Thursday, May 19, 2011

சாக்லேட் கேர்ள் யார்? சாக்லேட் பாய் மாதவன் கலகல பேட்டி - காமெடி கும்மி

http://www.pkp.in/images2/Madhavan%20with%20wife%20(1).jpg
மாதவன் என்றால்... என்றென்றும் புன்னகைதான்.

சி. பி -  ஆமா.. படம் ஓடலைன்னாக்கூட... 


இப்போது... இன்னும் பிரகாசமாக! 'த்ரீ இடியட்ஸ்’, 'தனு வெட்ஸ் மனு’ வெற்றிகள் என இந்தியில் ஏறுமுகத்தில் மாதவன் கிராஃப். ஆர்யாவுடன் 'வேட்டை’யாட, பாண்டிச்சேரி வந்திருந்தவருடன் ஒரு மீட்டிங்...  

 சி. பி - பாண்டிச்சேரில  மீட்டிங்கா? ஆஹா விளங்கிடுச்சு.. அப்போ டைட்டில் மீட்டிங்க் வித் கட்டிங்க்னு போடலாமே?


1. '' 'அலைபாயுதே’ சமயப் பரபரப்பு, கிரேஸ் எதுவும் இல்லாம ரொம்பவே நிதானம் ஆகிட்டீங்களே?''

 சி.பி. - ஓப்பனிங்க்ல இருக்கற பரபரப்பு எப்பவும் இருக்குமா?


''மணிரத்னம் சார் அறிமுகம், இளமையா ஒரு பையன், துள்ளலா ஒரு காதல் கதைன்னு அப்போ எழுந்த பரபரப்பு... செம சென்சேஷன். அது ஒரு விசிட்டிங் கார்டு. அப்புறம் திறமை மட்டும்தானே நிக்கும். எப்பவும் நியூஸ்ல இருந்துட்டே இருக்கணும்னு தேவை இல்ல. இன்னும் 20 வருஷங்களுக்குப் பிறகு, 'மாதவன்னா மரியாதையான ஆர்ட்டிஸ்ட்’னு ஒரு பேர் இருந்தாப் போதும். நான் சினிமாவுக்கு வந்து 11 வருஷங்கள் ஆச்சு. முதல் ஏழு வருஷம் தெரிஞ்சவங்க, அறிஞ்சவங் கன்னு இஷ்டத்துக்குப் படம் பண்ணிட்டேன். இப்போ நான் சென்ஸிபிள்!''

சி பி - மார்க்கட் போன ராமராஜன்ல இருந்து மார்க்கட்டு போன சினேகா வரை எல்லாரும் கரெக்டா ஒரே மாதிரி தான் பேசறாங்க.. 



2. ''ஆனா, இப்போ ஹீரோக்கள் பரபரன்னு அவங்க ரெக்கார்டை அவங்களே முறியடிக்க, ஓடிட்டு இருக்காங்க. அந்த ட்ரெண்டை மனசுல ஏத்திக்கவே மாட்டீங்களா?''


''எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கு. 

சி.பி - என்னது? ஸ்பேஸ் இருக்கா?அப்போ அடுத்த படம் ஏலியன்ஸ் சப்ஜெக்ட்டா?

அதுக்குள்தான் நான் இயங்க முடியும். பட்டினி கிடக்கிறவன் மாதிரியோ, படிக்காதவன் மாதிரியோ, விஜய், சூர்யா மாதிரியோ என்னால் நடிக்க முடியாது. எனக்குன்னு ஒரு தனி இடம் தேடிக்கணும். அதான் 'யாவரும் நலம்’ மாதிரி செலெக்ட்டிவ்வா நடிக் கிறேன். எந்த விஷயத்தையும் ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிச்சுப் பண்றேன். கமல் சார் படம்னா மட்டும், உடனே நடிச்சிடுவேன். ரெண்டாவது ஹீரோ, மூணாவது ஹீரோன்னு பேச்சே கிடையாது. என்னைத் தன் தம்பி மாதிரி பார்த்துப்பார்.


