Thursday, April 07, 2011

கேப்டன் டாக்டர் ராம்தாஸிடம் பரபரப்புக் கேள்வி- ஹீரோ VS ஜீரோ

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8b2VJCrdTlj6Ch-kjjAFn8KcWaEfX3-kE7cuE5MYispYxoisWTXfaX4PMalPqPNLUvBSbisuDZO8E5uosWydjdmJb6ty78GzAPi9pd51pFYRJ7D9WiFFmcCv83Uxq6-PrU8YhxU2n9-3z/s320/vijayakanth_god.jpg 

1. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: புதுக்கோட்டை மாவட்ட மக்கள், விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இருந்தும் இம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை, ஐந்தாண்டு கால கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. கந்தர்வக்கோட்டை அருகே, விவசாயிகளின் விளைநிலங்களை பாழாக்கி வரும் எரிசாராய தொழிற்சாலை மூடப்படும்.

என்னங்க இது? ஓப்பனிங்கலயே சொதப்பறீங்க?வந்ததுமே மூடு விழாவா?ஏதாவது பாஸிட்டிவ்வா சொல்லுங்க... நாங்க ஆட்சிக்கு வந்தா தீய சக்தி கருணாநிதியை உள்ளே உட்கார வைப்போம்னு.. அதானே உங்க வழக்கமான ஸ்டைலு..?


-----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம், தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தி, நகரில் உள்ள அரசு அலுவலகங்களின் சுவர்களில், 2,000 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

ஓஹோ.. ஒரு ஓட்டுக்கு ரூ 2000 தான் அப்படின்னு சூசகமா சொல்றீங்களா?அதெல்லாம் முடியாது.. விலைவாசி எல்லாம் ஏறிக்கிடக்கு.. அட்லீஸ்ட் ரூ 10,000 ஆவது வேணும்..,அதனால 10000 சுவரொட்டிகள் ஒட்ட சொல்லுங்க.. 


-------------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2011/03/anjali.jpg
3. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம்: இன்றைய சூழ்நிலையில் தனித்து போட்டியிட்டு எந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. புதிய நீதிக்கட்சி இம்முறை சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. எங்கள் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எந்த கட்சி அறிவிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவோம்.

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


--------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQ1rqaJe6TSlJdhg-Mma3-BEiU_Xa3zky8wgwz-wgg3vCilePeHrCs8T5AxA4z_ns9Ax0QUmCU31mJTgmFjq1npme0Aemf2oJmBr1PwLCCa16h_dSSeE_7AezX1qtclHWRTIJifoxxRk0/s400/DN_13-11-08_E1_01-04%2520CNI.jpg
4. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
என் நண்பர் விஜயகாந்த், போயஸ் கார்டனுக்கு செல்லும் போது, கேப்டனாக இருந்தார். வெளியே வரும் போது, சிப்பாயாக வந்தார். தேர்தல் முடிவுக்கு பின், சிப்பந்தியாக மாறி விடுவார். இந்த தேர்தலில், வைகோ நல்ல முடிவு எடுத்துள்ளார். அவருக்கு கிடைத்த முடிவு தான் விஜயகாந்துக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் கிடைக்கும்.


ஏய்யா என்ன ஒரு ஏத்தம்.. வை கோ எடுத்தது நல்ல முடிவா? அவருக்கு வேற வழி இல்லை.. அதனால அப்படி விட்டேத்தியா பதில் சொன்னாரு.. நீங்க வேணா பாருங்க.. கேப்டன் கூட காங்கிரஸ் கூட்டணி வைக்கும் காலம் வரும்..அதே போல் கேப்டன் சி எம் ஆகாம விட மாட்டார்.. ஏன்னா தமிழனோட தலை எழுத்தே சினிமாக்காரங்க பின்னால போய் வலியனா மகுடத்தை எடுத்து தர்றதுதான்....

----------------------------------------
5. பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு: வாக்காளர்கள் மனசாட்சிப்படி, ஓட்டளிக்க வேண்டும். ஓட்டு, விற்பனைக்கு அல்ல. தமிழகத்தை மோசமான நிலைக்கு தள்ளியது தி.மு.க., அரசு. இந்த அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது

 ஏய்யா.. என்ன அநியாயம்..? இந்த அரசியல்வாதிகள் மட்டும் மனசாட்சியை
அடகு வைப்பாங்களாம்.. ஊழல் பண்ணுவாங்களாம்.. நாங்க மட்டும் பணம் வாங்காம ஓட்டு போடனுமாம்.. எங்களை என்ன இளிச்சவாயன்னு நினைச்சீங்களா?

--------------------------------

6. பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி பேச்சு: காங்கிரசின் ஊழல் ஆட்சியால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். ஊழலில் காங்கிரஸ் புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஓஹோ .. இப்போ என்ன சொல்ல வர்றீங்க.. ? பி ஜே பிக்கும் ஒரு சான்ஸ் வேணுமா? ஊழல் பண்ண..?

