்டாம இருக்கீங்க்

ரஹீம் கஸ்ஸாலி said...

சிவக்குமாரிடம் கண்ணாடி வாடகைக்கு கொடுத்ததில் எவ்வளவு தேறுச்சு?...

ரஹீம் கஸ்ஸாலி said...

சும்மா சொல்லக்கூடாது அண்ணே..... அந்த கண்ணாடி உங்க ஐம்பது வயசை நாற்பதா குறைச்சு காட்டுது

ரஹீம் கஸ்ஸாலி said...

எல்லாப்போட்டோவையும் பார்த்த என் மகன் உங்களை பார்க்கும் போது மட்டும் ஹையா...தாத்தா தாத்தான்னு ஒரே சவுண்டு விடறான். அதுக்கும் காரணம் இருக்கு...60 வயசுல ஒரு தாத்தாவை அவனுக்கு தெரியும். நீங்கதான் அவருன்னு நினைச்சிட்டான் போல...

Unknown said...

பதிவுலக சந்திப்பில் விக்கியையும்,நிருபனையும் சந்திக்கமுடியாத ஏக்கம் எனக்கு இருந்தது...போன்ல மனோ பேசறார்ன்னு சொன்னதும் அருவா....அருவான்னு கை தட்டினோம்...அது வேற மனோன்னு தெரிஞ்சதும் புஸ்ஸுன்னு போச்சு....மனோ நீங்க மிஸ் பன்னிட்டிங்க...

சேலம் தேவா said...

ஹி..ஹி...இதுக்கு டைரக்ட்டா நீங்க என்ன சிங்கம்ன்னே சொல்லியிருக்கலாம்.

MaduraiGovindaraj said...

இப்பதான் வீடு வந்து சேர்த்தேன் அதுக்குள்ள பதிவா! சூப்பருப்பு!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நான் போன் செய்தது உண்மை... ஆனா சிபி 9:30 க்கு வரல.... என்னமோ விஐபி மாதிரி டான்னு பத்து மணிக்கு தான் வந்தார்.......

சிபி புட்டு புட்டு வைப்போம்ல.... ஹி ஹி

தமிழ்வாசி பிரகாஷ் said...

நம்ம சிபி வேகமா ஓடிப்போயி ரிஸ்க்ல ரஸ்க் மாதிரி எடுத்த போட்டோவ மொதல்ல போட்டிருக்காரு...

Unknown said...

10.45க்கு போயிட்டீங்க... நாம சந்திச்சது அதுக்கு முன்னாடி..
அது நாலாம் பாகத்துல ரீ என்ட்ரி ஆகுமோ ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது பாகம் ஒண்ணா? வெளங்கிரும்.......!

Unknown said...

@Palaniappan Kandaswamy
டாக்டர் சார்..சாப்பிட்டு வந்து உங்களிடம் பேசலாம் என்று வருவதற்குள் நீங்கள் கிளம்பி விட்டீர்கள்...!

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
மனோ அண்ணா, சிபியோட கூலிங்க் கிளாஸை வாங்கி உடைச்சு போடுங்க. வீட்டுல பிள்ளைங்களாம் பார்த்துட்டு அலறுதுங்க//

எலேய் நாதாரி உனக்கு வீட்டுக்குள்ளேயும் கூலிங்கிளாஸ் கேக்குதா ராஸ்கல் உடனே கழற்றி போடு அந்த கர்மத்தை...

தங்கச்சி பிள்ளைங்கலேல்லாம் பயப்படுராங்களாம்...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
க்ரூப் போட்டோ எடுக்கும்போது கூலிங்க் கிளாஸ் போடுவாங்க. நிகழ்ச்சி நடக்கும்போது கூடவா போட்டுக்கிட்டு இருப்பாங்க. நிஜமா சொல்லுங்க சிபி சார் அது ஸ்டைலுக்கா இல்ல 40 வயசானா வருமேஎ வெள்ளெழுத்து அதுக்கா?//

அந்த மூதேவிக்கு வெளிச்சத்துல கண்ணு தெரியாது தெரிஞ்சுக்கோங்க ஹி ஹி..