சி பி - ஹா ஹா டம்மி ஆக்குனாக்கூட கவலையே படறதில்லை.. நீங்க.. 

த்ரிஷா கூட என்னைக் கேலி பண்ணுவாங்க. ஆனா, கமல் என் குரு. அவரோட பெரிய பக்தன் நான். மக்கள் ரசனைக்கு நம்மை செட் பண்ணிக்கிறதுதான் முக்கியம். இப்ப 'வேட்டை’யில் லிங்குசாமி கமர்ஷியல் பவர்ஃபுல் ஸ்க்ரிப்ட் கொடுத்திருக்கார்

தொழிலுக்குக் கொடுக்கிற மரியாதை அளவுக்கு, எனக்கு பெர்சனல் வாழ்க்கையும் ரொம்ப முக்கியம். நண்பர்களோடு மணிக்கணக்கா அரட்டை அடிக்க,  கோல்ஃப் விளையாட, ஊர் சுத்திப் பார்க்கன்னு எனக்குப் பிடிச்ச விஷயங்களையும் நான் செய்யணும் இல்லையா? சமீபத்தில் அமெரிக்கன் யுனிவர்சிட்டி யில் நான் உரை நிகழ்த்தியபோது, எங்க அம்மா முகத்தின் பூரிப்பு இதுவரை நான் பார்க்காதது. நிறைய நடிகர்கள் தவறவிடுகிற விஷயம் அது. ரொம்ப சிம்பிள் சார்... ஒவ்வொரு நாளையும் உற்சாகமா வாழணும் நான்!''
 http://s.chakpak.com/se_images/137560_-1_564_none/kavya-madhavan.jpg

3. ''கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துக்குப் பிறகும் மனைவியிடம், அதே காதலுடன் இருக்கீங்க. நிறைய மனிதர்கள் தவறுகிற இடம் இது. உங்களுக்கு எப்படிச் சாத்தியம்?''



''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன். 

 சி .பி - எந்த வீட்டுக்கு..?

 
வொய்ஃப் சரிதாகூடத்தான் வெளியே சுத்தப் போவேன். அப்பா, அம்மா முன்னாடியே சரிதாவுக்கு முத்தம் கொடுத்து, 'உன்னைத் திருத்தவே முடியாது’ன்னு திட்டு வாங்கிஇருக்கேன். 

 சி. பி - ஹி ஹி நோ கமெண்ட்ஸ்.. இருந்தாலும் ஒண்ணு சொல்லலாம்.. மாதவன் கிடைக்க மாதவம் செய்தமோன்னு பெற்றோர் நினைப்பாங்களோ?

எனக்கு வேற ஆசைகளே இல்லைன்னு சொல்லிட முடியாது. ஆனால், கொஞ்சம் பயந்த சுபாவம். ராத்திரி படுத்தா, பெருமூச்சு இல்லாம, நிம்மதியாத் தூங்கணும். நாளைக்கு என் பையன் என்னை எந்தக் குறையும் சொல்லி கிண்டல் பண்ணக் கூடாதுன்னு யோசிப்பேன். 'ஐயோ, மாதவனோடு நடிக்கணுமா?’னு எந்த ஹீரோயினும் என்னை நினைச்சுப் பயப்பட மாட்டாங்க. உண்மை சார் இது!''

 சி பி - ஸ்டோரி டிஸ்கஷன் நடக்கறப்பவே கூப்பிட்டு பயத்தை போக்கிடுவீங்களோ?#டவுட்டு
 

4. ''பையன் எப்படி இருக்கார்?''

