Friday, June 24, 2011

சென்னை,கோவை ,வெளியூர் பதிவர்கள் பேச்சு ( நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 5)

 

1.டாக்டர் கந்தசாமி, கோவை - நான் என் பிளாக்லயே யார் வேண்டுமானாலும் என் பதிவை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம் என எழுதி வெச்சிருக்கேன்..
( நீர் மனுஷன்)ஏன்னா எல்லாரும் படிக்கனும்கறதுகுத்தான் நாம் எழுதறோம்.. அதை யார் பேஸ்ட் பண்ணி போட்டா என்ன? மொத்தத்துல நம்ம படைப்பு யாருக்காவது யூஸ் ஆனா சரி.. (அப்போ என் படைப்பு யாருக்கும் யூஸ் இல்லைங்கறீங்களா? அவ்வ்வ்வ்)என் பிளாக்ல கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் பண்ணி வெச்சுட்டேன்.. (ஏன்,அது என்ன குணச்சித்திர நடிகையா?மூடி மூடி வைக்க?)அவங்க கமெண்ட் போட நான் அதுக்கு நன்றி கமெண்ட் போடனும்,அப்புறம் அவங்க பிளாக் போகனும்.. என்னால சுதந்திரமா செயல்பட முடியாது..




2. வலைச்சரம் சீனா -அண்ணன் நைஸா பத்தோட பதினொண்ணா எங்களோட உட்காரப்பார்த்தார்.. நாங்க விடுவோமா? அவரை தலைமை ஏற்று நடத்திக்கொடுக்கனும்னு உணவு உலகம் அண்ணன் பக்கத்துல உட்கார வெச்சுட்டோமில்ல.. “ நான் 2 வருடங்களாகத்தான் இந்த பொறுப்பேற்று இருக்கேன்.. வாரா வாரம் ஒரு பதிவரை எழுத வெச்சு மெயிண்டெயின் பண்றது சிரமமா இருக்கு.. ஆனா ஆத்ம திருப்திக்காக இதை பண்றேன்..புதிதாக எழுத வருபவர்களை,ஊக்குவிப்பதே என் நோக்கம்.. “





3.  பலா பட்டறை சங்கர்  - வந்த பதிவர்கள்லயே செம பர்சனாலிட்டி அண்ணன் தான்.. செம ஹேண்ட்ஸம்.. கந்த சாமி பட விக்ரம் மாதிரி இருந்தார்.. ஆர்ப்பாட்டமா ஆள் இருந்தாலும் அவரது பேச்சு ,குரல், த்வனி எல்லாம் அமைதியாவும், அவரது பக்குவத்தை ,அனுபவத்தை எடுத்து உரைப்பதாவும் இருந்தது.. 

”உண்மைத்தமிழன் உட்பட பலர் பத்திரிக்கைகளில் வந்த மேட்டர்களை பதிவா போடறாங்க.. சிலர் அதை காப்பி பேஸ்ட் என சொன்னாலும் என்னைப்பொறுத்தவரை அது தேவை தான். ஏன்னா புக் ஒரு வாரம் போனா அழிஞ்சுடும்,ஆனா பதிவு ரெக்கார்டா இருக்கும், நாளைக்கே அந்த டைட்டில் குடுத்து கூகுள்ல தேடுனா கிடைக்கும், நம்ம அவசரத்துக்கு உதவும்..

அதே சமயம் தமிழ்மணம்ல நெம்பர் ஒன் வர்றதால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. ( அண்ணன் நம்மளைத்தான் மறைமுகமா தாக்கறார் ஹி ஹி ) சிங்கிள் டீக்கு கூட உதவாது.. அதனால எழுதுவதை ஒரு பொழுது போக்கா வெச்சுக்கிட்டு  பொழப்பைப்பாருங்க.. (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).. இப்போ எல்லாரும் கூகுள்  பஸ்ல கமெண்ட் போட ஆர்வமா இருக்காங்க ,பதிவு எழுதறதுல ஆர்வம் குறைஞ்சிண்டிருக்கு. இது மாறனும்.. . இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.




