Thursday, August 25, 2011

.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.!!!!!!!

Before Niel Amstrong

1.டியர், நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.

அப்போ என் கதி?

இதென்ன கேள்வி? அதோ கதி தான்.

-------------------------------

2. நான் அழகா இருக்கேனா? இல்லையா? உண்மையை சொல்லுங்க!!

என்னடி மிரட்டறே? அப்புறம் நான் உண்மையை சொல்லிடுவேன், ஜாக்கிரதை # கலாட்டா கடலை

--------------------------

3. டியர்,உங்க மேலே நம்பிக்கை இல்லைன்னு சொல்றேன், அதிர்ச்சி அடையாம நார்மலா இருக்கீங்க?

விடுடி,பொம்பளைங்க எந்த காலத்துல நல்லவனை நம்பி இருக்காங்க?

--------------------------

4. என் காதலி ஆசை காட்டி மோசம் பண்ணிட்டா.

உன் பாடு தேவலை, என் காதலி எதுவுமே காட்டலை

-------------------------

5. இயற்கைக்கும், பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்லை,தினம் தினம் பல மாற்றங்களை இயற்கை தருகிறது, பல  ஏமாற்றங்களை  பெண் தருகிறாள்

--------------------------



6. என்னதான் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் பூப்புநன்னீராட்டு விழாவுல குடிசைல குத்தவெச்சு உக்காந்துதான் ஆகனும், ஃபிலிம் காட்ட முடியாது

-----------------------------

7. மோசமான ஆண்களை ஆராயாமல் அவர்களிடம் ஏமாறுவதும், பாசமான ஆண்களை புரியாமல் சந்தேகப்படுவதும் பெண்களின் தலையில் பிரம்மன் எழுதிவைத்த தலை எழுத்து

------------------------

8. எடுக்கும் முடிவுகளில் உறுதியாய் ,யானையாய் ஆண் இருப்பான், மதில் மேல் பூனையாய் பெண் இருப்பாள்

-------------------------------------

9. எல்லோரிடமும் இனிக்கப்பேசும் நீ என்னிடம் மட்டும் சுடு சொல் வீசுவது ஏன்? என்பதை கணிக்க முடியாத போது என் கண்கள் பனிக்கத்தொடங்குகின்றன

-------------------------

10. நான் அழகா இருக்கேனா? என்று ஒவ்வொரு முறை நீ உதட்டை சுளித்து கேட்கையில் தேவதைகள் பூமியை விட்டு கோபத்தில் வெளி நடப்பு செய்கிறார்கள்

---------------------------


11. கண்ணிப்போயிருக்கும் உன் உதடுகள் சொல்லும் தகவல் தொடர் ஒத்தடங்கள் பெற்று மாறாத தடங்கள்,நேராது தடங்கல்

---------------------------

12. ஓமனா!கேரளா ஃபிகர் எப்படி இருக்கனும்கறதுக்கு நீ தான் நமூனா (முன் மாதிரி).

கிருஷ்ணா!காமனா எல்லா ஃபிகர்ங்க கிட்டேயும் இதே டயலாக் தானா?

--------------------

13. அத்தான்,பக்கத்து வீட்டுல கணவன் மனைவி தகராறு, நீங்க போய் என்ன ஏதுன்னு கேட்கக்கூடாதா?

ஏற்கனவே ஒரு தடவை நான் அங்கே போனதாலதான் சண்டையே!!

----------------------------

14. நாம் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கூட  மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பதுதான் நகைச்சுவை கலைஞனின் தன்மை 


-----------------------------------
15.  நெருக்கமா இருப்பேன்; ஆனா முத்தம் கொடுக்க மாட்டேன் : ஜீவா!!#உருக்கமா நடிப்பேன், ஆனா சம்பளம் வாங்கிக்கமாட்டேன்னு சொல்வீங்களா?


------------------------


16.  விஜயசாந்தி மீதும் நிலமோசடி புகார்! #சாந்தியை சந்திக்கு இழுத்து வந்தவரு சிரஞ்சீவி ஆளூங்களா?

-------------------------

17. கலைஞர் ஆட்சியில் குட்டி பத்மினியின் ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு! போலீசில் புகார் # நிலங்கள் ஐந்து வகைப்படும்னு எவன் சொன்னான்?

------------------

18. தேர்தல் முடிவு பற்றி கருத்து: குஷ்பூ மீது வழக்கு தொடர முடிவு! # அப்டியே கார்த்திக்,பிரபு,சுந்தர் சி மேலயும் வழக்கு வருமா?


---------------------------

19. 28ம் தேதி மதுரையில் விஜய்யின் வேலாயுதம் ஆடியோ ரிலீஸ்! #  மதுரைக்கு வந்த சோதனை பாருங்க, இன்னைக்கு பவர்ஸ்டாரின் லத்திகா 150வது நாள் விழா 


------------------------

20. லிப் டூ லிப் காட்சியில் நடித்தால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள் : அஜ்மல்!! # எந்த வீட்டில்?


