Saturday, April 30, 2011

எம் ஜி ஆர் சந்திரபாபுவை வெறுத்தது ஏன்?

கழுகார் பதில்கள் - காமெடி கும்மி

1.குணசீலன், தஞ்சாவூர்

சார்லி சாப்ளின் நடிப்பு பிடிக்குமா?
சாப்ளினை ரசிக்காதவர்கள் ரசிப்புத்தன்மை இல்லாதவர்கள்! அவர் நடிகர் மட்டுமல்ல...  தத்துவ மேதை! இதோ சில முத்துகள்...

. வாழ்க்கையே ஒரு நகைச்சுவை​தான்.
. மழையில் நனைவது பிடிக்கும், ஏனென்றால் நான் அழுவதை யாரும் கவனித்துவிட முடியாது.

. வாழ்க்கையை நெருங்கிப் பார்த்தால் சோகம், விலகிப் பார்த்தால் இன்பம்.

.நீங்கள் தலைகுனிந்து நடந்தால், வானவில்லை ரசிக்க முடியாது.


.நினைவுகள் இருந்தால் தனிமை தெரியாது.

சி. பி  - கம்யூனிச சிந்தனைகளை, தொழிலாளர் படும் கஷ்டங்களை அவர் அளவுக்கு நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் யாரும் இல்லை.. பர்சனல் லைஃபில் அவர் போல் தோல்வியை சந்தித்த நகைச்சுவை நடிகரும் யாரும் இல்லை.

------------------------------
2.எல்லோரும் கரடியாய்க் கத்தி என்ன பயன்? நம் பிரதமரே வாக்களிக்கவில்லையாமே?

யாருக்கு வாக்களிப்பது என்று மன்மோகன் சிங் முடிவுக்கு வருவதற்குள், தேர்தல் முடிந்துவிட்டது. பாவம், பிரதமர் என்ன செய்வார்?



சி .பி. -அன்னையிடம் இருந்து ஆணை வரவில்லையோ என்னவோ?முன் மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் எல்லாம் இந்த மாதிரி இருந்தால்நாட்டை முன்னேற்றப்பாதையில் செலுத்துவது எப்படி?

 -------------------------------

3.ஆர்.ஜேஸ்மின் ரமேஷ், கம்பம்

தி.மு.க-வுக்கு எதிரான செய்திகளுக்கு கழுகார் முக்கியத்துவம் தருவது ஏன்?

அ.தி.மு.க ஆட்சிக் காலமாக இருந்திருந்​தால் நீர், இதே கேள்வியை மாற்றிக் கேட்டிருப்பீர். காய்க்கும் மரமே கல்லடி படும். ஆளும் கட்சியே அதிக விமர்சனங்களை சந்திக்க நேரும்!

சி பி - உச்சியில் இருப்பவர்களைத்தானே குட்ட முடியும்?

----------------------------------
4. ஜி.விஸ்வநாதன், நாகர்கோவில்.

நல்ல நடிகர் சந்திரபாபுவை குடிதானே வீழ்த்தி​யது?

குடியும்!
ஆனால், மனசுக்குள் எதையும் மறைத்து வைக்​காமல் வெளிச்சத்தில் போட்டு உடைத்த குணம் உடையவர் என்பதால், அவர் வீழ்த்தப்பட்டார் என்பதே உண்மை!

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரையும்பற்றி சந்திரபாபுவிடம் கருத்துக் கேட்டார் ஒரு நிருபர்.

'ஜெமினி என்னோட ஆதிகால நண்பன். அவனுக்கு காமெடி எப்படிப் பண்ணனும், லவ் சீன் எப்படிப் பண்ணனும் என்று நடித்துக் காட்டுவேன்.

அடே அம்பி, இத்தனை வருஷமாச்சு. நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை!

சிவாஜி நல்ல ஆக்டர், பட்... அவரைச் சுத்தி காக்கா கூட்டம். அந்த ஜால்ரா கூட்டம் போனாத்தான் தேறுவார்.

எம்.ஜி.ஆர்., கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். கம்பவுண்டராகப் போகலாம்’ என்று பதில் சொன்னவர் சந்திரபாபு. இடம், பொருள் பார்க்காமல், இப்படி கமென்ட்கள் அடித்ததால்தான் அவருக்கு சிக்கல் வந்தது!