4. பெயர் சொல்ல விருப்பமில்லை - ஹா ஹா இவரோட காமெடி.. இவருக்கு சப்போஸ் ஒரு லவ்வர் இருந்தா .....

” டியர் .. நான் இப்போ 3 மாசம்.. முழுகாம இருக்கேன்.. இப்போவாவது உங்க பெயர் சொல்லுங்க..  

சாரி.. எனக்கு  என் பெயர் சொல்ல விருப்பமில்லை, உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள வும் இஷ்டம் இல்லை.. அப்டின்னு அல்வா கொடுத்திருப்பாரோ..?

“ நான்  தளத்துல கணிதம் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு பதிவு போட்டேன்.. எடுபடலை.. 

அது உங்க தப்பு.. கணக்கு பண்ணுவது எப்படி?ன்னு டைட்டில் குடுத்திருக்கனும் .செம ஹிட் ஆகி இருக்கும்..



5. இம்சை அரசன் பாபு.. - இவர் ஆள் பார்க்க தாதா மாதிரி இருந்தாலும் பச்ச மண்ணுய்யா.. இவரோட கிராமியம் கலந்த தமிழை கேட்பவர்கள் இவரை மறக்கவே முடியாது.. லோகோவை வைத்து இவர் முரடானவர்னு யாராவது நினைச்சா ஏமாந்தே போனீங்க.. செம சாஃப்ட் டைப்.. ( தொட்டு பார்த்தியா?ன்னு கேட்கக்கூடாது.. ஹி ஹி ) 

” நான் சீரியஸ் பதிவு எப்பவாவதுதான் எழுதறேன்... (பொதுவா நீங்க பதிவே எப்பாவாவதுதானே எழுதறீங்க? அவ்வ்வ்வ்வ்)என் பொண்ணுகிட்டே நான் வாங்குன பல்புகளை மையமா வெச்சுத்தான் நான் கதை எழுதறேன்.. (மய்யமா வெச்சு .. மய்யம்..... கமல் ரசிகரோ..?)

 பாபு அண்ணே . உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் .. நீங்க  பெத்த பொண்ணை வெச்சு பதிவு போடறீங்க.. நான் ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களை வெச்சு பதிவு தேத்தறேன்.. ஏன் என்னை மட்டும் எல்லாரும் வையறாங்க? அவ்வ்வ்வ்வ்வ்......




6. தமிழ்வாசி பிரகாஷ்.. இவர் பேரையும், லோகோவையும் பார்த்துட்டு சின்னப்பையன்னு நினைச்சுட்டுப்பார்த்தா ஆள் பிரபுவுக்கு தம்பி மாதிரி இருக்கார்.. (அப்போ குஷ்பூக்கும் இவருக்கும் என்ன முறை?ன்னு கேட்கக்கூடாது)இவர் வர்ற வழில பஸ்ல மாட்டிக்கிட்டாராம். பஸ் பஞ்சராம்.. அதான் வர லேட்னார்.. ( பஸ்ல மாட்னாரா? பஸ்ல  வந்த மிஸ் பிக்கப் ஆகி அவரை விரட்னாரா ந்னு சரியா தெரில,, )




7. வம்பை விலைக்கு வாங்குவோம்ல மணிவண்னன் - விக்ரம் படத்துல சத்யராஜ்  தகடு எங்கேடா.. தகடு தகடு அப்டினு கேட்பாரே.. அந்த ஆள் மாதிரியே இவரு இருந்தாரு.. அவர் கன்னத்துல பெரிய தழும்பு.. இவர் உடம்பெல்லாம் கொழுப்பு..  (செம ஜாலி பார்ட்டி.. ) யோவ்.. ஏய்யா கூலிங்க் க்ளாஸ்ல வர்லை?  என கேட்டு கலாய்த்தோம்..  இவரு சரியா பேசலை.. கேட்டதுக்கு சாரி.. என் லவ்வர் கூடவே சரியா பேசமாட்டேன்னாரு.. (கூச்ச சுபாவமாம்)




8. வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது.இங்கே கலந்துக்கிட்ட பதிவர்களிலேயே  சீனியர் பதிவர்  இவர் தான்.. ( அப்போ ஜூனியர் பதிவர் ? வேற யாரு நான் தான் ஹி ஹி ) ராமலட்சுமி மேடம் யார்னா பஸ்ல இப்போ சமீப காலமா கலக்கறவங்க.. ஃபோட்டோ போட்டி நடத்தும் ஒரே பதிவர்.. செம கலக்கல் ஃபோட்டோஸ் இவர் தளத்துல இருக்கும்.. சுடறவங்க போய் சுட்டுக்குங்க.. ஹி ஹி .. 



9. ரசிகன் ஷர்புதின்.. _ இவர் சரியான லொள்ளூ பார்ட்டி.. எல்லார் தளத்துக்கும் போய் அவங்க பிளாக்கிற்கு மார்க் போடுவார்.. ஆனானப்பட்ட கேபிள் சங்கர்க்கே 50 மார்க் தானாம்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த பழக்கம் அவருக்கு எப்படி வந்ததுன்னா.. 

இவருக்கு 19 வயசு இருக்கும்போது காலேஜ் வாசல்ல, ஸ்கூல் கேட் கிட்டே நின்னு போற ,வர்ற ஃபிகர்ங்களுக்கு மார்க் போட்டுட்டு வருவாராம்.. இதுக்கு மார்க்கோ ஃபோபியா சைட்டோ கார்க்னு வியாதி பேரு... அதை குணப்படுத்திட்டாங்க.. ஆனா.. இதை.. ??? முடியல ஹா ஹா 






10. ஸ்ரீவில்லிப்புத்தூர் ரத்னவேல் - இவர் சம்சாரத்தோட வந்திருந்தார்

( அவரோட சம்சாரம் தான் ) ஆன்மீகப்பதிவர்... ரொம்ப அமைதியா இருந்தாரு.. அவர் மிசஸ் அவரை விட அமைதி.. ரொம்ப குடுத்து வெச்சவர் சார் நீங்கன்னேன்.. நைஸா , “தம்பி.. அண்ணி வீட்ல புலி வெளில எலி “ன்னார்.. சேம் பிளட் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. 




11. லேப்டாப் மனோ..  - இவரை தெரியதவங்க யார் இருக்க முடியும்?லேட்டா தான் வந்தார்.. கூடவே ஒரு பாடிகார்டை கூட்டிட்டு வந்தார்.. பி ஏ அப்டின்னு பில்டப் குடுத்தார்.. விசாரிச்சா.. அவரோட மச்சினராம்... மச்சினியோட சுத்தற ஆள் எதுக்கு மச்சினரோட சுத்தனும்னு பார்த்தா மனோவோட சம்சாரம் சந்தேகப்பேர்வழியாம் (அவருமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) மனோ என்ன பண்றார்னு கண்காணிக்க அனுப்பி இருக்காங்க.. ( என்ன பண்ணுவாரு.. தில்லு முல்லு தான் ) டேய்.. தம்பி லேப் டாப் எங்கேன்னு கேட்டா  அத்தை பொண்ணு கிட்டே குடுத்துட்டு வந்துட்டேன்னு கதை விட்டார்....ஆனா லோகோல பார்த்ததை விட ஆள் ஸ்மார்ட்.. லோகோல கேப்டன் மாதிரி இருந்தாரு.. 




