Thursday, April 14, 2011

துக்ளக் சோ ஒரு ஆணாதிக்கவாதி.ஆனால் ஜெ விஷயத்தில் மட்டும்.....தமிழருவி மணியன் பரபரப்பு பேட்டி..-காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh5L5lSffKLz2LqnKyzQH8pcTTnewRWdTRi8CvkGzP7bxNSbfhoSrUn1HHWRYfIJTCpCA_zHHv2LiWlkoTsBBEVut3CYVcTrPdHeydlQYq0RRjaL2MXkImP9i9prdf-Ju15hdEwkhTEHtc/s400/modi_cho=Dondu.jpg 

1. மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?''
 
''மறைமுகமாக அல்ல... நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும் இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர்தான் அரசியல்.

தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதைவிட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார்.

இந்திய அரசியலில், இதுவரை யார் வரக் கூடாது என்றுதான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக் கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள்.

என் வாக்கு... ஜெயலலிதா வர வேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக் கூடாது என்பதற்காக!
ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!''

கரும்புள்ளிகள் கொண்டவைகள் சிறுத்தை அல்ல .. சிறு மதி படைத்த அல்லது மதி கெட்ட கழுதைகள்

2.'' 'காந்திய மக்கள் இயக்கம்’ என்று ஆரம்பித்திருக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா?''

''நம் சமுதாயம் சகல மட்டங்களிலும் ஆரோக்கியம் இழந்து அழுகிப்போனதற்கு ஒரே காரணம், காந்திய வழியில் இருந்த நாம் விலகி நடந்ததுதான். கிராமம் வரை அதிகாரப் பரவல், தற்சார்புப் பொருளாதாரம், சிறுதொழில் வளர்ச்சி, தாய்மொழி வழிக் கல்வி, ஆடம்பரம்அற்ற எளிய வாழ்க்கை முறை, புலனடக்கம், கட்சிகளற்ற ஜனநாயகம் என்ற காந்தியத்தின் தடத்தில் நாம் கால் பதித்து நடந்திருந்தால், ஊழலற்ற பொது வாழ்வு, ஏழ்மை இல்லாத இந்தியா இந்நேரம் உருவெடுத்து இருக்கும். 

காந்தியின் எல்லாக் கொள்கைகளையும் கண் மூடிப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் குறிப்பிட்ட கொள்கைகள் எந்த நிலையிலும் ஏற்கத்தக்கவை. போராட்ட முறையில் காந்தியப் போர் முறை ஒன்றுதான் உன்னதம். அதிக உயிர்ச் சேதம் இன்றி, அதிகாரத்தைப் புரட்டிப் போடும் அகிம்சை.

இந்த ஆயுதம்தான் முபாரக்கை எகிப்தில் முடக்கியது. இந்த ஆயுதத்தை ஈழத்தில் மக்கள் தொடர்ந்து பிரபாகரன் தலைமையில் ஏந்தி வீதிகளில் நின்று இருந்தால், ஈழம் தமிழரின் தன் நாடாய் இந்நேரம் பிறந்து இருக்கும். இவ்வளவு அழிவுகளை என் இனம் அங்கு சந்தித்து இருக்காது. ஒரு லட்சம் தமிழர் என்னோடு காந்திய மக்கள் இயக்கத்தில் சேர்ந்து நடந்தால், எந்த அரசியல்வாதியும் தவறு இழைக்க முடியாத சமூகத்தை நான் சமைத்துக் காட்டுவேன்.

இழப்புகளையும் வலிகளையும் என்னோடு சேர்ந்து அனுபவிக்க நீங்கள் தயாரா? முதல் நிபந்தனை, நாம் பதவி மறுப்பாளர்களாகப் பணியாற்ற வேண்டும்!''

இந்த ஆட்டத்துக்கு யாரும் தயாரா இருக்கமாட்டாங்கன்னு நினைக்கறேன்.. நோகாம நோம்பி கும்பிடத்தான் தமிழன் பார்ப்பான்.. 

'3. 'உங்கள் இளம் பிராயக் காதல் அனுபவம் குறித்துக் கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?''

''என் காதலி... தெய்வத்தின் சிருஷ்டியில் அவள் ஒரு தேவதையின் வார்ப்பு. அவள் பூக்களில் அனிச்சம்; புள்ளினங்களில் அசுணம். அவளுக்கு மலர்களைவிடவும் மென்மையான மேனி; பளிங்கைவிடவும் பரிசுத்தமான உள்ளம். அவளைச் சந்திப்பதற்கு முன்பு, என் இதயம் வெறும் கருங்கல்லாய்க் கிடந்தது. தன் நயன உளிகளால் அவள்தான் அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு சிலையாக மாற்றினாள். இப்பாது சிலை இருக்கிறது. அந்தச் சிற்பியைத் தான் காணோம்!''