சி பி - ஓப்பனா பேசக்கூடாது என்பது வி ஐ பி களுக்கான எழுதப்படாத விதி.. நம் ஆர் ராதாவும்,சந்திரபாபுவும் அதை மீறினார்கள். அவர்கள் பலமும் அதுதான்,பலவீனமும் அதுதான்

---------------------------------

5. போடி எஸ்.சையது முகமது, சென்னை-93

  மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் பற்றி?

'அவருக்கு யாருய்யா சகாயம்னு பேர் வெச்சது? எந்த சகாயமும் பண்ண மாட்டேன்னு சொல்றாரே?’ என்று புலம்பினாராம் மத்திய அமைச்சர் அழகிரி.
'யார் என்னைத் தொந்தரவு செய்தாலும், இந்த சகாயம் நேர்மை தவற மாட்டான்’ என்பது அவர் அடிக்கடி சொல்வது.

2026-ல் யார் முதலமைச்சராக வருவார் என்பதைக்கூடக் கணக்குப் போட்டு காக்கா பிடிக்க நினைக்கும் ஐ.ஏ.எஸ். அதிகார வர்க்கத்தில் தப்பிய சிலரில் சகாயமும் ஒருவர். இந்த சமூகம் இன்னும் மோசமாகிவிடவில்லை, நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஒரு சாட்சி!

சி. பி -சகாயம் அரசியல்வாதிகளுக்கு ஒரு கசாயம். சேற்றில் செந்தாமரைகள் முளைப்பது மாதிரி நாட்டில் சில நல்லவர்கள் தோன்றுவது உண்டு

---------------------------

6.ரேவதிப்ரியன், ஈரோடு

  உங்கள் குரு யார்?

வாசகர்!

சி பி - காசு குடுத்து வாங்கிப்படிக்கறவங்களா? ஓ சி ல லைப்ரரில படிக்கறவங்களா?

--------------------------
7. வி.சுதாகரன், நெய்வேலி.

  ஈழத் தமிழர் பிரச்னையை முழுமையாக அறிந்துகொள்ள சில புத்தகங்களைப் பரிந்துரை செய்யுங்கள்!


போரும் சமாதானமும் - ஆன்டன் பாலசிங்கம்

சமாதானம் பேசுதல் - 'அடையாளம்’ வெளியீடு

ஈழத்தமிழர் போராட்ட வரலாறு - பாவைச் சந்திரன்

இந்த மூன்றும் புராதன இலங்கையில் தொடங்கி ராஜபக்ஷேவின் காலம் வரைக்குமான அனைத்து அழிவுத் தகவல்களையும் அப்பட்டமாகச் சொல்கின்றன!

சி பி - புத்தகங்கள் படிப்பதை விட ஈழ அகதியிடம் ஒரு நாள் இருந்து அவர்களுடன் பேசிப்பார்த்தாலே அவர்கள் வலியை உணர முடியும்.

-----------------------

8. எம்.செல்லையா, சாத்தூர்

  நரேஷ்குப்தா, பிரவீண் குமார் ஒப்பிடுக!

இரண்டுமே அணுகுண்டுகள். ஒன்று அமைதியாகவும், இன்னொன்று அதிரடியாகவும் வெடிக்கும்!

சி பி -ஆணவத்தால் ஆடிய அரசியல்வாதி மாப்புகளை ஆப்பு அடித்தவர்கள் இருவருமே..

------------------------------


9. வி.செல்லப்பா, திருநெல்வேலி.

  இந்தத் தேர்தலில் செலவான பணத்தின் மதிப்பு எவ்வளவு இருக்கும்?

ஒரே ஒரு கட்சி செலவழித்தது மட்டும் இரண்டாயிரம் கோடியைத்  தாண்டுகிறது!  இதைத்தான் பூஜ்யங்களின் ராஜ்யம் என்கிறார்கள்!

சி பி - பிஸ்னெஸ்மேன் முதல் போட்டு பின் போட்ட காசை எடுப்பது மாதிரி சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை எடுக்கிறார்கள்.பாக்கெட்டில் இருந்தா செலவு பண்ணுனாங்க.? ஏற்கனவே அடிச்ச காசில இருந்து ஒரு பர்சண்ட்டேஜ்ஜை செலவு பண்ரது பெரிய தியாகமா? என்ன?

----------------------------
10. என்.சொர்ணம், தூத்துக்குடி.

  ஆ.ராசா எப்படி இருக்கிறார்?

தேர்தல் முடிந்ததும் தன்னை வந்து தலைவர் சந்திப்பார் என்று நினைத்தாராம். ஆசை நிராசை ஆகி வருவது அவருக்கு வருத்தமாகத் தானே இருக்கும்!