12. வெறும்பய ஜெயந்த் -   சிங்கப்பூர் பதிவர்,ஆள் தளபதி தினேஷ் மாதிரி இருந்தாரு..இவருக்கு கை குடுத்து என் கையே போச்சு.. முறம் மாதிரி முரட்டு கை,.. ஆள் செம ஜாலி டைப்.. ஜோதி மேட்டர் என்னய்யா ஆச்சுன்னு கேட்டா யோவ்,, அவ என் காதலி,, மேட்டர்னா பல்லை தட்டிடுவேன்னு மிரட்னார்

13.மணிஜி , சென்னை - இவர் எனக்கு ஏற்கனவே அறிமுகம்,நேரில் இப்போதுதான் பார்க்கிறேன். தண்டோரா எனும் பிளாக்கின் ஓனர். ஜாக்கிசேகரின் நெருங்கிய நண்பர்..இவர் சங்கருடன் வந்தார்.. விழாவுக்கு தாமதமாக வந்தததால் இவர் அதிகமாக  எதுவும் பேசவில்லை என நினைக்கிறேன்...ஆனால் அனைவரின் பேச்சையும் உற்று கவனித்தார்..  விழா முடிந்ததும் சங்கர் சாருடன் குற்றாலம் கிளம்பி விட்டார்.


14. ஜாக்கி சேகர் அவர்கள் வருவதாக இருந்தது,கடைசி நிமிடஅவசரப் பணியின் காரணமாக வர முடியாமல் போய் விட்டது

மீதி புது பதிவர்கள்  எனக்கு சரியா அடையாளம் தெரில,. மன்னிக்கவும்.. அடுத்து ஓ சி சாப்பாடு போஸ்ட்.. கடைசி பகுதி......நிறைவுப்பகுதி.. ( 2ம் ஒண்ணு தானே?)

தொடரும்..

70 comments:

கூடல் பாலா said...

வடைங்கோ .....

குரங்குபெடல் said...

"என்னால சுதந்திரமா செயல்பட முடியாது.. ( அதுக்கு நீங்க உங்க சம்சாரத்தை 30 வருஷங்கள் முன்னாடியே டைவர்ஸ் பண்ணி இருக்கானும்.. டூ லேட்.. )"

Sorry Konjam Over

குரங்குபெடல் said...

"என்னால சுதந்திரமா செயல்பட முடியாது.. ( அதுக்கு நீங்க உங்க சம்சாரத்தை 30 வருஷங்கள் முன்னாடியே டைவர்ஸ் பண்ணி இருக்கானும்.. டூ லேட்.. )"

Sorry Konjam Over

குரங்குபெடல் said...

"என்னால சுதந்திரமா செயல்பட முடியாது.. ( அதுக்கு நீங்க உங்க சம்சாரத்தை 30 வருஷங்கள் முன்னாடியே டைவர்ஸ் பண்ணி இருக்கானும்.. டூ லேட்.. )"

Sorry Konjam Over

குரங்குபெடல் said...

"என்னால சுதந்திரமா செயல்பட முடியாது.. ( அதுக்கு நீங்க உங்க சம்சாரத்தை 30 வருஷங்கள் முன்னாடியே டைவர்ஸ் பண்ணி இருக்கானும்.. டூ லேட்.. )"

Sorry Konjam Over

குரங்குபெடல் said...

"என்னால சுதந்திரமா செயல்பட முடியாது.. ( அதுக்கு நீங்க உங்க சம்சாரத்தை 30 வருஷங்கள் முன்னாடியே டைவர்ஸ் பண்ணி இருக்கானும்.. டூ லேட்.. )"

Sorry Konjam Over

குரங்குபெடல் said...

"என்னால சுதந்திரமா செயல்பட முடியாது.. ( அதுக்கு நீங்க உங்க சம்சாரத்தை 30 வருஷங்கள் முன்னாடியே டைவர்ஸ் பண்ணி இருக்கானும்.. டூ லேட்.. )"

Sorry Konjam Over

கூடல் பாலா said...

lunch break

Unknown said...

பதிவர் சந்திப்பா இல்ல பாதிக்கப்பட்டோர் சந்திப்பா அண்ணே!

செல்வா said...

அந்த கடைசில 13 னு போட்டு என்னமோ போட்டிருக்கீங்களே அது என்ன னா ?

