Sunday, October 09, 2011

காதல் கவிதைகள் சொல்லும் ட்வீட்ஸ்

1.ஐ லவ் யூ சொல்ல வந்த உன் ஆளை எதுக்குடி சட்டையை கழட்ட சொன்னே?

காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு டி ஆர் சொன்னாரே?

-----------------------

2. தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்கிறது, கலைஞரின் செல்வாக்கு சரிகிறது # மஞ்சள் நிறத்தின் முரண்கள்

------------------------------

3. சீதை இந்த அளவு ஃபேமஸ் ஆகி இருக்க மாட்டாள், ராமன் மட்டும்தீக்குளிக்க சொல்லாமல் இருந்திருந்தால்# நீதி - ஆண் தான்பெண்ணின் புகழுக்கு காரணம்

--------------------------------

4. உன் ஆடம்பரமான அழகை என் எளிமையான அன்பு வசீகரித்த போது காத்திரமான நம் காதல் பூ பூத்தது மென்மையாக!

---------------------------------

5. நீ நடந்து வரும் வழி எங்கும் அழகை இறைத்து விட்டு வருகிறாய், எல்லாவற்றையும் சேகரித்து வர எனக்கு தாமதம் ஆகிறது

-------------------------------

6. உன் நினைவுகளை சேமிக்க மட்டும் ஒரு வங்கி இருந்தால் என் சேமிப்பு சக்தி கண்டு அது பிரமித்திருக்கக்கூடும்!

--------------------------------

7. நமது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மனம் உருகி செய்யும் பிரார்த்தனைகளே!

----------------------------

8.அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத்தான் - கேப்டன் ஆவேசம்,எதிர்க்கட்சியா இருந்தும் இந்த அளவு அமைதியா எவன் இருந்திருக்கான்?

----------------------------

9. அட்டு ஃபிகர் யார்? 

நேருக்கு நேர் பார்வையைசந்தித்த பின்னும் உடல்அளவிலோ,மனதளவிலோ எந்த வித ரசாயன மாற்றத்தையும் ஏற்படுத்தாத ஃபிகர் @டு ஃபிகர்

-----------------------------------

10. சூப்பர் ஃபிகர் யார்? 

பசித்திருக்கும் பொழுதுகளில் சூப் குடித்தவுடன் பசியைஅதிகமாக கிளறிவிடுவதுபோல பார்த்தவுடனேயேகவிதைகளை உளறவைக்கும்ஃபிகர்

------------------------------

11. என்னை எத்தனை பேர் வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனாலும் நான் எல்லோரையும் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்

----------------------------------

12. மஞ்சள் பூசும் சில பெண்கள், மஞ்சள் துண்டு போர்த்தி இருக்கும் கலைஞர் தங்களை நம்பியவர்கள் முகத்தில் கரி பூசுவதில் கை தேர்ந்தவர்கள்

----------------------------

13. உன்னை எதிரில் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷத்தை விட எதிர்பார்க்கும்போது ஏற்படும் துடிப்பே என்னை அதிகம் இயங்க வைக்கிறது

-----------------------------------

14. காதலிப்பதில் யாரும் களைப்படைவதே இல்லை, ஆனால் காத்திருப்பதில், பொய்களை சொல்வதில், மன்னிப்புக்கேட்பதில், காயம் அடைவதில் களைப்படைகிறார்கள்

---------------------------------------------

15. வெற்றி தாமதம் ஆவதால் சலிக்காதே! ஒரு அரண்மனையை நிர்மாணிப்பது என்பது சாதாரண வீட்டை நிர்மாணிப்பதை விட கடினமானது

--------------------------------------

16. சாம்பல் பூஜை அறைக்கு வந்ததும் திருநீறு ஆவது போல உன் நெற்றியில் இட்டுக்கொண்டதும் அது மாசிலா நீறு ஆகிறது

---------------------------------

17. உன் அழகால் எல்லோரையும் பலவீனம் ஆக்குகிறாய்! என் அன்பால் உன்னை மட்டும் நான் பலம் ஆக்கி என்னை சுகவீனம் ஆக்கிக்கொண்டேன்

------------------------------------

18. நீ இமைகளை வேகமாக அசைக்கையில் பட்டாம்பூச்சிகளுக்கு சவால் விடுகிறாய், உன் உதடுகளை ஈரப்படுத்துகையில் தேனிக்களுக்கு அழைப்பு விடுகிறாய்

------------------------------------

19. பஸ்ஸில் அமர்ந்திருக்கும்போது பள்ளிப்பிராயத்து ஆசிரியர்க்கு நாம் எழுந்து இடம் கொடுக்கையில் அவர் முகத்தில் ஏற்படும் பெருமிதம்.. அடடா!!

--------------------------------

20. ஒரு டீச்சரால எல்லா சப்ஜெக்ட்டும் நடத்த முடியறதில்லை, ஆனா ஸ்டூடண்ட்டால எல்லா சப்ஜெக்ட்டையும் படிச்சிட முடியுது # நீதி - ஸ்டூடண்ட் டாப்

--------------------------------------

28 comments:

SURYAJEEVA said...

last one குறுஞ்செய்தியாக வந்தது...

கோகுல் said...

ஆசிரியர் விஷயம் அருமை!

Speed Master said...

@டு ஃபிகர்

எப்படின்னே இப்படி யோசிக்கறீங்க

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

வீக்கெண்ட் முடிஞ்சு இப்பத் தான் வந்தேன், படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் said...