4. 'துக்ளக்’ ஆசிரியர் சோ பற்றி தங்கள் கருத்து?''

''நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்பவர். பெரும்பான்மைக் கருத்தோடு இயைந்துபோவதுதான் எழுத்துலகத் தர்மம் என்று ஏற்காதவர். ஒரு தனிமனிதனின் பேனாவை மட்டுமே நம்பி, ஓர் இதழை 41 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்த முடியும் என்று சாதித்தவர். 

பொய்யாக யாரையும் புகழ்ந்து பேசத் தெரியாதவர். ஆனால், பெண்களுக்கு எதிரான சிந்தனைகளை விதைக்கும் ஓர் அழுத்தமான ஆணாதிக்கவாதியாகத் தன்னை வேண்டும் என்றே வெளிப்படுத்திக்கொள்பவர். இதில் ஜெயலலிதாவுக்கு மட்டும் அவ்வப்போது விதிவிலக்கு வழங்குபவர்!''


அவ்வப்போது என ஏன் மழுப்பறீங்க...? அவர் ஆண்டாண்டு காலமா அம்மா புகழ் தான் பாடிட்டு இருக்கார்.. அதற்கு இருவரும் பிராமணர்கள் என்ற  ஜாதி உணர்வும் ஒரு காரணம்


5. ''உங்களுக்கு மிகவும் பிடித்த பெண் கவிஞர்களின் படைப்புகள் எவை?''
''பாசாங்கு மொழியில், சரிகை வேலைப்பாடுகள் இல்லாமல், மண்ணின் ஈரம் மணக்க ஒவ்வொரு வார்த்தையிலும் வாழ்க்கையின் நிறத்தை இயல்பாய் வடித்தெடுத்த இளம்பிறையின் 'நீ எழுத மறுக்கும் எனதழகு’ என்ற படைப்பும், ஒரு பெண்ணின் நுண்மையான அந்தரங்க உணர்வுகளைக் கலை வடிவம் கொஞ்சமும் கலையாமல் அப்படியே எழுத்தில் இறக்கிவைக்கும் அற்புதத்தை நிகழ்த்திய சல்மாவின் 'ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற படைப்பும்!''


6. ''முழுக்க முழுக்க சுயநலவாதிகளாக இருந்துகொண்டு, பொது நலத்துக்காகவே வாழ்வதுபோல் வலம் வர இந்த அரசியல்வாதி களால் எப்படி முடிகிறது?''

'' 'வேஷங்கள் போட்டுப் போட்டு... அது
தோல், சதை, எலும்புக்குள் இறங்கி,
 வேஷமே உங்கள் இயல்பாகிவிட்டது’

-என்ற புவியரசின் கவிதையை நீங்கள் படித்து இருந்தால், இந்த ஐயம் உங்களுக்குள் உருவாகி இருக்காது. அரசியல் உலகில் அடுத்தவர் குருதியில் ஆயுளைப் பெருக்கிக்கொள்ளும் கொசுக்களின் கூட்டமே அதிகம். சொந்த நலனுக்காக நம் தேசத்தைக்கூடத் தெருவில் நிறுத்தத் துணியும் இந்த முகமூடி மனிதர்களின் சுய முகம் காண்பது அவ்வளவு எளிதான செயல் அன்று!''

 அது ரொம்ப ஈசிங்க.. யார் எல்லாம் வலியனா வந்து மக்களே.. உங்கள் நன்மைக்காகத்தான் என் உடல் ,பொருள்,ஆவி எல்லாம் என கப்ஸா விட்டு ஓட்டுக்கேட்கறாங்களோ அவங்க எல்லாருமே சுயநல வாதிகள் தான்.. தம்  மகன்,மகள், மக்கள் நல்லாருக்கனும்னுதான் எல்லாரும் பார்க்கறாங்க.. நாட்டு மக்களின் நலம் காண்பவர்கள் யாருமே இல்லையே?


7. ''உலகமயமாக்கலால் கல்வி முறை, நாகரிகம், பழக்க வழக்கம், ஏன் வாழ்க்கை முறையே மாறிப்போன இந்நாளில், காந்தியம் இனியும் சாத்தியமா?''

