Friday, April 22, 2011

ரொமான்ஸ் ரகசியங்கள் -காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா? ஒரு அலசல்

http://www.dating360.info/wp-content/uploads/2011/03/love5.jpg


உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' என்றபடி...அகிலன் இனி உங்களுடன்..! 

'காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்' என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா... ஒன்றானது இல்லையா?!

நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும் காதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது ஆச்சர்யமான செய்தி. காதல் உணர்ச்சிமயமானது. ஆனால், ரொமான்ஸ் ரொம்ப ஜாலியானது; கொஞ்சம் 'பிளேபாய்’தனமானது என்றும் சொல்லலாம். பேசாமலே மவுன மொழியில்கூட காதல் செய்துவிடலாம். 'ப்ளடானிக் லவ்' (Platonic love) என்று சொல்வார்கள். 

ஆனால், ரொமான்டிக் விஷயம் அப்படி அல்ல. அதற்கு இனிமையான உரையாடல், நகைச்சுவை உணர்ச்சி, செக்ஸ், நடனம், இசை, கலை,இலக்கியம், எதிர்பாராத சர்ப்ரைஸ்களைக் கொடுத்தல் என்று எத்தனையோ பரிமாற்றங்கள் தேவைப்படும். 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghCyNxjIqI0y27tWVrTsWPtuZlz2ASycZxpmUg8XXHDTrgUcw6tgBmN-MMRTgVXEZxK0A-pkLp7bNqJAXDYlFBjX3dVLZF25MFBHBEIddm3ylednSHfIBmlDtC7WJEXwknBvOphb2jEqrm/s1600/love-wallpaper11.jpg
இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

செல்வகுமார் - சமிக்ஷா... காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள்தான் ஆகின்றன. ஓர் ஆண் குழந்தை. இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறியிருக்கிறார்கள். என்ன ஆச்சு?

குழந்தை பிறக்கும் வரை ரொமான்டிக்கான விஷயங்களுக்கு இருவருக்குமே நிறைய நேரம் இருந்தது. அடிக்கடி கிளம்பி எங்காவது ரிஸார்ட்டுக்குப் போய்விடுவார்கள். செக்ஸ் என்பதை வீட்டில் நான்கு சுவர்களுக்குள் மட்டும் அனுபவிக்காமல்... வெவ்வேறு லொகேஷன்களில் ருசித்தார்கள். 'முத்தம்’ என்பதில் கிடைக்கும் எனர்ஜியும், எலெக்ட்ரி சிட்டியும் உற்சாகத்தைத் தரக்கூடியது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஒரு நாளைக்கு பத்து முத்தங்களாவது கொடுத்துக் கொள்வார்கள்.

செல்வகுமார் சர்ப்ரைஸ் கிஃப்ட்டுகள் கொடுப்பதில் வல்லவன். முக்கியமாக வகை வகையான வண்ணங்களைக் கொண்ட உள்ளாடை களைப் பரிசாகக் கொடுத்து, மனைவியைச் அணியச் சொல்லி ரசிப்பான். அந்த இரவு உடைகள் எல்லாம் 'ஸீ த்ரூ’ பாணியில் மிகவும் செக்ஸியாக இருக்கும்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWGX_i4z0220BYkEHFCl4OfdZd2ivkD0Dd5XbQQNgRseMqFII62ECMeKfZfeEgh3XIWyTIIh2qp5vE9r0zPLZn7i6viRdCjMaqoCaOji3EZ1E0_xnvPz0Rglx6XKbErAGhB3_i-_FE4ic/s400/z115013046.jpg+3.jpg
முதலில் சமிக்ஷா வெட்கப்பட்டாலும், உள்ளூர அதில் மிகவும் மகிழ்ந்தாள். பதிலுக்கு அவளும் செல்வ  குமாருக்கு நிறைய பரிசுகளை வழங்குவாள். அவனைக் குளிக்க வைத்து, தானும் நனைவாள். செக்ஸில் முழு ஈடுபாடு காட்டுவாள். காதலர்கள் போல் சினிமா தியேட்டர் இருட்டறைகளில் அவன் கொடுக்கும் முத்தங்களை வாங்கிக் கொள்வாள்.

ஆனால், தொடர்ந்த மாதங்களில் அவரவர் அலுவலகங்களில் புரமோஷன் பெற்று, ஹவுஸிங் லோன், பிரசவ நெருக்கடிகள், குழந்தை பறித்துக் கொண்ட நேரம் போன்றவற்றால் அந்நியோன்யத்துக்கான நேரம் மெள்ள குறைந்து போனது- பேச்சும்கூட! 

இரவு வீட்டுக்கு வந்ததும் கொஞ்ச நேரம் டி.வி. பார்த்துவிட்டு உடனே தூங்குவதற்குத்தான் மனமும் உடலும் அவர்களுக்கு இடம் தந்தன. இருவருக்கும் உள்ளுக்குள்ளே காதல் இருந்தாலும், தினசரி வாழ்க்கையை சுவாரஸ்யமாக எடுத்துக் கொள்ள தேவைப்பட்ட ரொமான்ஸ் இல்லாமல் போனதால், அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. முக்கிய மான பிரச்னையே, இருவரும் பேசிக் கொள்ளாமல் போனதுதான்.