--------------------------------------
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjdUih_nGQbVWx8Bt1gB26l5rZfztIcHM34JWesn2mNRR87xtEr52zw6TGxMpy9TOpYY6FU-I9F4DzocjcDU6DBsby-UoPh8rtBB7x20yhuFx-TCPGkEaNt6JDO7B0s95vEGPY-d3t5TrY/s1600/thuglak_cartoon1.jpg
7. தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு:தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள், காலத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் உட்பட, பல மாநிலங்களில் கடுமையான விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அமல்படுத்தி வருகிறது. அதற்கு காரணம், முந்தைய தேர்தல்களில் நடைபெற்ற முறைகேடுகள் தான்.

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

-----------------------------------------------
  http://www.southdreamz.com/wp-content/uploads/2011/02/Tamil-Actress-Anjali-Stills.jpg
8. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: பா.ம.க., ராமதாஸ் ஆறு மாதங்களுக்கு முன் தி.மு.க., ஆட்சிக்கு, "ஜீரோ' மார்க் போட்டார். இப்போது, அக்கட்சி தான், "ஹீரோ' என்று பேசுகிறார். இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களுக்கு என்ன செய்வர்?

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

----------------------------------
9. தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி அமுதா பேட்டி: தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக, கடந்த 25ம் தேதி வரை, 45 ஆயிரத்து 984 புகார்கள் எங்களுக்கு வந்திருக்கின்றன. ஆனால், தேர்தல் கமிஷன், 49 ஆயிரம் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்களை மட்டுமல்லாமல், தேர்தல் கமிஷனே முன் வந்து பல புகார்களை பதிவு செய்து நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகிறது.


வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....

42 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

1

ம.தி.சுதா said...

ஐஐஐ சுடு சோறு...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

சி.பி.செந்தில்குமார் said...

யோவ்.. மதி என்னய்யா டைட்டிலே வில்லங்கமா இருக்கு.. வரலாமா .. அங்கே/.?

சி.பி.செந்தில்குமார் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

1

இன்னைக்கு நீங்களா? பார்ப்போம் ராசியான லாயரா?ன்னு

ம.தி.சுதா said...

கலைஞர் விளக்கப்படம் அருமை... அதிலும் அந்த வசனம் இருக்கே வசனம் நச் நச்.... (அது சரி போட்டோவில் உள்ள எழுத்துக்களை கொப்பி பண்ண முடியாதா )

ம.தி.சுதா said...

அப்ப சரி எனக்குத் தான் முதல் வோட்டு...

வைகை said...

தங்கள் நகைசுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன! ஹி ஹி

வைகை said...

ஐயோ..எப்பிடி இப்பிடியெல்லாம்? என்னால முடியாதுப்பா..!

சக்தி கல்வி மையம் said...

உங்க டிரேட்மார்க் டிஸ்கி கானோமே..

வைகை said...

ஐயோ..அரசியலா? அப்பீட்ட்ட்டு...

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரொம்ப பிஸியாம்?

வைகை said...

எனக்கு கருத்து சொல்ல பயமம்ம்ம்மா...இருக்கு!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மொத வெட்டுக்கே மொத வெட்டா இன்னைக்கு ...ஹீ...ஹீ...ஹீ ...

சி.பி.செந்தில்குமார் said...

>>!* வேடந்தாங்கல் - கருன் *! said...

மாப்ள ரொம்ப பிஸியாம்?

தக்காளி விக்கி தானே.. அது ஒரு பர்சனல் மேட்டர்.. பப்ளிக்கா வேணாம்.. தனி மெயிலில் சொல்றேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

உங்க டிரேட்மார்க் டிஸ்கி கானோமே.

ஆமா.. டிஸ்கி போட்டா பதிவை பற்றி யாரும் கண்டுக்கறதில்லை.. .

சி.பி.செந்தில்குமார் said...

டக்கால்டி said...

Present sir

ஆப்செண்ட் மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மொத வெட்டுக்கே மொத வெட்டா இன்னைக்கு ...ஹீ...ஹீ...ஹீ ...


லாயரை பேசி ஜெயிக்க முடியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger வைகை said...

தங்கள் நகைசுவை எழுத்துக்கள் மனதை லேசாக்குகின்றன! ஹி ஹி

எனி உள் குத்து,,?

காங்கேயம் P.நந்தகுமார் said...

அ.தி.மு.க வும் வரக்கூடாது தி.மு.க வும் வரக்கூடாதுன்னு சொன்ன விஜயகாந்த், இனிமேலும் நாம் தனித்து நின்றால் வேலையாகது என்று ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்ப மட்டும் அ.தி.மு.க வுக்கு ஓட்டு கேட்கும் உன்னைவிட ராமதாசு பரவாயில்லை. இப்ப ஊரெல்லலாம் பேச்சு. குடிகாரன் பேச்சு! விடிஞ்சா போச்சு

சி.பி.செந்தில்குமார் said...

