Sunday, May 15, 2011

கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxTV5iI1sJEviqpmyA2rkmMM0T2Qv-6THaGqQLLPWQOTo6l4EFGrN8lSz2WEZ62f1D4L1RDOifubY9p_NmKyr4rJ9vB_A9DAB5jZoorKp-fJ66_5WVt38i_cuV2HDXt-a2DUUSDQkjvNQ/s400/MUDAKKATTHAAN
புளிச்சக்கீரை குடலுக்கு வலுவூட்டக்கூடியது. இதில் துவையல் செய்து சாப்பிட்டால், வயிற்றுப் புண், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும்.
கீரைகளில் மசியல், கூட்டு செய்யும்போது பயத்தம்பருப்பை சேர்த்துச் செய்ய வேண்டும். இது சுவையைக் கூட்டுவதோடு... உடலுக்குச் சத்தையும், குளிர்ச்சியையும் தந்து தெம்பும் ஊட்டும்.
பாலக்கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. இந்தக் கீரையில் உப்பு சேர்த்து
லேசாக வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து... கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்கி, உடம்பைப் புத்துணர்ச்சியாக வைக்கும்.
வயிற்றில் இருக்கும் அதிகப்படியான சதையை (தொப்பை) குறைக்கச் செய்யும் குணம் பசலைக்கீரைக்கு உண்டு. லேசாக வேக வைத்து பொரியல் செய்துகூட சாப்பிடலாம்.
மணத்தக்காளிக் காய்களை உப்பு, மோரில் பிசிறி வெயில் காய வைத்து, எண்ணெயில் பொரித்து, சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். வாய்ப் புண், வயிற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
  இரவு வேளையில் கீரை சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள். சரிவர ஜீரணமாகாமல் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதுதான் காரணம்.
சிறுகீரை என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், அது தரும் பலன்கள் பெரிதுதான். மிளகு, சீரகம், சோம்பு, தக்காளி, வெங்காயம் இவற்றோடு சிறுகீரையைச் சேர்த்து வேக வைத்து, சிறிது பருப்பையும் சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்... பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும். சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், இன்சுன் இயல்பாக சுரக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
எந்தக் கீரையானாலும் துவையல் செய்தே சாப்பிடலாம். கீரையை நிறம் மாறாமல் நன்றாக வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், 2 பூண்டு பல், புளி, உப்பு சேர்த்து சிறிது எண்ணெயில் தனியாக வறுக்கவும். பிறகு, வதக்கிய கீரையுடன் சேர்த்து அரைத்தால் துவையல் தயார். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். ருசியாக இருப்பதோடு, சத்துக்களும் அப்படியே உடல் சேரும். 

1. முளைக்கீரை  பருப்பு வடை
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (கழுவி பொடியாக நறுக்கவும்), கடலைப்பருப்பு - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 4, சோம்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், கொத்தமல், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பை ஊற வைத்து வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் சோம்பு, வெங்காயம், முளைக்கீரை, இஞ்சித் துருவல், கொத்தமல், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

2.  உருளை  முருங்கைக்கீரை மசாலா 

தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உதிர்த்து வேக வைக்கவும்), பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டுப் பல் - 3, இஞ்சித் துருவல், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு - 4, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்) மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த கீரையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இஞ்சி - பூண்டுடன், நறுக்கிய பாதி அளவு வெங்காயத்தை சேர்த்து அரைக்கவும். தக்காளி, பச்சை மிளகாயைத் துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சீரகம், மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். வேக வைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி-பூண்டு-வெங்காய விழுது, அரைத்த கீரை விழுதை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

3.மல்ட்டி கீரை சூப் 

தேவையானவை: முளைக்கீரை, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, கொத்தமல், புதினா - தலா ஒரு பிடி, மிளகுத்தூள், சோள மாவு - தலா 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா, கொத்தமல்யுடன் மற்ற கீரைகளையும் நன்றாகக் கழுவி ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்த கீரைகளை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கரைத்து, கீரைக் கலவையில் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

4. பாலக் ரைஸ் 

தேவையானவை: பாஸ்மதி அரிசி - 200 கிராம், பாலக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1, (பொடியாக நறுக்கவும்), பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன், இஞ்சித் துருவல், சோம்பு - கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, கிராம்பு - 2, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, உதிராக வடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து... பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, வடித்த சாதத்துடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

5. வெந்தயக்கீரை கொழுக்கட்டை 

தேவையானவை: வெந்தயக்கீரை - 2 கட்டு, கடலை மாவு, கோதுமை மாவு - தலா 50 கிராம், மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து, நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும். இதனுடன் கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, கலந்து பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

6.  வல்லாரை துவையல் 

தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கட்டு, உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - நெல்க்காய் அளவு, பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வல்லாரைக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது எண்ணெயில் வதக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு... உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, வதக்கிய கீரை சேர்த்து துவையலாக அரைக்கவும்.