பிரபல செக்ஸாலஜி டாக்டர் கோத்தாரி, 'முக்கால்வாசி ஆண்-பெண் உறவுகளுக்கான அடிப்படைப் பிரச்னையே பேசிக் கொள்ளாமல் இருப்பதுதான். ஓபனாகப் பேசிக் கொள்வதன் மூலமே பல பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்!' என்கிறார்.
 http://images2.fanpop.com/image/photos/8900000/LOVERS-love-8964894-1024-768.jpg
மற்றொரு தம்பதி, பிருந்தா - சரவணன். இவர்களுக்கு ஆரம்பத்திலேயே காதலும் இல்லை, ரொமான்ஸும் இல்லை. அரேஞ்சுடு மேரேஜ். இயந்திர மயமாக உடலுறவில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளையும் பெற்று விட்டார்கள். ஆனால், பரஸ்பர வெறுப்பும், மனதில் வெறுமையும் இருவரை யும் பாதித்துக் கொண்டே இருந்தது. கோர்ட் படி ஏறாமலே தனித்தனி யாகப் பிரிந்துவிட்டனர். குழந்தைகளையும் பிரித்துக் கொண்டார்கள்.

'ஓர் உண்மையான பாராட்டு என்னைப் பல மாதங்களுக்கு உற்சாகமாக வைத்திருக்கும்' என்றார் எழுத்தாளர் மார்க் ட்வைன். இது கணவன் - மனைவி உறவுக்கும் மிகவும் பொருந்தும். மனைவி புதிதாக சமைத்தால், அதைக் கணவன் பாராட்ட வேண்டும். கணவன் ஒரு பரிசு வாங்கி வந்து கொடுத்தால், இனிய முத்தங்கள் கொடுத்து மனைவி பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டு என்பது காதலையும், ரொமான்ஸையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்.

மனிதர்களில் மூன்று வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதல் வகை, ‘I am ok, your are also ok’.. அதாவது, 'நானும் சரியாக இருக்கிறேன். நீயும் சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

இரண்டாவது வகை ‘I am not ok, but you are ok’.. அதாவது, 'நான் சரியாவன்/ள் இல்லை. நீ சரியாக இருக்கிறாய்' என்று நினைப்பவர்கள்.

மூன்றாவது வகை, ‘I am ok, but you are not ok’. இவர்கள், 'நான் சரியாகத்தான் இருக்கிறேன். நீ சரியில்லை' என்று நினைப்பவர்கள்.

இந்த மூன்று வகை மனிதர்களில் பிரச்னைகள் அதிகம் இல்லாமல் நிம்மதியாக வாழ்பவர்கள்... முதல் வகைதான். 'நானும் சரி, நீயும் சரி. பேசித் தீர்ப்போம் வா' என்று நினைக்கிற ஜனநாயகவாதிகள். வாழ்க்கையில் ஜெயிப்பவர்கள்.

இரண்டாவதும், மூன்றாவதும் டேஞ்சர் வகையைச் சேர்ந்தது. இந்த இரு வகையினரின் மனநிலையும் சரியானதல்ல. இவர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் வாழ்க்கை எப்போதும் ஏடாகூடமாகத்தான் இருக்கும்

. -தொடரும்


நன்றி - அவள் விகடன்

96 comments:

Unknown said...

அருவா அருவா

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி.. ஆஃபீஸ்ல செகரட்டரியை மிரட்றான்.. இங்கே சின்னப்பையனை மிரட்றான்..

Unknown said...

சிபி பின்றைய்யா இன்னைக்கு தான் உன் லைனுக்கு வந்து இருக்க ஹிஹி!

Unknown said...

சின்னப்பய்யனா எங்க எங்க..........

Unknown said...

உண்மையில பச்சையா சொல்லட்டா இந்த பதிவுக்கு என்னோட பதில்கள ஹிஹி!

நிரூபன் said...

காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா? ஒரு அலசல்_//

நல்லதொரு விடயம், ஆனால் அனுபவசாலிகள் தானே இதனை அலச முடியும்?
ஹி...ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

>> விக்கி உலகம் said...

சிபி பின்றைய்யா இன்னைக்கு தான் உன் லைனுக்கு வந்து இருக்க ஹிஹி!


mkkum.. ம்க்கும்..நான் எப்பவும் ஆன் லைன்.. நீ எப்பவும் பெண் லைன்.. உன் சம்சாரத்துக்கு மட்டும் உன் மேட்டர் தெரிஞ்சுது ஆகிடுவாங்க LION

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா? ஒரு அலசல்_//

நல்லதொரு விடயம், ஆனால் அனுபவசாலிகள் தானே இதனை அலச முடியும்?
ஹி...ஹி...