''வேதாந்த் சண்டைப் படம் பார்க்கிறார். பொம்மைத் துப்பாக்கியால என்னைத் தினம் சுடுறார். செம ஸ்பீடா கம்ப்யூட்டர் வொர்க் பண்றார். இன்னும் கொஞ்ச நாள்ல ஃபேஸ்புக்லயும் வந்துருவார்னு நினைக்கிறேன். ஆனால், நல்ல மனசுக்காரரா இருக்கார். ஏழை ஜனங்களைப் பார்த்தால், எந்த விகல்பமும் இல்லாம தொட்டுத் தொட்டு அன்பா பேசுறார். மனிதாபிமானத்தோடு இருக்கார். அதுதான் சந்தோஷம்!''

சி .பி - பரவால்லை.. அப்பா நடிகைகளை தொட்டு தொட்டு பேசறார்  படத்துல.. பையன் ஏழைகளைத்தானே தொடறார்? தப்பில்லை

டிஸ்கி - காவ்யா மாதவன்க்கும் மேடி மாதவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .நிறைய பேர் அப்படி நினைக்கறாங்க..

34 comments:

Speed Master said...

//சி பி - ஹா ஹா டம்மி ஆக்குனாக்கூட கவலையே படறதில்லை.. நீங்க..


கரக்ட்

Speed Master said...

//சி .பி - எந்த வீட்டுக்கு..?

பிரச்சனைய கிளப்பாம விடமாட்டீங்க

Speed Master said...

//சி .பி - பரவால்லை.. அப்பா நடிகைகளை தொட்டு தொட்டு பேசறார் படத்துல.. பையன் ஏழைகளைத்தானே தொடறார்? தப்பில்லை


ஐ அப்சிரியேஸட் --- ரெண்டையும்

Anonymous said...

///மாதவன் என்றால்... என்றென்றும் புன்னகைதான்.

சி. பி - ஆமா.. படம் ஓடலைன்னாக்கூட... //// ஆரம்பமே கலக்கல்..)

Anonymous said...

////''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன்.

சி .பி - எந்த வீட்டுக்கு..?// எனக்கும் அதே டவுட்டு )

Unknown said...

வணக்கம் தல!

Anonymous said...

///சி .பி - பரவால்லை.. அப்பா நடிகைகளை தொட்டு தொட்டு பேசறார் படத்துல.. பையன் ஏழைகளைத்தானே தொடறார்? தப்பில்லை//// ஹிஹிஹி அது சரி தான் பாஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>Speed Master said...

//சி .பி - பரவால்லை.. அப்பா நடிகைகளை தொட்டு தொட்டு பேசறார் படத்துல.. பையன் ஏழைகளைத்தானே தொடறார்? தப்பில்லை


ஐ அப்சிரியேஸட் --- ரெண்டையும்

idhula எனி டபுள் மீனிங்க்..?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

வணக்கம் தல!

வாப்பா வியட்நாம் காதல் மன்னா..

சி.பி.செந்தில்குமார் said...

>>Speed Master said...

வடை

செம ஸ்பீடு தான்

சி.பி.செந்தில்குமார் said...

>>கந்தசாமி. said...

////''ஷூட்டிங் முடிஞ்சா, நேரா வீட்டுக்குப் போயிடுவேன்.

சி .பி - எந்த வீட்டுக்கு..?// எனக்கும் அதே டவுட்டு )

அப்போ சேம் பிஞ்ச்

Unknown said...

தமிழ்மணத்துல துட்டு கொடுத்துட்டாங்க போல உங்க பதிவுகள இனிமே ஏத்துக்க கூடாதுன்னு!

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

வணக்கம் தல!

வாப்பா வியட்நாம் காதல் மன்னா."

>>>>>>>>>

நான் சந்தோசமா வந்தேன்....நீ என்னை என் இப்படி திட்டுற ஹூம் ஹூம்!

Unknown said...

நாங்களும் வந்துட்டோமுல

சி.பி.செந்தில்குமார் said...

உன் சிறப்பு ஊருக்கு தெரிய வேணாமா? மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்( ஃபிகர்களிடம் இருந்து)

சி.பி.செந்தில்குமார் said...