7. கீரை வெஜிடபிள் ஆம்லெட்
தேவையானவை: பாலக் கீரை - அரை கட்டு, கடலை மாவு - 50 கிராம், தக்காளி - 3, வெங்காயம் - 1, சீஸ் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன், ஜாதிக்காய்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாலக் கீரை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும். கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். கடலை மாவு, வெங்காயம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், ஜாதிக்காய்தூள், உப்பு, சீஸ் துருவல், கீரை விழுது, தக்காளி சாறு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, கரைத்த மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி, வேக வைத்து எடுக்கவும்
.
8. கீரை  நட்ஸ் சாலட்
தேவையானவை: காய்ந்த திராட்சை - 50 கிராம், வல்லாரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (பொடியாக நறுக்கி வதக்கவும்), மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரி - தலா 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து கலக்கவும்.

9. கிரீன் ஸ்மூத்தி
 
தேவையானவை: பழுத்த வாழைப்பழம் - 2, மணத்தக்காளி கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 50 மில், பச்சை திராட்சை - 50 கிராம்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஐஸ் க்யூப் சேர்த்துப் பருகவும்.

10. முருங்கைக்கீரை  காராமணி பொரியல்
தேவையானவை: முருங்கைக்கீரை - அரை கட்டு (உருவிக் கொள்ளவும்), காராமணி - 50 கிராம் (வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - கால் கப், ஒன்றிரண்டாக பொடித்த தனியா, பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சித் துருவல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பூண்டு, பெருங்காயத்தூள், சீரகம், தனியா சேர்த்து தாளிக்கவும். இஞ்சித் துருவல், முருங்கைக்கீரை சேர்த்து வதக்கி, காராமணி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மேலும் சிறிது வதக்கி இறக்கவும்.

11. ரங்கீலா ரொட்டி 

தேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு (விழுதாக அரைக்கவும்), கேரட், பீட்ரூட் - தலா 1 (வேக வைத்து, தனித்தனியே அரைத்து, தனியாக வைக்கவும்), கோதுமை மாவு - 150 கிராம் (3 பங்காக பிரித்துக் கொள்ளவும்), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 செய்முறை: அரைத்த கீரையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கேரட் விழுதுடன் இரண்டாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசையவும். பீட்ரூட் விழுதுடன் மூன்றாவது பங்கு கோதுமை மாவு, உப்பு சேர்த்துப் பிசைந்து தனியே வைக்கவும். ஒவ்வொரு கலவையிருந்தும் சிறிதளவு எடுத்து, உள்ளங்கையில் வைத்து லேசாக உருட்டிக் கொள்ளவும். இதை சப்பாத்தியாக இட்டு, தோசைக்கல்ல் போட்டு எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

 12.பைங்கன் பாலக்
தேவையானவை: கத்திரிக்காய் - 4, பாலக் கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பூண்டுப் பல் - 2, இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கி... கீறிய பச்சை மிளகாய், கொத்தமல், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயத்தூள், தனியாத்தூள், கீரையை சேர்த்து வதக்கி வேக வைக்கவும். வெந்ததும் மசித்து, கத்திரிக்காய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.

13. மணத்தக்காளிகீரை மிளகூட்டல்
தேவையானவை: மணத்தக்காளிகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), மிளகு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெந்த கீரையில் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.

14.முளைக்கீரை  அவல் சாலட்
தேவையானவை: முளைக்கீரை - அரை கட்டு (வதக்கிக் கொள்ளவும்), வறுத்த அவல் - 100 கிராம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, தோல் உரிக்கவும்) - 1, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பவுல் எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலந்து வைக்கவும்

15.முளைக்கீரை  தக்காளி மசாலா கிரேவி
தேவையானவை: முளைக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 3, வெங்காயம் - 1, மஞ்சள்தூள், சீரகம், கரம் மசாலாத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைவேக்காட்டில் வேக வைத்து, எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். தக்காளியை அரைத்து சாறு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, தக்காளி சாறு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
இறக்குவதற்கு முன்பு பொரித்த உருளைக்கிழங்கு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

 16.மேத்தி காக்ரா
தேவையானவை: கடலை மாவு, மைதா மாவு, கோதுமை மாவு - தலா 100 கிராம், பொடித்த ஓமம் - ஒரு டீஸ்பூன், வெந்தயக் கீரை - 2 கட்டு, மிளகாய்த்தூள் - எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் கடலை மாவு, மைதா மாவு, பொடித்த ஓமம், வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து... சிறிது எண்ணெய் விட்டு பிசைந்து, சப்பாத்தி மாதிரி தேய்த்துக் கொள்ளவும். காயும் தோசைக்கல்ல் ஒவ்வொரு சப்பாத்தியாகப் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக சுட்டெடுக்கவும்.