ஆமா.. அதனால தான் நான் புக்ல வந்த மேட்டரைப்போட்டிருக்கேன்.#அப்பாவி ஆறுமுகம்

பை த பை நிரூபன் நீங்க போட்ட இன்றைய பதிவு 1500 ஹிட்ஸ் அடிக்கும் வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உண்மையில பச்சையா சொல்லட்டா இந்த பதிவுக்கு என்னோட பதில்கள ஹிஹி!

இது ஒரு கண்ணியமான பிளாக் என்பதையும், இதன் நிறுவனர் கண்ணியமானவர் என்பதையும் கவனத்தில் கொண்டு பதில் அளிக்கவும்.. ஹி ஹி

நிரூபன் said...

உங்கள் தாம்பத்ய வாழ்வில் இறுக்கத்தை இளக்கி, நெருக்கத்தை கூட்டும் 'ரொமான்ஸ் ரகசியங்களை’ எழுத்தாளர் அகிலன் சித்தார்த். ''இன்பத் தேன் எடுக்கும் வழி சொல்ல நான் ரெடி, பருக பி ரெடி!'' //

நான் ரெடி, பருக நீ..ரெடியா...ஆகா...அகா....
காலையிலே இப்படி ஒரு பதிவா.
தூக்கத்தில் இருந்து மொபைல் மூலம் படிப்பவர்கள் எந்திருக்கவே மாட்டார்கல்.

நிரூபன் said...

காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்//

அஃதே......அஃதே...

அப்பபோ அணைக்கனும் என்று சொல்ல வாறீங்க....

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
நிரூபன் said...

காதல் வேறு .. ரொமான்ஸ் வேறா? ஒரு அலசல்_//

நல்லதொரு விடயம், ஆனால் அனுபவசாலிகள் தானே இதனை அலச முடியும்?
ஹி...ஹி...

ஆமா.. அதனால தான் நான் புக்ல வந்த மேட்டரைப்போட்டிருக்கேன்.#அப்பாவி ஆறுமுகம்//

மறைமுகமா அனுபவசாலியின் எழுத்துக்களின் வீரியம் பதிவில் தெரிகிறதே;-))

பை த பை நிரூபன் நீங்க போட்ட இன்றைய பதிவு 1500 ஹிட்ஸ் அடிக்கும் வாழ்த்துக்கள்//

சகோ, உங்க வாயிலை சர்க்கரையை அள்ளிப் போடுறதா இல்ல கற்கண்டைக் கொட்டுறதா என்று தெரியவே இல்ல.. நன்றிகள் நன்றிகள்.
இன்று பிள்ளையார் கோயிலுக்கு உடைக்க இருக்கும் அத்தனை தேங்காய்களையும் வாங்கி உங்க பெயரிலை காணிக்கையா உடைச்சிடுறன்.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும்//

அஃதே......அஃதே...

அப்பபோ அணைக்கனும் என்று சொல்ல வாறீங்க....

aam.. ஆம் முதலில் விளக்கை .. பின் குடும்பத்து குத்து விளக்கை

Unknown said...

உண்மையில யாரும் மனசு விட்டு பேசறதுக்கு தயங்குறது தான் முதல் காரணம்.........இதில் ஆண்களை விட பெண்கள் கூச்சத்தினால்!

நிரூபன் said...

ரொமான்ஸ் ப்ளேபோய்த் தனமானதான்.....ஹி...ஹி....

சி.பி.செந்தில்குமார் said...

சமீப காலமாக நிரூபனின் ஹிட்ஸ்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம்.. சக படைப்பாளியாகவும், நண்பனாகவும் வாழ்த்துகிறேன்

Unknown said...

ஆனால் பெண் ஆணை விட அதிகம் ரொமான்ஸ் விரும்புவாள்....அதை வெளிக்காட்டினால் ஆண் தவறாக நினைத்துவிடுவானோ என்ற பயம் காரணம்!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

உண்மையில யாரும் மனசு விட்டு பேசறதுக்கு தயங்குறது தான் முதல் காரணம்.........இதில் ஆண்களை விட பெண்கள் கூச்சத்தினால்!

ஃபர்ஸ்ட் டாக் அஸ் ஓப்பன்.. அன் தென் கட் த ரிப்பன் என சொல்ல வர்றே..?

நிரூபன் said...

ரொமாண்டிக்கிற்கு இனிமையான விடயங்கள் தேவை என்பதற்கா பெட் ரூமில் போய் சங்கீதம் பாட முடியுமா ஆலோசகரே?

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

ஆனால் பெண் ஆணை விட அதிகம் ரொமான்ஸ் விரும்புவாள்....அதை வெளிக்காட்டினால் ஆண் தவறாக நினைத்துவிடுவானோ என்ற பயம் காரணம்!

ஆணின் தவிப்பு அடங்கி விடும்.. பெண்ணின் தவிப்பு தொடங்கி விடும்# வைர முத்து

நிரூபன் said...