''நோய் நிறைந்த இடத்தில்தானே மருத்துவர் தேவை. வெள்ளாடு மேயும் விளைநிலத்துக்குத்தானே வேலி தேவை. வெறுப்புக்கு மாற்றாக அன்பு, போட்டிக்குப் பதிலாக ஒத்துழைப்பு, தன்னலத்துக்கு எதிராகத் தியாகம், புற ஆரவாரங்களுக்குப் புறம்பாக அக நாகரிகம் வளர்த்தெடுப்பதுதான் காந்தியம். 

உலகமயமாக்கல் சீதனமாய் நம்மிடம் கொண்டுசேர்த்த நுகர்வு வெறியின் முற்றுகையில் மூழ்கி இருக்கும் இளைய சமூகத்தின் வாழ்வை முறைப்படுத்து வதும், நெறிப்படுத்துவதும் காந்தியத்தால் மட்டுமே சாத்தியப்படும்!''

 ஏன் ? இன்று ஒரு அன்னா ஹசாரே தயார் ஆனது போல் நாளை ஒரு நல்ல  அஹிம்சாவாதி தலைவர் தோன்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
 http://3.bp.blogspot.com/_afw-8cBe43U/SSoUvaJBQxI/AAAAAAAAAXg/-5oyOuTAJQ8/s400/THUGLAK.jpg

8. ''ஒரு அரசாங்கமே வீதிக்கு வீதி மதுக் கடைகளை நடத்துவதும், அதனால் இவ்வளவு வருமானம் என்று சொல்வதும், யாரும் பெரிதாக இதை எதிர்க்காததும், வெட்கக்கேடான செயல்தானே? இந்த நிலை எப்போது மாறும்?''

''அரசு வருவாய் அதிகரிக்க 'விலைமகளிர் விடுதி’ நடத்தாதவரை நல்லது என்று மன நிறைவுகொள்ளுங்கள்.

குடிப்பவரையும் கெடுக்கும்: குடும்பத்தையும் கெடுக்கும் என்று குடிமக்கள் உணராதவரை மதுக் கடைகளுக்கு மூடு விழா நடக்கும் வாய்ப்பு இல்லை!''

 குஜராத் மோடி கிட்டே போய் ஒரு மாசம் டியூஷன் எடுத்துட்டு வரசோல்லனும்...மூச்சுக்கு மூச்சு மற்ற தேசங்களோடு ஒப்பிட்டு மின் வெட்டு,விலைவாசி உயர்வு என எல்லா பிரச்சனைக்கும் சப்பைக்கட்டு கட்டும் அரசியல்வாதிகள் ஏன் குஜராத்துடன் தமிழகத்தை ஒப்பிட்டு பேச மறுக்கிறார்கள்?


'9. 'பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, பகுத்தறிவுத் தந்தை பெரியார்... இவர்கள் எல்லாம் இன்று உயிரோடு இருந்தால்..?''

''காமராஜர் கதர் ஆடையைக் கழற்றி எறிந்துவிட்டு, சத்தியமூர்த்தி பவனை இழுத்து மூடிஇருப்பார். 'காங்கிரஸுக்கும் கழகத்துக்கும் ஒரே லட்சியம்தான்’ என்று கலைஞர் சொன்னதைக் கேட்டதும், கழகத்தைக் கலைத்துவிடும்படி அண்ணா 'தம்பிக்கு’க் கடிதம் எழுதிக்கொண்டு இருப்பார். பெரியார் முதல் வேலையாக, வீரமணியைத் திராவிடர் கழகப் பொறுப்பில் இருந்து விலக்கி இருப்பார்!''


தங்கபாலு பண்ற காமெடிகளையும், கோஷ்டி சண்டைகளையும் பார்த்து அவங்க தற்கொலை தான் பண்ணிக்குவாங்க.. 

10. ''திராவிடக் கட்சிகள்போல் சிறந்த மேடைப் பேச்சாளர்கள் காங்கிரஸில் உருவாவது இல்லையே... ஏன்?''

''சிறப்பாகப் பேசத் தெரியாதவர்களும் ஒழுங்காக எழுத முடியாதவர்களும்தான் காங்கிரஸ் கட்சியில் தலைவர்களாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக் குள்ளர்கள் ஒருபோதும், தம்மைவிட ஓர் அங்குலம் உயரமானவர்களைக்கூட உடன் இருக்க அனுமதிப்பது இல்லை!''

அவங்களுக்கு சண்டை போடவும்,சொம்பு தூக்கவுமே நேரம் சரியா இருக்கு... 
 http://velichathil.files.wordpress.com/2010/12/homeattai1.jpg

'11.'இன்றைய இளைஞர்களிடம் தேச பக்தி வளர்ந்துள்ளதா? குறைந்துள்ளதா?''

''இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் களத்தில் மோதும்போது தேச பக்தி பொங்கி வழிகிறது. சக மனிதரின் துயர் துடைப்பதில் தன் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்குச் சிறிதும் இடமின்றி, சுய நலத்தில் சுருங்கிவிடுவதில் தேச பக்தி வைகை மணல்போல் வறண்டுவிடுகிறது. தேச பக்தி என்பது வெறும் மண் சார்ந்தது இல்லை; மக்கள் நலன் சார்ந்தது!''

 ஏன்? கார்கில் போர் வந்த போது, இலங்கைத்தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது இளைஞர்களிடம் தேச பக்தியும் ,மனித நேயமும் வெளிப்பட வில்லையா?


12, ''இன்றைய இளம் தலைமுறையினர் அறிவுரை கூறினால் எள்ளி நகையாடுகிறார்களே...?''

''வரைமுறையற்ற வாழ்வை நடத்துபவர் வள்ளுவம் பேசுவதையும், மதுவின் போதையில் மயங்கி நிற்பவர் மகாத்மாவின் பாதையில் நம்மைப் பயணிக்கச் சொல்வதையும், மாமிசம் நாறும் வாயோடு வந்தவர் வள்ளலாரின் உயிர் இரக்கம் குறித்து உரை நிகழ்த்துவதையும் பார்க்கும் இளைஞர்கள் எள்ளி நகையாடாமல் என்ன செய்வார்கள்?

'என் வாழ்வே என் செய்தி’ என்று மகாத்மாவைப்போன்று எத்தனை மனிதர்களால் சொல்ல முடியும்? ஆயிரம் வார்த்தைகளைவிட, ஒரு நற்செயல் வலிமையானது. அவர்களுக்கு முன் மாதிரியாக நாம் வாழும் வாழ்க்கையில் நடந்து காட்டுவோம். வார்த்தைகளால் வானத்தை வளைக்க முடியாதே!''

டெயிலி மட்டன் சிக்கனா உள்ளே தள்றவன் மத்தவங்களை மட்டும் சைவம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுன்ன்னானாம்,, அந்த மாதிரி... 

13. ''ஆசை - நப்பாசை - பேராசை... என்ன வித்தியாசம்?''

''எம்.ஜி.ஆரைப் போல் திரையுலகில் ஒரு நடிகராக வலம் வர விரும்புவது ஆசை. அவரைப் போல் கட்சி தொடங்கி ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைக் கைப்பற்ற விரும்புவது நப்பாசை. முதல்வர் நாற்காலிக் கனவில் மூழ்குவது பேராசை.''

 குஷ்பூ அரசியலுக்கு வந்தது ஒரு ஆசைல... நடந்த எலக்‌ஷன்ல எம் எல் ஏ சீட் கிடைக்கும்னு நினைச்சது நப்பாசை..எதிர்காலத்துல தி மு கவுல நல்ல எதிர்காலம் இருக்கும்னு  நினைச்சா அது பேராசை.
 http://1.bp.blogspot.com/_afw-8cBe43U/SRJ5Rbbb0nI/AAAAAAAAAXA/CRZh92ZgavY/s400/THUGLAK+6NOV.jpg

14. ''விஜய்காந்த் நேர்மையான அரசியல்வாதியா... அல்லது அப்படி நடிப்பவரா?''

''அரசியல் உலகில் நேர்மை உறங்கும் நேரம் இது. உண்மையைப் பற்றிப் பேசுவதைவிட, உண்மையாக வாழ்வதுதான் முக்கியம். விஜய்காந்த் நேர்மையான அதிகாரியாக நடித்திருக்கிறார். நேர்மையான அரசியல்வாதியாக நடப்பாரா? காலம் எந்த முகமூடியையும் ஒருநாள் கழற்றிப் போடும். அதுவரை காத்திருங்கள்!''

பொது இடத்தில் தன் கட்சி வேட்பளரையே அடிப்பவர் எப்படி நேர்மையா இருப்பார்? பொறுமைசாலிகளே அரசியலில் திணறும்போது..... இந்த மாதிரி அவசர புத்திக்காரர்கள், ஆத்திர புத்திக்காரர்கள்   கட்சித்தலைவராக இருப்பது தமிழனின் துர் அதிர்ஷ்டம்

81 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ.. வடை

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத வெட்டு..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இன்னும் மனோ வரல..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்து விட்டு வருகிறேன்..

Mahan.Thamesh said...

இரண்டாவது நபர்
vote போட்டுடேன்
உங்களுக்கும் வலைத்க்தலத்துக்கும் புதியவன்
நான் வசிக்கும் இல்லம்
http://mahaa-mahan.blogspot.com/

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...