 சி பி - மாட்டிக்கொள்ளாதவரை மகான், மாட்டிக்கொண்டால் மாக்கான் .
தலைவர் வராட்டி என்ன? தலைவி வந்தாங்களே போதாதா?


-------------------------------
11. சி.சாந்தி, மதுரை.

  அமைச்சர்களில் அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் யார்?

தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கிறார்!

 சி பி - அதிகம் சம்பாதித்த முதல் அமைச்சர் நம் முதல் அமைச்சர்?

60 comments:

Unknown said...

hehe

Unknown said...

நண்பா நல்ல பதிவு....நன்றி!

சார்லி ஒரு சகாப்தம்........

தனிப்பட்ட வாழ்கையின் வலி மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களின் சிரிப்பில் மகிழ்ந்தவர்......
- இது எழுதப்படாத விதி....உள்ளுக்குள் அழுபவன் எவனோ அவனே வெளியில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டு இருப்பான்..........

சந்திரபாபு..........மனைவி காதலித்த மனிதனுடனேயே அனுப்பி வைத்த மகான்.......அந்த பிரிவினால் தான் அப்படி ஆனார் என்று நினைக்கிறேன்.........
இவரைப்போல வாழ்ந்தவரும் இல்லை இறந்தவரும் இல்லை.....

Unknown said...

வெளிப்படையான பேச்சினால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்பதாலேயே இந்த பதில் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>விக்கி உலகம் said...

வெளிப்படையான பேச்சினால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்பதாலேயே இந்த பதில் ஹிஹி!

நீ பாதிக்கப்பட்டாயா? பர்சனல் லைஃப்லயா?பதிவுலகிலா?

Unknown said...

பதிவுலகம் என்றுமே மகிழுலகம் தான்.......அதை எடுத்துக்கொள்பர்களின் பார்வையில்..ஹிஹி!......

சொந்த வாழ்கை எப்பவுமே நமக்கு சொந்தமில்லாத வாழ்கை ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

பதிவுலகம் என்றுமே மகிழுலகம் தான்.......அதை எடுத்துக்கொள்பர்களின் பார்வையில்..ஹிஹி!......

சொந்த வாழ்கை எப்பவுமே நமக்கு சொந்தமில்லாத வாழ்கை ஹிஹி!

ஈரான் படம் பார்க்கற மாதிரி இருக்கு.. புரியற மாதிரி சொல்லப்பா

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

பதிவுலகம் என்றுமே மகிழுலகம் தான்.......அதை எடுத்துக்கொள்பர்களின் பார்வையில்..ஹிஹி!......

சொந்த வாழ்கை எப்பவுமே நமக்கு சொந்தமில்லாத வாழ்கை ஹிஹி!

ஈரான் படம் பார்க்கற மாதிரி இருக்கு.. புரியற மாதிரி சொல்லப்பா"

>>>>>>>>>.

படிப்பாளிகளின் மத்தியில் சாதாரண மனிதன் இந்த விக்கி அவ்ளோதான் சொல்லுவேன்.......போட்டு வாங்குறியா பிச்சி புடுவேன்!

சக்தி கல்வி மையம் said...

சொந்த வாழ்கை எப்பவுமே நமக்கு சொந்தமில்லாத வாழ்கை ஹிஹி! //// நேத்து அம்பது வயசு பாட்டிகூட பேசனவரு தத்துவம் சொல்றாருயா ?

Unknown said...

" !* வேடந்தாங்கல் - கருன் *! said...
சொந்த வாழ்கை எப்பவுமே நமக்கு சொந்தமில்லாத வாழ்கை ஹிஹி! //// நேத்து அம்பது வயசு பாட்டிகூட பேசனவரு தத்துவம் சொல்றாருயா"

>>>>>>>>>>>>

பல்பு வாங்கறது தான் சிறப்பு ஹிஹி......கால்ல முள்ளு குத்தாம இருந்து இருந்தா செருப்பு நமக்கு கெடச்சி இருக்குமா மாப்ள!

Unknown said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி அத சொட்டு சொட்டாவும் சந்தோஷத்தோட குடிக்கலாம்.......ஒரே மூச்சில
முழுசையும் காலி பண்ணிப்புட்டு தண்ணிக்கு ஏங்கலாம் ஹிஹி choice is yours!

சக்தி கல்வி மையம் said...

