Thursday, July 28, 2011

கலைஞருக்குப்பிறகு ஸ்டாலினா? அழகிரியா?கொதி நிலையில் கோபாலபுரம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQ2JH51Kid4j_jx-H26zD1Hed4NjApwT_KDv2BO0ea_vdBK4YpDaKtWD5vBKP28jALhiicCMeDdEIWLJ8RpHWfCfqzcLJw1PUG4nzDj7Ww-2mMgoKpoRY0CGNNfYNtDrIuMzHKEAXrWWiq/s1600/Kushpoo+Joining+in+DMK.jpgமுடிவுக்கு வராத மு.க. கலாட்டா!

ருணாநிதிக்கு அடுத்த இடம் அண்ணன் அழகிரிக்கா... தம்பி ஸ்டாலினுக்கா என்ற கலாட்டா வுக்கு இன்று வயது 15. கோவையில் கடந்த வாரம் நடந்த பொதுக் குழுவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்தான் தி.மு.க. தொண்டன். ஆனால், மீண்டும் கால் புள்ளி, அரைப் புள்ளிவைத்து வந்த கருணாநிதி, மீண்டும் முக்கால் புள்ளிதான் வைத்தார்!

 'ஸ்டாலினை முதல்வர் ஆக்குங்கள். கலைஞர் கட்சித் தலைவராக இருந்து வழி நடத்தட்டும்’ என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே குரல் கொடுத்து வந்தார்கள். 'ஸ்டாலினுக்கு மிக முக்கியமான பொறுப்பு காத்திருக் கிறது’ என்று நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார் கருணாநிதி. 

சி.பி - அய்யா தான் இருக்கும் வரை  சி எம் சீட் தனக்கே என்ற உயரிய கொள்கையோட உலா வர்றார்னு நினைக்கறேன்.. 

பொதுச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஸ்டாலின். ஆனால், பேராசிரியர் அன்பழகனைக் காயப்படுத்திய காரணத்தால், ஆற்காடு வீராசாமியிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருளாளர் பதவிதான் ஸ்டாலின் வசமானது. 

தம்பிக்கு சாக்லேட் கொடுக்கும்போது எல்லாம் அண்ணனுக்கு மிட்டாய் கொடுக்க வேண்டும் அல்லவா? தென் மண்டலச் செயலாளர் ஆனார் அழகிரி. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட்டதும், ஸ்டாலினுக்குத் துணை முதல்வர் பதவி தரப்பட்டது. 

சி.பி - கலைஞர் ஒரு திறமையான செஸ் வீரர் போல காயை நகர்த்தறார்,ஆனா விதி வலியது

அடுத்து, ஸ்டாலினும் அழகிரியும் அடைய இரண்டே இரண்டு நாற்காலிகள்தான் இருக்கின்றன. அது, கருணாநிதி உட்கார்ந்திருக்கும் தலைவர் பதவி. அன்பழகன் அமர்ந்திருக்கும் பொதுச் செயலாளர் பொறுப்பு. இந்த இரண்டைக் குறிவைத்த மியூஸிக்கல் சேர் விளையாட்டில், ஸ்டாலினும் அழகிரியும் மட்டும் சுற்றி வர... மற்ற நிர்வாகிகள் வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் செயற் குழு, பொதுக் குழுவாக மாறிப்போனது!


சி.பி - அழகிரிக்கு அனுபவம் பத்தாது ,ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் பத்தாது

கோவையிலும் அதேதான்.  வழக்கம்போல, நாற்காலியை கருணாநிதியும் அன்பழகனுமே மடக்கி எடுத்துச் சென்றுவிட்டார் கள்!

செயல் தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர் என்ற பெயரில் ஏதாவது ஒரு பதவியை ஸ்டாலினுக்குத் தந்தாக வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்னால் நடந்த இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய பலரும் 'தளபதிதான் தலைவராக வேண்டும்’ என்று பேசினார்கள். 

சி.பி - தளபதிக்கும் மன்னர் ஆக ஆசை தான்,ஆனா மகுடத்தை இறக்கி வைக்க மனம் இல்லாதவர் மன்னரா இருந்தா அவர் தான் என்ன பண்ணுவார் பாவம்?