17. சிறுகீரை கட்லெட்
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 3, பொடித்த வேர்க்கடலை, வறுத்துப் பொடித்த அவல் - தலா 3 டேபிள்ஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய், பிரெட் துண்டுகள் - தலா 3, சோள மாவு - இரண்டு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோள மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். இதில் சிறுகீரையைச் சேர்த்து... பொடித்த வேர்க்கடலை, இஞ்சி - பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும், பிரெட்டை தண்ணீரில் முக்கி உடனே பிழிந்து சேர்க்கவும். எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்து வைத்த கலவையிருந்து சிறிது எடுத்து கட்லெட்டுகளாக தட்டி, சோள மாவு கரைசல் முக்கி எடுத்து, அவல் பொடியில் புரட்டி, தோசைக்கல்ல் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

18. புதினா பக்கோடா
தேவையானவை: புதினா - ஒரு கட்டு, சேமியா - 100 கிராம், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, வெங்காயம் - 2, உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் சேமியாவைப் போட்டு, வெந்ததும் வடித்து எடுத்து, குளிர்ந்த தண்ணீரில் அலசவும். இதனுடன் பொடியாக நறுக்கிய புதினா, வெங்காயம் சேர்த்து வதக்கி, முந்திரி, மிளகாய்த்தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து பிசைந்து, காயும் எண்ணெயில் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்.

19. பாலக் பச்சடி
தேவையானவை: பாலக்கீரை - அரை கட்டு, தயிர் - 100 கிராம், பச்சை மிளகாய் - 1, கடுகு, சீரகம், எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பாலக்கீரையைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். வெறும் கடாயில் சீரகத்தை வறுத்து, அரைத்த கீரையுடன் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, கீரைக் கலவை, உப்பு சேர்த்துக் கிளறி, தயிருடன் கலந்து பரிமாறவும்.

 20.பொன்னங்கண்ணி மோர் கூட்டு
தேவையானவை: பொன்னங்கண்ணிக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம், தேங்காய் துருவல், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கெட்டித் தயிர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரையைப் பொடியாக நறுக்கி வேக வைக்கவும். துவரம்பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், ஊற வைத்த துவரம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் இவை எல்லாவற்றையும் மிக்ஸியில் அரைத்து... வெந்த கீரை, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் கெட்டித் தயிர் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

21. மேத்தி புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 150 கிராம், வெந்தயக்கீரை - 4 கட்டு (பொடியாக நறுக்கவும்), தேங்காய்ப்பால் - 150 மில், ஏலக்காய் - 3 (இடித்துக் கொள்ளவும்), கிராம்பு - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 3, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து... பச்சை மிளகாய், வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். இதில் தேங்காய்ப்பால், ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி, குக்கரில் வேக வைத்து இறக்கவும். ஏதேனும் ஒரு பச்சடியுடன் பரிமாறவும்.

22. அரைக்கீரை பருப்பு மசியல்
தேவையானவை: அரைக்கீரை - ஒரு கட்டு, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 4 (நீளமாக நறுக்கவும்), துவரம்பருப்பு - 50 கிராம். (வேக வைக்கவும்), புளி - நெல்க்காய் அளவு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கீரை, தக்காளியைப் பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து... பச்சை மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும். இதனுடன் வெந்த கீரை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் கொதிக்க விட்டு இறக்கவும்.
இதேபோல் பசலைக்கீரையிலும் செய்யலாம். புளிக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

 23.அகத்திக்கீரை  சுண்டைக்காய் பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை - ஒரு கட்டு, துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், (முக்கால் பதத்தில் வேக வைக்கவும்), காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை மலராக வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... கிள்ளிய காய்ந்த மிளகாய், சுண்டைக்காய் வற்றல்  சேர்த்து வறுக்கவும். இதில் கீரையை நறுக்கி சேர்த்து வதக்கி... வெந்த துவரம்பருப்பு, உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