இரண்டு ஜோடிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
சகோ, முதல் ஜோடியின் பெயரில் இரு எழுத்துக்களை மாறி டைப் செய்து விட்டீர்கள். திருத்தி விட்டு பதிவைப் போடவும்;-))

ஹி....

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

ரொமாண்டிக்கிற்கு இனிமையான விடயங்கள் தேவை என்பதற்கா பெட் ரூமில் போய் சங்கீதம் பாட முடியுமா ஆலோசகரே?

சங்கீத ஸ்வரங்கள் ஏழேழ் கணக்கா இன்னமும் இருக்கா ...? என்னமோ மயக்கம்?இன்றைக்கு இரவு..


மியூசிக் கூட ஒரு தூண்டு கோளே..

ம.தி.சுதா said...

3 வகையா அட அபத்தமா இருக்கே தொடரட்டும் பார்ப்போம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா

பதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
சமீப காலமாக நிரூபனின் ஹிட்ஸ்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம்.. சக படைப்பாளியாகவும், நண்பனாகவும் வாழ்த்துகிறேன்//

காலங் காத்தாலா.. உச்சியிலை ஏத்துறீங்களே!

நன்றிகள் நன்றிகள். ஆனா ஒரு விடயம், உங்கள் அனைவரதும், அன்பு நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் தான் இதற்கான காரணம் சகோ.
உங்களுக்குத் தான் இந்த வாழ்த்துக்கள் போய்ச் சேர வேண்டும்!

ம.தி.சுதா said...

அவள் விகடன் என்றால் அவன் என்னங்க...

Unknown said...

"விக்கி உலகம் said...

உண்மையில யாரும் மனசு விட்டு பேசறதுக்கு தயங்குறது தான் முதல் காரணம்.........இதில் ஆண்களை விட பெண்கள் கூச்சத்தினால்!

ஃபர்ஸ்ட் டாக் அஸ் ஓப்பன்.. அன் தென் கட் த ரிப்பன் என சொல்ல வர்றே..?"

>>>>>>>>>>>>

ஆண் எப்பவுமே உறவு விஷயத்தில் சற்று பின் தங்கினால் மன பாதிப்பு ஏட்பட்ட உணர்வுக்கு ஆளாவான் அதனால் தான் பெண் அமைதியா விட்டு விடுகிறாள் ஆண்மகனை!

நிரூபன் said...

வெவ்வேறு லொகேஷன்களில்...

யாரய்யா அவங்களைப் போய் பப்ளிக்கிலை பண்ணச் சொன்னது...

sulthanonline said...

ம்.. நல்ல அலசல். புரிந்து வாழ்ந்தால்,பிரிந்து வாழ அவசியமில்லை. எல்லோருக்குமுள்ள பிரச்சினையைப் பற்றி ஏதோ சொல்ல வந்திருக்கீங்கன்னு தெரியுது waiting ur next post.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃசி.பி.செந்தில்குமார் said...
சமீப காலமாக நிரூபனின் ஹிட்ஸ்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம்.. சக படைப்பாளியாகவும், நண்பனாகவும் வாழ்த்துகிறேன்ஃஃஃஃ

நிச்சயம் ஒரு பெரிய உச்சத்தை அவர் அடைவார் பாருங்கள்... ஏனென்றால் அவரும் பத்தோடு பதினொன்றாக எழுத வராமல் சாதிக்கணும் என வந்த ஒரு மனிதர்..

சி.பி.செந்தில்குமார் said...

aahaa.. சுதா வந்துட்டார்.. இனி அண்ணனது அனுபவங்களை அள்ளி விடுவாரா?

நிரூபன் said...

பதிவை வடிவாகச் செக் பண்ணவும்,

செந்தில்குமார் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதில் வல்லவன்.... என்று வர வேண்டும்....ஹி..ஹி...

சி.பி.செந்தில்குமார் said...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஃசி.பி.செந்தில்குமார் said...
சமீப காலமாக நிரூபனின் ஹிட்ஸ்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம்.. சக படைப்பாளியாகவும், நண்பனாகவும் வாழ்த்துகிறேன்ஃஃஃஃ

நிச்சயம் ஒரு பெரிய உச்சத்தை அவர் அடைவார் பாருங்கள்... ஏனென்றால் அவரும் பத்தோடு பதினொன்றாக எழுத வராமல் சாதிக்கணும் என வந்த ஒரு மனிதர்..

ஆம்.. இலங்கையைச்சேர்ந்த 5 பதிவர்களும் முக்கியமான இடத்தை பெறுவது உறுதி.. இந்தியா என்ன? இலங்கை என்ன? நாம் அனைவரும் தமிழர்கள் தானே?

Unknown said...

"♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஃசி.பி.செந்தில்குமார் said...
சமீப காலமாக நிரூபனின் ஹிட்ஸ்கள் பிரமிக்கத்தக்க முன்னேற்றம்.. சக படைப்பாளியாகவும், நண்பனாகவும் வாழ்த்துகிறேன்ஃஃஃஃ

நிச்சயம் ஒரு பெரிய உச்சத்தை அவர் அடைவார் பாருங்கள்... ஏனென்றால் அவரும் பத்தோடு பதினொன்றாக எழுத வராமல் சாதிக்கணும் என வந்த ஒரு மனிதர்.."