MANO நாஞ்சில் மனோ said...

ராஜி said...
எப்பவும் ஈரோடு, நெல்லை, கோவை ந்னு பதிவர் சந்திப்பு நடத்துறீங்க. எல்லா பதிவராலும் குறிப்பாக பெண்பதிவர்களால் வர முடியலை. ஆகவே மாவட்டந்தோறும் நடத்தலாமே..., அந்தந்த மாவட்டத்தில் உள்ள பதிவர்கள் ஏற்பாடு செய்யலாமே. பதிவர் சந்திப்பை நடத்தலாமேன்னு திரட்டிகளில் இல்லைனா கமெண்டுகளில் அறிவிக்கலாமே. பதிவர் சந்திப்புகளில் கலந்துக்க முடியலியேன்னு ஏங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையுமே//

நல்ல ஐடியாவா இருக்கே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

veedu said...
பதிவுலக சந்திப்பில் விக்கியையும்,நிருபனையும் சந்திக்கமுடியாத ஏக்கம் எனக்கு இருந்தது...போன்ல மனோ பேசறார்ன்னு சொன்னதும் அருவா....அருவான்னு கை தட்டினோம்...அது வேற மனோன்னு தெரிஞ்சதும் புஸ்ஸுன்னு போச்சு....மனோ நீங்க மிஸ் பன்னிட்டிங்க...//

எனக்கு போனே வரலை மக்கா, வந்துருந்தா கண்டிப்பா பேசியிருப்பேன், ஸாரி மக்கா ஸாரி, அன்புக்கு நன்றி....!!!

குடிமகன் said...

ரிப்போர்ட் அருமை அண்ணே!
பிரபல பதிவர்களின் தற்போதைய போட்டோக்களும் சூப்பர்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஃபிலாஷபி பிரபாகரன் , மீ, சிவக்குமார்(மெட்ராஸ்பவன்)//

விந்தை மனிதனுக்கும் உங்க்ப்களுக்கும் வாய்க்கா தகறாரா? அது பிலாசபி பிரபாகரன்

கோவை நேரம் said...

மிஸ் பண்ணிட்டமோ...பதிவுலக சூப்பர் ஸ்டார் , டாப் ஸ்டார், தளபதி , தல , புரட்சி தளபதி , சின்ன தளபதி , சிங்கம் ...இப்படி இவங்க எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டமோ....ஆனாலும் உங்களின் பதிவு அந்த குறையை போக்கியது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முதல் (!) பாகம் வர்ணனையும் உங்க சொந்த கேமரா எடுத்த படங்களும் நேரில் பார்த்த திருப்தி தந்தது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முதல் (!) பாகம் வர்ணனையும் உங்க சொந்த கேமரா எடுத்த படங்களும் நேரில் பார்த்த திருப்தி தந்தது.

மகேந்திரன் said...

அழகான சந்திப்பு நடந்திருக்கு
கலந்துகொள்ள முடியாமல் போச்சு..
கலகலப்பா இருக்குது பதிவு..

KANA VARO said...

பிக்கப் பண்ண போன இடத்தில நம்ம கூட கதைச்சதை விட்டுட்டீங்களே தல..

சி.பி.செந்தில்குமார் said...

@KANA VARO

பாஸ், நீங்க, விக்கி தக்காளி, லேப் டாப் மனோ, ரஹீம் கசாலி,கருண் 5 பேரும் ஃபோன்ல பேசுனது தனி பதிவு ஹி ஹி ( எப்படியும் 10 பதிவை தேத்தி ஆகனுமே?)

சி.பி.செந்தில்குமார் said...

@சம்பத் குமார்

5 போதும்கறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெளங்காதவன் said...

சந்தோசமா இருக்குய்யா!!!! நானும் அங்க வந்தேன்... ஆனா, யாராலையும் கண்டுபிடிக்க முடியல...
:-)

பொய், நீங்க வர்லை ஃபோன்லதான் பேசுனீங்க

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் said...