'இது எல்லாம் பொதுக் குழுவில் பேச வேண்டிய விஷயம்’ என்று ஸ்டாலின் அப்போது சமாதானம் சொன்னார். அதை கருணாநிதியிடம் போட்டுக் கொடுத்த நல்ல மனிதர் ஒருவர், 'தன்னைத் தலைவராக்கச் சொல்லி பொதுக் குழுவில் பேச ஸ்டாலின் தூண்டிவிட்டார்’ என்று சொல்ல... கருணாநிதிக்கு முகம் சிவக்க ஆரம்பித்தது. 'நீ ஒருத்தன்தான் எனக்கு மனக் கஷ்டம் கொடுக்காதவன் என்று நினைத்தேன். ஆனால், நீயே இப்படிப் பேசலாமா?’ என்று கருணாநிதி கேட்க... ஸ்டாலின் அதற்குச் சமாதானம் சொல்ல... தந்தை, மகன் இடையே 10 நாட்கள் சரியான பேச்சுவார்த்தைகூட இல்லை.

 சி.பி - அப்டி எல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா நீங்களே ஒரு பிட்டு போடறீங்கன்னு நினைக்கறேன். அப்பாவுக்கும், பையனுக்கும் நடுவுல 1008 இருக்கும்..
'ஸ்டாலினை இப்போதே தலைவராக அறிவித்தால்தான், பின்னால் குழப்பம் இல்லாமல் இருக்கும்’ என்று சிலர் தூண்டி னார்கள். அதனால் செயல் தலைவர் அந்தஸ்துகூட அவருக்குத் தரப்படலாம் என்று இளைஞர் அணி ஆட்கள் சொல்ல ஆரம்பித்தனர். இது மதுரையில் இருந்த அழகிரிக்கு மன வருத்தம் கொடுத்தது. 

சி.பி - வருத்தம் மட்டுமா? எரிச்சலும் தான். மனசுக்குள்ளேயே மருகுவதைத்தவிர அவருக்கு வேற வழி இல்லை

(உருகுதே மருகுதே ஒரே பதவியாலே..சி எம் சீட்டுக்கு ஆசப்பட்டேன்,அப்பா கிட்டே பிட்டை போட்டேன். ஏதும் ஒர்கவுட் ஆகல.  - வெயில் பாட்டு மெட்டில் )

'பொதுக் குழுவுக்கு நானும் வர மாட்டேன். நீங்களும் போக வேண்டாம்’ என்று அழகிரி உத்தரவு போட்டு இருக்கிறார் என்ற செய்தியைக் கிளப்பியதே மதுரை நிர்வாகிகள்தான். ஸ்டாலினுக்கு மீண்டும் உயர்வு என்பதைத் தாங்கிக்கொள்ள முடியாத இன்னொரு நபர், ராஜாத்தி அம்மாள். மகள் கனிமொழிக்குப் பிடிக்காத ஸ்டாலின் கட்சித் தலைவர் ஆனால், கனிமொழியின் எதிர்காலத்தையே இது கேள்விக் குறியாக்கும் என்று நினைத்தார். இந்த கலாட்டாவில் அழகிரியும் ராஜாத்தி யும் ஒன்றாக, ஸ்டாலினுக்கான நாற்காலி தட்டிப் பறிக்கப்பட்டது.

சி.பி - அரிது அரிது அரியாசனம் கிடைப்பது அரிது
பெரிது பெரிது அதை தந்தையிடம் இருந்து அதை தட்டிப்பறித்தல்

'நீங்க பொதுக் குழுவுக்கு வராமல் போனால், ஸ்டாலினுக்கு அதுவே வசதியாகப் போய்விடும்!’ என்று சென்னையில் இருந்து அழகிரிக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதன் பிறகே உஷாரான மனிதர், கோவை வந்து இறங்கினார். கனிமொழி கைதானது முதல் டெல்லியிலேயே தங்கிவிட்ட ராஜாத்தி அம்மாளும் கோவை வந்து கருணாநிதியின் நாற்காலிக்குப் பின்னால் இடம் பிடித்தார்.

சி.பி - தனக்கு கிடைக்காட்டியும் பரவால்ல,தம்பிக்கு கிடைச்சடக்கூடாதுங்கற நல்ல எண்ணம் தான், வேறென்ன?