செல்வா said...

ரசிகன் சார் மார்க் போடுற பழக்கம் இப்படித்தான் வந்துச்சா ?

செங்கோவி said...

தமிழ்வாசிக்கு பிரபு அண்ணன் முறையா..அப்போ சுந்தர்.சி அண்ணன், கார்த்திக் என்ன முறை?

உலக சினிமா ரசிகன் said...

திருநெல்வேலி பதிவர் கூட்டத்துக்கு போக முடியலியே என்ற ஏக்கம் உங்கப்பதிவை படிக்க படிக்க கொலை வெறியா மாறிக்கிட்டு வருது.
ரமணா ஸ்டைல்ல எல்லோரையும் தூக்கிரட்டா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஹா ஹா ஹா செம ஜாலியா இருந்துச்சு படிக்கும் போது! ஒவ்வொருவருக்கும் கடி..... முடியல சி பி !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரைட்டு. அப்புறம்?

Unknown said...

அவங்க பேசினதை விட, நீங்க போட்டு இருக்க கமெண்ட் சூப்பர்

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நாதாரி என் பெயர் நாஞ்சில் மனோ'டா பரதேசி......

சக்தி கல்வி மையம் said...

oh, இன்னைக்கு வெள்ளிக்கிழமையா?

MANO நாஞ்சில் மனோ said...

என்ன மச்சினியை கூட்டிட்டு சுத்துறதா...??? என்னடா சொல்றே...?? எல்லாரையும் உன்னை மாதிரி'ன்னு நினைச்சியா ராஸ்கல்.....

MANO நாஞ்சில் மனோ said...

அப்பாடா நான் சுமார்ட்'டா இருக்கேன்னு இந்த வருங்கால இயக்குனரே சொல்லிட்டான், இனி காக்கா பிடிச்சு வச்சிக்க வேண்டியதுதான் திட்ட புடாது ஏன்னா என்னை ஹீரோ'வா போட்டு சினிமா எடுத்தாலும் எடுப்பானில்லையா....
அண்ணே டேய் சிபி அண்ணே....

MANO நாஞ்சில் மனோ said...

டேய் நாயே பத்து பிளேட் சாப்பாடு தின்னியே அதை ஏண்டா சொல்லலை...?

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டும் போட்டாச்சி எப்பிடியோ நாசமா போ மூதேவி....

Unknown said...

இங்க பாருங்கப்பா அண்ணே மனோ ரொம்ப நல்லவரு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

படிக்க சுவாரஸ்யமா இருந்துச்சு.

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
டேய் நாயே பத்து பிளேட் சாப்பாடு தின்னியே அதை ஏண்டா சொல்லலை...?"

>>>>>>>>>

ஒரு சிந்தனை சிற்பி பேசும் டயலாக்கா இது ஹிஹி!

கூடல் பாலா said...

பதிவர் சந்திப்பில் கலந்துகொள்வதை விட தங்கள் பகிர்வை வாசிப்பது சுவையாக உள்ளது .....சிபி இதுல தனி ரகம்தான் ....Great!!!

கவி அழகன் said...

நல்ல சுவாரசியமான பதிவு

ganesh said...

Hi, Nice Posts...
what is blog name of Ramalakshmi Madam

உணவு உலகம் said...

பதிவர் சந்திப்பை வைத்தே, பத்து பதிவுகளை வெளியிட்ட சிபிக்கு ஸ்பெசல் கங்கிராட்ஸ்.

Shiva sky said...

ஹ ஹா..கொஞ்சம் காமெடி....பட் ஒவ்வொரு பதிவரை பற்றி தெரிஞ்சுக்க முடிஞ்சது...

R.Puratchimani said...

நல்ல பதிவு
சிபி மொத்தம் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் ?
முடிந்தால் அடுத்த வருடம் தமிழ் பதிவர்கள் மாநாடுன்னு ஒன்னு போடுங்களேன்....யாராவது முயற்சி செய்யுங்கப்பா

ராஜி said...

