Tuesday, August 30, 2011

ஆண்கள் ஏன் ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்?


1.பாலிவுட்டின் வளரும் நடிகைகளில் சரா கானும் ஒருவர்-தினமலர் செய்தி#26 வயசு ஆச்சே இன்னுமா வளர்ந்துட்டு இருக்கு?#டவுட்டு

---------------------------------

2. இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!#என்னய்யா நியூஸ் போடறீங்க.. எதுக்கு பரபரப்பு? கிளு கிளுப்புன்னு போடுங்க .. அப்ப்டியே ..லிங்க் ப்ளீஸ்   pls

-------------------------------

3. மிஸ், டைம் ப்ளீஸ் என்றேன், ரொம்ப ஓல்டு டெக்னிக் என்றாள். ஓல்டு ஈஸ் கோல்டு என்றேன்#கடலை ஸ்டார்ட்ஸ்

-----------------------------

4. சூப்பர் ஃபிகருடன் சேர்ந்து வெளியே வரும் மொக்கை ஃபிகர் கூட சீன் போடுவதை ஆண் வேறு வழி இல்லாமல் பொறுத்துக்கொள்கிறான்

-------------------------

5. மதிமுக பூப்படைந்துவிட்டது - நாஞ்சில் சம்பத்#சாரி அண்ணே.. ஒரு சின்ன கரெக்‌ஷன் மூப்படைந்து விட்டது,அவ்வளவு தான் , இனி எழ முடியாது.

-------------------------




6. தியேட்டரின் பால்கனியில்  நுழைந்ததும் கிடைத்த இடத்தில் அமர்பவர்கள் ஜஸ்ட் சிநேகிதர்கள், கார்னர்சீட் தேடிப்போய் அமர்பவர்கள் காதலர்கள்#ஜிகிடி

------------------------

7. நீ ஏன் என்னிடம் ஒரு தடவை கூட கோவிச்சுக்கவே மாட்டேங்கறே?என்று முனகி கோபித்துக்கொண்டாள் காதலி#ஸ்.. ஷ்.. அப்பா .. முடியல

---------------------

8. பெண்கள் பெரும்பாலும் வழிவதில்லை,பெண்களுக்கு அவர்கள் முன் இருக்கும் ஏராளமான தூண்டில்களிடமிருந்து தப்பிக்கவே நேரம் சரியாக இருக்கிறது

------------------------

9. சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகாத காரணத்தால் பெரும்பாலான  ஆண்கள் தங்களை ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்

-----------------------

10. காதலியிடம் அடிக்கடி பொய் சொல்க.சத்தியம் பண்ணுங்க என்பாள்,உன் மீது சத்தியம் என்று தொடுவதற்கு எதார்த்தமான வாய்ப்புக்கள் கிடைக்கும்@#ஜிகிடி

----------------------------


a
11. காதலிக்கும்போது பெண்கள் காதலன்மீது வைக்கும் அன்பை காதல் தோல்வி அடைந்த பின்னும் ஆண்கள் காதலி மீது வைத்திருப்பார்கள்


--------------------------

12. 100% தூய்மை, 100 % நேர்மை என யாருமே இங்கே கிடையாது,சின்ன சின்ன தவறுகளுக்காக மனிதர்களை நீ ஒதுக்க ஆரம்பித்தால் நீ தான் தனியன் ஆவாய்

-------------------------------

13. அர்த்தம் அற்ற வார்த்தைகளை விட அர்த்தம் உள்ள மவுனம் சிறந்தது

-----------------------------

14. முக்கியமான ஒன்றைத்தொலைக்கும்போது யாராவது மனம் மகிழ்வார்களா? நான் மகிழ்ந்தேன், என் இதயம் தொலைக்கையில்

----------------------------

15. என்னுடன் பேசவே கூடாது எனும் வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய்!எப்போதாவது நீயாய் வந்து பேசுவாய் எனும் எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன்.