>>>>>>>>>>>>>

சுதா ஒருவரை உயர்த்தும்போது மற்றவறை தாழ்த்த வேண்டாம் எச்சரிக்கை!

ம.தி.சுதா said...

/////சி.பி.செந்தில்குமார் said...
aahaa.. சுதா வந்துட்டார்.. இனி அண்ணனது அனுபவங்களை அள்ளி விடுவாரா?/////

ஏன்யா ஹ...ஹ..... தேனிலவுக்கா போயிட்டு வந்தேன்...

சி.பி.செந்தில்குமார் said...

>> நிரூபன் said...

பதிவை வடிவாகச் செக் பண்ணவும்,

செந்தில்குமார் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுப்பதில் வல்லவன்.... என்று வர வேண்டும்....ஹி..ஹி...

சின்னப்பையனை சீண்டாதீங்க.. மீ பாவம்

நிரூபன் said...

பிரபல செக்ஸாலாயி டாக்டர் கோத்தாரி.. இது நிஜப் பெயரா இல்லை... நீங்க வைச்ச பெயரா?

சி.பி.செந்தில்குமார் said...

sulthanonline said...

ம்.. நல்ல அலசல். புரிந்து வாழ்ந்தால்,பிரிந்து வாழ அவசியமில்லை. எல்லோருக்குமுள்ள பிரச்சினையைப் பற்றி ஏதோ சொல்ல வந்திருக்கீங்கன்னு தெரியுது waiting ur next post.

காத்திருந்த மல்லி மல்லி .. பூத்திருக்கு துள்ளி துள்ளீ...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃ விக்கி உலகம் said...

சுதா ஒருவரை உயர்த்தும்போது மற்றவறை தாழ்த்த வேண்டாம் எச்சரிக்கை!ஃஃஃஃஃஃ

உண்மையிலயே உள் குத்து ஒண்ணும் இல்லிங்க சகோ.... சும்மா பேச்சு வாக்கில தான் சொன்னேன்...

நிரூபன் said...

கலியாணம் கட்டியதும் கொஞ்சக் காலம் அனுபவிக்கனுமாம், அதன் பிறகு தான் குழந்தை பெத்துக்கனும் என்று சொல்லுறாங்க நம்ம டாக்டர் ஷாலினி. அகவே இரண்டாவது தம்பதிகளை யாரும் பின்பற்ற வேண்டாம்.

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

பிரபல செக்ஸாலாயி டாக்டர் கோத்தாரி.. இது நிஜப் பெயரா இல்லை... நீங்க வைச்ச பெயரா?


நிஜமான பேருதான்

நிரூபன் said...

மனிதர்களில் மூன்று வகை என்று சுத்தி வளைச்சு விளக்கம் கொடுக்கிற மேட்டரை ஓப்பினாவே

திருப்தி இல்லை...
திருப்தி இருக்கு... என்று எழுதலாமே....

சி.பி.செந்தில்குமார் said...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஃ விக்கி உலகம் said...

சுதா ஒருவரை உயர்த்தும்போது மற்றவறை தாழ்த்த வேண்டாம் எச்சரிக்கை!ஃஃஃஃஃஃ

உண்மையிலயே உள் குத்து ஒண்ணும் இல்லிங்க சகோ.... சும்மா பேச்சு வாக்கில தான் சொன்னேன்...

சுதா ஒரு எதார்த்தவாதி.. நல்ல இலக்கியவாதி..

நிரூபன் said...

இனித் திரையில் ஒரு பாடல் ஒலிக்கட்டும்...

நிரூபன் said...

கோழி ரெண்டும் முழிச்சிருக்கு.....
இரண்டும் கூவாமல்.....

ம.தி.சுதா said...

ஃஃஃஃ நிரூபன் said...
பிரபல செக்ஸாலாயி டாக்டர் கோத்தாரி.. இது நிஜப் பெயரா இல்லை... நீங்க வைச்ச பெயரா?
ஃஃஃஃ

நிரு சும்மா ரகசியங்களை கிளறக் கூடாது...

Unknown said...

அப்போ ப்ளாக் எழுத வர்றவங்களுக்கு இலக்கியம் தெரிந்து இருப்பது கட்டாயம் என்று சொல்றீங்களா திரு .சிபி அவர்களே!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநிரூபன் said...
இனித் திரையில் ஒரு பாடல் ஒலிக்கட்டும்...
ஃஃஃஃஃஃஃ

சாமி கண்ணை குத்தும் கவனம்...

Unknown said...

வேலை நிமித்தம் காரணமாக ஏற்படும் மன அழுத்தமே குடும்ப வாழ்கைக்கு வெடி வைக்கிறது........