கால்ல முள்ளு குத்தாம இருந்து இருந்தா செருப்பு நமக்கு கெடச்சி இருக்குமா மாப்ள!///// அட்ரா..அட்ரா..அட்ரா..

சக்தி கல்வி மையம் said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி//// பிளாக் லேபில் விஸ்கியா மாப்ள... பப்ளிக்..பப்ளிக் ..

சி.பி.செந்தில்குமார் said...

>>பல்பு வாங்கறது தான் சிறப்பு ஹிஹி......கால்ல முள்ளு குத்தாம இருந்து இருந்தா செருப்பு நமக்கு கெடச்சி இருக்குமா மாப்ள!

தத்துவமா போட்டுத்தாக்கறானே.. இன்னைக்கு ஆஃபீஸ் பி ஏ லீவாடா?

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி அத சொட்டு சொட்டாவும் சந்தோஷத்தோட குடிக்கலாம்.......ஒரே மூச்சில
முழுசையும் காலி பண்ணிப்புட்டு தண்ணிக்கு ஏங்கலாம் ஹிஹி choice is yours!

April 30, 2011 8:32 AM

தக்காளி ஆஃபீஸ் ஸ்டெனோ லீவுன்னா எப்படி எல்லாம் தத்துவம் வெளில வருது பாரு.

சக்தி கல்வி மையம் said...

நீ பாதிக்கப்பட்டாயா? பர்சனல் லைஃப்லயா?பதிவுலகிலா? ///// இது கொத்துவிடறத பாரு?

சி.பி.செந்தில்குமார் said...

>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி//// பிளாக் லேபில் விஸ்கியா மாப்ள... பப்ளிக்..பப்ளிக் ..

கருண் நல்ல வாத்தியார்னு நினைச்சேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

Blogger !* வேடந்தாங்கல் - கருன் *! said...

நீ பாதிக்கப்பட்டாயா? பர்சனல் லைஃப்லயா?பதிவுலகிலா? ///// இது கொத்துவிடறத பாரு?

கோர்த்துவிட விக்கி பாசி அல்ல பாஸ்

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
>>பல்பு வாங்கறது தான் சிறப்பு ஹிஹி......கால்ல முள்ளு குத்தாம இருந்து இருந்தா செருப்பு நமக்கு கெடச்சி இருக்குமா மாப்ள!

தத்துவமா போட்டுத்தாக்கறானே.. இன்னைக்கு ஆஃபீஸ் பி ஏ லீவாடா?"

>>>>>>>>>

தம்பி சிபி அடுத்த நாலு நாளைக்கு வியட்நாம் விடுமுறை அதான் ஹிஹி!

ரஹீம் கஸ்ஸாலி said...

mm...ok

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி//// பிளாக் லேபில் விஸ்கியா மாப்ள... பப்ளிக்..பப்ளிக் ..

கருண் நல்ல வாத்தியார்னு நினைச்சேன் ஹி ஹி"

>>>>>>>>>>>

மாப்ள ப்ளாக்கா இருந்தா என்ன ரெட்டா இருந்தா என்ன தளுக்கா இருந்தா சரி ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

" சி.பி.செந்தில்குமார் said...
>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி//// பிளாக் லேபில் விஸ்கியா மாப்ள... பப்ளிக்..பப்ளிக் ..

கருண் நல்ல வாத்தியார்னு நினைச்சேன் ஹி ஹி"

>>>>>>>>>>>

மாப்ள ப்ளாக்கா இருந்தா என்ன ரெட்டா இருந்தா என்ன தளுக்கா இருந்தா சரி ஹிஹி!

டேய்.. அவர் என்ன கேட்கறாரு.. நீ என்ன பதில் சொல்றே? ராஸ்கல்..

சி.பி.செந்தில்குமார் said...

> தம்பி சிபி அடுத்த நாலு நாளைக்கு வியட்நாம் விடுமுறை அதான் ஹிஹி!

ஓ.. அதான் தேவதாஸ் மாதிரி புலம்பலா. விட்ரா.. ஆஃபீஸ்ல சிக்காட்டி என்ன? ரெகுலரா பார்க் போவியே.. அங்கே ட்ரை பண்ணு

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

" சி.பி.செந்தில்குமார் said...
>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி//// பிளாக் லேபில் விஸ்கியா மாப்ள... பப்ளிக்..பப்ளிக் ..