நெல்லை பதிவர் சந்திப்புக்கு வந்த பதிவர்களை தங்கள் பாணியில் அறிமுகப்படுத்தியது கலக்கலா இருந்துச்சு.

ராஜி said...

எல்லாம் சரி மொக்கைப்பட வசனமெல்லாம் ஒண்ணுவிடாமல், நினைவு வச்சுக்கிட்டு, ஒன்றரை பக்கத்துக்கு பதிவு போடும் சிபிசாராலயா புதிய பதிவர்களின் பெயர்கள் நினைவில் இல்லை. நம்பும்படியா இல்லியே?! ஷ்ஷ்ஷ் அப்ப்ப்பாடா எதோ நம்மால முடிஞ்சது,

Shiva sky said...

அண்ணே ...எல்லாரையும் கலாய்க்கிறிங்க...பாத்து...உங்களை கலாய்க போறங்க.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நேரில் கண்டுரசித்த உணர்வு வருகிறது..
புகைப்படங்கள் அருமை...

மாதேவி said...

பதிவர்கள் சந்திப்பு நன்றாய் களை கட்டிஇருக்கிறது.

சசிகுமார் said...

இன்னும் ஒரு பதிவு பாக்கி இருக்கா!!!!! இப்ப தான்யா தெரியுது நீ ஏன் பதிவர் சந்திப்புக்கு போனேன்னு பயப்படாத வெளியே சொல்ல மாட்டேன் ஹி ஹி

சசிகுமார் said...

பதிவர் சந்திப்புக்கு வர முடியல என்றாலும் அங்கு நடந்த அனைத்து சுவாரஸ்யங்களும் உன்னால் அறிந்தேன் நண்பா நன்றி....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிபி எப்போவும் கையில தயாரா 60 பதிவு வச்சிருப்பேன்னு சொன்னப்போ ஆச்சரியமா இருந்தது.எனக்கு வாரத்துக்கு ஒண்ணு தேத்திறதே ததிங்கனத்தோம்.இப்போல்லா புரியுது ஒரு பதிவர் மீட்டிங் வந்ததுக்கே பத்து போஸ்ட். u r simply great .

ம.தி.சுதா said...

சீபி மன்னிச்சுடுப்பா மன்னர் போல அடிக்கடி உங்க புளொக் ஓடியர முடியல... என் நிலமை அப்படி..

கடம்பவன குயில் said...

பதிவர் சந்திப்பு தொடர் அனைத்தும் நேரடி ஒளிபரப்புபோல் அருமையாக இருந்தது.

கடம்பவன குயில் said...

பதிவர் சந்திப்பு தொடர் அனைத்தும் நேரடி ஒளிபரப்புபோல் அருமையாக இருந்தது.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்ஃஃஃஃஃ

இந்த இடம் ரொம்பப் பிடிச்சிருக்கு...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

cheena (சீனா) said...

ஆமா சிபி - மெயிண்டெயின் பண்ரது சிரமம் - ஆத்ம திருப்தி - இதெல்லாம் நான் பேசும் போது சொன்னேனா ? எனக்கே நினைவில்ல - சிபியோட கைங்கர்யமா ? ம்ம்ம்ம் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

ம.தி.சுதா said...

அத்தனையும் ஆறுதலாக வாசிக்கிறேன்..

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

சில இடங்களில் சில பதிவர்களை ஓவராக நையாண்டி செய்திருப்பது போல் இருக்கிறது திருத்தி விடவும்

Rathnavel Natarajan said...

நன்றி சிபி.நான் ஆன்மிகம் மட்டும் எழுதுவதில்லை. திருமுக்குளம் பதிவில் எங்கள் ஊர் சி.எம்.எஸ். பள்ளி 1856 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதையும், அது ஒரு அருமையான கிறிஸ்தவ பள்ளி என்றும், மற்றும் பால்கோவ பற்றியும் எழுதியிருந்தேன். புத்தகங்கள் பற்றி இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறேன். பிராவிடன்ட் பண்ட் பற்றி மூன்று பதிவுகள் எழுதியிருக்கிறேன். நன்கு படித்து பாருங்கள்.
உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
வாழ்த்துங்கள்.

curesure Mohamad said...