அண்ணே.. கடைசி போட்டால நீங்க
கண்ணாடி போட மறந்துட்டீங்க..!!

ஹி ஹி , நினைவு கூர்ந்தமைக்கு நன்றி , தூக்கிட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

ரஹீம் கஸாலி said...

சிவக்குமாரிடம் கண்ணாடி வாடகைக்கு கொடுத்ததில் எவ்வளவு தேறுச்சு?..

ஹி ஹி 50 ரூபா

சி.பி.செந்தில்குமார் said...

?>>>மகேந்திரன் said...

அழகான சந்திப்பு நடந்திருக்கு
கலந்துகொள்ள முடியாமல் போச்சு..
கலகலப்பா இருக்குது பதிவு..

நன்றிகள்

சி.பி.செந்தில்குமார் said...

>>NIZAMUDEEN said...

முதல் (!) பாகம் வர்ணனையும் உங்க சொந்த கேமரா எடுத்த படங்களும் நேரில் பார்த்த திருப்தி தந்தது.

சொந்த காமரா- எனி உள் குத்து?

சி.பி.செந்தில்குமார் said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுடச்சுட பதிவு போட்டு அசத்திட்டீங்களே!
பாராட்டுக்கள், சார்.

நன்றிகள், உங்க பேரனை நீங்க சார்னுதான் கூப்பிடுவீங்களா? அவ்வ்

சி.பி.செந்தில்குமார் said...

>>சரியில்ல....... said...

என்னது பதிவர் சந்திப்பு முடிஞ்சிருச்சா?

அடங்கோ

சி.பி.செந்தில்குமார் said...

>>RAMVI said...

ரொம்ப நன்றாக இருக்கு ரிப்போர்ட்.
உங்க காமிராவுக்கு நல்ல வேலை.படங்கள் அமர்களமா இருக்கு.ஏன் பெண் பதிவர்கள் யாரும் வரலையா??

வந்தாங்க, நான் தான் பெண்களை தலை நிமிர்ந்து பார்ப்பதில்லையே

சி.பி.செந்தில்குமார் said...

சேலம் தேவா said...

ஹி..ஹி...இதுக்கு டைரக்ட்டா நீங்க என்ன சிங்கம்ன்னே சொல்லியிருக்கலாம்.

ஹி ஹி ஹி சேலம் சிங்கம்

சி.பி.செந்தில்குமார் said...

கோவை நேரம் said...

மிஸ் பண்ணிட்டமோ...பதிவுலக சூப்பர் ஸ்டார் , டாப் ஸ்டார், தளபதி , தல , புரட்சி தளபதி , சின்ன தளபதி , சிங்கம் ...இப்படி இவங்க எல்லாத்தையும் மிஸ் பண்ணிட்டமோ....ஆனாலும் உங்களின் பதிவு அந்த குறையை போக்கியது.

ஒய் திஸ் கொலை வெறி?

முத்தரசு said...

அடுத்த பாகம் எப்போ?

சேகர் said...

எனக்கும் வந்து கலந்துகனுமுனு ஆசையாத்தான் இருந்துச்சு. ஆனா, இந்த பைனல் இயர் ப்ராஜெக்ட் ரிவியுவ் அடுத்த நாளே வச்சு உயிரை வாங்கிட்டாங்க...கடைசீல அங்கயும் வர முடியல இங்க ரிவியுவ்லயும் செம சொதபல்...அடுத்த சந்திப்புக்கு கண்டிப்பா வருவேன்...நீங்க எல்லா படத்தையும் முதல் நாளே பாத்துருவீங்கனு, நான் உங்கள டிச 2 டர்ட்டி பிச்சர் ரிலீஸ்ல எப்டியும் சந்திரிசுடலாமுனு ஈரோடு கிருஷ்ணா தியேட்டர்ல ரொம்ப நேரமா தேடுனேன்..ஆனா கண்டுபிடிக்க முடியல...