கருண் நல்ல வாத்தியார்னு நினைச்சேன் ஹி ஹி"

>>>>>>>>>>>

மாப்ள ப்ளாக்கா இருந்தா என்ன ரெட்டா இருந்தா என்ன தளுக்கா இருந்தா சரி ஹிஹி!

டேய்.. அவர் என்ன கேட்கறாரு.. நீ என்ன பதில் சொல்றே? ராஸ்கல்.."

>>>>>>>>>>

திரு சிபி அவர்களே தளும்பாமல் என்பது மருகி....தளுக்கா என்று வந்து விட்டது ஹிஹி!

Unknown said...

" சி.பி.செந்தில்குமார் said...
> தம்பி சிபி அடுத்த நாலு நாளைக்கு வியட்நாம் விடுமுறை அதான் ஹிஹி!

ஓ.. அதான் தேவதாஸ் மாதிரி புலம்பலா. விட்ரா.. ஆஃபீஸ்ல சிக்காட்டி என்ன? ரெகுலரா பார்க் போவியே.. அங்கே ட்ரை பண்ணு"

>>>>>>>>>

இன்னைக்கு ஹாலாங் போலாம்னு இருக்கேன்......
உதவியாளர்களுடன்... ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>திரு சிபி அவர்களே தளும்பாமல் என்பது மருகி....தளுக்கா என்று வந்து விட்டது ஹிஹி!

மருகுதே உருகுதே..

சி.பி.செந்தில்குமார் said...

>>இன்னைக்கு ஹாலாங் போலாம்னு இருக்கேன்......
உதவியாளர்களுடன்... ஹிஹி!

அடேய்.. ஒவ்வோண்ணா முடிடா..

Unknown said...

"சி.பி.செந்தில்குமார் said...
>>இன்னைக்கு ஹாலாங் போலாம்னு இருக்கேன்......
உதவியாளர்களுடன்... ஹிஹி!

அடேய்.. ஒவ்வோண்ணா முடிடா.."

>>>>>

திரு சிபி அவர்கள் தம் கண்ணியமான(!)...
தளத்தில் தகாத வார்த்தைகளை இடுவதை எண்ணி வருந்துகிறேன் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

>>
திரு சிபி அவர்கள் தம் கண்ணியமான(!)...
தளத்தில் தகாத வார்த்தைகளை இடுவதை எண்ணி வருந்துகிறேன் ஹிஹி!

அடப்பாவி.. சைக்கிள் கேப்ல கெடா வெட்டிட்டே

செங்கோவி said...

நான் சந்ரு மேட்டர்ல இன்னும் கொஞ்சம் கில்மாவை எதிர்பார்த்தேன்!

காந்திமதி said...

நானும் வந்துட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

செங்கோவி said...

நான் சந்ரு மேட்டர்ல இன்னும் கொஞ்சம் கில்மாவை எதிர்பார்த்தேன்!

நான் சொந்தமா எழுதும் பதிவில் இன்னும் பல கில்மாக்கள் அபவுட் சந்த்ர பாபு வரும். விரைவில்.

Anonymous said...

இப்படி எல்லாமா நடக்குது?

ராஜி said...

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி

டக்கால்டி said...

Vanthen

டக்கால்டி said...

Padithen

டக்கால்டி said...

Rasithen

சசிகுமார் said...

நல்ல பதிவு.

மனம் திறந்து... (மதி) said...

//நாட்டில் சில நல்லவர்கள் தோன்றுவது உண்டு//

பதிவுலகில் உங்களை மாதிரி! :)))

//ஓசில லைப்ரரில படிக்கறவங்களா//

ஓசில பதிவுலகில எல்லாரையும் படிக்க வைக்கறவங்களா? :)))

தப்பா எடுத்துக்காதீங்க... ஊரே பாராட்டுவதும், உலையில் போடுவதும் //உச்சியில் இருப்பவர்களைத்தானே!//

கேணியூர் வீறுடை வேந்தனார் said...

அண்ணே! என் மாமன் பன்னிக்குட்டிய எங்கயாச்சும் பார்த்தேளா? அவர என்கிட்ட பேச சொல்லுங்க!

Vairavan said...

Anna cp idu nall copy.

Anonymous said...

உருப்படியான காப்பி பேஸ்ட்

காங்கேயம் P.நந்தகுமார் said...

காபி பேஸ்டோ டீ பேஸ்டோ நல்ல பதிவா போடுறீங்க நன்றி! ஆனா தயவு செய்து ராசிபலன் மட்டும் போடாதீங்க ஏன்னா உங்களை ஊருக்குள்ள நல்ல திறமைசாலின்னு சொல்லிவச்சிருக்கேன்

ராஜ நடராஜன் said...