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவிக்கி உலகம் said...
அப்போ ப்ளாக் எழுத வர்றவங்களுக்கு இலக்கியம் தெரிந்து இருப்பது கட்டாயம் என்று சொல்றீங்களா திரு .சிபி அவர்களே!ஃஃஃஃஃஃஃஃ

ஏம்பா இந்த கொலை வெறி ஹ...ஹ... அரசியல்வாதியாய் இல்லாட்டில் சரி தானே...

ம.தி.சுதா said...

50

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

அப்போ ப்ளாக் எழுத வர்றவங்களுக்கு இலக்கியம் தெரிந்து இருப்பது கட்டாயம் என்று சொல்றீங்களா திரு .சிபி அவர்களே!

ennayyaa என்னய்யா கோர்த்து விடறே.. இலக்கியம் படிப்பது அனைவருக்கும் நல்லதே.. இதில் பிளாக்கர்ஸ் ஒயிட்டர்ஸ் என்ற பாகுபாடு எதற்கு?

ம.தி.சுதா said...

வச்சான்யா சுடு சோறு....

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

வேலை நிமித்தம் காரணமாக ஏற்படும் மன அழுத்தமே குடும்ப வாழ்கைக்கு வெடி வைக்கிறது........

வீட்டு வாசலில் செருப்பை கழட்டும்போதே பிரச்சனைகளையும் கழட்டிபோட்டு விட்டு உள்ளே போகனும்.. ஏன்ன்னா வீட்லயே ஏகப்பட்ட பிரச்சனை காத்திருக்க்கும். ஹி ஹி

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇதில் பிளாக்கர்ஸ் ஒயிட்டர்ஸ் என்ற பாகுபாடு எதற்குஃஃஃஃ

யோவ் என் நிறத்தை தானே கோத்து விடறே...

நிரூபன் said...

மதி சுதா... உங்க ப்ரொபைல் ஒர்க் ஆகவில்லையே. ஏன்?

Unknown said...

"வீட்டு வாசலில் செருப்பை கழட்டும்போதே பிரச்சனைகளையும் கழட்டிபோட்டு விட்டு உள்ளே போகனும்.. ஏன்ன்னா வீட்லயே ஏகப்பட்ட பிரச்சனை காத்திருக்க்கும். ஹி ஹி"

>>>>>>>>>>>>

எல்லோரும் சிபி போல இருக்க முடியாது..........

ம.தி.சுதா said...

நிரு ஏம்பா நெஞ்சில அசிட்டை ஊத்துறே... பொறுப்பா வாறன்.. அனாமி வச்சிட்டாங்களா ஆப்பு...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநிரூபன் said...
மதி சுதா... உங்க ப்ரொபைல் ஒர்க் ஆகவில்லையே. ஏன்?ஃஃஃஃஃ

நிரூ pls help me...

Unknown said...

வெளிப்படையான கணவன் மனைவி என்றால் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே சரியான வாதம.......ஆனால் சில தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை சொல்லி அவளின் மனசை காயப்படுத்த வேண்டாம் என்று என்னும் ஆண்களே அதிகம்.......அதனால் தான் பல நேரங்களின் செயற்கையான ரொமான்ஸ் செய்கிறார்கள்....இதை எளிதில் மனைவிகள் கண்டு பிடித்து விடுவதால் தான் பிரச்னை ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

தக்காளி செம எக்ஸ்பீரியன்ஸ் போல..

ம.தி.சுதா said...

நிரு உதவுப்பா... டாஸ் போட் திறக்குதில்லை அனால் ஜீமெயில் வேலை செய்யுது..

நிரூபன் said...

sutha, click on dashboard, edit profile, then Click on the first option under the privacy
share your profile
tick

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

"வீட்டு வாசலில் செருப்பை கழட்டும்போதே பிரச்சனைகளையும் கழட்டிபோட்டு விட்டு உள்ளே போகனும்.. ஏன்ன்னா வீட்லயே ஏகப்பட்ட பிரச்சனை காத்திருக்க்கும். ஹி ஹி"

>>>>>>>>>>>>

எல்லோரும் சிபி போல இருக்க முடியாது..........

வீட்டுக்கு வீடு வாசப்படி.. நான் சொல்லிடறேன் ஓப்பனா..

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஇதில் பிளாக்கர்ஸ் ஒயிட்டர்ஸ் என்ற பாகுபாடு எதற்குஃஃஃஃ

யோவ் என் நிறத்தை தானே கோத்து விடறே...

நான் மட்டும் சிவப்பா? நானும் கறுப்புத்தானய்யா.. கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு.. ஹி பஹி வேற வழி?

சி.பி.செந்தில்குமார் said...

நிரூபன் said...

மதி சுதா... உங்க ப்ரொபைல் ஒர்க் ஆகவில்லையே. ஏன்?

ஹா ஹா சுதாவுக்கு ப்ரோஃபைலும் ஒர்க் ஆகலையா? ஹா ஹா

Unknown said...