நண்பர்களே ..சற்று பொறாமையாக இருக்கிறது உங்கள் நட்புலகம் ..
நானும் கிணற்று தவளையை எழுதிக்கொண்டே இருக்கிறேன் (மக்களின் ரசனை தெரியாமல் )

திருநெல்வேலியில் (நான் வசிக்கும் ஊரில் இருந்து சரியாக ஒரு மணி நேரம் ,ஒரே மாவட்டம் )இருந்து கொண்டே நான் வராமல் போய் விட்டேனே !!!

அடுத்த தடவை யாவது என்னையும் உங்கள் ஆட்டத்தில் சேருங்கள் பாஸ்

நிரூபன் said...

சென்னை,கோவை ,வெளியூர் பதிவர்கள் பேச்சு ( நெல்லை பதிவர் சந்திப்பு பாகம் 5)//

இது அடுத்த அல்வாவா...
இருங்க படிச்சிட்டு வாறேன்

நிரூபன் said...

1.டாக்டர் கந்தசாமி, கோவை - நான் என் பிளாக்லயே யார் வேண்டுமானாலும் என் பதிவை காபி பேஸ்ட் செய்து கொள்ளலாம் என எழுதி வெச்சிருக்கேன்..//

ஆகா.. ஐயா சைட் கப்பில சிபியை வேணும்னே சீண்டுற மாதிரி இருக்கு...
ஹி...ஹி...

நிரூபன் said...

அவங்க கமெண்ட் போட நான் அதுக்கு நன்றி கமெண்ட் போடனும்,அப்புறம் அவங்க பிளாக் போகனும்.. என்னால சுதந்திரமா செயல்பட முடியாது..//

அப்போ, யார் படிக்கிறாங்க என்பது பற்றியெல்லாம் ஐயாவிற்கு கவலை இல்லையா...
ஹி...ஹி..

நிரூபன் said...

அண்ணன் நைஸா பத்தோட பதினொண்ணா எங்களோட உட்காரப்பார்த்தார்.. நாங்க விடுவோமா? //

ஐயாவுக்கும் தன்னோடை வயசிற்கு சமமாக இருக்கிற சிபி மாதிரி முதியவர்கள் கூட உட்கார ஆசை இருக்காதா என்ன?

நிரூபன் said...

அதே சமயம் தமிழ்மணம்ல நெம்பர் ஒன் வர்றதால யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.. ( அண்ணன் நம்மளைத்தான் மறைமுகமா தாக்கறார் ஹி ஹி ) சிங்கிள் டீக்கு கூட உதவாது..//

மவனே சிபி, இப்ப புரிஞ்சிடிச்சு..

போன பதிவுக்கு ஏன் நீங்க இவர் பெரிய டீ மாஸ்டராக்கும் என்று தலைப்பு வைச்சீங்க என்று..
ஹி....ஹி..

நிரூபன் said...

அது உங்க தப்பு.. கணக்கு பண்ணுவது எப்படி?ன்னு டைட்டில் குடுத்திருக்கனும் .செம ஹிட் ஆகி இருக்கும்..//

அட்ரா...அட்ரா...அட்ரா...இது தான் அட்ராசக்க ஐடியா.

நிரூபன் said...

பாபு அண்ணே . உங்களுக்கும் எனக்கும் ஒரே வித்தியாசம் தான் .. நீங்க பெத்த பொண்ணை வெச்சு பதிவு போடறீங்க.. நான் ஊர்ல இருக்கற மத்த பொண்ணுங்களை வெச்சு பதிவு தேத்தறேன்.. ஏன் என்னை மட்டும் எல்லாரும் வையறாங்க? அவ்வ்வ்வ்வ்வ்......//

ஹா,,,,ஹா,,,,ஹா...,

சிபி டைம்மிங் காமெடி சூப்பரோ சூப்பர் ஐயா.