எம்.ஜி.ஆர்,சந்திரபாபு ரகசியம் வருவதற்கே இத்தனை வருசமா?

முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா எதிரா கோல் போட நினைச்சவங்களுக்கு ஒரு லட்டு சாப்பிடற விசயமாச்சே இது!

ராஜ நடராஜன் said...

எனக்கென்னமோ நரேஷ் குப்தா அணுகுண்டை விட பிரவின் குமார் அணுகுண்டு பிடிச்சிருக்கு.

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை நல்ல தகவல்கள், சாப்ளியின் சிரிப்பை ரசிக்காதவன் மனநோயாளி....

MANO நாஞ்சில் மனோ said...

எம் ஆர் ராதா'வின் சந்திரபாபு'வின் புகழ் ஒன்னும் மங்கவில்லை தெரியுமில்லே...

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
வெளிப்படையான பேச்சினால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்பதாலேயே இந்த பதில் ஹிஹி!///


பார்த்து மக்கா......

நான் மக்கா [[நண்பா]] என்று சொன்னதுக்கே அடிக்க வாராணுக....

MANO நாஞ்சில் மனோ said...

//வேடந்தாங்கல் - கருன் *! said...
சொந்த வாழ்கை எப்பவுமே நமக்கு சொந்தமில்லாத வாழ்கை ஹிஹி! //// நேத்து அம்பது வயசு பாட்டிகூட பேசனவரு தத்துவம் சொல்றாருயா ?///


ஹா ஹா ஹா ஹா அப்பிடி போடு அருவாளை....

MANO நாஞ்சில் மனோ said...

//சி.பி.செந்தில்குமார் said...
>> !* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்கை ஒரு க்ளாஸ் தண்ணி மாதிரி//// பிளாக் லேபில் விஸ்கியா மாப்ள... பப்ளிக்..பப்ளிக் ..

கருண் நல்ல வாத்தியார்னு நினைச்சேன் ஹி ஹி///


ஹாஆஆஆஆஆஆஆ ஹாஆஆஆஆ சிரிச்சி முடியலை....

MANO நாஞ்சில் மனோ said...

சிபி'க்கு எதிரா கேஸ் போடலாமான்னு ஆலோசனை பண்ணிட்டு இருக்கேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//திருமதி.பன்னிக்குட்டி said...
அண்ணே! என் மாமன் பன்னிக்குட்டிய எங்கயாச்சும் பார்த்தேளா? அவர என்கிட்ட பேச சொல்லுங்க!///


இது என்னய்யா புதுசா ஒன்னு கிளம்பிருக்கு.....

MANO நாஞ்சில் மனோ said...

இரு இரு ஓட்டு போட்டுட்டு வாரேன்....

உணவு உலகம் said...

சார்லி ஒரு சகாப்தம்........//
சந்தேகமென்ன?

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை நல்ல தகவல்கள், சாப்ளியின் சிரிப்பை ரசிக்காதவன் மனநோயாளி....//
யாரை சொல்றீங்க?

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
வெளிப்படையான பேச்சினால் பாதிக்கப்பட்ட பலரில் நானும் ஒருவன் என்பதாலேயே இந்த பதில் ஹிஹி
பார்த்து மக்கா......
நான் மக்கா [[நண்பா]] என்று சொன்னதுக்கே அடிக்க வாராணுக....//
யார்ரா அது! அருவா மனோவை அடிக்க வருவது?

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
சிபி'க்கு எதிரா கேஸ் போடலாமான்னு ஆலோசனை பண்ணிட்டு இருக்கேன்....//
வக்கீல் ஃபீஸ் நான் கொடுக்கட்டுமா?

உணவு உலகம் said...

//Blogger MANO நாஞ்சில் மனோ said...
இரு இரு ஓட்டு போட்டுட்டு வாரேன்....//
ஓட்டைப் போட இம்மா நேரமா?

Speed Master said...

த்மிழ்மணம் 11
இண்ட்லி 29
10 10



தேவையான ஆணி !! ? முன்னெச்சரிக்கைப் பதிவு

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_30.html

Dr. Selvaganesan said...

ஏன் சார்..ஜூ.வியில் இருந்து எடுத்து போட்டு அதற்கு பின்னூட்டமா?

Anonymous said...

present sir