24. பசலைக்கீரை ஸ்வீட் கார்ன் குருமா
தேவையானவை: பசலைக் கீரை - அரை கட்டு, சீஸ் - 2 க்யூப் (துருவிக் கொள்ளவும்), ஸ்வீட் கார்ன் - 2 (உதிர்த்து வேக வைக்கவும்), டிரை மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கிராம்பு - 1, பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 3 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, வெங்காயம் (சிறியது) - 1, பயத்தம்பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பசலைக் கீரையைப் பொடியாக நறுக்கி... பயத்தம்பருப்பு, வெங்காயம், மஞ்சள்தூள், கிராம்பு, பட்டைத்தூள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து மசிக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சோள முத்துக்கள், மசித்த கீரைக் கலவை, மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, கீழே இறக்கி சீஸ் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

25. புளிச்சகீரை சட்னி
தேவையானவை: புளிச்ச கீரை - ஒரு கட்டு, காய்ந்த மிளகாய் - 8, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்ந்த மிளகாயுடன் புளிச்ச கீரை சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... அரைத்த கீரை விழுது, உப்பு சேர்த்து நன்றாக சுருளக் கிளறி இறக்கவும்.
தயிர் சாதத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

26. வெந்தயக்கீரை மலாய் கட்டா
தேவையானவை: கடலை மாவு - 150 கிராம், ஓமம் - அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை - 2 கட்டு, பச்சை மிளகாய் - 2.கிரேவி செய்ய: வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், தக்காளி - 3, தனியாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பட்டைத்தூள் - கால் டீஸ்பூன், ப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை நறுக்கி சாறு எடுக்கவும். கடலை மாவுடன் வெந்தயக் கீரை, ஓமம், பச்சை மிளகாய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சிறிது மாவை எடுத்து விரல் நீளத்துக்கு உருட்டி கொதிக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேக விட்டு, பிறகு வடித்து தனியே வைக்கவும். கட்டா ரெடி! வடித்த நீரை கொட்ட வேண்டாம்.
மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாறு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி... மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டைத்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வடித்து தனியாக வைத்திருந்த நீரை தேவையான அளவு சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து, கட்டாக்களை போட்டு மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.

27. பனீர் கிரீன் ஸ்டீம்டு கேக்
தேவையானவை: ஏதேனும் ஒரு கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல், வேர்க்கடலை - தலா 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. கேக் தயாரிக்க: கடலை மாவு - 150 கிராம், தயிர் - 100 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேக் செய்ய கொடுத்துள்ளவற்றை ஒன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கலக்கவும். கீரையில் உப்பு சேர்த்து, நெய் (அ) எண்ணெய் விட்டு லேசாக வதக்கவும். சிறு சிறு கிண்ணங்களில் லேசாக எண்ணெய் தடவி, துருவிய பனீர், வேர்க் கடலை சிறிது, அதன் மேல் வதக்கிய கீரை, அதற்கும் மேல் கரைத்து வைத்துள்ள கடலை மாவு கரைசல் என கிண்ணத்தில் பாதி அளவுக்கு ஊற்றவும். கிண்ணங்களில் நிரப்பியதும், அவற்றை குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும், கத்தியால் எடுத்து, ஒரு தட்டின் மேல் பரப்பி, மேலாக சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும். இதேபோல் தயிர், சமையல் சோடா இல்லாமல் தோசை மாவிலும் செய்யலாம்.

28. பருப்புக்கீரை டிக்கா
தேவையானவை: பருப்புக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேக வைக்கவும்) வேக வைத்த பச்சைப் பட்டாணி - 50 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கெட்டித் தயிர் - 50 கிராம், டிரை மாங்காய்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள், மிளகாய்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல் - சிறிதளவு, சோள மாவு - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரையைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய், நீங்கலாக கொடுத்துள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்டை விரலால் அழுத்தி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

29. சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

30. சிறுகீரை  பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

நன்றி - விகடன்

76 comments:

காங்கேயம் P.நந்தகுமார் said...

வடை

காங்கேயம் P.நந்தகுமார் said...

பஜ்ஜி

காங்கேயம் P.நந்தகுமார் said...

போன்டா

செங்கோவி said...

அடடா...கீரை போச்சே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே இந்த வாலிப வயோதிக அன்பர்களுக்கேத்த மாதிரி லேகியம் செய்யறது பத்தி எதுவும் போடலியாண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!//////

இல்ல மாப்பு, அது என்னமோ தாது புஷ்டி லேகியம்னு சொன்னாரே?

Unknown said...

பதிவர் தலைமறைவு நடந்தது என்ன.......!