---------------------------------



16. நாத்திகவாதியாய் இருப்பவர்கள் காதலியின் நலனுக்காக பிரார்த்திக்கும்போது ஆத்திகவாதி ஆகிவிடுகிறார்கள்

-----------------------------

17. இழப்பதற்கு உன் நினைவுகள் தவிர வேறெதுவும் இல்லை என்னிடம்,மறப்பதற்கு என் காதல் தவிர வேறெதுவும் இல்லை உன்னிடம்

--------------------------

18. உன்னை மட்டுமே நினைக்க வேண்டும் என்று பணித்தாய், உன் அளவு கடந்த அன்புகளை என் மேல் திணித்தாய்

------------------------

19. விமானத்தில் தனியே தொலை தூரம் நீ 32 மணி நேரம் பயணித்தாய்! நான் 64 மணிநேரம் கழித்து திரும்பினேன்


-------------------------

20. நீ என்னை உன்னவனாய் நினைக்க ஆரம்பித்த நாளை என் முதல் பிறந்த நாளாய் எண்ண ஆரம்பித்தேன்

-------------------------



21. உன்னைச்சுற்றி அமையும் ஒரு பாதுகாப்பு வளையமாய் நான் மாற முடிந்தால் சந்தோஷப்படுவேன்

------------------------

22.அடிக்கடி என் கனவில் நீ வரும்போதே நான் உஷார் ஆகி இருக்க வேண்டும் , நீ கனவாகவே கரையப்போகிறாய் என்று


---------------------

23. மெலோடி சாங்க்ஸ் ரசிக்கும் பெண்கள் எல்லோரும் மென்மையான மனம் படைத்தவர்கள் அல்ல, அடிப்பாட்டை விரும்பும் ஆண்கள் வன்மையான குணம் உள்ளவர்கள் அல்ல

----------------------------

அனகா அலங்காமணி - ஸ்குவாஷ்
24.சேலை பெண்கள் முந்தானையை சரி செய்வதை விட 4 மடங்கு அதிகமாக சுடிதார் பெண்கள் துப்பட்டாவை சரி செய்கிறார்கள்#மைக்ரோநோட்டாலஜி

-----------------------

25 காதலிக்காதவன் கவிதை எழுதும்போது வார்த்தைகளாக வந்து விழும்,காதலிப்பவன் கவிதை எழுதும்போது வரி வரியாக மிதந்து வரும்#முப்பொழுதும் அவள் கற்பனை

--------------------

26 பெண்கள் கால் விரல் மிஞ்சி பட்டா போடப்பட்டவள் என்பதை  காட்டிக்கொடுப்பது போல் ஆண்களுக்கு?நாங்க தான் ஷூ போட்டுக்கறோமே? #யாரு கிட்டே?

-----------------------

27 சரக்கு ஸ்மெல்,சிகரெட் ஸ்மெல் இவற்றை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் பெண் ஆணின் முத்தம் விரும்புகிறாள்#கில்மாலஜி

------------------

28. சுடிதார் பெண்களின் துப்பட்டா போடும் ஸ்டைல் தான் அவரது டிரஸ்சிங்க் சென்சை தீர்மானிக்கிறது#டிரஸ்ஸாலஜி

------------------------



29. கோயிலுக்குப்போவதால் மனநிம்மதி,ஓசி பிரசாதம்,ஏசி போட்டது மாதிரி குஜிலியின் கூல் பார்வை மூன்று பலன்கள் இருப்பதால் ஆன்மீகவாதியாகு#ஜிகிடி

---------------------

30.நெயில் பாலீஸ் வைப்பது ஃபிகர்களின் பழக்கம்,இயற்கை மருதாணிச்சிவப்பை ரசிப்பது ஆண்களின் வழக்கம்#ஜிகிடி

