Wednesday, October 19, 2011

தில்லு துர ஜோக்ஸ்



1.டியர், நான் பக்கத்துலதானே இருக்கேன், எதுக்கு ஃபிளையிங்க் கிஸ் தர்றீங்க? 

நீ ஏர்ஹோஸ்டல் ஆச்சே?அதானே பிடிக்கும்?

------------------------

2.இதயம் என்பது துக்கங்களையும், சோகங்களையும் வைத்திருக்கும் குப்பைக்கூடை அல்ல, அது ரோஜாக்களை, மகிழ்ச்சிகளை வைத்திருக்கும் தங்கப்பெட்டி

-----------------------------

3. குளிப்பதற்கு டெமோ காட்டுகிறார் பூனம் பாண்டே! # அடச்சே, வெறும் டெமோ தானா?

-------------------------

4. டியர், நாம டெய்லி கோயிலுக்குபோனா நம்ம காதல் தெய்வீகக்காதல் ஆகிடுமா? 

தேவை இல்லை, டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு கில்மா படம்,அதுக்குப்போனாலே போதும்

----------------------------
5. வாழ்க்கையில் கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களே அவசியமாய் இருக்கின்றன மனதிற்கு

--------------------------

6. சாதாரண மனிதன் புத்தகத்துடன் இருப்பான், சாதனை மனிதன் புத்தகத்தில் இருப்பான்

--------------------------



7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------

8. நீர் நிலைகளின் மேற்பரப்பில் தோன்றும் வாத்துகள் அமைதியாய் இருப்பதாய் தோன்றினாலும் உள்ளே அது கால்களால் நீந்திக்கொண்டே இருக்கும்

----------------------------

9. எல்லோராலும் விரும்பப்படும் நபர் என யாரும் இல்லை.. அனைவராலும் வெறுக்கப்படும் நபர் எனவும் யாரும் இல்லை

-------------------------------

10.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

-------------------------

three musketeers by Marcin Nawrocki

11. வார்த்தைப்பரிமாறல்கள்தான் காதல் என்றால் இதழ்கள் போதுமே, இதயம் எதற்கு?

------------------------

12. சிநேகங்களின் சோகங்கள் சுலபமாக இறக்கி வைக்கப்படுகின்றன, கேட்கும் நமக்குத்தான் மனதில் பாரம் ஏறுகிறது, கண்ணில் ஈரம் ஊறுகிறது

-------------------------

13. பெண்ணை கோபப்படுத்தாமல் பேசுவது எப்படி? என்ற கலையை இன்னும் எந்த ஆணும் கற்றுக்கொள்ளவில்லை

----------------------------

14. கண்ணீரும், புன்னகையும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அபூர்வம்,வாழ்வின் மறக்க முடியாத அந்த சந்திப்பு உன்னுடனான ஒரு சந்திப்பில் நிகழும் 

--------------------------------

15. பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % 

----------------------------


Piddling

16. வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதன் முக்கியத்துவம் நாம் உணர்வதில்லை, நம் கை விட்டு நழுவிய பின் தான் உணர்கிறோம்

----------------------------

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்

-------------------------
18. காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது நான் தான் - மொபைல் ஃபோன் # SMS

--------------------------------

19. உண்மை, தூய்மை, சுய நலமின்மை இந்த 3ம் அமையப்பெற்ற ஒருவனை இந்த உலகமே எதிர்த்தாலும் எதுவும் செய்ய முடியாது # காலண்டரில் கண்டது

-------------------------


20.பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் ஒருவரின் இதயத்தை ஆக்ரமிக்க உதவும் சிறந்த ஆயுதம்

-------------------------------


Art by Erik Johansson


43 comments:

Astrologer sathishkumar Erode said...

தல..ஹிட்ஸ் குறையுதே கவனிங்க

Astrologer sathishkumar Erode said...

அடுத்து,புள்ளிராஜா ஜோக்ஸா.?

Astrologer sathishkumar Erode said...

தமிழ்மணம் பத்தி உங்க கருத்தை தெரிவிக்கவே இல்லையே..?

விடமாட்டோமில்ல..?

Astrologer sathishkumar Erode said...

சிபிக்கு கட்டம் சரியில்லை...

Astrologer sathishkumar Erode said...

அடுத்தடுத்து ஜோக்கா போட்டு தாக்குறீங்க..பம்முறீங்க..பெருசா ஒரு ஹிட் பதிவு வரப்போகுதா..?

Astrologer sathishkumar Erode said...

என் ப்ளாக்ல இன்னும் நீங்க ஃபாலோயர் ஆகலை../ -;))

Astrologer sathishkumar Erode said...

சும்மா..யாரும் இல்லாத கடையில டீ ஆத்துறேன்னு நினைக்காதீங்க..இப்பதான் இங்க இடம் கிடச்சிருக்கு

Astrologer sathishkumar Erode said...