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////விக்கி உலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!//////

இல்ல மாப்பு, அது என்னமோ தாது புஷ்டி லேகியம்னு சொன்னாரே?"

>>>>>>>>>

அத சாப்ட்டுதான் ரெண்டு நாளு ப்ளாகரு புட்டுக்கிசின்னு சொன்னாங்க!

சி.பி.செந்தில்குமார் said...

>>
இல்ல மாப்பு, அது என்னமோ தாது புஷ்டி லேகியம்னு சொன்னாரே?

நல்ல வேளை.. மாது புஷ்டி லேகியம்னு சொல்லலை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
பதிவர் தலைமறைவு நடந்தது என்ன.......!////

யோவ் தலைய மட்டும் மறைச்சு என்ன பண்றது?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

பதிவர் தலைமறைவு நடந்தது என்ன.......!

May 15, 2011 8:59 AM

தம்பி.. எதுக்கு திரியை கொளுத்தறே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>
இல்ல மாப்பு, அது என்னமோ தாது புஷ்டி லேகியம்னு சொன்னாரே?

நல்ல வேளை.. மாது புஷ்டி லேகியம்னு சொல்லலை///////

ஒஹோ அது வேறயா?

சி.பி.செந்தில்குமார் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
பதிவர் தலைமறைவு நடந்தது என்ன.......!////

யோவ் தலைய மட்டும் மறைச்சு என்ன பண்றது?

ராம்சாமி.. அவன் சரக்கடிச்சுட்டு உளறுவான்.. டோண்ட் டேக் சீரியஸ்

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!

நீ ஆள் தாண்டா பார்க்க டீசண்ட்.. மனசு பூரா கச்சடா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
பதிவர் தலைமறைவு நடந்தது என்ன.......!////

யோவ் தலைய மட்டும் மறைச்சு என்ன பண்றது?

ராம்சாமி.. அவன் சரக்கடிச்சுட்டு உளறுவான்.. டோண்ட் டேக் சீரியஸ்///////

ஹை எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!

நீ ஆள் தாண்டா பார்க்க டீசண்ட்.. மனசு பூரா கச்சடா...//////

அப்போ தக்காளி நம்ம அடுப்புல வெந்த சாமி சே சே.... அர்விந்த் சாமி மாதிரி இருப்பாருங்கறீங்க?

Unknown said...

இங்க பாருய்யா உம்ம மாதிரி சரக்கடிக்கமா உளறணுமா!

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!

நீ ஆள் தாண்டா பார்க்க டீசண்ட்.. மனசு பூரா கச்சடா..."

>>>>>>>>

ஓ அவளா நீ சுத்தினியே சரி விடு பப்ளிக்ல உன் மானம் போக வேண்டாம்!

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ அவளா நீ சுத்தினியே சரி விடு பப்ளிக்ல உன் மானம் போக வேண்டாம்!

அப்போ மானம் இருக்குங்கரே?

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

இங்க பாருய்யா உம்ம மாதிரி சரக்கடிக்கமா உளறணுமா!

உன் ஆஃபீஸ் கதைகளை இங்கே கிளறனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!

நீ ஆள் தாண்டா பார்க்க டீசண்ட்.. மனசு பூரா கச்சடா..."

>>>>>>>>

ஓ அவளா நீ சுத்தினியே சரி விடு பப்ளிக்ல உன் மானம் போக வேண்டாம்!//////

யோவ் தக்காளி சொல்ல வந்தத புல்லா சொல்லுய்யா... அவருக்கு இனி போறதுக்கு மானம் மருவாதி ஏதாவது மிச்சம் இருந்தா அப்புறம் பாத்துக்கலாம்...!

Unknown said...

இது என்னா கதையே இல்லாத வானம்னு நெனச்சியா.........

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////விக்கி உலகம் said...
"சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
அட்லீஸ்ட் நீங்க சாப்புடுற அந்த புஸ்டி லேகியத்த பத்தி மட்டுமாவது போட்டிருக்கலாம்....!"

>>>>>>>>>>

எது அந்த பீம புசுத்தி லேகியமா மாப்ள!

நீ ஆள் தாண்டா பார்க்க டீசண்ட்.. மனசு பூரா கச்சடா..."

>>>>>>>>

ஓ அவளா நீ சுத்தினியே சரி விடு பப்ளிக்ல உன் மானம் போக வேண்டாம்!//////

யோவ் தக்காளி சொல்ல வந்தத புல்லா சொல்லுய்யா... அவருக்கு இனி போறதுக்கு மானம் மருவாதி ஏதாவது மிச்சம் இருந்தா அப்புறம் பாத்துக்கலாம்...!