ஏதாவது தனிமைபடுத்தி காட்லானா காப்பி பண்ணமுடியல...

கமாண்ல காபி எடுக்க முடியல
அதனால மத்த கமாண்டுக்கு ரிப்ளே கொடுக்க முடியல...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...

மயிலின் தோகை நீளம் என்பதற்காக வெட்டி விட முடியுமா?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் மனோ வரல..

அந்தாள் இந்தியா வுல தான் இருக்காப்ல..

சி.பி.செந்தில்குமார் said...

Mahan.Thamesh said...

இரண்டாவது நபர்
vote போட்டுடேன்
உங்களுக்கும் வலைத்க்தலத்துக்கும் புதியவன்
நான் வசிக்கும் இல்லம்
http://mahaa-mahan.blogspot.com/

வாங்க.. ஏற்கனவே உங்க பதிவை படிச்சிருக்கேன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

பதிவின் நீளம் குறைக்க சொன்னது... பதிவை அனைவரும் படிக்க வசதிக்காகத்தான் பதிவு பெரியதாக இருக்கும் போது அதை படிக்க சிலர் சிரமப்படுவார்..

கருத்து மணக்க..
பதிவின் அளவை குறைக்க..
அது நீங்கள் சிறக்க...

சக்தி கல்வி மையம் said...

வந்துட்டேன்..

சக்தி கல்வி மையம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...---
பேட்டிய எப்படியா குறைக்கமுடியும்..

சக்தி கல்வி மையம் said...

14..

சக்தி கல்வி மையம் said...

15.. ஓட்டு போட்டுட்டு வரேன்..

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

பதிவின் நீளம் குறைக்க சொன்னது... பதிவை அனைவரும் படிக்க வசதிக்காகத்தான் பதிவு பெரியதாக இருக்கும் போது அதை படிக்க சிலர் சிரமப்படுவார்..

கருத்து மணக்க..
பதிவின் அளவை குறைக்க..
அது நீங்கள் சிறக்க...

hi hi ஹி ஹி ஓக்கே.. ஓக்கே.. நாடோடி மன்னன் பிரிவ்யூ ஷோ பார்த்த டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எம் ஜி ஆரிடம் படம் நீளம் என்றதும் என் ஜி ஆர் சொன்ன பதிலைய்த்தான் நான் உங்களிடம் சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...---
பேட்டிய எப்படியா குறைக்கமுடியும்..

சவுந்தருக்காக 4 கேள்வியை கட் பண்ணிடலாமா?

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் மனோ வரல..

அந்தாள் இந்தியா வுல தான் இருக்காப்ல.. ----

இல்ல அவர் இந்தியால இல்ல..

ராஜி said...

நானும் வந்துட்டேன்

ராஜி said...

மனோ சார் எங்கே, அவர் வந்தாதான் கத்தி, அருவா, பிரியாணி, இட்லி, பூரி,ரசம், சாம்பார், மோர், அப்பளம் னு விதம் விதமா கூவி கூவி விற்பார்

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger ராஜி said...

மனோ சார் எங்கே, அவர் வந்தாதான் கத்தி, அருவா, பிரியாணி, இட்லி, பூரி,ரசம், சாம்பார், மோர், அப்பளம் னு விதம் விதமா கூவி கூவி விற்பார்

வன்முறையை தூண்டி விடறீங்களா?

நிரூபன் said...

மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?'' ''//


ஆஹா.... ஆஹா... கேள்விக்குள்ளே பதிலை மறைச்சு வைச்சுக் கொண்டு ஒரு கேள்வி வேறையா?

நிரூபன் said...

அட்டா, கரும் புள்ளிகள் கொண்டவை சிறுத்தைகள் அல்லவாம்........

அப்ப நம்ம கறுப்பு எம்ஜி ஆர் என்னவா?
சும்மா டம்பி பூனைக் குட்டியா?

நிரூபன் said...

கேட்டார் பாருங்க. ஒரு கேள்வி, இழப்புக்களையும் வலிகளையும் சுமக்க என்னோடு நீங்க தயாரா?

அது மனிதனுக்கு அழகு..
இந் நேரம் சோவுக்க்கு சோவென்று பெய்திருக்குமே;-)))

MANO நாஞ்சில் மனோ said...

என்னலேய் நடக்குது இங்கே...? நான் வராமலே என் பெயரை நாரடிக்கிறீங்க.....பிச்சிபுடுவேன் பிச்சி....

நிரூபன் said...

