Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்.. 

52 comments:

Unknown said...

வந்துட்டேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

உண்மையை சொல்லுய்யா.. எங்கே போனே?

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

நன்றி வக்கீல் சாஹப்

Unknown said...

"உண்மையை சொல்லுய்யா.. எங்கே போனே?"

>>>>>>>>>

யோவ் அத மட்டும் கேக்காத அப்புறம் வவுறு எரியும் உனக்கு ஹிஹி!

சேலம் தேவா said...

கவுண்டர் மாதிரி கவுன்டர் டயலாக் எல்லாம் சூப்பர்..!!

சக்தி கல்வி மையம் said...

என்னய்யா நடக்குதிங்க?

யோவ் விக்கி எனக்கு பேசு?

தமிழ்வாசி பிரகாஷ் said...

கும்மினாலும் கும்மி, செம காமெடி கும்மி.


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

சக்தி கல்வி மையம் said...

தமிழ்வாசி - Prakash said...

கும்மினாலும் கும்மி, செம காமெடி கும்மி. -- யோவ் ஷிப்டுக்கு போகலையா நீ?

Unknown said...

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
என்னய்யா நடக்குதிங்க?

யோவ் விக்கி எனக்கு பேசு?"

>>>>>>>>

யோவ் அத மட்டும் கேக்காத அப்புறம் வவுறு எரியும் உனக்கு ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

பதிவுபோட்டு எங்கய்யா பொன?

சி.பி.செந்தில்குமார் said...

வேடந்தாங்கல் - கருன் *! said...

என்னய்யா நடக்குதிங்க?

யோவ் விக்கி எனக்கு பேசு?


அந்தாள் ஃபிகர் கூட மட்டும்தான் பேசுவாரு.. நாம கூப்பிட்டா டவர் கிடைக்கலைங்கறார்..

சக்தி கல்வி மையம் said...

யோவ் அத மட்டும் கேக்காத அப்புறம் வவுறு எரியும் உனக்கு ஹிஹி ...
call me.,

சி.பி.செந்தில்குமார் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...

பதிவுபோட்டு எங்கய்யா பொன?

எங்கேயும் போகலை

சி.பி.செந்தில்குமார் said...

சேலம் தேவா said...

கவுண்டர் மாதிரி கவுன்டர் டயலாக் எல்லாம் சூப்பர்..!!

நன்றி

சக்தி கல்வி மையம் said...

அந்தாள் ஃபிகர் கூட மட்டும்தான் பேசுவாரு.. நாம கூப்பிட்டா டவர் கிடைக்கலைங்கறார்.. --அப்படி சொன்னா பரவாயில்லையே...

தமிழ்வாசி பிரகாஷ் said...

///!* வேடந்தாங்கல் - கருன் *! said...///

யோவ்.. இப்பவே வேலைக்கு தொரத்துற? இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

சி.பி.செந்தில்குமார் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

யோவ் அத மட்டும் கேக்காத அப்புறம் வவுறு எரியும் உனக்கு ஹிஹி ...
call me.,

செல்லாது செல்லாது.. எதுவா இருந்தாலும் இங்கேயே பேசுங்க

சக்தி கல்வி மையம் said...

இந்த டைம்ல பதிவு போடரையே... உனக்கு மேனேஜர் இருக்காரா?

Unknown said...

மாப்ள ஒரு பெரிய மலை அதுல ஒரு குய்.... ஹிஹி!

சக்தி கல்வி மையம் said...

எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு ---
இதைத்தான் பார்த்தட்டோமே.. மறுபடியும் என்ன லிங்கு?

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

மாப்ள ஒரு பெரிய மலை அதுல ஒரு குய்.... ஹிஹி! -- அப்புரம்?

Unknown said...

யோவ் கருண் gtalk க்கு வா

பாட்டு ரசிகன் said...

நானும் வந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

என்ன ஆச்சு?

Unknown said...

இங்கே ஒரு மீட்டிங்கு அதான் ஹிஹி!

பாட்டு ரசிகன் said...

////

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''///


அந்த நாகரீகம் இனி திரும்பாது..

சக்தி கல்வி மையம் said...

விக்கி உலகம் said...

யோவ் கருண் gtalk க்கு வா -- நான் ஸ்கூல்ல இருக்கேன்.. இங்க வெப்கேம் இல்ல..

சக்தி கல்வி மையம் said...

பாட்டு ரசிகன் said...

நானும் வந்துட்டேன்.. -- யோவ் பாட்டு இது கலவர பூமி இங்க உனக்கு என்ன வேலை?

சக்தி கல்வி மையம் said...

பாரு 10 கமென்ட் வந்தும் சிபி ஐ கானோம்..

Unknown said...

சரியா அந்த சிபி பயபுள்ள எங்கேயோ போயிடுச்சி போல நான் கெளம்பறேன்!

சக்தி கல்வி மையம் said...

யாராவது இருக்கிங்களா?