>>>>>>>>

அப்போ எதுவுமே இல்லங்கர ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் எதுவுமே இல்லாமேயா இத்தினி பிகரு...?

பொன் மாலை பொழுது said...

நமது சமையல் அரசிகளை கிண்டல் பண்ணுவது போல இறுக்கு. என்னைய்யா ஏதாவது கீரை சமையல் புத்தகம் வாங்கி வந்தீரா? இல்ல....... மம்மி வந்த சந்தோஷத்தில் லட்டு ரொம்ப தின்னுட்டு இப்ப இந்த அவஸ்தையா?

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

இங்க பாருய்யா உம்ம மாதிரி சரக்கடிக்கமா உளறணுமா!

உன் ஆஃபீஸ் கதைகளை இங்கே கிளறனுமா?"

>>>>>>>>>

வீட்ல காலையில கீரைய கடைய வச்சாங்களே இன்னுமா நீ திருந்தல!

Unknown said...

" பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் எதுவுமே இல்லாமேயா இத்தினி பிகரு...?

>>>>>>>>>>

பிகரா எங்க எங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
>>விக்கி உலகம் said...

இங்க பாருய்யா உம்ம மாதிரி சரக்கடிக்கமா உளறணுமா!

உன் ஆஃபீஸ் கதைகளை இங்கே கிளறனுமா?"

>>>>>>>>>

வீட்ல காலையில கீரைய கடைய வச்சாங்களே இன்னுமா நீ திருந்தல!//////

அண்ணன் காலைல இருந்து கீரைய கிளீன் பண்ணிட்டு இருக்காராம், இன்னும் ரெண்டு மூட்டை வந்துக்கிட்டு இருக்காம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
" பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் எதுவுமே இல்லாமேயா இத்தினி பிகரு...?

>>>>>>>>>>

பிகரா எங்க எங்க.....////

அத அவருகிட்டதான் கேக்கனும்.....

சி.பி.செந்தில்குமார் said...

>>
வீட்ல காலையில கீரைய கடைய வச்சாங்களே இன்னுமா நீ திருந்தல!

என் வீட்டு வேலையை செய்ய நான் என்றும் வருந்தல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அண்ணன் முருங்கைக்காய் மட்டும்தான் சாப்புடுவாருன்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

சி.பி.செந்தில்குமார் said...

>>கக்கு - மாணிக்கம் said...

நமது சமையல் அரசிகளை கிண்டல் பண்ணுவது போல இறுக்கு.

எல்லாரும் நம்மை வம்புல மாட்டி விடறாங்கன்னா அண்ணே நீங்களுமா? (நீங்க நல்லவர்னு நினைச்சேன் அவ்வ்வ்வ்வ்)

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அண்ணன் முருங்கைக்காய் மட்டும்தான் சாப்புடுவாருன்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

வேதாளம் மறுபடி முருங்கை மரத்துல ஏறிடுச்சுடோய்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அண்ணன் முருங்கைக்காய் மட்டும்தான் சாப்புடுவாருன்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

வேதாளம் மறுபடி முருங்கை மரத்துல ஏறிடுச்சுடோய்//////

அண்ணன் உண்மைய ஒத்துக்கிட்டாருடோய், எனக்கு எல்லாம் வெளங்கிருச்சுடோய்....

ராஜி said...

"ஆரோக்கியமான" பதிவுக்கு நன்றி சிபி சார்

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அண்ணன் முருங்கைக்காய் மட்டும்தான் சாப்புடுவாருன்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

வேதாளம் மறுபடி முருங்கை மரத்துல ஏறிடுச்சுடோய்//////

அண்ணன் உண்மைய ஒத்துக்கிட்டாருடோய், எனக்கு எல்லாம் வெளங்கிருச்சுடோய்....

raamsaami.. தமிழ்நாட்ல தானே இருக்கீங்க? எனி குட் ந்யூஸ்?சிக்குச்சா?

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>>
வீட்ல காலையில கீரைய கடைய வச்சாங்களே இன்னுமா நீ திருந்தல!

என் வீட்டு வேலையை செய்ய நான் என்றும் வருந்தல

>>>>>>>>>>>>

பய புள்ள தமிழ்மணம் ஏத்துக்காதுங்கறதால கொஞ்ச நாளைக்கி இப்படித்தான் பம்முவாப்ள யாரும் நம்பிடாதீங்க ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா அண்ணன் முருங்கைக்காய் மட்டும்தான் சாப்புடுவாருன்னு பேசிக்கிறாய்ங்களே உண்மையா?