---------------------------

31 கலைநிகழ்ச்சிகளில்,விழாக்களில் மேடையில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சாமான்யன்,ஆடியன்ஸ் தரப்பில் இருக்கும் ஃபிகர்களை ரசிப்பவன் சரித்திரன்#ஜிகிடி

-----------------------

32 ஒற்றை நாடிப்பெண்களுக்கு ஒற்றைஜடை அழகு,ரெட்டைநாடிப்பெண்களுக்கு ரெட்டை ஜடை அழகு என்று நினைப்பது அழகிய முட்டாள் தனம்#ஜிகிடி

------------------

33. ஜிமிக்கி அணிந்த பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்,ஆனால் அவர்கள் ஆண்களுக்குப்பிடிக்காத மாடலில் பெரிய சைஸ் ரிங்க் மாட்டி கடுப்பேற்றுகிறார்கள்

rainbow rose

34 comments:

கோகுல் said...

பிரபல பதிவர் அடிக்கடி கோவிலுக்கு செல்லும் ரகசியம்!(29)

சக்தி கல்வி மையம் said...

தலைப்பு நச்சுன்னு இருக்கு மாப்ள..

RAMA RAVI (RAMVI) said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு.அதிலும் அந்த ரோஜா படம் அற்புதமா இருக்கு.

Unknown said...

அண்ணே என்ன அடிச்சாலும் தாங்குவாரு....காமடி கதம்பம்ஸ் ஹிஹி!

sathishsangkavi.blogspot.com said...

ஜிகிடி கலக்குது...

கடம்பவன குயில் said...

ரொம்ப நாளா...அழகழகான இயற்கை காட்சிகள், இனிய பெட்அனிமல்ஸ்,அழகிய மலர்கள்னு ரொம்ப நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு உங்க பதிவு....இப்ப போய் ஏன் இப்படி அடிக்கிறாங்க????

#டவுட்டு#

கடம்பவன குயில் said...

31. மேடைபிகர் ரசிப்பவன் சாமானியன்.

சிபி நீங்க சாமானியனா??சரித்திரனா???

கடம்பவன குயில் said...

29. கோயிலுக்குப்போவதால் 3 பலன்கள்:

புரியுது புரியுது உங்கள் திடீர் சாமிபக்தி காரணம்.

சசிகுமார் said...

சார் நிறைய போட்டோ தெரியமாட்டேங்குது என்னென்னு பாருங்க ...

கடம்பவன குயில் said...

மைக்ரோநோட்டாலஜி, டிரஸ்ஸாலஜி என்ன ஒரு ஆராய்ச்சி.....

100% நேர்மை 100 %உண்மை . தனியனாய் ஒதுக்கப்படுவாய்..

இது உண்மை! எப்படி இப்படியெல்லாம் தத்துவமும் கலந்துகட்டி அடிக்கிறீங்க.

நல்ல கமர்சியல் மசாலா!!!!

கடம்பவன குயில் said...

//மெலோடி சாங்ஸ் ரசிக்கும் பெண்கள் மென்மையானவர்கள் அல்ல! அடிப்பாட்டை விரும்பும் ஆண்கள் வன்மையான குணம் உள்ளவர்கள் அல்ல.//

ஹா...ஹா... கில்மா பதிவு போடுபவரெல்லாம் மோசமான மனிதரல்ல. அடக்கமான பதிவெழுதுபவரெல்லாம் யோக்கியனுமல்ல...

Nirosh said...

அண்ணே எனக்கொரு டவுட் சத்யராஜ் உங்க சொந்தமா... ஹீ ஹீ... அப்போ எப்படி லொள்ளா கொட்டுறீங்க... என்னவோ போங்க கலக்குறிங்க...!

Unknown said...

SUPER THAMPI!

M (Real Santhanam Fanz) said...