--------------------

21. வனயுத்தத்தில் வீரப்பனாக கிஷோர், முத்துலெட்சுமியாக விஜயலெட்சுமி! # அப்போ சீமான் என்ன கேரக்டர்ல நடிப்பாரு?


-------------------

22. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் தப்பு : ஹன்சிகா மோத்வானி!! # அப்போ சுடுகாடு கட்டலாமா?


------------

43 comments:

ஆர்வா said...

சூப்பர்ர்ர்ர்ர்ர் தலைவா

ஆர்வா said...

ஆசை காட்டி மோசம் பண்ணதுக்கு கவுண்ட்டர் டயலாக் சூப்பர்.. சான்ஸே இல்ல.. அதான் சிபி பஞ்ச்

ஆர்வா said...

எல்லா புகைப்படங்களும் அருமை

ஆர்வா said...

13வது ஜோக்.. ஹி.. ஹி... அய்யோ அய்யோ.

கடம்பவன குயில் said...

அனைத்து புகைப்படங்களும் அருமை. வழக்கமாக சிபி சாரின் பதிவுகளில் எண்ணங்கள் மட்டுமே ரசிக்க வைக்கும். இப்பொழுதெல்லாம் வண்ணங்களும் பெண்களை ரசிக்க வைக்கிறது. மாற்றங்கள் வரவேற்கப் படுகிறது.

கடம்பவன குயில் said...

ஆண்கள் முடிவுகளில் உறுதியாய் இருந்து என்ன செய்ய. எடுக்கும் முடிவுகளே தவறானவைதான் எப்போதும். பெண்கள் மதில்மேல் புனை இல்லை. அதற்குபெயர் சாமர்த்தியம், பத்திசாலித்தனம்.

அதை ஏற்றுக்கொள்ளத்தான் ஆண்களுக்கிங்கே மனமில்லை.

உணவு உலகம் said...

இன்னும் இப்படியோர் ஆசையா சிபி?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

படங்கள் நல்லாயிருக்கு .

கடம்பவன குயில் said...

11. கண்ணிப்போயிருக்கும் உன் உதடுகள் சொல்லும் தகவல்......

கவிதை....கவிதை...கவிதை
இதப்பார்றா.. கவிதை சொல்றாராமா கொழுந்தனார். கலக்குங்க கலக்குங்க...

Unknown said...

பதுங்கிய எலியும் ஒருநாள் வெளிப்படும்....நீங்கதானே Template கமன்ட் போடவேணாம்னு சொன்னீங்க அண்ணே!

கடம்பவன குயில் said...

Food said

//இன்னும் இப்படியோர் ஆசையா சிபி?//

Food sir உங்களுக்குத் தெரியாதா? சிபி இப்போதான் பக்கத்து மாநிலத்திலிருந்து பொண்ணுபார்க்க ஆரம்பிச்சிருக்கார். வருடத்திற்கு ஒரு மாநிலமா போலாம்னு இருக்கிறார். இந்தியா முழுதும் தம்வீடாய் ஆக்க டிரை பண்றார். நம்மால் முடிந்தது வாழ்த்தி வழியனுப்புவோம்.

காந்தி பனங்கூர் said...

//அத்தான் பக்கத்து வீட்டுல கணவன் மனைவி தகராறு, நீங்க போய் என்ன ஏதுன்னு கேட்ககூடாதா?
ஏற்கனவே ஒரு தடவை நான் அங்கே போனதால தான் சண்டையே!!//

தப்பி தவறி இன்னொரு தடவை போய்டாதீங்க சார், அப்புறம் பத்திரிக்கையில் சிபி கொலைன்னு தலைப்பு செய்தி வந்துடபோகுது.

அருமை அருமை.

RAMA RAVI (RAMVI) said...

நல்ல பன்ச்..

படங்கள் அருமை. அதிலும் பறவை முனியம்மா நிலாவில் சமைப்பது..சூப்பர்.

ராஜி said...

நான் பொண்ணு பார்க்க கேரளா போறேன்.

அப்போ என் கதி?

இதென்ன கேள்வி? அதோ கதி தான்.
>>
அறுபதாம் கல்யாணத்துக்கா? இல்ல அறுபதாவது கல்யாணத்துக்கா?

Anonymous said...

தகவல்கள் வழமை போல சூப்பர்! ஆனால் படங்கள் ஒரே ஸ்ரைலில் போட்டது சூப்பரோ சூப்பர்.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

தகவல்கள் வழமை போல சூப்பர்! ஆனால் படங்கள் ஒரே ஸ்ரைலில் போட்டது சூப்பரோ சூப்பர்.
வேதா. இலங்காதிலகம்.

ராஜி said...