வேதாளம் மறுபடி முருங்கை மரத்துல ஏறிடுச்சுடோய்//////

அண்ணன் உண்மைய ஒத்துக்கிட்டாருடோய், எனக்கு எல்லாம் வெளங்கிருச்சுடோய்....

raamsaami.. தமிழ்நாட்ல தானே இருக்கீங்க? எனி குட் ந்யூஸ்?சிக்குச்சா?//////

சிக்குனா சிக்கிடுவேன்.... ஹி..ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
>>
வீட்ல காலையில கீரைய கடைய வச்சாங்களே இன்னுமா நீ திருந்தல!

என் வீட்டு வேலையை செய்ய நான் என்றும் வருந்தல

>>>>>>>>>>>>

பய புள்ள தமிழ்மணம் ஏத்துக்காதுங்கறதால கொஞ்ச நாளைக்கி இப்படித்தான் பம்முவாப்ள யாரும் நம்பிடாதீங்க ஹிஹி!//////

ஓ மேட்டர் அப்படியா.... ம்ம் பார்ப்போம்...!

சி.பி.செந்தில்குமார் said...

>>
பய புள்ள தமிழ்மணம் ஏத்துக்காதுங்கறதால கொஞ்ச நாளைக்கி இப்படித்தான் பம்முவாப்ள யாரும் நம்பிடாதீங்க ஹிஹி!

kaNNaa.. கண்ணா.. நாளை காலை பாரு கண்ணா 8 மணீக்கு

சி.பி.செந்தில்குமார் said...

>>ஓ மேட்டர் அப்படியா.... ம்ம் பார்ப்போம்...!

ராம் சாமி மேட்டர் மேட்டர்ங்கறாரு.. ஆனா நம்ம கண்ணூல காட்ட மாட்டேங்கறாரு.. என்ன தான் ராம்சாமி நல்லவரா இருந்தாலும் சுயநலக்காரர் தான் இந்த விஷயத்துல.. ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சி.பி.செந்தில்குமார் said...
>>
பய புள்ள தமிழ்மணம் ஏத்துக்காதுங்கறதால கொஞ்ச நாளைக்கி இப்படித்தான் பம்முவாப்ள யாரும் நம்பிடாதீங்க ஹிஹி!

kaNNaa.. கண்ணா.. நாளை காலை பாரு கண்ணா 8 மணீக்கு/////

8 மணிக்கு என்ன? கடிகாரத்துல பெரிய முள்ளு எங்க இருக்கும்னு சொல்ல போறீங்களா?

சி.பி.செந்தில்குமார் said...

>>
சிக்குனா சிக்கிடுவேன்.... ஹி..ஹி....!

ராம்சாமி.. நீங்க தான் கழுவற மீன்ல நழுவற மீன் ஆச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>
சிக்குனா சிக்கிடுவேன்.... ஹி..ஹி....!

ராம்சாமி.. நீங்க தான் கழுவற மீன்ல நழுவற மீன் ஆச்சே?//////

அது அப்போ, நான் சொன்னது இப்போ...!

ILA (a) இளா said...

அவள் விகடனையும் விட்டு வெக்கலையா>?

சி.பி.செந்தில்குமார் said...

>>
8 மணிக்கு என்ன? கடிகாரத்துல பெரிய முள்ளு எங்க இருக்கும்னு சொல்ல போறீங்களா?

haa haa ஹா ஹா ஒரு கில்மா பட விமர்சனம்

சி.பி.செந்தில்குமார் said...

>>ILA(@)இளா said...

அவள் விகடனையும் விட்டு வெக்கலையா>?

ஹி ஹி ஹி நல்ல விஷயங்கள் எங்கே இருந்தாலும்....

சி.பி.செந்தில்குமார் said...

>>அது அப்போ, நான் சொன்னது இப்போ...!

நீங்க என்ன டாக்டர் ராம்தாசா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
>>
8 மணிக்கு என்ன? கடிகாரத்துல பெரிய முள்ளு எங்க இருக்கும்னு சொல்ல போறீங்களா?

haa haa ஹா ஹா ஒரு கில்மா பட விமர்சனம்//////

நானும் அதைத்தான் அப்படி கேட்டிருக்கேன்.... எப்பூடி? (ஒரிஜினல் கில்மாவுக்கு 18+ போடலாம்னுதானே சொல்றாங்க? டுபாக்கூர் 18+க்குத்தான் ஆப்பு அதுனால நச்சுன்னு நாலு படத்த போட்டுட்டீங்கன்னா சோலி முடிஞ்சது)

எல் கே said...

