Sunday, May 08, 2011

பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

 http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


 ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

 மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
'2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

 அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

 அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''




சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


 
4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

'' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க.. 

25 comments:

Anna Nagar said...

first

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

vada?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

aahaa.... i missed vada!
thammanna missed karththi

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

'இருவருக்கும் ஒரே அலைவரிசை!''

FM ஆ?

MW ஆ?

SW ஆ?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும்.

this is for you and me!hi.......hi.......!!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும் போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா?

சி பி உங்க கேள்வி ஞாயமானதுதான்! எனக்கே ரொம்ப பீலிங்கா இருக்கே " அவங்களுக்கு " எப்படி இருந்திருக்கும்?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. ///

அப்ட்டீன்னா நம்ம வலையுலகம் பத்தி அவங்களுக்கு ஏதாவது தெரியுமா? நமக்கு கமென்ட் போடுவாங்களா?

ரஹீம் கஸ்ஸாலி said...

ok..ok..kummunga

ம.தி.சுதா said...

என்னப்பா இந்தப் பெரிய இலையில் இருந்து வெட்டுறாங்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

ம.தி.சுதா said...

ஃஃஃ'இருவருக்கும் ஒரே அலைவரிசை!''

FM ஆ?

MW ஆ?

SW ஆஃஃஃஃ

இல்லிங்க... LW ஆ

ஷஹன்ஷா said...

இலையை வடிவா பாருங்கோ... எல்லோருக்கும் முதல்லேயே பொண்ணு சாப்பிட்டு முடிச்சிட்டுது....


அலைவரிசை என்பது அலைந்து வந்த வரிசையோ??

Unknown said...

பாஸு அப்ப தமன்னாவோட வாழ்க்கை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கார்த்தி உங்க ஊர் மாப்பிள்ளையாயிட்டார்...

உங்க ஊர் பொண்ணு அழகா இருக்காங்க பாஸ்..

வாழ்த்துக்கள்..

NKS.ஹாஜா மைதீன் said...

தங்கமயில் தமன்னா ரசிகர் மன்றத்தின் சார்பில் வருத்தம் கலந்த நன்றியினை அண்ணன் சி பி எஸ் க்கு தெரிவித்து கொள்கிறோம்....

a said...

ஒங்க ஊரு பொண்ணுபோல....

MANO நாஞ்சில் மனோ said...

கார்த்தி, உமக்கு மாப்பிளை ஆகிட்டார் வாழ்த்துகள் மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

நீதான் எனக்கு ஓட்டும், கமேண்ட்சும் போடுரதில்லை. ஆனால் நான் உன்னை மாதிரி இல்லை, தமிழ்மணம் ஏழாவது ஓட்டும் கமண்ட்சும் போட்டுருக்கேன், எப்பிடியோ நல்லாயிருடே மக்கா....

Unknown said...

" MANO நாஞ்சில் மனோ said...
நீதான் எனக்கு ஓட்டும், கமேண்ட்சும் போடுரதில்லை. ஆனால் நான் உன்னை மாதிரி இல்லை, தமிழ்மணம் ஏழாவது ஓட்டும் கமண்ட்சும் போட்டுருக்கேன், எப்பிடியோ நல்லாயிருடே மக்கா...."

>>>>>>

அண்ணே மனோ அண்ணே எல்லாம் உங்க மாதிரி பாசக்காரரா இருப்பாங்கன்னு நீங்க எப்படி எதிர் பார்க்கலாம் ஹிஹி!

Unknown said...

படத்துக்கு வர்ற பாமரன் பணம் மட்டும் வேணும் ஆனா படிச்ச பொண்ணு அதும் துட்டோட வேணுமா...ஏன்டா உங்க கிட்ட இருக்க துட்டுக்கு ஒரு ஏழை பொண்ணு பாத்து கட்டறது தானே உங்க சமூகத்துலையே......அத பண்ணி இருந்தா வாழ்த்தலாம்.........!

சி.பி.செந்தில்குமார் said...

இனம் இனத்தோடு.. பணம் பணத்தோடு.. இந்த நிச்சய தார்த்தத்துக்கு ஜோதிகா அழைக்கப்படவில்லை.. நடிகை ஆச்சே.?

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
இனம் இனத்தோடு.. பணம் பணத்தோடு.. இந்த நிச்சய தார்த்தத்துக்கு ஜோதிகா அழைக்கப்படவில்லை.. நடிகை ஆச்சே.?"

>>>>>>>>>>>

நடிகைன்னா அவ்ளோ மட்டமா..!

Unknown said...

விக்கி உலகம் said...
" சி.பி.செந்தில்குமார் said...
இனம் இனத்தோடு.. பணம் பணத்தோடு.. இந்த நிச்சய தார்த்தத்துக்கு ஜோதிகா அழைக்கப்படவில்லை.. நடிகை ஆச்சே.?"

>>>>>>>>>>>

நடிகைன்னா அவ்ளோ மட்டமா..

சிவகுமார் ஜோதிகாவை மனதார மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.ஒரு நடிகராக கண்ணியமாக நடந்த அவரால் நல்ல மனிதராக நடக்க முடியவில்லை

செங்கோவி said...

”பெண் லைன்” - கலக்கிட்டீங்கண்ணே!

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
இனம் இனத்தோடு.. பணம் பணத்தோடு.. இந்த நிச்சய தார்த்தத்துக்கு ஜோதிகா அழைக்கப்படவில்லை.. நடிகை ஆச்சே.?"
>>>>>>>>>>>
நடிகைன்னா அவ்ளோ மட்டமா..
சிவகுமார் ஜோதிகாவை மனதார மருமகளாகஏற்றுக்கொள்ளவில்லை.ஒரு நடிகராக கண்ணியமாக நடந்த அவரால் நல்ல மனிதராக நடக்க முடியவில்லை//
ஏன்யா CPS குடும்பத்திற்குள் கலகம் பண்றீர்..
சிவகுமார் தான் அப்பவே சொல்லிட்டாரே..
கல்யாணத்துக்கு பிறகு அனைத்துக்கும் no என்றால் தான் சூர்யா...
கார்திக்காவது தன் இஷ்டப்படி பெண் தேட வேண்டும் என்று...
(சரி சரி...நீரும் என் கட்சி தான் !)