நிரூபன் said...

மிழ்வாசி பிரகாஷ்.. இவர் பேரையும், லோகோவையும் பார்த்துட்டு சின்னப்பையன்னு நினைச்சுட்டுப்பார்த்தா ஆள் பிரபுவுக்கு தம்பி மாதிரி இருக்கார்....//

ஆமா பாஸ், நான் கூட அவர்கிட்ட கேட்டிருக்கேன், பதிவர் சந்திப்பு போட்டோ பார்த்தாப் பிறகு...

நிரூபன் said...

இவருக்கு 19 வயசு இருக்கும்போது காலேஜ் வாசல்ல, ஸ்கூல் கேட் கிட்டே நின்னு போற ,வர்ற ஃபிகர்ங்களுக்கு மார்க் போட்டுட்டு வருவாராம்.. இதுக்கு மார்க்கோ ஃபோபியா சைட்டோ கார்க்னு வியாதி பேரு... அதை குணப்படுத்திட்டாங்க.. ஆனா.. இதை.. ??? முடியல ஹா ஹா //

செம நக்கல்....

நிரூபன் said...

டேய்.. தம்பி லேப் டாப் எங்கேன்னு கேட்டா அத்தை பொண்ணு கிட்டே குடுத்துட்டு வந்துட்டேன்னு கதை விட்டார்....ஆனா லோகோல பார்த்ததை விட ஆள் ஸ்மார்ட்.. லோகோல கேப்டன் மாதிரி இருந்தாரு.. //

படத்தைப் பார்க்கும் போது, ஆள் நல்லா இளைச்சுப் போயிட்டார் போலத் தோணுது...

நிரூபன் said...

சந்திப்பின் ஒவ்வோர் பாகத்தினையும், வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து, நோட் பண்ணி, அருமையாக எழுதியிருக்கிறீங்க.
கலக்கல் பதிவு சகோ.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா...ஹா...ஹா...ரைட்டு

ப.கந்தசாமி said...

போட்டோவெல்லாம் பெரிசாப் போட்டு அசத்திட்டீங்க.

நான்தான் சீனியர் பதிவர்னு நெனச்சிட்டிருந்தேன். என்னை இளமையாக்கிட்டீங்களே.(பிறந்த தேதி-ஸ்கூல் சர்டிபிகேட் இருக்காக்கும்- 15-6-1934)

இம்சைஅரசன் பாபு.. said...

ஹ ..ஹா ...சி பி மக்கா ..நான் அவ்வளோ சாப்ட் ஆக பேசுரனா ..?

காதர் அலி said...

c .p ..சார் என்னை விட்டுபோட்டிங்கலே பார்த்து செய்யுங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

இந்த நையாண்டிகளை பதிவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதையும் பதிவாகப் போடவும்

Unknown said...

ஓகே ஓகே

Unknown said...

///அவர் லவர் கூடவே பேசமாட்டாராம் ///

அண்ணே எனக்கு லவ்வரே கிடையாது ,நீங்க வேணா ஒன்னு ஏற்ப்பாடு பண்ணி குடுங்க

ஷர்புதீன் said...

@ சிபி மற்றும் கோமாளி செல்வாவுக்கு

வாங்க பாஸ், நானு காலேஜுக்கு போனனாக்கும், ஹய்யோ ஹய்யோ நான் படிச்சது திறந்த வெளி பல்கலை கலகம்ன்னே , ஆனாலும் ஒரு ப்ரோகிராம வச்சு பத்து பதிவா தீர்த்தும் கலையை அடுத்த முறை நேரில் சந்திக்கும் போது தெரிவிக்கவும்

JaY Reborn @ Jaes said...

அடுத்த கூட்டம் எப்போ ????? நாங்களும் வந்து பெர்மான்ஸ் காட்டுவோம்ல !!!!