சித்தப்பு உண்மைய சொல்லு யார்கிட இருந்து எழுதி வாங்கின

சி.பி.செந்தில்குமார் said...

எல் கே said...

சித்தப்பு உண்மைய சொல்லு யார்கிட இருந்து எழுதி வாங்கின

periyappaa பெரியப்பா.. இது விகடன் காப்பி பேஸ்ட் போஸ்ட்.. நன்றி விகடன் பார்க்கல?

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி said...


நானும் அதைத்தான் அப்படி கேட்டிருக்கேன்.... எப்பூடி? (ஒரிஜினல் கில்மாவுக்கு 18+ போடலாம்னுதானே சொல்றாங்க? டுபாக்கூர் 18+க்குத்தான் ஆப்பு அதுனால நச்சுன்னு நாலு படத்த போட்டுட்டீங்கன்னா சோலி முடிஞ்சது)

இல்ல.. அதுக்கு ஒரு ஐடியா இருக்கு.. நாளை பாருங்க வேடிக்கையை..

சென்னை பித்தன் said...

ஒரே பதிவில் 30 குறிப்புகளா?செய்து பார்க்கவே 30 நாள் வேண்டுமே!

Anonymous said...

இனி அண்ணன் அடிச்சி ஆடுவாரு

Anonymous said...

பட்டைய கிளப்புங்க

சக்தி கல்வி மையம் said...

வந்தேன், வாக்களித்தேன், கிளம்புகிறேன்..

Unknown said...

கில்மா கீரை ஏதுன்னு சொல்வீங்கன்னு வந்தேன் ....உங்க நேர்மை ரொம்ப மோசம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே சமையலுக்கு தனியா ஒரு வலைப்பூ தொடங்கலாமே.... எல்லா டிஷ் நச் டிஷ்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணத்தில் ஏழாவது நான்தான்.

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது லேகியமா....???

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாபயலுவலும் கிழவனுக ஆயிட்டானுகளோ...??? ஒரே லேகிய பேச்சாவே இருக்கு...

ஷர்புதீன் said...

அண்ணே அரசியல், சினிமா, சமூகம், சமையல் ssssshhhhhh முடியலண்ணே ., இன்னும் அந்த விலாய்ட்டு துறை பாக்கி இருக்கே ., அதையும் ஒரு வழி பண்ணிடலாமா.,

நீங்க கலகுங்க சித்தப்பு

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

உண்மையிலே மிக பயனுள்ள பதிவு இதுதான்...

Unknown said...

ஆமா ஞாயிற்றுக்கிழமை கீரை தான் ஸ்பெஷலா?

SANKARALINGAM said...

//MANO நாஞ்சில் மனோ said...
எல்லாபயலுவலும் கிழவனுக ஆயிட்டானுகளோ...??? ஒரே லேகிய பேச்சாவே இருக்கு...//
என்ன இருந்தாலும் மனோவ பார்க்கையில சி.பி. வயசானவர்தானே!

உணவு உலகம் said...

//MANO நாஞ்சில் மனோ said...
எல்லாபயலுவலும் கிழவனுக ஆயிட்டானுகளோ...??? ஒரே லேகிய பேச்சாவே இருக்கு...//
என்ன இருந்தாலும் மனோவ பார்க்கையில சி.பி. வயசானவர்தானே!

NKS.ஹாஜா மைதீன் said...

இன்னைக்கு என்ன கீரைகள் தினமா? அருமை....

ராஜ நடராஜன் said...

கடை மாறி வந்துட்டேனா:)

தனித் தனியா போட்டிருந்தா சமையல் வகையில ஒரு வாரம் ஓட்டியிருந்திருக்கலாம்.

20ம் தேதி வரை சூடான செய்திகள் வேற குறைவு:)

ராஜ நடராஜன் said...

பாலக் ரைஸ் செஞ்சு பார்க்கலாம் போல தோணுதே!

படங்கள் எல்லாம் சுட்டதா?செஞ்சதா?
Professional cooking display.

குணசேகரன்... said...

எவ்ளோ பெரிய பதிவு...உங்கள் பதிவு சேவை என்னை ஆச்சிரியபட வைக்கிறது...


http://zenguna.blogspot.com/

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க வாய் ஊருது

ஹேமா said...

கீரையில் இத்தனை விதமான சமையலான்னு அதிசயமா இருக்கு.இதில 2/3 முறைகள்தான் நான் சமைக்கிறேன்.நன்றி சிபி !

Kamala said...

தலைப்பிலுள்ள கீரைப்படம், என் பிளாக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சொல்லி விட்டு எடுத்திருந்தால் நன்றாயிருந்திருக்கும்.