க்ரைம்..காதல்..செம கேள்வி..ராஜேஷ்குமார் பத்தி ஒரு வதந்தி உண்டு தெரியுமா..பல க்ரைம் முடிச்சுகளை அவிழ்க்க ராஜேஷ்குமாரை போலீஸ் சந்திச்சு உதவி கேட்பாங்களாம்,பல அவர் நாவல்களில் நடந்த சம்பவம் போலவே கொலை நடந்தப்ப அவரையே சந்தேகப்பட்டதும் உண்டாம்

Astrologer sathishkumar Erode said...

8 ஆகாது..

Astrologer sathishkumar Erode said...

9 அம் ராசி இல்லை

Astrologer sathishkumar Erode said...

ரெட்டப்படையா இருக்கணும் 10 கமெண்ட் ஓகே

கடம்பவன குயில் said...

சிபி சாருக்கு நல்லநேரம் வந்திருச்சு போலயே... கலக்குங்க சார்.

ஓசியிலயே உங்களுக்கெல்லாம் ஜோசியம் சொல்றாங்க.....ஹும்...

Unknown said...

அண்ணே டிஸ்கில யாருக்கு ஆப்பு ஹிஹி!

ராஜி said...

:-))

ராஜி said...

2,5,6,9,11,12, 15, 16 tweets super

அம்பலத்தார் said...

வணக்கம் நண்பா, நல்ல டிவிட்ஸ்

செங்கோவி said...

டிஸ்கி நச்...!

'பரிவை' சே.குமார் said...

சிபி அண்ணா...
எல்லாமே கலக்கல்.
அதுவும் க்ரைம்+கவிதை அப்புறம் சாதாரணமனிதன் இரண்டும் சூப்பர்.
படங்கள் அருமை.
வாழ்த்துக்கள்.

sasikumar said...

மாப்ள அந்த மேனஜர் யாரு நீயா?

Mohamed Faaique said...

உங்க ஆபீஸ் பேரென்ன சார்??? டெரர் கும்மியா????

உலக மகா உள்குத்து சார்..... சூப்பர்..

SURYAJEEVA said...

அந்த டிஸ்கியில தமிழ் மனம் சமாச்சாரம் இல்ல தானே

சென்னை பித்தன் said...

டிஸ்கியில் உள்குத்து ஏதோ இருக்கறாப்பலத் தெரியுதே!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

தமிழ்மணம் பிரச்சனையில் இருந்து சிபி எது எழுதுனாலும் உள்குத்து இருக்குதான்னு பாக்கறாங்க....சிபி நீங்கதான் இதுக்கு பதில் சொல்லவேண்டும்

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

அனைத்தும் அருமை பாஸ் அதிலும்

இது
////7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------/////

சூப்பர்...என்னமோ தெரியலை டாகுத்தர் பற்றி ஜோக் படித்தால் சிரிப்போ சிரிப்பாக வருது

அப்பறம் அந்த பிகர் படம் சூப்பர் அவ்........

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்னது ?
"கையைப் பிடிச்சு இழுத்தியா?"

கவி அழகன் said...

உலகிலேயே குறைந்த பரப்பளவில்
அதிக கலர் பெயின்ட் அடிக்கப்படும் இடம்
பெண்களின் முகம் தான் ..............

MANO நாஞ்சில் மனோ said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே படங்கள் சூப்பர் அண்ணே!!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது பூனம் பாண்டே குளிக்குராங்களா எங்கே எங்கே..???

MANO நாஞ்சில் மனோ said...

என்ன கையை பிடிச்சி இழுத்தியா...???

மூதேவி அது நீதானா...???

MANO நாஞ்சில் மனோ said...

சோதிடம்’’ சதீஷ்குமார் said...
தல..ஹிட்ஸ் குறையுதே கவனிங்க//

அது எவளவு அடிச்சாலும் அவன் தாங்குவான்...

Sivakumar said...

@ நாஞ்சில் மனோ

பூனம் பாண்டே ரசிகரே..உணர்ச்சியை கட்டுப்படுத்துங்கள்!!

Anonymous said...

super

தனிமரம் said...

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்
// சூப்பர் கடி சி.பி  படித்ததில்  இது அதிகம் பிடித்தது .

கோகுல் said...

உங்க ஆபீசுல நடந்ததால ஒரு சந்தேகம் .யாருங்க அந்த மேனஜர்?

கோகுல் said...

எல்லாமே கலக்கல்!

கூடல் பாலா said...

வாத்து சமாச்சாரம் இப்பத்தான் தெரியுது !

Anonymous said...

எல்லாமே கலக்கல்...

கும்மாச்சி said...

வாத்துக்கடியில எவ்வளவு பெரிய தத்துவத்தை வச்சிருக்கீங்க.

Anonymous said...

////பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % ////


100 சதவீதம் உண்மை...நச்சுன்னு சொன்னீங்க அண்ணே...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான டிவிட்ஸ்! சாதாரணமனிதனும் சாதனை மனிதனும் பற்றிய கருத்து ஹைலைட்! வெல்டன் சிபி சார்! அது என்ன டிஸ்கி படிக்க முடியலையே?