இளம் பிராயக் காதல் பற்றி அவரு ஒரு கவிதையே பாடியிருக்கிறார். நன்றாக அனுபவித்திருக்கிறார் போல இருக்கே..

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
என்னலேய் நடக்குது இங்கே...? நான் வராமலே என் பெயரை நாரடிக்கிறீங்க.....பிச்சிபுடுவேன் பிச்சி....//

நீங்க பந்திக்கு பெஸ்டு..
சண்டைக்கு லேட்டு
சகோ!

நிரூபன் said...

மல்லி

நிரூபன் said...

மிளகாய்

நிரூபன் said...

சோம்பு

நிரூபன் said...

சின்னச் சோம்பு

நிரூபன் said...

பெரிய சோம்பு

நிரூபன் said...

கடுகு

நிரூபன் said...

கறிவேப்பிலை

நிரூபன் said...

கராம்பு

நிரூபன் said...

கறுவாப் பட்டை

நிரூபன் said...

ஏலக்காய்

நிரூபன் said...

அன்னாசிப் பூ

நிரூபன் said...

ஜாதிபத்தினி

நிரூபன் said...

மஞ்சள் கட்டை

MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் மனோ வரலை...///

யாராவது கேட்டாங்களா உம்மகிட்டே....சும்மா இருக்க விடாம சொரிஞ்சி சொரிஞ்சி விடுரீங்களே....
இன்னைக்கு மட்டுமே ஐநூறு கமெண்ட்ஸ்'க்கு மேலேயே போட்டுட்டேன் என் பாலோவர்சுக்கு ஸோ எனக்கு பதிவு போட டைம் இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

நிரூபன் said...

இப்போ நான் சொல்ல வாற விசயம் என்னவென்றால்,

மேற் கூறிய இத்தியாதி, இத்தியாதி அயிட்டங்களின் உதவியுடன் மிளகாய்த் தூள் அரைக்கலாம். அதே போல நம்ம துக்ளக் சோவின் தலையில் தமிழருவி மணியன் மிளகாய்த் தூள் அரைத்திருக்கிறார்.
புரிஞ்சுதா?

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் மனோ வரலை...///

யாராவது கேட்டாங்களா உம்மகிட்டே....சும்மா இருக்க விடாம சொரிஞ்சி சொரிஞ்சி விடுரீங்களே....
இன்னைக்கு மட்டுமே ஐநூறு கமெண்ட்ஸ்'க்கு மேலேயே போட்டுட்டேன் என் பாலோவர்சுக்கு ஸோ எனக்கு பதிவு போட டைம் இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

haa haa ஹா ஹா நல்லா வேணும்.. நாளை காலை 8 மணீக்கு உங்களை கேவலப்படுத்தி ஒரு பதிவு போடறேன். ஹி ஹி அனுமதி தரவும்

நிரூபன் said...

MANO நாஞ்சில் மனோ said...
இன்னும் மனோ வரலை...///

யாராவது கேட்டாங்களா உம்மகிட்டே....சும்மா இருக்க விடாம சொரிஞ்சி சொரிஞ்சி விடுரீங்களே....
இன்னைக்கு மட்டுமே ஐநூறு கமெண்ட்ஸ்'க்கு மேலேயே போட்டுட்டேன் என் பாலோவர்சுக்கு ஸோ எனக்கு பதிவு போட டைம் இல்லை//

சகோ... ஒருவாட்டி வீட்டு கேட்டை எட்டிப் பாருங்க... வீட்டுக்கு முன்னாடி ஆட்டோகிராப் வாங்க பல பேர் வெயிட்டிங்.

நிரூபன் said...

ஜெயலதிகாவிற்கு மட்டும் விதிவிலகாம். அப்படியாயின் அவரை எப்படி ஆணாதிக்க வாதி எனச் சொல்ல முடியும்?

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
Delete
Blogger MANO நாஞ்சில் மனோ said...

இன்னும் மனோ வரலை...///

யாராவது கேட்டாங்களா உம்மகிட்டே....சும்மா இருக்க விடாம சொரிஞ்சி சொரிஞ்சி விடுரீங்களே....
இன்னைக்கு மட்டுமே ஐநூறு கமெண்ட்ஸ்'க்கு மேலேயே போட்டுட்டேன் என் பாலோவர்சுக்கு ஸோ எனக்கு பதிவு போட டைம் இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

haa haa ஹா ஹா நல்லா வேணும்.. நாளை காலை 8 மணீக்கு உங்களை கேவலப்படுத்தி ஒரு பதிவு போடறேன். ஹி ஹி அனுமதி தரவும்//


சகோ மனோ, நாளைக்கு நீங்க டபுள் ஜீன்ஸ் போட்டுக்கிட்டாத் தான் தப்பிக்கலாம். இல்லாட்டி, நம்மாளுங்க கிழிச்சு நாறப்பண்ணிடுவாங்க

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...