@Blogger பி.நந்தகுமார்


குடிகாரர் என கேப்டனை திட்டும் கலைஞர்க்கு நான் கேட்கும் கேள்வி டாஸ்மாக்கை திறந்தவர் யார்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

எல்லோரிடமும் கேள்வி கேட்கும் உங்களிடம் அவங்க திருப்பி கேள்வி கேட்டா?


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஏழாவது ஓட்டு நான்தான் போட்டேன்...ஹி..ஹி..ஹி..


எனது வலைப்பூவில்: கேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள் இணைப்பு

ராஜி said...

வந்த புகாரே 50,000னா வராத புகாரும், வர முடியாத அளவு தடுக்கப்பட்ட புகாரும் எவ்வளவு இருக்கும்.?பேசாம தமிழ்நாட்டை பூம்புகார் மாதிரி புகார் நாடு என மாற்றிடலாம்....
>>>

இதுதான் Top class

ராஜி said...

நீங்க கூடத்தான் 6 வாரங்களுக்கு முன்னாடி தி முக , அதி முக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் அப்படின்னீங்க..இப்போ அம்மா கூட கூட்டணி வைக்கலையா?நீங்க 2 பேரும் சேர்ந்து மட்டும் என்னத்த கிழிக்கப்போறீங்க?

>>>>>>>>>
அசிங்கப்பட்டுட்டார் விஜயகாந்த்

சி.பி.செந்தில்குமார் said...

>>தமிழ்வாசி - Prakash said...

ஏழாவது ஓட்டு நான்தான் போட்டேன்...ஹி..ஹி..ஹி..

ஓஹோ.. எனக்கு ஏழரை காத்திருக்கா?

ராஜி said...

மீண்டும் கோகிலா போல, மீண்டும் அஞ்சலி??!!...,

ராஜி said...

பொதுவா போலீஸை விட திருடன் தான் புத்திசாலியா இருப்பான்.. நீங்க என்ன தான் புதுசு புதுசா விதி முறை கொண்டு வந்தாலும் அதை எப்படி மீறலாம்னு தான் ஐடியா பண்ணுவாங்க..

>>
நம்ம சிபி சார் போலவா? டவுட்டு?

ரஹீம் கஸ்ஸாலி said...

present

செங்கோவி said...

எல்லாரையும் திட்டுனா எப்படி..நாங்க யாருக்கு ஓட்டுப் போடறதுன்னு சொல்லி வழி காட்டுங்க தலைவரே!

Unknown said...

ஆமா எதுக்கு அஞ்சலி படம்?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்றை அசத்தலுக்கு என் வாழ்த்துக்கள்..

நானும் வந்துட்டேன்..

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அஞ்சலி படம் சூப்பர்!! ஆமா அடிக்கடி அஞ்சலி வர்றாங்களே, எதுக்கு?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஏ சி சண்முகமா? ஓ சி சண்முகமா?ஏய்யா இப்படி ஈரோட்டு பேரை கெடுக்கறீங்க..?ஜாதிக்கட்சிகளை ஒழிக்கனும், ஜாதிக்கட்சித்தலைவர்களை ஓட ஓட விரட்டனும்.. அப்பத்தான்யா நாடு உருப்படும்..


உண்மை உண்மை உண்மை நண்பா!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போல உங்க கமெண்ட்ஸ் அசத்தல்!!

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வழக்கம் போல உங்க கமெண்ட்ஸ் அசத்தல்!!

நண்பா.. இன்றைய உங்க கவிதையை விடவா..? பின்னீட்டீங்களே..?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அஞ்சலி படம் சூப்பர்!! ஆமா அடிக்கடி அஞ்சலி வர்றாங்களே, எதுக்கு?

ஹி ஹி ஹி சஞ்சலம் ஆன மனதை...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்றை அசத்தலுக்கு என் வாழ்த்துக்கள்..

நானும் வந்துட்டேன்..

வாங்கய்யா வாத்தியாரய்யா... அந்த டீச்சரை என்ன பண்ணுனீங்க அய்யா?

சி.பி.செந்தில்குமார் said...

Blogger செங்கோவி said...

எல்லாரையும் திட்டுனா எப்படி..நாங்க யாருக்கு ஓட்டுப் போடறதுன்னு சொல்லி வழி காட்டுங்க தலைவரே!

அண்ணன் காட்டிய வழி

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ஜீ... said...

ஆமா எதுக்கு அஞ்சலி படம்?

ஹி ஹி தெரிஞ்சும், தெரியாத மாதிரி கேட்கறீங்களே..//

பாட்டு ரசிகன் said...

இதையும் ஒரு எட்டு பாத்திடுங்க..

//////
நரகத்தில் இருப்பது போன்றே இருக்கிறேன்... தயவு இந்த அவஸ்த்தை என்னுடைய எதிரிக்கூட வரவேண்டாம்./////

விவரம் அறிய..

http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post.html

Speed Master said...

வந்தேன் வாக்களித்து சென்றேன்

நாமே ராஜா, நமக்கே விருது-5

http://speedsays.blogspot.com/2011/04/5.html

Unknown said...

மவனே உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சி ஹிஹி!