சக்தி கல்வி மையம் said...

நானும் ஜூட்..

MANO நாஞ்சில் மனோ said...

//ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி//

ஆமாம் அவர் ஒயின் குடிப்பார், இவர் விஸ்கி குடிப்பார், அப்போ டேலன்ட் கேப்டன்'தானே....

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது.//

இப்போ நாங்க உஷார் ஆயிட்டோம்ல ஆமாய்யா நான் அரபி அடக்கம் ஆறு மொழி அசத்தலா பேசுவேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்..//

கூத்தாடி பொழப்பா போச்சி நம்ம பொளப்பு....

சசிகுமார் said...

முடியல வலிக்குது அழுதுடுவேன்

Sathish said...

english vadai

Vijay said...

//தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது.//

ஹிந்தி தெரியாத என்னை போன்ற பலர் உலகம் எங்கும் பரவி இருக்கும்போது குண்டு சட்டிக்குள் குதிரை ஓடுவது உங்கள் எண்ணதில்தான். ஹிந்தி தெயரியாமல் தமிழன் உயர்வாகவே இருக்கிறான். மாற்றி யோசி நண்பா.

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் விஜய்.. நான் சொன்னது என்ன அர்த்தம்னா.. ஹிந்தி தெரிஞ்சிருந்தா, ஆங்கிலம் படிச்சிருந்தா தமிழன் இன்னும் நல்லா முன்னேறி இருப்பான் என்ற அர்த்தத்தில்..

Unknown said...

அருமை தல, எல்லாமே நல்லாயிருக்கு...

ராஜ நடராஜன் said...

//''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?''

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''//

இதை விட ஒரு சிக்ஸர் அடித்து விட முடியாது!

நிரூபன் said...

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு மக்கள் ஆட்சியா?//

வணக்கம் சகோ, எனக்கும் இது மர்மமாகத் தான் இருக்கிறது..

இனிக் Grandson உம் தேர்தலிலை குதிக்கப் போவதாக கேள்வி.

சி.பி.செந்தில்குமார் said...

அய்யய்யோ

நிரூபன் said...

முதன் முதலாக முதன் முதலாக இலவசமாக இலவசமாகத்தான்...

ஏமாளி...தமிழா...//

என்னது.. இலவச மனைவியா;-))

நம்பவே முடியலை சகோ,

நிரூபன் said...

தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''//

என்ன ஒரு அருமையான ஜனநாயக விளக்கம்... வாழ்க ஜனநாயகம்!

நிரூபன் said...

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''//

அப்போ வியர்வையே சிந்தாமல் பொதுமக்கள் காசை அடிச்சு ஓசியிலை வாழுற ஊழல் வாதிகளுக்கு என்னய்யா பேரு?

நிரூபன் said...

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்..//

பதிவிலை ஒரு சின்னத் திருத்தம் வேண்டும் சகோ,

விஜயகாந் வில்லன், வடிவேலு, சீமான், வைகோ காமெடி நடிகர்கள்,
தங்கபாலு செண்டி மென்ற்றை விளக்கும் குணச் சித்திர நடிகர் என்று வர வேண்டும்.

மாதேவி said...

எலெக்சன் கும்மி நன்றாகவே இருக்கிறது.

Anonymous said...

//என்னது.. இலவச மனைவியா;-))

நம்பவே முடியலை சகோ//

நிரூபனுக்கு சீக்கிரம் ஒரு கலியாணம் கட்டி வைக்க ஏற்பாடு செய்ய அவங்க அம்மாகிட்ட சொல்லணும் .................. எப்போ பார்த்தாலும் மனைவி மனைவிங்கிறார்

ஸ்ரீகாந்த் said...

பாரத நாடு பழம்பெரும் நாடு ! இறை சக்தியின் இருப்பிடமே இதுதான் !
அதனால் தான் எத்தனையோ தீய சக்திகளின் ஆக்கிரமிர்ப்புக்கு பிறகும்
இன்னும் செல்வ செழிப்போடும் சீரும் சிறப்போடும் வளர்ந்து வருகிறது !
இதை நம் நாட்டு மக்களே இன்னும் அறியாத போடு வெளி நாட்டு சக்திகள்
அறிவதற்கு வழியேது !
http://kanthakadavul.blogspot.com/2011/04/blog-post_07.html

மனம் திறந்து... (மதி) said...

இவ்ளோ நல்லாப் பேசற, சிந்திக்கிற ஒரு நல்ல மனுஷனை இப்படி அநியாயமா, ஒரேயடியா சாய்ச்சுப் புட்டீங்களே அப்பு! ஹி..ஹி...நான் அந்தப் படத்தைத் தான் சொன்னேனுங்க!

மனம் திறந்து... (மதி) said...

ஒரு டவுட்டு: அந்த சினிமா பத்தின கேள்வி நெசம்மாவே விகடன்லே வந்துதா....இல்லே உங்க தேவைக்காக நீங்க சொருகினதா?