மயிலின் தோகை நீளம் என்பதற்காக வெட்டி விட முடியுமா?//

விடாக்கண்டன் கொடாகண்டன் நாசமா போங்க....

நிரூபன் said...

புவியரசின் கவிதை வருகிள் அரசியல் வாதிகளினை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

நிரூபன் said...

திமுக தோல்விக்கு கலவரம் தான் காரணமா?

கார்ட்டூன் படம் அழகாக சொல்லுதே.

நிரூபன் said...

அரசு வருவாய் அதிகரிக்க விலை........
அடுத்த தேர்தலில் கள்ள ஓட்டுப் போடுவோருக்கு இலவசம் என்று அவிச்சாலும் அறிவிப்பாங்க நம்மாளுங்க.

நிரூபன் said...

தங்க பாலு, காமெடி, கோஷ்டி சண்டை.. கலக்கல் பஞ்ச்..

நிரூபன் said...

திராவிடக் கட்சிகள் போல........காங்கிரசில்...//

இத்தாலி மொழிப் பேச்சாளர்கள் உருவாகத் தான் இங்கே சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது..

நிரூபன் said...

கலைஞரின் குடும்ப சொத்துக்கள் படம்.............கலக்கல் காமெடி.

நிரூபன் said...

முதல்வர் நாட்காலியில் உட்கார்வது பேராசை..///

ஹா.. ஹா..

நிரூபன் said...

இறுதிப் பஞ்ச்... கும்மிக்கு வலுச் சேர்க்கிறது.
பொறுமை சாலிகளே அரசியலில் திணறும் போது, இந்த மாதிரி அவசர....
சரியாய் சொன்னீங்கள் சகோ.

நிரூபன் said...

பதிவின் கருத்துக்களுக்கு படங்கள் வலுச் சேர்க்கின்றன. இரண்டு கார்ட்டூன் படங்களும் நன்றாக இருக்கின்றனவே. மனிதச் சங்கிலி, குடும்ப சொத்துக்கள்?


தமிழருவி மணியன் படமும் அழகாக கிறே கலரில் தீட்டியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

ராஜி said...

இவர் மட்டும் விகடனிலிருந்து கட், காபி, பேஸ்ட் பண்ணலாம். நாம கட், காபி பேஸ்ட் பண்ணக்கூடாதுனு வேலிலாம் போட்டு வைப்பாராம், இது எந்த ஊரு நியாயம்னு கேளுங்க மக்கா

சி.பி.செந்தில்குமார் said...

பதிவின் கருத்துக்களுக்கு படங்கள் வலுச் சேர்க்கின்றன. இரண்டு கார்ட்டூன் படங்களும் நன்றாக இருக்கின்றனவே. மனிதச் சங்கிலி, குடும்ப சொத்துக்கள்?


தமிழருவி மணியன் படமும் அழகாக கிறே கலரில் தீட்டியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்!

April 14, 2011 5:48 PM
Delete
Blogger ராஜி said...

இவர் மட்டும் விகடனிலிருந்து கட், காபி, பேஸ்ட் பண்ணலாம். நாம கட், காபி பேஸ்ட் பண்ணக்கூடாதுனு வேலிலாம் போட்டு வைப்பாராம், இது எந்த ஊரு நியாயம்னு கேளுங்க மக்கா

April 14, 2011 5:48 PM

haa haa கலைஞரும், சோனியாவும் ஊழல் அற்ற ஆட்சி அமைப்போம்னு சொல்லலையா? அது மாதிரி . ஹி ஹி

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் மனோ வரல..

அந்தாள் இந்தியா வுல தான் இருக்காப்ல..//

ஆமா இவரு வாங்கின அடி பத்தாதுன்னு என்னையும் கோர்த்து விடுரதை பாரு துரோகி...

MANO நாஞ்சில் மனோ said...

// வேடந்தாங்கல் - கருன் *! said...
# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...---
பேட்டிய எப்படியா குறைக்கமுடியும///

அவரு ஏதோ உள்குத்தா சொன்னா மாதிரி தெரியுதே....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
சி.பி.செந்தில்குமார் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் மனோ வரல..

அந்தாள் இந்தியா வுல தான் இருக்காப்ல.. ----

இல்ல அவர் இந்தியால இல்ல..///

யோவ் என்னய்யா நடக்குது இங்கே...???