ஸ்டாலின் நினைப்பு மொத்தமாகப் பணால் ஆனது.
''நான் உனக்கு அப்பாவாக மட்டுமா இருக்கிறேன்? நான் உன்னுடைய கட்சியின் தலைவராக இருக்கிறேன். நீ கட்சியில் உறுப்பினராக இருக்கிறாய். அதனால்தான் மாநகராட்சி மன்றத்திலே உன்னை மேயராக்கி, உனக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, மேயருக்கு உரிய உடையைப் பூட்டி அழகு பார்த்தேன். இது எனக்குப் புரிகிறது. ஸ்டாலினுக்குப் புரிகிறது. சில நண்பர்களுக்குத்தான் புரியவில்லை!'' என்று கருணாநிதி சமாதானம் சொல்லும்போது, பொதுக் குழுவில் இருந்த ஸ்டாலின் முகம் கடுப்பால் சிவந்தது. 

பின்னால் உட்கார்ந்து இருந்த ராஜாத்தியே... கவலை மறந்து சிரித்துவிட்டார். ஆனால், இதைப் பார்க்க அழகிரி கோவையில் இல்லை. மதியத்துக்கு மேல் மதுரைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.


''ஸ்டாலினுக்குத் தலைமைப் பதவியை விட்டுத்தர கலைஞர் தயாராக இல்லை. இதை அவரால் வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை. 'உனக்குக் கொடுத்தால் அழகிரியும் கேட் பான்’ என்று காரணம் சொல்வது; 'உன்னைத் தலைவராக ஆக்கி னால், ராஜாத்திக்குப் பிடிக்காது’ என்று சொல்வது; இப்படிப் பல காரணங்களை அவரே சொல்லித் தட்டிக் கழித்துக்கொண்டு இருக்கிறார். 


சி.பி - கலைஞர் மகனுக்குப்பதவி தராமல் தட்டிக்கழிக்கிறார். அது கண்டு கனி மொழி களிக்கிறார்.  நமக்கும் எதிர்காலத்துல சான்ஸ் உண்டுன்னு..


http://www.alaikal.com/news/wp-content/stalin-ma.jpg

கலைஞர், தனக்குப் பிறகு இன்னார்தான் தலைவர் என்பதை உடனே அறிவித்தாக வேண்டும். இதில்தாமதம் செய்யச் செய்ய... கட்சியின் கட்டுக்கோப்பு சிதைந்துவிடும். இப்போதே கட்சியில் யாரும் யார் பேச்சையும் கேட்பது இல்லை. இது இன்னும் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால், உள்ளாட்சித் தேர்தலின்போதே பல ஊர்களில் பிரளயம் வெடிக்கும்!'' என்று சொல்லும் முன்னாள் அமைச்சர் ஒருவர்...


''ஸ்டாலின் முழுமையான தகுதியை அடைந்துவிட்டார் என்று சொல்லவில்லை. ஆனால், கலைஞருக்கு அடுத்து தலைவர்ஆகும் தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையும் புறக்கணித்தால், தலைமை அற்ற கட்சியாக கழகம் மாறிவிடும்!'' என்றார். ஆனால், இதனை அழகிரி ஆட்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.  'ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கொடுத்தால், நீங்கள் கட்சியைவிட்டு விலகுங்கள்!’ என்று அழகிரிக்கு ஆலோசனைகள் சொல்லவும் அவர்கள் தயங்கவில்லை. 


சி.பி எதுக்கு வம்பு?ரெண்டரை வருஷம் ஸ்டாலின்,  ரெண்டரை வருஷம் அழகிரின்னா நோ பிரச்சனை

இந்த சைக்கிள் கேப்பில் கனிமொழிக்கு தலைமைக்கான தகுதி இல்லையா என்று ராஜாத்தி தூண்டுதலுடன் இன்னொரு அணி களத்தில் குதித்து உள்ளது.
''விரைவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியில் வருவார். கலைஞரின் எழுத்து, பேச்சுத் திறமைகொண்ட வாரிசு இவர் மட்டுமே என்பதை நிரூபிப்பார். சிறையில் இருந்தபோது கிடைத்த அனுதாபங்களை மூலதனமாகக்கொண்டு அவரைத் தலைவர் ஆக்கலாம்'' என்கிறார்கள் ராஜாத்தி ஆதரவாளர்கள். 

நெல்லை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் பேச்சாளர் வாகை முத்தழகன் இதற்கான ஆரம்பத்தைச் செய்துவிட்டார். சில மாவட்டச் செயலாளர்களின் ஆதரவை இதை நோக்கித் திருப்பும் காரியத்தையும் ராஜாத்தி செய்து வருவதாகச் சொல்கிறார்கள்.