வெளியில் இருந்து வரும் ஆணுக்காக காத்திருக்கும் பெண் என்றால் பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பாள் அதை பல ஆண்கள் சரியாக எடுத்துக்கொள்வதில்லை.......
ரொமான்சுக்கு வயது ஒரு தடை கிடையாது.........அதுவே இருவரும் பணியில் இருப்பவர்கள் என்றால்.......நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும் இல்லையேல் போருக்கு போன ராணுவ வீரன் கணக்கா தான் இருக்கும் மஞ்சம் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஆணுக்கு வெளியே 1008 எண்ட்டர்டெயின்மெண்ட்.. ஹவுஸ் ஒயிஃப்களுக்கு கணவன் மட்டுமே எண்ட்டர்டெயின்மெண்ட்.

Unknown said...

காதலி காதலனுக்கும் = கணவன் மனைவிக்கும் இருக்கும் வித்தியாசம் மிகப்பெரிது.........சரசம் என்பது ஆபாசம் அல்ல என்று புரிந்து கொள்வதற்குள் குழந்தை பிறந்து விட்டால் ரொமான்ஸ் குறைந்து விடும்......அதற்குத்தான் குழந்தைகளுக்கு தனியறை
ஒதுக்குகிறார்களே பல நாடுகளில்...

Unknown said...

திருமண ஆன ஆண் பல பெண்களை முழுங்கி விடுவது போல் பார்த்தால் அது ஜொள்ளு......இத அவன் மனைவி ஒருவனை நல்ல கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அது தவறான பார்வையில் ஆனால் பார்க்கப்படும்........ஹிஹி!

Unknown said...

என்னைப்பொறுத்தவரை திருமணம் முடிக்கும் ஆண்கள் போருக்கு போவது போல் மஞ்சத்துக்கு செல்லாமல் பிறந்த குழந்தையை கொஞ்ச செல்வது போல் சென்றால் வாழ்கை முழுக்க ரொமான்ஸ் இனிக்கும் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

காதலி காதலனுக்கும் = கணவன் மனைவிக்கும் இருக்கும் வித்தியாசம் மிகப்பெரிது.........சரசம் என்பது ஆபாசம் அல்ல என்று புரிந்து கொள்வதற்குள் குழந்தை பிறந்து விட்டால் ரொமான்ஸ் குறைந்து விடும்......அதற்குத்தான் குழந்தைகளுக்கு தனியறை
ஒதுக்குகிறார்களே பல நாடுகளில்...

நம் நாட்டில் குழந்தை பிறந்த பிறகு ஒரு பயத்தோடும், தயக்கத்தோடும் .... முயல வேண்டிய கட்டாயம்..

சி.பி.செந்தில்குமார் said...

காதலி காதலனுக்கும் = கணவன் மனைவிக்கும் இருக்கும் வித்தியாசம் மிகப்பெரிது.........சரசம் என்பது ஆபாசம் அல்ல என்று புரிந்து கொள்வதற்குள் குழந்தை பிறந்து விட்டால் ரொமான்ஸ் குறைந்து விடும்......அதற்குத்தான் குழந்தைகளுக்கு தனியறை
ஒதுக்குகிறார்களே பல நாடுகளில்...

April 22, 2011 9:03 AM
Delete
Blogger விக்கி உலகம் said...

திருமண ஆன ஆண் பல பெண்களை முழுங்கி விடுவது போல் பார்த்தால் அது ஜொள்ளு......இத அவன் மனைவி ஒருவனை நல்ல கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அது தவறான பார்வையில் ஆனால் பார்க்கப்படும்........ஹிஹி!

ஆணுக்கு மனசுல என்னன்னா அவன் 1000 ஃபிகரை சைட் அடிக்கலாம்.. ஆனா தன் மனைவி மட்டும் குனிஞ்ச தலை நிமிராம இருக்கனும்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

என்னைப்பொறுத்தவரை திருமணம் முடிக்கும் ஆண்கள் போருக்கு போவது போல் மஞ்சத்துக்கு செல்லாமல் பிறந்த குழந்தையை கொஞ்ச செல்வது போல் சென்றால் வாழ்கை முழுக்க ரொமான்ஸ் இனிக்கும் ஹிஹி!

ஆணுக்கு அவசர புத்தி.. பெண்ணுக்கு அலசற புத்தி

Unknown said...

"ஆணுக்கு மனசுல என்னன்னா அவன் 1000 ஃபிகரை சைட் அடிக்கலாம்.. ஆனா தன் மனைவி மட்டும் குனிஞ்ச தலை நிமிராம இருக்கனும்"

>>>>>>>>>>>

அப்படி சொல்லி விட முடியாது..........எங்கு இவள் தன்னை சோதா என்று எண்ணி விடுவாளோ என்று சுயபயம் ஹிஹி!

Unknown said...

இதில் ஒவ்வருவரின் வளர்ந்த சூழ்நிலைகளே அவர்களின் தனிப்பட்ட கேரக்டர்களை தீர்மானிக்கிறது.......ஹிஹி!

Unknown said...