1.ஐ லவ் யூ சொல்ல வந்த உன் ஆளை எதுக்குடி சட்டையை கழட்ட சொன்னே?

காதலிச்சா போதாது, அதை மூடி வைக்கக்கூடாதுன்னு டி ஆர் சொன்னாரே?//

இப்படியொரு சோதனை காதலில் நிகழும் என்றால் யாருமே காதலிக்க மாட்டாங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

2. தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்கிறது, கலைஞரின் செல்வாக்கு சரிகிறது # மஞ்சள் நிறத்தின் முரண்கள்//

ஆமா காதலிலும் மஞ்சள் நிறம் முரணாக இருக்குமோ;-)))

நிரூபன் said...

2. தங்கத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்கிறது, கலைஞரின் செல்வாக்கு சரிகிறது # மஞ்சள் நிறத்தின் முரண்கள்//

ஆமா காதலிலும் மஞ்சள் நிறம் முரணாக இருக்குமோ;-)))

நிரூபன் said...

7. நமது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மனம் உருகி செய்யும் //

அப்போ அவ கூட டெய்லி கோயிலுக்குப் போக வேண்டும் என்று சொல்லுறீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...

சூப்பர் ஃபிகர் யார்?

பசித்திருக்கும் பொழுதுகளில் சூப் குடித்தவுடன் பசியைஅதிகமாக கிளறிவிடுவதுபோல பார்த்தவுடனேயேகவிதைகளை உளறவைக்கும்ஃபிகர்//

கொய்யாலே....
இம்புட்டு நாளா பொண்ணுங்களை நோட்டம் விட்ட ஆராய்ச்சியோட பலாபலன் இது தானா..

அவ்வ்வ்வ்வ்

ஹே...

நிரூபன் said...

சூப்பர் ஃபிகர் யார்?

பசித்திருக்கும் பொழுதுகளில் சூப் குடித்தவுடன் பசியைஅதிகமாக கிளறிவிடுவதுபோல பார்த்தவுடனேயேகவிதைகளை உளறவைக்கும்ஃபிகர்//

இது பஞ்ச்....

ஆமா அவங்களும் உங்களை வெறுக்கலை பாஸ்..

இப்பவும் உங்களை நேசிக்கிறான்.

நிரூபன் said...

19. பஸ்ஸில் அமர்ந்திருக்கும்போது பள்ளிப்பிராயத்து ஆசிரியர்க்கு நாம் எழுந்து இடம் கொடுக்கையில் அவர் முகத்தில் ஏற்படும் பெருமிதம்.. அடடா!!//

அனுபவம் அருமை, அதுவே வாழ்வில் நாம் முதியோருக்குச் செய்யும் கடமையும் கூட.

நிரூபன் said...

ருவிட்ஸ் அத்தனையும் வழமை போலவே அருமை பாஸ்..

ரொம்பத் தான் அவங்களை உருகி உருகி காதலிக்கிறீங்க போல இருக்கே..
ஐ மீன் வீட்டுக்கார அம்மாவை..

kobiraj said...

17 19 very super

செல்ல நாய்க்குட்டி மனசு said...

11 - அங்கே தான் சிபி நிற்கிறார்
19 - அது நீங்களாக இருந்தால் பாராட்டுக்கள். ஏன் என்றால் இப்பொழுது படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் கூட எழுந்து இடம் கொடுப்பதில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது அட்டுபிகரா? ஏண்ணே உங்களை பொறுத்தவரை உலகத்துல அட்டுபிகர்னு எதுவுமே கிடையாதுன்னு சொன்னீங்களே.....?

காட்டான் said...

ஸ்டூடண் டாப்புதான்யா ஹி ஹி தம 5

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிபி டாப்.

vetha (kovaikkavi) said...

சுப்பரப்பா! எப்படி இப்படி எழுதறீங்க! புட்டிக் கவிதை போவல்லவா இருக்கிறது வரிகள். உதாரணமாகக் காட்டலாமென்றால் டித்தனையென்று காட்டுவர்! கிட்டத்தட்ட எல்லாமே...19.பஸ்சு- பள்ளி வாத்தியார் -இருக்கை -பெருமிதம்.20நீதி-ஸ்டுடன்ட்18 தேனீ-பட்டாம்பூச்சி இப்படியே வரிசையாகக் கூறலாம். இனிமை வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wpordpress.com

கவி அழகன் said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

உணவு உலகம் said...

11.சிபிக்கு முற்றிலும் பொருந்தும்.

Unknown said...

அண்ணே 15வது டாப்பு!

K.s.s.Rajh said...

பாஸ் அந்த முதலாவது இரண்டாவது ட்டுவீட்ஸ் சூப்பர்........

செவிலியன் said...

அமைதிக்கான நோபல் பரிசு எனக்குத்தான் தரணும்ன்னு பிரதமர் சிங்கும் ஆவேசப்பட்டதாக தகவல்....

ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்து....

Unknown said...

பாஸ் பத்து சூப்பரோ சூப்பர்

RAMA RAVI (RAMVI) said...

7,11,19 சூப்பர்.

குறையொன்றுமில்லை. said...

நமது பெரும்பாலான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு மனம் உருகிச்செய்யும் பிரார்த்தனைகளே.




உண்மையிலும் உண்மைதான்.

'பரிவை' சே.குமார் said...

அட்டுப் பிகர், சூப்பர் பிகர்ன்னே எழுதிக்கிட்டே இருக்கீங்களே... என்ன காரணம்?

”தளிர் சுரேஷ்” said...

சூப்பர் டிவிட்ஸ் வாழ்த்துக்கள்!