உள்கட்சிக் கலவரங்களுக்கும் தலைமைக்கான போட்டிக்கும் மத்தியில் ரத்தம் சிந்திய சம்பவங்கள் தி.மு.க-வில் ஏராளமாக நடந்து உள்ளன. இந்த கடந்த காலத் தவறுகளில் இருந்து ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரும் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது அவர்களது தவறு அல்ல. அதை சொல்லித் தராத கருணாநிதியின் தவறுதான்.
 
சி.பி - இன்னும் இவங்களை நம்பிட்டு இருந்தா அது தான் தமிழ் நாட்டு மக்களின் மிகப்பெரிய தவறு
 
நன்றி - விகடன்

20 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

முதல் விதை முளைத்ததே....

Unknown said...

நல்ல கமெண்ட்ஸ் ..............( குறிப்பா ..............உருகுதே மருகுதே பாட்டு )

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரெண்டு மகன்களுக்கு நடுவில் சி பி ய நடுவரா போடலாம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"வெட்கம் " இதை திருவிளையாடல் சிவாஜி பாணியில் படிக்கவும்

Unknown said...

அடங்கொன்னியா...இந்த ஆதரவாளருங்க தொல்ல தாங்க முடியலய்யா...வீட்டுக்கு ஓட்டட அடிக்க போனவன்ல இருந்து டாய்லெட் கிளீன் பண்ண போன்வனுங்க வரை ஒரு ப்ளேட் பிரியாணிய போட்டு இப்படி ஆக்கி புடுதுங்க!....இந்த நாதாரி பொழப்புக்கு பேரு சாணி நக்குன தனம்....அடச்சே சாணக்கியத்தனம் தூ!

சென்னை பித்தன் said...

அடிச்சுக்கட்டும்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆதராவளர்கள் இவர்கள் சொல்படிதானே நடப்பார்கள்...

இன்னும் என்னன்ன கூத்து நடக்கப்போகிறதோ...

பொறுத்திருந்து பார்ப்போம்....

rajamelaiyur said...

நல்ல தகவல்

rajamelaiyur said...

என்று என் வலையில்

டி.வியாடா நடத்துறிங்க

Unknown said...

ஏன் இவ்வளவு பிரச்சனை? பேசாம குஷ்புவ தலைவராக்கிடலாங்க,ஏன்னா அவங்க டமில்ல நல்லா அலகா பேசுவாங்க,சினிமாவிலே நடிச்சி சேவை செஞ்சிருக்காங்க கட்சிக்காக தமிழ்நாட்டில் இண்டு,இடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தாங்க,இது போதாதாக்கும்?

vidivelli said...

அவங்க நடிக்க நாங்க இருந்து பார்த்து புலம்புவோம்...வேறு என்ன செய்ய..

நல்ல பகிர்வு..
வாழ்த்துக்கள்..

செங்கோவி said...

கலைஞருக்குப் பிறகு கனிமொழி தான்!

இந்திரா said...

என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

சக்தி கல்வி மையம் said...

அரசியல..
ஆட்டோ வந்து ரொம்ப நாள் ஆச்சா?

கூடல் பாலா said...

தமிழ் நாட்டை பால்கோவாவா நினைச்சி பங்கு போடப் பாக்குறாங்க .......

சசிகுமார் said...

ஆளாளுக்கு பிரிசிக்கிட்டு மீதி இருந்தா அம்மாவுக்கு கொஞ்சம் வையுங்கப்பா... கொடநாடு பக்கம் கொடுத்தா நல்லா இருக்கும் ஹீ ஹீ

ஆமினா said...

2 1/2 வருஷ டீல் சூப்பர்

Arulsagaya Xavier said...

நண்பரே, இந்த நாற்காலி பிரச்சனை ஸ்டாலினுக்கும், அழகிரிக்குமான பிரச்சை இல்லை. கலைஞருக்கும், அவரது நாற்காலிக்குமான பிரச்சனை. அதனால்தான் கருணாநிதியே அழிகிரியைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். கருணாநிதிக்கு நாற்காலி ஆசை இல்லையென்றால் எப்பொழுதோ தமிழகம் திசைக்கொன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

ரா: அரசகுமாரன் said...

திமுக இனி தேறுவது கஷ்டம்...
வருங்கால திமுக தலைவர் வைகோ கையில்.....
இதையும் பார்க்கவும்
http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_7108.html