ஏதோ அவன் அதுக்கு சரிபட மாட்டான் ரேஞ்சுக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

//இராஜராஜேஸ்வரி said...
மயிலின் தோகை நீளம் என்பதற்காக வெட்டிவிட முடியாது தான். அழகான சொல்லாடசி///

இது எப்பவோ பேப்பர்ல வந்ததுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அசத்தல் பதிவு..
கொஞ்சம் நீளத்தை குறையுங்கள் பாஸ்...---
பேட்டிய எப்படியா குறைக்கமுடியும்..

சவுந்தருக்காக 4 கேள்வியை கட் பண்ணிடலாமா?//

என்னாய்யா மச மசன்னு கட் கட் சொல்றீங்க பாக்குறவங்க தப்பா நினச்சிற போறாங்க...

MANO நாஞ்சில் மனோ said...

சிக்ஸ்டி பைவ் ஹே ஹே ஹே ஹே

Unknown said...

சரி நீ மைனஸ் ஓட்டு போட்டாதான் பேமஸான பதிவர்னு சொல்லிட்டு அலையறியே மைனஸ போடட்டா!

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

சரி நீ மைனஸ் ஓட்டு போட்டாதான் பேமஸான பதிவர்னு சொல்லிட்டு அலையறியே மைனஸ போடட்டா!

சொல்றவன் செய்யமாட்டான்.. செய்யறவன் சொல்ல மாட்டான்

Unknown said...

என் பதிவுக்கு வராத நீ மனுசனா ஹிஹி!

ஐ ஜாலி பயபுள்ள காலி ஹிஹி!

Unknown said...

அவ்ளோ கொயுப்பா உனக்கு இப்போ போடுறேன் மைனசு!

Namy said...

Mr. Maniyan make statement without knowing history of Eelam. Up to end of 1983 the Eelam tamilan agitate against Lankan gov in peaceful manner. ' which is my weapon is decided by my enemy' - Prabakaran.

அஞ்சா சிங்கம் said...

நானும் இருக்கேன் ............

காங்கேயம் P.நந்தகுமார் said...

விஜயகாந்த் நேர்மையான அரசியல் வாதியா? பொதுமக்கள் முன்னிலையிலேயே மது அருந்திவிட்டு வேட்பாளரையே அடித்த விஜயகாந்த் அரசியலில் துரதிஷடம் அருமை. இது போன்ற குடிகாரன்கள் இனிமேலாவது அரசியலுக்கு வராமல் இருந்தால் நன்று

காங்கேயம் P.நந்தகுமார் said...

விஜயகாந்த் நேர்மையான அரசியல் வாதியா? பொதுமக்கள் முன்னிலையிலேயே மது அருந்திவிட்டு வேட்பாளரையே அடித்த விஜயகாந்த் அரசியலில் துரதிஷடம் அருமை. இது போன்ற குடிகாரன்கள் இனிமேலாவது அரசியலுக்கு வராமல் இருந்தால் நன்று

ராஜி said...

இன்னிக்கு உங்க பதிவில் மசாலா கொஞ்சம் தூக்கலாதான் இருக்கு சார்(அதான் நிருபன் பட்டை, கிராம்பு, சோம்புலாம் சேர்த்திருக்காறே)

மாதேவி said...

சித்திரை புதுவருடவாழ்த்துகள்.

உணவு உலகம் said...

நானும் தேர்தல் பணி முடிச்சிட்டு வந்திட்டேன். நாளை மனோ, பாவம்.

Unknown said...

//ஏதாவது தனிமைபடுத்தி காட்லானா காப்பி பண்ணமுடியல...

கமாண்ல காபி எடுக்க முடியல
அதனால மத்த கமாண்டுக்கு ரிப்ளே கொடுக்க முடியல.//

Unknown said...

தமிழருவி மணியன் நிறைய விஷயங்கள் தெளிவாக்கியிருக்கிறார்..

செங்கோவி said...

இவர் விஜயகாந்த்தை வறுத்தெடுக்க வேண்டாமா..இப்படி மழுப்புறாரே..

சிவரதி said...

தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

இப்பதானே புரியுது அரசியல்ன்னா என்னன்னு.

//செங்கோவி said...
இவர் விஜயகாந்த்தை வறுத்தெடுக்க வேண்டாமா..இப்படி மழுப்புறாரே..//

பங்காளியே எப்பிட் பாஸு அவரு வருதெடுப்பாறு, அப்பிடி செஞ்சா அது அவரை அவரே திட்டிகிரே மாதிரி இல்லையா??