>>ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நாங்களும் வந்துட்டோமுல

வாங்க .. கும்முங்க...

Unknown said...

எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்................
நாஞ்சில் மனோ எனும் கமண்ட்டு புயல் திடீரென்று கம்ப்யூட்டர் மேல் தவறி விழுந்ததால் கீ போர்டு உடைந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது......!

Unknown said...

அந்த பயலுக்கு கீ போர்டு வாங்கி தர முடியாதுன்னு அவரோட பீசு மன்னிக்கவும் பாஸு சொன்னதாகவும்..........
இனி மக்கள் சந்தசப்படுவார்களே என்று எண்ணி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்கிறார் அவர்!

ராஜி said...

சாக்லேட்டை போலவே இனிக்கிறது சாக்லேட் பேபி மேடியின் பேட்டி. பகிர்ந்தமைக்கு நன்றி

rajamelaiyur said...

Very comedy

MANO நாஞ்சில் மனோ said...

எலேய்........???? முடியலியே.....வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

MANO நாஞ்சில் மனோ said...

விக்கி நீ எறும எறும......

MANO நாஞ்சில் மனோ said...

ஓட்டு போட முடியல்லை.....

MANO நாஞ்சில் மனோ said...

கம்யூட்டர் ஒர்க் இல்லெய்....

உணவு உலகம் said...

//Blogger விக்கி உலகம் said...
எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்................
நாஞ்சில் மனோ எனும் கமண்ட்டு புயல் திடீரென்று கம்ப்யூட்டர் மேல் தவறி விழுந்ததால் கீ போர்டு உடைந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது......!//
’கீதா’ன் பிரச்சனையா, சாரி கீ போர்ட்தான் பிரச்ச்னையா, மனோக்கு?

MANO நாஞ்சில் மனோ said...

offeeserrrrrrrrrrrrrrrrrrrrrrr.....

MANO நாஞ்சில் மனோ said...

//FOOD said...
//Blogger விக்கி உலகம் said...
எல்லோருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்................
நாஞ்சில் மனோ எனும் கமண்ட்டு புயல் திடீரென்று கம்ப்யூட்டர் மேல் தவறி விழுந்ததால் கீ போர்டு உடைந்து விட்டதாக தகவல் வந்திருக்கிறது......!//
’கீதா’ன் பிரச்சனையா, சாரி கீ போர்ட்தான் பிரச்ச்னையா, மனோக்கு?///

oooovvvvvvvvvv........

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said... offeeserrrrrrrrrrrrrrrrrrrrrrr.....//
சும்மா சும்மா. நோ டென்சன் ப்ளீஸ்.

காங்கேயம் P.நந்தகுமார் said...

நம்ம சி.பி. ஒரு ஆளை விட்டுவைக்க மாட்டேங்கிறார். அதுக்கு மாதவனும் பலிகெடா ஆகிவிட்டார்.

கடம்பவன குயில் said...

நடிகரைப்பற்றி பதிவா? சிபி இப்படியெல்லாம் செய்யமாட்டாரே என்று ஒரு கணம் சந்தேகப்பட்டுதான் வந்தேன். கடைசியில் தன்னோட டிரேட் மார்க்கை காட்டிட்டார் (காவ்யா மாதவன் ஸ்டில்). அய்யோ...பாவம் நடிகை மேட்டர் தட்டுப்பாடாயிடுச்சா சிபி சாருக்கு.

Unknown said...

Please Visit this Link..
http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html

செங்கோவி said...

ச்சே..ச்சே..ஆம்பிளைக்குன்னு ஒரு தனிப்பதிவா...

நிரூபன் said...

இன்னைக்கு மாதவன் மாட்டிக்கிட்டாரா...
அவ்.........

ஹேமா said...

சிபி...மாதவனுக்கு இந்தப் பதிவை அனுப்பிவிட்டீங்களா !