ராஜி said...

சி.பி.செந்தில்குமார் said...

>>RAMVI said...

ரொம்ப நன்றாக இருக்கு ரிப்போர்ட்.
உங்க காமிராவுக்கு நல்ல வேலை.படங்கள் அமர்களமா இருக்கு.ஏன் பெண் பதிவர்கள் யாரும் வரலையா??

வந்தாங்க, நான் தான் பெண்களை தலை நிமிர்ந்து பார்ப்பதில்லையே
>>>>
நம்பிட்டோம்

வெளங்காதவன்™ said...

//சி.பி.செந்தில்குமார் said...

Blogger வெளங்காதவன் said...

சந்தோசமா இருக்குய்யா!!!! நானும் அங்க வந்தேன்... ஆனா, யாராலையும் கண்டுபிடிக்க முடியல...
:-)

பொய், நீங்க வர்லை ஃபோன்லதான் பேசுனீங்க///

:-)

CS. Mohan Kumar said...

செந்தில்: உங்களை பார்த்ததில் மிக மகிழ்ச்சி. நிறைய பேச முடியலை உங்க போட்டோவில் ஒன்று மட்டும் என் பதிவில் போட்டுள்ளேன்.. உங்கள் பெயருடன்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

தலைவரே, வந்திருந்த ஆட்க்களில் மிகக் குறுகிய நேரத்தில் அத்தனை நண்பர்களையும் சந்த்தித்து அவர்களை படம் எடுத்த வேகம்.. பதிவுலகில் குறுகிய காலத்தில் சூப்ப்ர் ஸ்டார் ஆன உங்கள் உழைப்பைக் காட்டியது..

பாராட்டுக்கள்...

TERROR-PANDIYAN(VAS) said...

@சி.பி
// தொடரும் //

எப்போ?

கடம்பவன குயில் said...

4 மணிநேர சந்திப்பை வைத்து 10 பதிவுகளா??? காத்திருக்கிறோம்.

கர்ணனுக்கு கவசகுண்டலம் போல் சிபிக்கு கூலிங்கிளாஸ்!!

sathishsangkavi.blogspot.com said...

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...

Radhakrishnan said...

ஆஹா, படங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. தேனீ போல சுறுசுறுப்பாகவும், எறும்பு போல விறுவிறுப்பாகவும் செயலாற்றிய தங்கள் பணிக்கு வாழ்த்துகள்.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

படங்கள் அனைத்தும் மிகவும் அருமை என்னையும் தங்களது பதிவில் புதைத்தமைக்கு நன்றி நண்பரே.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான சந்திப்பு..

குறையொன்றுமில்லை. said...

காதுல புகையோ புகை. செந்தில். நான் அடுத்தமாசம் ஈரோடு வரேன் ஒரு மாசம் இருக்கேன் . எனக்கும் நிறைய பதிவர்களை சந்திக்கனுனு தோனுது . இன்னொரு மீட்டிங்க் போட்டுடுவோமா?

வால்பையன் said...

என் போட்டோ எங்கே?

N.H. Narasimma Prasad said...

சூப்பர் அண்ணே. இந்த மாதிரி 'Clear Details' குடுக்கனும்னா பதிவுலகின் கில்மா ஸ்டார் உங்கள விட்டா வேற யாரு அண்ணே இருக்கா?

Anonymous said...

வர வர இந்த கொசு தொல்லை தாங்க முடியல மாதிரி ., ஏன் இப்பிடி ., நீங்க என்ன தான் யூத் லுக் குடுக்க முயற்சி பண்ணாலும் அது நடக்காது அப்பா நடக்காது .,.,.,

ஒரு பிளாக்கர் மீட்டிங் னு சொல்லிடு ஒரு விழாவோ நடத்தி இருக்கீங்க ., செம ., இதை arrange பண்ண எல்லாருக்கும் என் வாழ்த்துகள் .....

Jackiesekar said...

புகைபடத்துக்கு நன்றி செந்தில்