என்னதான் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா இருந்தாலும் பூப்புநன்னீராட்டு விழாவுல குடிசைல குத்தவெச்சு உக்காந்துதான் ஆகனும், ஃபிலிம் காட்ட முடியாது
>>
அட இது புது சிந்தனையா இருக்கே.

ராஜி said...

மோசமான ஆண்களை ஆராயாமல் அவர்களிடம் ஏமாறுவதும், பாசமான ஆண்களை புரியாமல் சந்தேகப்படுவதும் பெண்களின் தலையில் பிரம்மன் எழுதிவைத்த தலை எழுத்து
>>>>

அடி பலமோ

ராஜி said...

எடுக்கும் முடிவுகளில் உறுதியாய் ,யானையாய் ஆண் இருப்பான், மதில் மேல் பூனையாய் பெண் இருப்பாள்
என்னது பெண்கள் மதில் மேல் பூனையாய் இருப்பாங்களா? மன வலிமைக்கு பெயர் போனவங்க பெண்கள் சிபி சார்.

ராஜி said...

நாம் நெகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் கூட மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நினைப்பதுதான் நகைச்சுவை கலைஞனின் தன்மை

>>>
சார்லி சாப்ளின் போல. அவருக்குள் எத்தனை சோகம். ஆனால், அவர் படத்தை பார்த்தும் சிரிக்காதவங்க இவ்வுலகில் ஏது?

ஆச்சி ஸ்ரீதர் said...

சற்று முன் வந்த பதிவை காணும்.
அந்த பதிவின் படங்கள்,சிந்தனைகள்,நக்கல் எல்லாமே சூப்பர்.இந்த பதிவிலும் எல்லாமே சூப்பர்.ததுவ ஞானிக்கு வாழ்த்துக்கள்.

உங்க பதிவின் தலைப்பால் ஒரு பதிவை எழுதியிருக்கேன்.நோஸ் கட் கொடுத்துடாதீங்க

sathishsangkavi.blogspot.com said...

ஊர்ப்பக்கம் இப்ப அதிகமா கேரளாவுக்குத்தாய்யா பொண்ணு பார்க்க போறங்க...

rajamelaiyur said...

Last one very super . . .

Unknown said...

பாட்டி வடை சுட்டதை ஆதாரத்துடன் நிரூபித்தார் அண்ணன் சிபி..

எல்லாம் அருமை அண்ணா!!

MANO நாஞ்சில் மனோ said...

பொண்ணு பார்க்க கேரளா போறேன்.

அப்போ என் கதி?

இதென்ன கேள்வி? அதோ கதி தான்.//

டேய் அண்ணா பிச்சிபுடுவேன் ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டுட்டேம்டா வெண்ணை.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே நமீதா நலமா.....?

சசிகுமார் said...

ஓகே ஓகே

தமிழ்வாசி பிரகாஷ் said...

உம்ம லொள்ளு தாங்க முடியல.... பரவை பாட்டி எப்போ நிலாவுக்கு போனாங்க

கூடல் பாலா said...

இதோ ...மறு படியும் வந்துட்டேன் ....போராட்டத்துக்கு கொஞ்சம் ரெஸ்ட் ...

மாதவன் said...

"என்ன செந்தில் ரொம்ப நாளா நம்ம நமீதா போட்டோவை காணேம்"

Unknown said...

சரிண்ணே! போட்டோ எல்லாம் சூப்பர்!

சென்னை பித்தன் said...

பரவை முனியம்மா இல்லையா?அதன் பறந்துபோய் நிலாவில் வடை சுடப் போயிட்டாங்க!நிறைய வடை இருக்கே.ஆளுக்கொண்ணா கொடுத்திடுங்க!

சாகம்பரி said...

இயற்கையையும் பெண்ணையும் புரிந்து கொண்டால் ஏமாற்றம் இல்லைனு சொல்றீங்களா CPS?.

செங்கோவி said...

இதே மாதிரி ஒரு தலைப்பு ஏற்கனவே வச்சிருந்தீங்களோ?

சக்தி கல்வி மையம் said...

raittu.. maapla//

sivagiri senthil said...

Nalla yosikerika

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

Aha...

குறையொன்றுமில்லை. said...

படங்களும், பதிவும் நல்லா இருக்கு.
நிலாவிலேயே நம்மவங்க கால் பதிச்சாச்சா. சூப்பர்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

இன்டர்நேஷனல் figure "குடிசை ? வாட் குடிசை ? " னு கேட்குமே?
13 - அடப் பாவி மனுஷா!!

Anonymous said...

சூ சைஸ் 12 ...உங்களுதா சி பி ...அவர் நிலாவுக்கு போனதே பொய்யுன்னு சொல்றாங்க...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

i enjoyed no 20

Jaganathan Kandasamy said...

தலைப்பு கண்டதும் பயம்.........Tamil Natta vittutu kerala va. inga ponnunga illaya. Namma oorla ponnu tharamattanga boss.

Pictures are awesome!!!!!!!!!