பிறன் மனை நோக்காமை சந்தர்பம் சரிவர அமயாமைன்னு எங்க ஊருல ஒரு குறள் இருக்கு. அப்புறம் ஸார் எந்த சூப்பர் பிகரு கூடையும் எப்பவுமே ரெண்டு அட்டு பிகர் இருக்கும் குட்டைய கொளப்புரதுக்கு (நம்ம தல சொன்னது)

Periya Venghayam said...

வர வர உங்கள் பதிவுகளில் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கிறது. முன்பெல்லாம் நீங்கள் எழுதும் அந்த இரண்டு வரிகளுக்காகவே ஒன்றுக்கு பலமுறை படிப்பேன். ஆனால் அந்த ஆர்வம் இப்போதெல்லாம் இல்லை. வேண்டுகோள்

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு .

rajamelaiyur said...

13 th is super and true

rajamelaiyur said...

All are super

செங்கோவி said...

அருமை.

ADMIN said...

நீங்களும் ஆணாக இருப்பதால்தான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..! இதையும் ஒருதடவைப் பாருங்களேன்..! இனி தடைகள் இல்லை உனக்கு..!

சி.கிருபா கரன் said...

நீங்க சொன்ன வாக்கியங்களை ஈரோடு முழுவதும் போஸ்டர் அடிச்சு ஒட்டினிங்கான பல ஆண்களோட வாழ்கை காப்பாற்றப்படும்#

சுதா SJ said...

கலக்கல், அப்புறம் ஆண்களை பற்றிய கமெண்ட்ஸ் சரியே ,
அதே அதே
சந்தர்ப்பம் கிடைக்காத வரையே அன்னங்க எல்லாம் ராமன்கள்

Anonymous said...

ஆண்களில் ராமர் கிடையாது தல..கலக்கல்.

Shankar said...

Point number 11 very true.
Good postings. May be some of them are personal experience.

ரைட்டர் நட்சத்திரா said...

title tweet யோசிக்க வேண்டிய விஷயம். பகிர்வுக்கு நன்றி

ராஜி said...

சந்தர்ப்பங்கள் சாதகம் ஆகாத காரணத்தால் பெரும்பாலான ஆண்கள் தங்களை ராமனாக காட்டிக்கொள்கிறார்கள்
>>>
சேம் சைட் கோல் போட்ட சிபி வாழ்க! வாழ்க!

ராஜி said...

100% தூய்மை, 100 % நேர்மை என யாருமே இங்கே கிடையாது,சின்ன சின்ன தவறுகளுக்காக மனிதர்களை நீ ஒதுக்க ஆரம்பித்தால் நீ தான் தனியன் ஆவாய்
>>
சிம்பிள் பட் ஸ்டாராங்கான வரிகள்

ராஜி said...

என்னுடன் பேசவே கூடாது எனும் வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய்!எப்போதாவது நீயாய் வந்து பேசுவாய் எனும் எதிர்பார்ப்புடன் நான் இருக்கிறேன்.
>>>
யாராவது ஒருத்தங்க பேசி தொலைங்கப்பா. சிபி தொந்தரவு தாங்க முடியலை

ராஜி said...

விமானத்தில் தனியே தொலை தூரம் நீ 32 மணி நேரம் பயணித்தாய்! நான் 64 மணிநேரம் கழித்து திரும்பினேன்

>>>
64 மணி நேரம் மட்டும்தானா?
-------------------------

நிரூபன் said...

டைட்டிலே சூப்பாரா இருக்கு...

நிரூபன் said...

வளர்ந்துக் கிட்டிருக்கும் நடிகை ஜோக் சூப்பர் பாஸ்...

நிரூபன் said...

ஏனைய டுவிட்ஸ் உம் சூப்பர் பாஸ்,

அம்பலத்தார் said...

வார்த்தைகள் ஜாலம் SUPER.............. பின்னி எடுத்திட்டிங்க

தனிமரம் said...

துப்பட்டா போடும் அழகை எல்லாம் நல்லா ரசித்திரீக்கிறீங்க போல சி.பி!