இவையெல்லாம் கேள்வி ஞானம் மட்டுமே என்று சொல்வதும் ஒரு வித ஆண்சுய பயம் ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இதில் ஒவ்வருவரின் வளர்ந்த சூழ்நிலைகளே அவர்களின் தனிப்பட்ட கேரக்டர்களை தீர்மானிக்கிறது.......ஹிஹி!


வாசிப்பு அனுபவத்தை வளர்த்துக்கொண்டால் நேசிப்பு அனுபவம் கூடி விடும்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

இவையெல்லாம் கேள்வி ஞானம் மட்டுமே என்று சொல்வதும் ஒரு வித ஆண்சுய பயம் ஹிஹி!

தன்னடக்கம் தான்.. பயம் அல்ல.

சி.பி.செந்தில்குமார் said...

Blogger விக்கி உலகம் said...

இதில் ஒவ்வருவரின் வளர்ந்த சூழ்நிலைகளே அவர்களின் தனிப்பட்ட கேரக்டர்களை தீர்மானிக்கிறது.......ஹிஹி!

ஆம். நண்பர்கள் , கொலீக்ஸ் பழக்கமும் காரணிகளாக அமையும்

காங்கேயம் P.நந்தகுமார் said...

காதல் வேறா? ரொமன்ஸ் வேறா? நாட்டுக்கு இப்ப இதுதான் தேவை. சாமி தாங்க முடியலை

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா வீடு நல்லாருந்தா தான் நாடு நல்லாருக்கும்.. முதல்ல வீட்டைப்பார்ப்போம்..

காங்கேயம் P.நந்தகுமார் said...

அப்ப நீங்க அரசியலுக்கு வந்திருக்குலாமே?

Ram said...

என்னயா நடக்குது இங்க.? சாதாரண ஒரு அரசியல் பதிவுக்கோ, இல்லை சமூக பதிவுக்கோ கூட இந்த அளவுக்கு விவாதம் நடந்திருக்காது போலிருக்கே.!! சி.பி., விக்கி, நிரூ, ம.தி., என்னதான் பண்றீங்கோ.?

Ram said...

இடலி.. சே சே.. இன்ட்லி பொத்தானை காணும்..

சசிகுமார் said...

நன்றாக இருந்தது.

செங்கோவி said...

நல்ல விளக்கம்ணே..அகிலனுக்கு நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

வண்டி மெதுவா லைனுக்கு திரும்புதே ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ said...

//விக்கி உலகம் said...
என்னைப்பொறுத்தவரை திருமணம் முடிக்கும் ஆண்கள் போருக்கு போவது போல் மஞ்சத்துக்கு செல்லாமல் பிறந்த குழந்தையை கொஞ்ச செல்வது போல் சென்றால் வாழ்கை முழுக்க ரொமான்ஸ் இனிக்கும் ஹிஹி!//


மிலிட்டரியில இதெல்லாம் கூட சொல்லி தர்றான்களா தக்காளி...?

MANO நாஞ்சில் மனோ said...

/சி.பி.செந்தில்குமார் said...
விக்கி உலகம் said...

இதில் ஒவ்வருவரின் வளர்ந்த சூழ்நிலைகளே அவர்களின் தனிப்பட்ட கேரக்டர்களை தீர்மானிக்கிறது.......ஹிஹி!


வாசிப்பு அனுபவத்தை வளர்த்துக்கொண்டால் நேசிப்பு அனுபவம் கூடி விடும்//


உம்ம பதிவை வாசிச்சுட்டு பேதி ஆகி கிடக்காராம் நம்ம தக்காளி....

உணவு உலகம் said...

சி.பி.சார் அரைவாசி தேறிட்டார்.

உணவு உலகம் said...

பயனுள்ள பகிர்வு. நன்றி நண்பரே!

jo said...
This comment has been removed by the author.
jo said...

மார்க் ட்வைன் சொன்னது மேலை நாட்டு பழக்கம்...

மனைவி புதிதாக சமைத்தால் எந்த கணவனாவது பாராட்டி இருகிறானா?மனைவி புத்திசாலியா இருந்தாலே எந்த கணவனுகும் பிடிகாது.இது தான் கணவன் மனைவிகும் இடயே வரும் பெரும் பிச்சனை...பதிவு நல்ல தான் இருக்கு இன்னும் கொஞ்சம் கிழு கிழுப்பு இருந்தால் படிக்கும் கணவனுகோ மனைவிகோ பயன்படும்..

யானய்யா காப்பி பேஸ்டை இல்லாமல் செய்து இருகேங்க.இதை திருடி வித்து யார் ஸ்விஸ் வங்கியில் கணக்கு தொடங்க போறா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட வித்தியாசமான பார்வை! நல்ல கருத்துக்கள்! அசத்தல் நண்பா! ' ( எங்க நம்ம ஏரியாவுல காணோம்? )

Unknown said...

ஒன்னுமே புரியல பாஸ்! ஒருவேளை 18+ ஆ?

ஹேமா said...

காதல் இறப்புக்குப் பின்னும் தொடரும் ரொமான்ஸ் நடுவில இறந்தே போகும்.தொடரட்டும் சிபி !